பென்ஸ்
25-02-2006, 06:17 PM
யாரையும் கைநீட்டி அடிக்காதே...
இன்று நினைத்தாலும், மறக்க வேண்டும் என்று நினைக்கும் சில நினைவுகள் இன்றும் மனதை வேட்டையாடும்.... அன்று செய்தது தவறு என்று இன்றும் மனது சொல்வதால் எடுத்த முடிவுதான் ... இந்த தலைப்பு...
நாங்கள் கல்லூரியின் இரண்டாவது செட் மாணவர்கள், கல்லூரியில் எல்லா படத்திற்க்கும் ஆசிரியர்கள் கிடையாது, இருக்கும் ஆசிரியர்கள் கூட என்னை போல் இரண்டாம் வருடத்தில் நேரடியாக சேர்ந்த மாணவர்களை விட வயதில் சிறியவர்கள்.... வேறும் மூன்று பிரிவுகள் மட்டும் அப்போது இருந்தது, என் வருடத்தில் மொத்தம் 114 பேர், இதில் 75 பேர் டிப்பிளமோ படித்து இரண்டாம் ஆண்டில் சேர்ந்தவரகள் .... கல்லூரியில் சேர்ந்த முத வாரத்திலையே சீனியருடன் நடந்த ரத்தகளரி பிரச்சினை முதல் மூன்றாம் ஆண்டில் கடைசியில் கல்லூரியில் அத்து மீறி நுழைந்து, மாணவர்களை ரவுடிகளுடன் சேர்ந்து அடித்த கல்லூரி போர்ட் உறுப்பினர்களை விரட்டி விரட்டி அடித்தது வரை நடந்த சம்பவங்களுக்கு காரணமாய் இருந்ததால்.... நம்மை ஏத்தி விட்டு கூத்து பாக்கவே ஒரு கூட்டம் இருந்தது... நானும் நம்மை சுத்தி எப்பவுமே நாலு பேரு சிங்கி அடிக்க இருந்ததால்.... சின்ன சின்ன விஷயத்தை கூட எதோ ரொம்ப பெருசா பன்னுவேன்.... எங்கள் வருடத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஒற்றுமை இருந்ததால் எனக்கு பின்னால் ஒரு கூட்டமே இருக்கும் தைரியம்... அசட்டு தைரியம்...
கல்லூரியில் உள்ள ஜூனியர்களில் 20% பெயருக்கு கூட என்னை பிடிக்காது, மற்றவர்கள் என் மேல் ஒருவித பயம் இருந்ததால் ஒதுங்கி போயிடுவாங்க... ஆனால் சேட்டை பன்னினாலும் , வகுப்புக்கு போக விட்டாலும் பரிச்சை சமயத்தில் கண்விழித்து படித்து எல்லா பாடங்களிலும் நம்ம பசங்களும் பாஸ் ஆயிடுவாங்க, எல்லா கலை விழாவுலையும் முதலில் வந்திருவோம்... அதனால கல்லூரியில் பிரின்சிபால் முதல் பியூன் வரை ஒரு நல்ல பெயரும் இருந்தது.
கல்லூரி கடைசி வருடத்தில் கால் வைத்த முதல் காரியமாக கல்லூரி சுற்றுலா என்று சுற்றி கொண்டு, நிறைய நல்ல நினைவுகளுடன் கல்லூரி வந்த போது அந்த 20 நாளிலையே கல்லூரி வேகுவாக மாறி இருந்தது.... நாங்கள் வகுப்புக்கு போகாமல் இருந்த அரட்டை அடிக்கும் வேப்பமரம் வெட்டி முறிக்க பட்டிருந்தது, அதம் கிழே நாங்கள் இருப்பதற்க்காக அடுக்கி இருந்த எல்லை கல்கள் தூர எறியபட்டிருந்தன... "மாப்பிளை, நம்ம அக்கூஸ்ட் (accused) கல்லையும் தூர போட்டு விட்டாங்கடா." ... அக்கூஸ்ட் கல் , தப்பு செய்யும் அட்களை அதில் இருந்தி, சுற்றி இருந்து விசாரனை நடக்கும், அது ஒருவன் இருந்தால் அவனுக்கு கண்டிபாக அடி கிடைக்கும் என்பது எழுதாத விதி. அவர்கள் தூர எறிந்த கல்லை மீண்டும் அதே இடத்தில் அடுக்கி வைத்து மீண்டும் இருக்க ஆரம்பித்தோம், சில நாட்கள் சுற்றுலா நினைவிலையே போயிற்று.
அன்று வெள்ளிகிழமை, கல்லூரியில் மதியத்துக்கு மேல் விடுமுறை சொல்லி இருந்தார்கள், ஆசிரியர்கள் கூடுவதால் இந்த விடுமுறை. வார கடைசியின் கூத்துகளுக்காக பிளான் செய்து கொண்டிருந்த போது, ஒரு நண்பன் வந்து கூட்டமாக இருந்த எங்களிடம் வந்து , "ஒரு ஜூனியர் , அக்கூஸ்ட் கல்லில் இருந்தான் எழும்ப சொன்னேன், அடித்து விட்டான்" என்று கூறியதும் , மீண்டும் புறப்பட்டது ஒரு கூட்டம்.. எதோ சாதிக்க போகிற மாதிரி... வரப்போகும் விபரீதம் புரியாமல்....
