PDA

View Full Version : காதலியின் கட்டளை



meeravi
02-02-2006, 11:00 AM
பூவாய் திறவாய் - என்
இதயத்தாமரை மலர்வாய்

என்னில் ஆயிரம்
சூரியன் உதிக்கச்செய்வாய்!

என்றும் என் வழிமேல்
உன் விழி வைப்பாய்!

என் சகாராவில் - ஓர்
நைல் நதி கொணர்வாய்!

தொட்டும் தொடாமல் உலவும்
தென்றலைப் போல் - இந்தத்
தொல்லுலகம் தொலையும்வரை
என்னை தொடர்ந்திருப்பாய்!

-meeravi

sarcharan
02-02-2006, 11:38 AM
மீராவி(ன்) கவிதை சூப்பர்.

பென்ஸ்
02-02-2006, 05:24 PM
தொட்டும் தொடாமல் உலவும்
தென்றலைப் போல் - இந்தத்
தொல்லுலகம் தொலையும்வரை
என்னை தொடர்ந்திருப்பாய்!


தொட்டும் தொடாமலும் இருக்கும் தென்றல்....அருமை :-)

ப்ரியன்
03-02-2006, 02:34 AM
மொத்தக் கவிதையும் அழகு என்றாலும்

/*
தொட்டும் தொடாமல் உலவும்
தென்றலைப் போல் - இந்தத்
தொல்லுலகம் தொலையும்வரை
என்னை தொடர்ந்திருப்பாய்!
*/

இவைப் பேரழகு

வாழ்த்துக்கள் மீராவி.