PDA

View Full Version : மீண்டும் ஒரு காதல் க(வி)தை



ப்ரியன்
01-02-2006, 02:30 AM
வணக்கம் அன்பர்களே சென்ற வருடம் பிப்ரவரி மாதத்தில் விளையாட்டாக ஒரு காதல் தொடர் உரைநடைக் கவிதையை தினம் ஒரு பாகமாக என் நண்பர்களுக்கு மடலிட்டேன்.இந்த வருடமும் உண்டா என்று கேட்டனர் அவர்களில் சிலர் அந்த சிலருக்காக உங்கள் பலரை இம்சிக்க மடலால் உங்கள் மின்னஞ்சல் உள்ளிருப்பு நிறைய இதோ மீண்டும் ஒரு தொடர் உரைநடைக் கவிதையுடன் வருகிறேன்.இடையில் நின்றுப் போன கல்லூரிக் கதை மாதிரி இது நின்றுப் போகாது என்பது என் உத்தரவாதம் :) . தலைப்பு இடுவதில் எனக்கும் எப்போதும் தோல்வியே அதனால் உங்களிடமே தலைப்பு வைக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறேன்.இருபத்து எட்டு பாகங்களும் முடிந்ததும் நல்ல தலைப்பாய் நீங்களே சொல்லுங்கள்.விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன.

அன்புடன்,
* விக்கி - ப்ரியன் *

ப்ரியன்
01-02-2006, 02:30 AM
காதல் 1
************

டேய்!டேய்!
சூரியன் வந்து நேரமாச்சு!
எந்திரிடா!
அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்!
பட்டுத் தாவணி சரசரக்க
வந்து நின்றாய் நிலவாக!

- ப்ரியன்.

aren
01-02-2006, 02:42 AM
உங்கள் நிலா அதுவும் பட்டுத் தாவணி சரசரக்க நிலவாக அதிகாலையில் (சூரியன் உதித்தாலும் அது அதிகாலையே நம் இளைஞர்களுக்கு) காதலி வந்து நின்றதை அழகாக கவிதை வரியில். அமர்க்களம். தொடருங்கள்,

sarcharan
01-02-2006, 04:06 AM
ஹ்ம்ம் அந்த நாள் ஞாபகம் (ஹி ஹி பள்ளி, கல்லூரி நாட்கள்..)நெஞ்சிலே வந்ததே....


காதல் 1
************

டேய்!டேய்!
சூரியன் வந்து நேரமாச்சு!
எந்திரிடா!
அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்!
பட்டுத் தாவணி சரசரக்க
வந்து நின்றாய் நிலவாக!

- ப்ரியன்.

பென்ஸ்
01-02-2006, 05:38 AM
அட்ரா அட்ரா... அட்ரா சக்கை...
கலக்கு மாமு...

மதி
01-02-2006, 06:56 AM
கலக்குங்க பிரியன்..
சீக்கிரம்.. அடுத்த கவிதை எப்போ?

pradeepkt
01-02-2006, 07:33 AM
சூப்பரப்பு
ஆமா, காதலுக்குக் கால நேரம் கிடையாதுங்கறது இதுதானோ
அடுத்து ராத்திரி நேரத்துல தூங்குன்னு உங்கம்மா சொல்றப்ப கதிரொளி வீசி உங்க காதலி வந்து நிப்பாங்கய்யா...
இது காதல் செய்யும் லீலை

ப்ரியன்
02-02-2006, 02:58 AM
நன்றி நண்பர்களே..இதோ அடுத்த பகுதி.

ப்ரியன்
02-02-2006, 03:06 AM
காதல் 02
*************
"அம்மா
ஒரு குடம்
குடிதண்ணி வேணும்!"
இப்படியல்லாமா குயில் கூவும்?
குழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்!
அடடா,
நேற்றைக்கு கனவில் வந்த
அதே தேவதை

- ப்ரியன்.

sarcharan
02-02-2006, 03:28 AM
எனக்கு எப்பொழுதுமே உதவும் மனப்பான்மை உண்டு(குறிப்பாக ஹி ஹி ....).



காதல் 02
*************
"அம்மா
ஒரு குடம்
குடிதண்ணி வேணும்!"
இப்படியல்லாமா குயில் கூவும்?
குழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்!
அடடா,
நேற்றைக்கு கனவில் வந்த
அதே தேவதை

- ப்ரியன்.

பென்ஸ்
02-02-2006, 05:39 PM
அது கனவாக இருந்திருக்காது, அது அரைகுறை உறக்கத்தில் நீர் வானத்து நிலவை பார்த்திருக்க வேண்டும்...
அவள் பேசுவதை கேட்டு இருந்தால் குயிலும் கூவுவதை நிறுத்திவிடுமையா...