எங்கே அவன் என்றால், அவன் கேண்டீனில் சாப்பிட்டு கொண்டிருக்கிறான் என்றார்கள்... அங்கு சென்றால்...
"மாப்பிள்ளை, அந்த இங்கிளிஸ் புரபசர் இருக்கார்டா...!!!" என்று எச்சரிக்கை வர.. சரி அவன் வேளியே வரட்டும் பாக்கலாம் என்று இருந்தோம்...
" நான் வேளியே பசியா இருக்கிறேன், அவன் உள்ள உக்காந்த்து சாப்பிடுறான்" என்று எவனோ பின்னால் இருந்து சப்தமிட...
என்னை தாண்டி இரண்டு போக... எனக்குள் எதோ விபரீத அலாரம் அடிக்க... அவர்கள் பின்னால் நானும் போக....
அவர்கள் உள்ளே போய் அவனிடம் என்னவோ பேச எத்தனிக்க... அவன் எச்சி கையால் நீட்டி பேசி கொண்டிருந்தான்...
சரி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம் என்று முன்னால் போக, என் பின்னால் நின்றவர்கள் அதை தப்பாக புரிந்து எனக்கு முன்னாலையே போயி....
அப்புறமா, மூலையில் ஒரு கசங்கிய துணியாக இருந்தவன், முகத்தில் இருந்த ரத்ததை துடைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்...
வேளியே நின்ற எனக்கு... அட்ரெனலின் அதிகமாக சுரக்க ஆரம்பித்து... இது வரை எதிர்கொள்ளாத எதோ ஒன்றை எதிர்கொள்ள போகும் பயம்....
"டேய்.. அவன் பிரின்சிபால் ரூமுக்கு போறாண்டா.." என்றதும், வண்டியை கிளப்பி கொண்டு அங்கு போக அவன் பிரின்சிபால் ரூமை நோக்கி போக அவனை வேளீயே இழுத்து வந்த்து..
மீண்டும் ....
கல்லூரி வண்டியில் காத்திருந்த அனைத்து பெண்கள் முன்னாலையும் வைத்து... எங்கள் எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து.....வீட்டிற்க்கு அனுப்பினோம்...
இருந்தாலும் என் மனதில் எதோ பயம் இருக்க முதல் வேலையாக அவன் பெயரிலையே ஒரு புகார் எழுதி ஆசிரியன் சந்திப்பில் இருந்த பிரின்சிபாளிடம் கொண்டு சென்றால்.. அங்கு அந்த இங்கிளீஸ் புரபசர்... " போன வருடம் இதே மாதிரிதான் என்னையும் அடித்தானுங்க..." என்று பிளாஸ் பேக்கை எழுக்க.. அவரை முறைத்து கொண்டு அவரவர் வீட்டிர்க்கு சென்றோம்...
அதிகாலை 6:00 மணிக்கே என் வீட்டு தொலைபேசி ஒலிக்க அதை எடுத்தால், கல்லூரி நண்பனில் ஒருவன்..." பேப்பர் , பார்த்தாயா????..."
"இல்லை".. நான்
"ராக்கிங் கொடுமையில் மாணவர் சித்திரவதை, 20 பெயரை போலிஸ் தெடுகிறது, மாணவர் மருத்துவமனையில் அனுமதி...." என்று அவன் வாசித்து காட்ட, எனக்கு தூக்கம் மொத்த்மாக போயிருந்தது...
"நம்ம பெயர் போட்டிருக்கா??" ... நான்
இல்லைடா...
"நான் உடனே வாறேன்"....
அடுத்த 2 மணி நேரத்தில், எங்கள் வருடத்தில் உள்ள மாணவர்களில் சுமார் 25 பேர், எங்கள் வழக்கமாக சந்த்திப்பு இடத்தில்...
இதுவரை என்ன செய்தாலும் பிரச்சினை கல்லூரிக்கு வேளியே போயிருக்கவில்லை, கல்லூரிக்கு வேளியே உள்ளவை கல்லூரிக்கும் வரவில்லை, அதனால் கையாளுவதில் சிரமம் இருக்கவில்லை, இந்த முறை எல்லாம் எதிராக மாறி இருப்பதை புரிய முடிந்தது...
கல்லூரியில் நடந்த பிரச்சினை ஒவ்வொன்றின்போதும் எங்கள் கல்லூரியில் இருந்த சில மூத்த பிரபஸர்களிடம் (எல்லாம் வேறு கல்லூரியில் இருந்து ரிடயர்ட் ஆனா பிரின்சிபால், புரபசர்கள்) சென்று ஆலோசனை கேட்பது வழக்கம்... இந்த முறையும் வழக்கம் தப்பாமல்....
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையை திறக்க முதல்வர் வருவதால், இந்த விஷயம் பெரிதாக வாய்ப்பில்லை என்றும், போலிஸ் பிரச்சினைகள் அதுவரை குறைவாக இருக்கும் என்று பொறி தட்டியதால் எப்படியும் இரண்டு நாளாவது நேரம் கிடைக்கும் என்று தெரிந்த்தால்... முதலில் பிரச்சினையை தீர்க்கும் முடிவோடு நண்பர்கள் எல்லோருக்கும் ... சிறு சிறு வேலையை கொடுத்து விட்டு நான் நம்ம அடி வாங்கின ஜூனியரை ( ஜாண்- என்று வைத்து கொள்வோம்)... சாமாதான படுத்த வழி இருக்குமா என்று தேட ஆரம்பிக்க.... என் சோதனை காலமும் ஆரம்பித்தது...
