நிலா
23-04-2003, 12:57 AM
எங்கேயோ மறைந்து விட்டாய்
என்னைக் கரைத்தவளே!
ஏனோ பிரிந்து விட்டாய்
என்னை மட்டும் விட்டுவிட்டு!
சொல்லிவிட்டுச் சென்றிருந்தால்
தேடல்கள் நின்றிருக்கும்
சொல்லாமல் சென்றுவிட்டாய்
சோகம் என்னைக் கொல்லுதடி!
நின் விழியசைவை மொழியாகக் கொண்டேன்
விழிமூடி வழிசென்றாய் நான் விழ நீ£யும் வழி செய்தாய்!
என்னோடு நீ வாழ்ந்தாய்
பிறைக்கும் வளர்ச்சிக்காலம்!
நின் பிரிவு அதை வாட்டியதோ?
பிறை கூடத் தேயுது பார்!
தென்றலும் ஓய்ந்துவிடும் ஓய்வுக்காக
எனதான உன் நினைவு ஓயாது எந்நாளும்!
என்னை நீ நீங்க நான் செய்த பாவமென்ன?
உயிர் நீங்க உடலுக்கென்ன மரியாதை?
என்னைக் கரைத்தவளே!
ஏனோ பிரிந்து விட்டாய்
என்னை மட்டும் விட்டுவிட்டு!
சொல்லிவிட்டுச் சென்றிருந்தால்
தேடல்கள் நின்றிருக்கும்
சொல்லாமல் சென்றுவிட்டாய்
சோகம் என்னைக் கொல்லுதடி!
நின் விழியசைவை மொழியாகக் கொண்டேன்
விழிமூடி வழிசென்றாய் நான் விழ நீ£யும் வழி செய்தாய்!
என்னோடு நீ வாழ்ந்தாய்
பிறைக்கும் வளர்ச்சிக்காலம்!
நின் பிரிவு அதை வாட்டியதோ?
பிறை கூடத் தேயுது பார்!
தென்றலும் ஓய்ந்துவிடும் ஓய்வுக்காக
எனதான உன் நினைவு ஓயாது எந்நாளும்!
என்னை நீ நீங்க நான் செய்த பாவமென்ன?
உயிர் நீங்க உடலுக்கென்ன மரியாதை?