ப்ரியன்
03-02-2006, 08:10 AM
காதல் 03
**********
சத்தியமாய்,
இன்றைய தேதிவரை
அன்றைய நாள்தான்
இனியநாள் எனக்கு!

- ப்ரியன்.

பென்ஸ்
06-02-2006, 12:51 PM
ப்ரியன்... என்ன மூன்று நாளாக கவிதையை காணவில்லை....

காத்திருக்கும்...

அறிஞர்
06-02-2006, 08:42 PM
காதல் 02
*************
"அம்மா
ஒரு குடம்
குடிதண்ணி வேணும்!"
இப்படியல்லாமா குயில் கூவும்?
குழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்!
அடடா,
நேற்றைக்கு கனவில் வந்த
அதே தேவதை

- ப்ரியன்.
கனவில் வந்த தேவதை
வாழ்க்கை முழுக்க
துணையாக வந்தால்
இன்பமே....

அறிஞர்
06-02-2006, 08:43 PM
ப்ரியன்... என்ன மூன்று நாளாக கவிதையை காணவில்லை....

காத்திருக்கும்...அவர் கொடுக்காட்டி.. நீங்க உங்க சரக்கை அவுத்து விடவேண்டியதுதானே...

பென்ஸ்
07-02-2006, 02:10 AM
சட்டியில் இருந்தால்.....

மதி
07-02-2006, 02:48 AM
சட்டியில் இருந்தால்.....
இந்த பொய் தானே வேண்டாங்கறது..:angry: :angry: :angry: :angry:

ப்ரியன்
07-02-2006, 09:04 AM
காதல் 04
*************

பார்க்காதப் பார்வை;
இதுவரைப் பார்க்காத பார்வை
நான் பார்க்க
அம்மா சொன்னாள்
"புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு"
நான் கேட்காத கேள்வி
எங்கே என் இதயத்திலா?

- ப்ரியன்.

பென்ஸ்
07-02-2006, 10:21 AM
கானாத கண்ணும் கண்ணல்ல..
சொல்லாத சொல்லும் சொல்லல்ல..
என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல...
என்ற வரிசையில்....

பார்க்காத பார்வை...
கேட்காத கேள்வி....

என்று எடுக்க நினைத்தால்...:rolleyes: :rolleyes: :rolleyes:

நான் எவரையும் பார்க்காத அந்த பார்வை... :p எதனால்??? :confused: :confused:
கனவில் கண்டவளை கண்டதாலா????
இல்லை, உலகின் அதிசயத்தில் ஒன்று கண்முன் நடமாடுவதை கண்டா???

என்னிடம் கூட நான் கேட்டிராத கேள்வி???
அது....

இது சாத்தியம் என்பதா???
இவ்வளவு அழகாக இருக்க முடியுமா என்றா???
என்னயா கேட்டீரு???:confused: :confused: :rolleyes: :rolleyes: :D :D :D

sarcharan
07-02-2006, 10:51 AM
பென்ஸூ,
தீஸிஸ் எழுதிறியளோ இல்லையோ இதுபோல ரொம்ப நல்லாவே (!!!:rolleyes: :rolleyes: :cool: ) எழுதறீங்க (எழுதி ஐவரணியினரிடம் வசமாக மாட்டிக் கொள்கிறீர்கள்....:D :D :D :D )

தாமரை
07-02-2006, 10:56 AM
பென்ஸூ,
தீஸிஸ் எழுதிறியளோ இல்லையோ இதுபோல ரொம்ப நல்லாவே (!!!:rolleyes: :rolleyes: :cool: ) எழுதறீங்க (எழுதி ஐவரணியினரிடம் வசமாக மாட்டிக் கொள்கிறீர்கள்....:D :D :D :D )
ஐவரணி ??????

:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :D :D :D :D :D :D :D :D

sarcharan
07-02-2006, 01:12 PM
என்ன இது.... புரியலையே....
நீங்கள் குழம்பி நிற்க, நாங்கள் சிரிப்பதை சொல்கிறீரோ....

ஐவரணி ??????
:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :D :D :D :D :D :D :D :D

தாமரை
07-02-2006, 01:17 PM
என்ன இது.... புரியலையே....
நீங்கள் குழம்பி நிற்க, நாங்கள் சிரிப்பதை சொல்கிறீரோ....

பல்லி தலையைக் காப்பாத்திக்க வாலை அத்து விட்டுட்டு ஓடுறதுதான் ஞாபகம் வருது.. பாவம் சரவணன்!!!!

ப்ரியன்
08-02-2006, 10:54 AM
காதல் 05
********

என் அம்மா உன் அம்மாவும்
உன் அப்பா என் அப்பாவும்
நல்ல நண்பர்கள் ஆனதைவிட;
எனக்கு சந்தோசம்,
எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்
உந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்!

- ப்ரியன்.