ஜாண் தனியாக இதை செய்ய முடியாது, இவனுடம் யாராவது இருக்கனும்... இல்லை என்றால் ஒரே நாளில் பேப்பர், போலிஸ், மருத்துவமனை சாத்தியம் இல்லை என்று உணர்ந்த்து... என் ஊரில் உள்ள நண்பர்களில் சிலரை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்க... அவன் அவன் ஊரில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் மூலம் செய்வதாக கூற... அவரை நோக்கி நமது ஆட்களை அனுப்ப... அவரும் மசிந்த்தார்... ஆனால் அவர் பேசியும் ஜாண் மசியவில்லை...
மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு அடியும் இல்லை, ஆனால் அவன் மருத்துவமனையில் இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து அவனை அங்குள்ள தெரிந்த மருத்துவர்களிடம் கூறி வேளீயேற்றினோம்....
போலிஸ் நடவடிக்கைகளை தடுக்க அரசியல்வாதிகளின் துனை தேவை பட, அதுவும் எளிதாக கிடைத்தது... எங்கள் பகுதி MLA, MP கள் எங்கள் நண்பர்கள் ஆனார்கள்.... அவர்கள் அலுவலகம் எங்கள் வீடு போல் ஆனாது... இதில் சிலர் கல்லூரி நிர்வாகத்தில் பங்காக இருந்த்தால் ... கல்லூரியும் எங்களுக்காக பேச வேண்டிய கட்டாயம்.... ஆனால் பிரச்சினை மட்டும் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்தது... இதை செய்யும் சூத்திரதாரி யார் எம்பது த்ரியாமல் இருந்ததால்.. பிரச்சினையும் தீர வழி தெரியவில்லை... ஆனால் பலர் இந்த பிரச்சினையை தீர்ப்பதாக சொல்லி "ஆளுக்கு 2 லச்சம் கொடுங்கள்.. போதும்" என்று பேரம் மட்டும் பேசினார்கள்....
ஆனாலும் நாங்கள் வீட்டில் தங்கவில்லை... இதுவரை பாத்திராத நண்பர்களுடன் கூட இரவு தங்கினோம்... செப்டம்பர் 11, என்னுடைய பிறந்த நாள்... இரவு முளுவதும் உறக்கம் வரவில்லை.... திரும்பி படுத்தால் நண்பன் ஒருவன் பயத்தால் பெருமூச்சு விட்டு கொண்டிருந்தான்.... சாப்பிட கூட பிடிக்கவில்லை... மனம் பயத்தில் செத்து போயிருந்தது... வாழ்க்கை முடிந்து போகுமோ என்ற பயம்..... காலையில் எழும்பி பேப்பரை வாங்கி பெயர் வந்திருக்கிறதா என்று தேடி.... மனது மிகவும் சோர்ந்த்து போயிருத்தது.... வீட்டில் உள்ளவர்களுக்கு எதையும் யாரும் தெரிவித்திருக்கவில்லை.... அவர்களிடம் சொல்லி அவர்களையும் கஷ்ட படுத்தவும் மனம் வரவில்லை....
அன்று நண்பன் ஒருவன் வந்து, நம்முடைய ஜூனியர்கள் தாம் நம் பெயரை பட்டியல் இட்டு போலிசிடம் கொடுத்திருக்கிறார்கள் என்றும், ஆனால் அதில் என் பெயர் மட்டும் இல்லை என்பதும் (ஆச்சரியாமாக இருந்தாலும் ... காரணமாகதான்) ... இந்த பிரச்சினையின் சூத்திரதாரி ரவுடியாக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்த ஒருவரை சொல்ல...
"சரி வா என்று நண்பர் இருவரிடம் அந்த அரசியல்வாதியை பார்க்க சென்றேன்..."
அரைமணி காத்திருப்பிற்க்கு பின் வந்தார் (ன்)... "என்ன பெஞ்சமின், இந்த பக்கம் பாக்கிறேன் என்று ஆச்சிரிய பட.."
நான் பிரச்சினையை கூற.... சிரித்து கொண்ட "நான் தான்.. எல்லாம் நான் தான்..."
" வீடு எரிந்த ஒரு காலில்லாத பெண்ணையும், உன்னுடம் அழைத்து வந்து... கலக்டரிடம் மனு கொடுத்து அவளுக்கு பணம் கிடைக்க உதவி இருக்கிறாய்... அப்படி பட்ட உனக்கு நான் உதவாமலா.... ஆனால், அன்று என்னிடம் வந்து விட்டு காப்பி குடிக்க மறுத்த நீ, இன்று குடிப்பாய் என்று நினைக்கிறேன்" என்று எனக்கு உத்தரவிட... அந்த காப்பியை குடித்தேன்....
விசயம் அறிந்த என் நண்பர்கள் மற்ற அரசியல்வாதிகளையும் அங்கு அழைத்து வர... அங்கு பிரச்சினையை தீர்க்க எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டு என்று பேச்சு போக ஆரம்பித்தது....
ஆனால் பிரச்சினை தற்க்காலிகமாக தீர்ந்த்திருந்தது......
