PDA

View Full Version : உயிரே.....



நிலா
23-04-2003, 12:57 AM
எங்கேயோ மறைந்து விட்டாய்
என்னைக் கரைத்தவளே!
ஏனோ பிரிந்து விட்டாய்
என்னை மட்டும் விட்டுவிட்டு!

சொல்லிவிட்டுச் சென்றிருந்தால்
தேடல்கள் நின்றிருக்கும்
சொல்லாமல் சென்றுவிட்டாய்
சோகம் என்னைக் கொல்லுதடி!

நின் விழியசைவை மொழியாகக் கொண்டேன்
விழிமூடி வழிசென்றாய் நான் விழ நீ£யும் வழி செய்தாய்!

என்னோடு நீ வாழ்ந்தாய்
பிறைக்கும் வளர்ச்சிக்காலம்!
நின் பிரிவு அதை வாட்டியதோ?
பிறை கூடத் தேயுது பார்!

தென்றலும் ஓய்ந்துவிடும் ஓய்வுக்காக
எனதான உன் நினைவு ஓயாது எந்நாளும்!


என்னை நீ நீங்க நான் செய்த பாவமென்ன?
உயிர் நீங்க உடலுக்கென்ன மரியாதை?

gankrish
23-04-2003, 05:15 AM
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழிகிறதே கண்ணில்
நிலா அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

இளசு
23-04-2003, 05:22 AM
பிரிவுத்துயரில் தோய்ந்த வரிகள்.....
உயிர் நீங்க உடலுக்கென்ன மரியாதை....??

நிலாவுக்கு பாராட்டுகள்!

Narathar
23-04-2003, 07:02 AM
என்னோடு நீ வாழ்ந்தாய்
பிறைக்கும் வளர்ச்சிக்காலம்!
நின் பிரிவு அதை வாட்டியதோ?
பிறை கூடத் தேயுது பார்!


நிலா பிறையாகிவிட்டதுவா?
பிறை இனி நிலாவாவது எப்போது?
காதல் இதுவும் செய்யும் இன்னமும் செய்யும்!

puppy
08-01-2004, 06:52 PM
தென்றலும் ஓய்ந்துவிடும் ஓய்வுக்காக ....அப்படியா நிலா.....உஷார் முத்து