ப்ரியன்
08-02-2006, 10:55 AM
ஊருக்குப் போயிட்டு வாரேன்

பென்ஸ்
08-02-2006, 11:09 AM
எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்
உந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்!.

நீர் விடுவதில்லை
என் செடிகளுக்கு இனிமேல்
என் வீட்டு ரோஜா
உன் கூந்தலில் மட்டும்
எப்படி அழகாய் சிரிக்கிறது

என்று பூக்களிடம் யாரோ கோபபட்டதாய் நியாபகம்...
வாசித்ததா இல்லை சிந்தித்ததா என்று கூட நினைவில்லை....

தொடருங்கள் ப்ரியன்....

விடுமுறையில் செல்வதால் தங்கள் தோலைபேசி எண்ணை கொடுங்கள்... :rolleyes: :rolleyes: :rolleyes:
உங்களுக்காக உங்கள் கவிதையை நான் பதிக்கிறேன்....:D :D :D :D

sarcharan
08-02-2006, 11:11 AM
ஏங்க, பக்கத்து இலைக்கு பாயசம் இல்ல.....

நீர் விடுவதில்லை
விடுமுறையில் செல்வதால் தங்கள் தோலைபேசி எண்ணை கொடுங்கள்... :rolleyes: :rolleyes: :rolleyes:
உங்களுக்காக உங்கள் கவிதையை நான் பதிக்கிறேன்....:D :D :D :D

தாமரை
08-02-2006, 12:17 PM
ஏங்க, பக்கத்து இலைக்கு பாயசம் இல்ல.....
பொறு சரவணா.. உன் முறை அடுத்து வரும்...

(நீங்கள் தப்பாய் தட்டச்சு செய்ததினால் நீங்க கேட்கற மாதிரி பொருள் மாறி விட்டது)

தாமரை
09-02-2006, 03:42 AM
நீர் விடுவதில்லை
என் செடிகளுக்கு இனிமேல்
என் வீட்டு ரோஜா
உன் கூந்தலில் மட்டும்
எப்படி அழகாய் சிரிக்கிறது

என்று பூக்களிடம் யாரோ கோபபட்டதாய் நியாபகம்...
வாசித்ததா இல்லை சிந்தித்ததா என்று கூட நினைவில்லை....



....:D :D :D :D
இதையும் ஞாபகம் வச்சிக்கப்பு..

அவள் கூந்தலில் சூடிய
என் வீட்டு ரோஜாப்பூ
எகத்தாளமாய் சிரித்தது
என்னப் பார்த்து...
...
...
....
....
...
...
...
விக்கை கழற்றி
வைக்கும்வரை!!!!!!!:D :D :D

ப்ரியன்
14-02-2006, 11:00 AM
எப்படி இருப்பாள்?
எப்படி இருப்பாள்? -
நண்பர்களின் தொடர் கேள்விக்கு
எப்படி இருக்கவேண்டுமென்று
கனவு கண்டேனோ
அப்படி இருப்பாள் எனச்
சொல்லி தப்பிவந்த நாளில்,
நல்ல நல்ல கல்லூரிகளிலெல்லாம்
இடம் கிடைத்தும் வேண்டாமென்று
கடைசியில் நீ சேர்ந்த அதே கல்லூரியில்
சேர்கிறாள் மகள் எனச் சொல்லி
வருத்தப்பட்டாள் உன் அம்மா
குதூகலப்பட்டது என் ஆன்மா!

பென்ஸ்
14-02-2006, 04:35 PM
அப்புறம்.....:-)

ப்ரியன்
15-02-2006, 11:44 AM
காதல் 07
********
எப்படி உணர்ந்தேனா?
உன்னுடன் முதல்நாள்
கல்லூரி வரும்போது
எப்படி உணர்ந்தேனா?
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற பக்தனைப் போல்!
அடியேய்,
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற
ஏழைபக்தனைப் போல்!

- ப்ரியன்.

sarcharan
15-02-2006, 11:48 AM
சூடம் , ஊதுவத்தி ஏதாவது கூட எடுத்துச் சென்றீர்களா..?
அப்பெண் சூலம் வைத்திருந்தாளோ?


காதல் 07
********
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற பக்தனைப் போல்!
அடியேய்,
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற
ஏழைபக்தனைப் போல்!

- ப்ரியன்.

ப்ரியன்
16-02-2006, 11:48 AM
காதல் 08
*************

நீ வந்ததிலிருந்து
கல்லூரி முழுவதும்
ஏகப்பட்ட மரியாதை
எனக்கு!
தெரியும் அது
சாமியின் காலடியில் கிடக்கும்
பூவுக்கான மரியாதை!

- ப்ரியன்.