இரண்டு நாட்களில் கொஞ்சம் மறந்து போயிருந்தது... இந்த பிரச்சினையினால் எங்கள் கூட்டம் குறைந்த்திருந்தது.. மந்தமாயிருந்த்து... மீண்டும் கல்லூரிக்கு போக ஆரம்பித்தோம்... அவனும் வர ஆரம்பித்தான்...
இரண்டு வாரம் கழிந்திருந்தது.. எல்லாம் மறந்து போயிருந்தது... அடுத்த வகுப்பில் போய் கடலை வறுத்து கொண்டிருந்த என்னை எங்கள் புரபஸர்களில் ஒருவர் தேடுவதாக கூற... நான் வேளியே வர அவர் எனக்காக காத்து கொண்டிருந்தார்...என்னிடம் வந்து..
"அந்த ராக்கிங் பிரச்சினை மீண்டும் முளை விட்டுள்ளது, CM ஆபிசில் இருந்து உங்களை அரஸ்ட் பன்ன சொல்லி ஃபேக்ஸ் வந்து இருக்காம், அதனால் போலிஸ் வந்து இருக்கு... நீங்கள் எல்லாம் கல்லூரியின் பின் வழியாக ஓடிவிடுங்கள், நாங்கள் நீங்கள் கல்லூரிக்கு வரவில்லை என்று சொல்லிவிடுகிறோம்" என்று கூற...
உடனே எனக்கு அது அபத்தமாக பட..." இன்னைக்கு ஓடி விடலாம் ... ஆனால் நாளைக்கு????" என்று வினாவ....
பதில் இல்லை..
" சரி, நானே வந்து இன்ஸ்பெக்டரை சந்திக்கிறேன் என்று கூற என்னை அழைத்து சென்றார்...
இன்ஸ்பெக்டர், ஒரு நல்ல ஜேண்டிமேனாக நடந்து கொண்டார்... நான் நடந்ததை ஒரு விதமாக கூறி மூடித்தேன்... (எல்லாம் நமக்கு பங்கம் இல்லாமல் தான்)... அவர் சரி பிரச்சினை உங்களால் சரி செய்யமுடியும் என்றால் எவ்வளவு நேரம் வேண்டும் என்றார்....
நான் பண விஷயத்தை கூறி....ஒரு வாரம் கேட்க....
நம்ம பிரின்சிபால்.. " சாரே .. வேணுமெங்கில் இவரை பிடிச்சேண்டு போ" என்று சொல்ல...
இன்ஸ்பெக்டர், போலிஸ் வேனை போன் செய்து வர சொல்ல ... நான் காலில் விழாத குறையாக .. அன்று மாலை 5:00 மணி வரை நேரம் கேட்க அவரும் சம்மதித்தார்.... அப்போது மணி 11:00 ஆகி இருந்தது....
நான் திரும்பி என் வகுப்புக்கு வர விஷயம் அறிந்த நண்பர்கள் அங்கு எனக்காக காத்திருந்தனர்..... அவர்களை எங்களுக்கு தெரிந்த பஞ்ஜாயத்து தலைவர்கள் முதல் அர்சியல் தலைவர்கள் வரை எல்லொரையும் அழைத்து கொண்டு ... பிரச்சினைக்கு காரணமான அரசியல்வாதி வீட்டுக்கு வர சொல்லிவிட்டு ,...நான் ஜாணின் வகுப்பை நோக்கி நடந்தேன்....
அவனை நான் வேளியே வரும்படி அழைக்க, வகுப்பில் இருந்த ஆசிரியை இதற்க்கு முன் ஒரு மானவனை இதேபோல் அழைத்து அடித்ததை நினைவுபடுத்தி மறுத்தார்..... நான் அவரை அழைத்து நிலமையை சொல்ல , அவர் ஜாணை என்னோடு அனுப்பினார்....
நான் ஜானை அழைத்து கொண்டு என்னுடைய பைக்கில் போகும் போது தான்.... என் வாழ்வில் ஒருவரை முதல் முதலாக கவுன்சிலிங் செய்ய ஆரம்பித்தேன்.... அது வரை சமாதானத்துக்கு மறுத்தாவன் சம்மதித்தான்....
அரசியல்வாதியின் வீட்டில் சென்றால் அவர் அங்கு இல்லை... எப்படியோ நண்பர்கள் தெடி கண்டுபிட்த்து அவரிடம் விஷயத்தி சொல்ல... அவர் நம்மிடம் ஒரு ஒப்பந்த கடிதம் எழுதி வாங்கிவிட்டு... மீண்டும் போலிஸ் நிலையம் சென்றால்.. இன்ஸ்பெக்டர் எனக்காக காத்துகொண்டிருக்க.... அங்கு ஒரு சமாதான ஒப்பந்தம் மீண்டும் எழுதி பிரச்சினையை தீர்த்து கொண்டோம் .....
இந்த பிரச்சினை, எதோ யோசிக்காமல், தேவையில்லாமல் ஒரு அப்பாவியை அடிக்க.... நான் பட்ட கஷ்டங்கள்... இன்றும் நான் அந்த நினைவுகளை அசையிட்டால் மனம் ஒரு நிமிடம் ஆட்டம் காணும், அந்த நேரத்தில் அதை ச்ம்மாளித்தாலும்... இன்றும் எனக்கு அந்த பயம் மாறவில்லை....
அதன் பிறகு மிக அவசியம் இல்லாமல் கையை நான் நீட்டி அடித்திருக்கவும் இல்லை....
இன்று நினைத்தாலும், மறக்க வேண்டும் என்று நினைக்கும் சில நினைவுகள் இன்றும் மனதை வேட்டையாடும்.... அன்று செய்தது தவறு என்று இன்றும் மனது சொல்வதால் எடுத்த முடிவுதான் ... இந்த தலைப்பு...
நாங்கள் கல்லூரியின் இரண்டாவது செட் மாணவர்கள், கல்லூரியில் எல்லா படத்திற்க்கும் ஆசிரியர்கள் கிடையாது, இருக்கும் ஆசிரியர்கள் கூட என்னை போல் இரண்டாம் வருடத்தில் நேரடியாக சேர்ந்த மாணவர்களை விட வயதில் சிறியவர்கள்.... வேறும் மூன்று பிரிவுகள் மட்டும் அப்போது இருந்தது, என் வருடத்தில் மொத்தம் 114 பேர், இதில் 75 பேர் டிப்பிளமோ படித்து இரண்டாம் ஆண்டில் சேர்ந்தவரகள் .... கல்லூரியில் சேர்ந்த முத வாரத்திலையே சீனியருடன் நடந்த ரத்தகளரி பிரச்சினை முதல் மூன்றாம் ஆண்டில் கடைசியில் கல்லூரியில் அத்து மீறி நுழைந்து, மாணவர்களை ரவுடிகளுடன் சேர்ந்து அடித்த கல்லூரி போர்ட் உறுப்பினர்களை விரட்டி விரட்டி அடித்தது வரை நடந்த சம்பவங்களுக்கு காரணமாய் இருந்ததால்.... நம்மை ஏத்தி விட்டு கூத்து பாக்கவே ஒரு கூட்டம் இருந்தது... நானும் நம்மை சுத்தி எப்பவுமே நாலு பேரு சிங்கி அடிக்க இருந்ததால்.... சின்ன சின்ன விஷயத்தை கூட எதோ ரொம்ப பெருசா பன்னுவேன்.... எங்கள் வருடத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஒற்றுமை இருந்ததால் எனக்கு பின்னால் ஒரு கூட்டமே இருக்கும் தைரியம்... அசட்டு தைரியம்...
கல்லூரியில் உள்ள ஜூனியர்களில் 20% பெயருக்கு கூட என்னை பிடிக்காது, மற்றவர்கள் என் மேல் ஒருவித பயம் இருந்ததால் ஒதுங்கி போயிடுவாங்க... ஆனால் சேட்டை பன்னினாலும் , வகுப்புக்கு போக விட்டாலும் பரிச்சை சமயத்தில் கண்விழித்து படித்து எல்லா பாடங்களிலும் நம்ம பசங்களும் பாஸ் ஆயிடுவாங்க, எல்லா கலை விழாவுலையும் முதலில் வந்திருவோம்... அதனால கல்லூரியில் பிரின்சிபால் முதல் பியூன் வரை ஒரு நல்ல பெயரும் இருந்தது.
கல்லூரி கடைசி வருடத்தில் கால் வைத்த முதல் காரியமாக கல்லூரி சுற்றுலா என்று சுற்றி கொண்டு, நிறைய நல்ல நினைவுகளுடன் கல்லூரி வந்த போது அந்த 20 நாளிலையே கல்லூரி வேகுவாக மாறி இருந்தது.... நாங்கள் வகுப்புக்கு போகாமல் இருந்த அரட்டை அடிக்கும் வேப்பமரம் வெட்டி முறிக்க பட்டிருந்தது, அதம் கிழே நாங்கள் இருப்பதற்க்காக அடுக்கி இருந்த எல்லை கல்கள் தூர எறியபட்டிருந்தன... "மாப்பிளை, நம்ம அக்கூஸ்ட் (accused) கல்லையும் தூர போட்டு விட்டாங்கடா." ... அக்கூஸ்ட் கல் , தப்பு செய்யும் அட்களை அதில் இருந்தி, சுற்றி இருந்து விசாரனை நடக்கும், அது ஒருவன் இருந்தால் அவனுக்கு கண்டிபாக அடி கிடைக்கும் என்பது எழுதாத விதி. அவர்கள் தூர எறிந்த கல்லை மீண்டும் அதே இடத்தில் அடுக்கி வைத்து மீண்டும் இருக்க ஆரம்பித்தோம், சில நாட்கள் சுற்றுலா நினைவிலையே போயிற்று.
அன்று வெள்ளிகிழமை, கல்லூரியில் மதியத்துக்கு மேல் விடுமுறை சொல்லி இருந்தார்கள், ஆசிரியர்கள் கூடுவதால் இந்த விடுமுறை. வார கடைசியின் கூத்துகளுக்காக பிளான் செய்து கொண்டிருந்த போது, ஒரு நண்பன் வந்து கூட்டமாக இருந்த எங்களிடம் வந்து , "ஒரு ஜூனியர் , அக்கூஸ்ட் கல்லில் இருந்தான் எழும்ப சொன்னேன், அடித்து விட்டான்" என்று கூறியதும் , மீண்டும் புறப்பட்டது ஒரு கூட்டம்.. எதோ சாதிக்க போகிற மாதிரி... வரப்போகும் விபரீதம் புரியாமல்....
எங்கே அவன் என்றால், அவன் கேண்டீனில் சாப்பிட்டு கொண்டிருக்கிறான் என்றார்கள்... அங்கு சென்றால்...
"மாப்பிள்ளை, அந்த இங்கிளிஸ் புரபசர் இருக்கார்டா...!!!" என்று எச்சரிக்கை வர.. சரி அவன் வேளியே வரட்டும் பாக்கலாம் என்று இருந்தோம்...
" நான் வேளியே பசியா இருக்கிறேன், அவன் உள்ள உக்காந்த்து சாப்பிடுறான்" என்று எவனோ பின்னால் இருந்து சப்தமிட...
என்னை தாண்டி இரண்டு போக... எனக்குள் எதோ விபரீத அலாரம் அடிக்க... அவர்கள் பின்னால் நானும் போக....
அவர்கள் உள்ளே போய் அவனிடம் என்னவோ பேச எத்தனிக்க... அவன் எச்சி கையால் நீட்டி பேசி கொண்டிருந்தான்...
சரி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம் என்று முன்னால் போக, என் பின்னால் நின்றவர்கள் அதை தப்பாக புரிந்து எனக்கு முன்னாலையே போயி....
அப்புறமா, மூலையில் ஒரு கசங்கிய துணியாக இருந்தவன், முகத்தில் இருந்த ரத்ததை துடைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்...
வேளியே நின்ற எனக்கு... அட்ரெனலின் அதிகமாக சுரக்க ஆரம்பித்து... இது வரை எதிர்கொள்ளாத எதோ ஒன்றை எதிர்கொள்ள போகும் பயம்....
"டேய்.. அவன் பிரின்சிபால் ரூமுக்கு போறாண்டா.." என்றதும், வண்டியை கிளப்பி கொண்டு அங்கு போக அவன் பிரின்சிபால் ரூமை நோக்கி போக அவனை வேளீயே இழுத்து வந்த்து..
மீண்டும் ....
கல்லூரி வண்டியில் காத்திருந்த அனைத்து பெண்கள் முன்னாலையும் வைத்து... எங்கள் எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து.....வீட்டிற்க்கு அனுப்பினோம்...
இருந்தாலும் என் மனதில் எதோ பயம் இருக்க முதல் வேலையாக அவன் பெயரிலையே ஒரு புகார் எழுதி ஆசிரியன் சந்திப்பில் இருந்த பிரின்சிபாளிடம் கொண்டு சென்றால்.. அங்கு அந்த இங்கிளீஸ் புரபசர்... " போன வருடம் இதே மாதிரிதான் என்னையும் அடித்தானுங்க..." என்று பிளாஸ் பேக்கை எழுக்க.. அவரை முறைத்து கொண்டு அவரவர் வீட்டிர்க்கு சென்றோம்...
அதிகாலை 6:00 மணிக்கே என் வீட்டு தொலைபேசி ஒலிக்க அதை எடுத்தால், கல்லூரி நண்பனில் ஒருவன்..." பேப்பர் , பார்த்தாயா????..."
"இல்லை".. நான்
"ராக்கிங் கொடுமையில் மாணவர் சித்திரவதை, 20 பெயரை போலிஸ் தெடுகிறது, மாணவர் மருத்துவமனையில் அனுமதி...." என்று அவன் வாசித்து காட்ட, எனக்கு தூக்கம் மொத்த்மாக போயிருந்தது...
"நம்ம பெயர் போட்டிருக்கா??" ... நான்
இல்லைடா...
"நான் உடனே வாறேன்"....
அடுத்த 2 மணி நேரத்தில், எங்கள் வருடத்தில் உள்ள மாணவர்களில் சுமார் 25 பேர், எங்கள் வழக்கமாக சந்த்திப்பு இடத்தில்...
இதுவரை என்ன செய்தாலும் பிரச்சினை கல்லூரிக்கு வேளியே போயிருக்கவில்லை, கல்லூரிக்கு வேளியே உள்ளவை கல்லூரிக்கும் வரவில்லை, அதனால் கையாளுவதில் சிரமம் இருக்கவில்லை, இந்த முறை எல்லாம் எதிராக மாறி இருப்பதை புரிய முடிந்தது...
கல்லூரியில் நடந்த பிரச்சினை ஒவ்வொன்றின்போதும் எங்கள் கல்லூரியில் இருந்த சில மூத்த பிரபஸர்களிடம் (எல்லாம் வேறு கல்லூரியில் இருந்து ரிடயர்ட் ஆனா பிரின்சிபால், புரபசர்கள்) சென்று ஆலோசனை கேட்பது வழக்கம்... இந்த முறையும் வழக்கம் தப்பாமல்....
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையை திறக்க முதல்வர் வருவதால், இந்த விஷயம் பெரிதாக வாய்ப்பில்லை என்றும், போலிஸ் பிரச்சினைகள் அதுவரை குறைவாக இருக்கும் என்று பொறி தட்டியதால் எப்படியும் இரண்டு நாளாவது நேரம் கிடைக்கும் என்று தெரிந்த்தால்... முதலில் பிரச்சினையை தீர்க்கும் முடிவோடு நண்பர்கள் எல்லோருக்கும் ... சிறு சிறு வேலையை கொடுத்து விட்டு நான் நம்ம அடி வாங்கின ஜூனியரை ( ஜாண்- என்று வைத்து கொள்வோம்)... சாமாதான படுத்த வழி இருக்குமா என்று தேட ஆரம்பிக்க.... என் சோதனை காலமும் ஆரம்பித்தது...
ஜாண் தனியாக இதை செய்ய முடியாது, இவனுடம் யாராவது இருக்கனும்... இல்லை என்றால் ஒரே நாளில் பேப்பர், போலிஸ், மருத்துவமனை சாத்தியம் இல்லை என்று உணர்ந்த்து... என் ஊரில் உள்ள நண்பர்களில் சிலரை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்க... அவன் அவன் ஊரில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் மூலம் செய்வதாக கூற... அவரை நோக்கி நமது ஆட்களை அனுப்ப... அவரும் மசிந்த்தார்... ஆனால் அவர் பேசியும் ஜாண் மசியவில்லை...
மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு அடியும் இல்லை, ஆனால் அவன் மருத்துவமனையில் இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து அவனை அங்குள்ள தெரிந்த மருத்துவர்களிடம் கூறி வேளீயேற்றினோம்....
போலிஸ் நடவடிக்கைகளை தடுக்க அரசியல்வாதிகளின் துனை தேவை பட, அதுவும் எளிதாக கிடைத்தது... எங்கள் பகுதி MLA, MP கள் எங்கள் நண்பர்கள் ஆனார்கள்.... அவர்கள் அலுவலகம் எங்கள் வீடு போல் ஆனாது... இதில் சிலர் கல்லூரி நிர்வாகத்தில் பங்காக இருந்த்தால் ... கல்லூரியும் எங்களுக்காக பேச வேண்டிய கட்டாயம்.... ஆனால் பிரச்சினை மட்டும் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்தது... இதை செய்யும் சூத்திரதாரி யார் எம்பது த்ரியாமல் இருந்ததால்.. பிரச்சினையும் தீர வழி தெரியவில்லை... ஆனால் பலர் இந்த பிரச்சினையை தீர்ப்பதாக சொல்லி "ஆளுக்கு 2 லச்சம் கொடுங்கள்.. போதும்" என்று பேரம் மட்டும் பேசினார்கள்....
ஆனாலும் நாங்கள் வீட்டில் தங்கவில்லை... இதுவரை பாத்திராத நண்பர்களுடன் கூட இரவு தங்கினோம்... செப்டம்பர் 11, என்னுடைய பிறந்த நாள்... இரவு முளுவதும் உறக்கம் வரவில்லை.... திரும்பி படுத்தால் நண்பன் ஒருவன் பயத்தால் பெருமூச்சு விட்டு கொண்டிருந்தான்.... சாப்பிட கூட பிடிக்கவில்லை... மனம் பயத்தில் செத்து போயிருந்தது... வாழ்க்கை முடிந்து போகுமோ என்ற பயம்..... காலையில் எழும்பி பேப்பரை வாங்கி பெயர் வந்திருக்கிறதா என்று தேடி.... மனது மிகவும் சோர்ந்த்து போயிருத்தது.... வீட்டில் உள்ளவர்களுக்கு எதையும் யாரும் தெரிவித்திருக்கவில்லை.... அவர்களிடம் சொல்லி அவர்களையும் கஷ்ட படுத்தவும் மனம் வரவில்லை....
அன்று நண்பன் ஒருவன் வந்து, நம்முடைய ஜூனியர்கள் தாம் நம் பெயரை பட்டியல் இட்டு போலிசிடம் கொடுத்திருக்கிறார்கள் என்றும், ஆனால் அதில் என் பெயர் மட்டும் இல்லை என்பதும் (ஆச்சரியாமாக இருந்தாலும் ... காரணமாகதான்) ... இந்த பிரச்சினையின் சூத்திரதாரி ரவுடியாக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்த ஒருவரை சொல்ல...
"சரி வா என்று நண்பர் இருவரிடம் அந்த அரசியல்வாதியை பார்க்க சென்றேன்..."
அரைமணி காத்திருப்பிற்க்கு பின் வந்தார் (ன்)... "என்ன பெஞ்சமின், இந்த பக்கம் பாக்கிறேன் என்று ஆச்சிரிய பட.."
நான் பிரச்சினையை கூற.... சிரித்து கொண்ட "நான் தான்.. எல்லாம் நான் தான்..."
" வீடு எரிந்த ஒரு காலில்லாத பெண்ணையும், உன்னுடம் அழைத்து வந்து... கலக்டரிடம் மனு கொடுத்து அவளுக்கு பணம் கிடைக்க உதவி இருக்கிறாய்... அப்படி பட்ட உனக்கு நான் உதவாமலா.... ஆனால், அன்று என்னிடம் வந்து விட்டு காப்பி குடிக்க மறுத்த நீ, இன்று குடிப்பாய் என்று நினைக்கிறேன்" என்று எனக்கு உத்தரவிட... அந்த காப்பியை குடித்தேன்....
விசயம் அறிந்த என் நண்பர்கள் மற்ற அரசியல்வாதிகளையும் அங்கு அழைத்து வர... அங்கு பிரச்சினையை தீர்க்க எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டு என்று பேச்சு போக ஆரம்பித்தது....
ஆனால் பிரச்சினை தற்க்காலிகமாக தீர்ந்த்திருந்தது......
இரண்டு நாட்களில் கொஞ்சம் மறந்து போயிருந்தது... இந்த பிரச்சினையினால் எங்கள் கூட்டம் குறைந்த்திருந்தது.. மந்தமாயிருந்த்து... மீண்டும் கல்லூரிக்கு போக ஆரம்பித்தோம்... அவனும் வர ஆரம்பித்தான்...
இரண்டு வாரம் கழிந்திருந்தது.. எல்லாம் மறந்து போயிருந்தது... அடுத்த வகுப்பில் போய் கடலை வறுத்து கொண்டிருந்த என்னை எங்கள் புரபஸர்களில் ஒருவர் தேடுவதாக கூற... நான் வேளியே வர அவர் எனக்காக காத்து கொண்டிருந்தார்...என்னிடம் வந்து..
"அந்த ராக்கிங் பிரச்சினை மீண்டும் முளை விட்டுள்ளது, CM ஆபிசில் இருந்து உங்களை அரஸ்ட் பன்ன சொல்லி ஃபேக்ஸ் வந்து இருக்காம், அதனால் போலிஸ் வந்து இருக்கு... நீங்கள் எல்லாம் கல்லூரியின் பின் வழியாக ஓடிவிடுங்கள், நாங்கள் நீங்கள் கல்லூரிக்கு வரவில்லை என்று சொல்லிவிடுகிறோம்" என்று கூற...
உடனே எனக்கு அது அபத்தமாக பட..." இன்னைக்கு ஓடி விடலாம் ... ஆனால் நாளைக்கு????" என்று வினாவ....
பதில் இல்லை..
" சரி, நானே வந்து இன்ஸ்பெக்டரை சந்திக்கிறேன் என்று கூற என்னை அழைத்து சென்றார்...
இன்ஸ்பெக்டர், ஒரு நல்ல ஜேண்டிமேனாக நடந்து கொண்டார்... நான் நடந்ததை ஒரு விதமாக கூறி மூடித்தேன்... (எல்லாம் நமக்கு பங்கம் இல்லாமல் தான்)... அவர் சரி பிரச்சினை உங்களால் சரி செய்யமுடியும் என்றால் எவ்வளவு நேரம் வேண்டும் என்றார்....
நான் பண விஷயத்தை கூறி....ஒரு வாரம் கேட்க....
நம்ம பிரின்சிபால்.. " சாரே .. வேணுமெங்கில் இவரை பிடிச்சேண்டு போ" என்று சொல்ல...
இன்ஸ்பெக்டர், போலிஸ் வேனை போன் செய்து வர சொல்ல ... நான் காலில் விழாத குறையாக .. அன்று மாலை 5:00 மணி வரை நேரம் கேட்க அவரும் சம்மதித்தார்.... அப்போது மணி 11:00 ஆகி இருந்தது....
நான் திரும்பி என் வகுப்புக்கு வர விஷயம் அறிந்த நண்பர்கள் அங்கு எனக்காக காத்திருந்தனர்..... அவர்களை எங்களுக்கு தெரிந்த பஞ்ஜாயத்து தலைவர்கள் முதல் அர்சியல் தலைவர்கள் வரை எல்லொரையும் அழைத்து கொண்டு ... பிரச்சினைக்கு காரணமான அரசியல்வாதி வீட்டுக்கு வர சொல்லிவிட்டு ,...நான் ஜாணின் வகுப்பை நோக்கி நடந்தேன்....
அவனை நான் வேளியே வரும்படி அழைக்க, வகுப்பில் இருந்த ஆசிரியை இதற்க்கு முன் ஒரு மானவனை இதேபோல் அழைத்து அடித்ததை நினைவுபடுத்தி மறுத்தார்..... நான் அவரை அழைத்து நிலமையை சொல்ல , அவர் ஜாணை என்னோடு அனுப்பினார்....
நான் ஜானை அழைத்து கொண்டு என்னுடைய பைக்கில் போகும் போது தான்.... என் வாழ்வில் ஒருவரை முதல் முதலாக கவுன்சிலிங் செய்ய ஆரம்பித்தேன்.... அது வரை சமாதானத்துக்கு மறுத்தாவன் சம்மதித்தான்....
அரசியல்வாதியின் வீட்டில் சென்றால் அவர் அங்கு இல்லை... எப்படியோ நண்பர்கள் தெடி கண்டுபிட்த்து அவரிடம் விஷயத்தி சொல்ல... அவர் நம்மிடம் ஒரு ஒப்பந்த கடிதம் எழுதி வாங்கிவிட்டு... மீண்டும் போலிஸ் நிலையம் சென்றால்.. இன்ஸ்பெக்டர் எனக்காக காத்துகொண்டிருக்க.... அங்கு ஒரு சமாதான ஒப்பந்தம் மீண்டும் எழுதி பிரச்சினையை தீர்த்து கொண்டோம் .....
இந்த பிரச்சினை, எதோ யோசிக்காமல், தேவையில்லாமல் ஒரு அப்பாவியை அடிக்க.... நான் பட்ட கஷ்டங்கள்... இன்றும் நான் அந்த நினைவுகளை அசையிட்டால் மனம் ஒரு நிமிடம் ஆட்டம் காணும், அந்த நேரத்தில் அதை ச்ம்மாளித்தாலும்... இன்றும் எனக்கு அந்த பயம் மாறவில்லை....
அதன் பிறகு மிக அவசியம் இல்லாமல் கையை நான் நீட்டி அடித்திருக்கவும் இல்லை....