தாமரை
16-02-2006, 12:52 PM
காதல் 08
*************

நீ வந்ததிலிருந்து
கல்லூரி முழுவதும்
ஏகப்பட்ட மரியாதை
எனக்கு!
தெரியும் அது
சாமியின் காலடியில் கிடக்கும்
பூவுக்கான மரியாதை!

- ப்ரியன்.

ம்ம்ம்.... இப்படிதான் கேட்பார், இதை படித்தால்



நான் நடக்கும் பாதையிலே
பூக்களைத்தான் யார் விரித்தார்
செக்கச் சிவந்திருக்கும்
அது பூவா இல்லை
பூத்த இதயமா?

ப்ரியன்
20-02-2006, 06:13 AM
காதல் 09
*************
நேற்றிருந்த நானாக
இன்று நான் இல்லை!
தனிமை துணையாய் போனது!
மொட்டைமாடி இரவு
கையில் புகை
நண்பர்களுடன் அரட்டை! - என்றிருந்த
அடையாளம்
அத்தனையும் அவசரமாய் மறந்துப் போனது!
உன் நினைவுகள் மட்டும் துணையாய் ஆனது!

- ப்ரியன்.

பென்ஸ்
20-02-2006, 12:30 PM
நேற்றிருந்த நானாக
இன்று நான் இல்லை!

நீ நீயாக...
நான் நாயாக..
என்று தமிழ்மன்றத்தில் வாசித்த ஞியாபகம்


தனிமை துணையாய் போனது!
.......................
உன் நினைவுகள் மட்டும் துணையாய் ஆனது!

கி கி... உதைக்குதே....
என்ன பிரியன்... இன்னும் நினைவு திரும்பவில்லையா????
முத்தி போச்சப்பூ..... முத்தி போச்சு....

gans5001
21-02-2006, 10:33 AM
.. Ũ ç ŢƢ측 ġ Ģ째

pradeepkt
21-02-2006, 11:26 AM
வாங்க கன்ஸ்.
ஏன் எல்லாமே கட்டம் கட்டமாத் தெரியுது?

ப்ரியன்
23-02-2006, 09:58 AM
காதல் 10
**********

கல்லுரிச் செல்லும்
காளையர்களின் கனமான
கனவு இருசக்கர வாகனம்!
அப்பா வாங்கித் தர
அபசகுனமானது
உன்னுடனான பேருந்து
பயணத்திற்கு!


- ப்ரியன்.

ப்ரியன்
23-02-2006, 09:59 AM
காதல் 11
**********

தனியே உனை அனுப்பவாதா? - உன் அப்பா
உன்னையும் தொற்றிக் கொள்ள சொல்ல
பூவானது பின் இருக்கை!


- ப்ரியன்.

ப்ரியன்
23-02-2006, 09:59 AM
காதல் 12
**********

தினம் தினம்
அலுங்காமல் குலுங்காமல்
தேரில் உலாவரும்
அம்மனைப் போல்தான்
அழைத்துச் செல்வேன்!
நீயும் வழிதோரும் காணும்
பிள்ளைகளுக்கு எல்லாம்
புன்னகை வரம் அளித்துக்
கொண்டே வருவாய்!
இவன் மனம் மட்டும் குண்டு
குழி தேடித் தேடி குதித்து
தரிக் கெட்டு ஓடிவரும்!


- ப்ரியன்.

ப்ரியன்
23-02-2006, 10:18 AM
காதல் 13
**********

கடைசிவரை யாரென
கண்டறிய இயலவில்லை
நம்முடன்
மிதந்து வந்த வண்டியை பொறாமையில்
"பஞ்சர்" ஆக்கியவன்
யாரென்று!

- ப்ரியன்.

பென்ஸ்
24-02-2006, 08:48 AM
பகல் கனவு.... :rolleyes: :rolleyes: :rolleyes:
நம்மால் முடியாத விசயங்களை கற்பனையாய் அனுபவித்து மனதை சாந்த படுத்தி கொள்ளுவது
நடக்க போவதை எப்படி எல்லாம் செய்து பார்க்கலாம் என்று பிளான் போட்டு கொள்வது
நடந்த விசயத்தை , எப்படியெல்லாம் செய்திருந்தால் என்னவாக இருந்திருக்கும் என்று திருத்தி கொள்ளுதல்...

இவை எல்லாவற்றிலும் கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் அதீத கற்பனை...

நடந்தால் ஒரு புரியாத இன்பத்தில்..
நடக்காத போது எரிச்சல் பட்டு கொண்டு...

விடலை பருவத்தில் எல்லோருக்கும் வரும் பகல்கனவுகல் அதிகமாக, ஒரு பைக், அதில் மனதுக்கு பிடித்தவள், தள்ளியே இருக்கும் அவள் உரச வேண்டி மனம் தேடும் ஸ்பீடு பிரேக்கர்கள், ஒரு நீண்ட நடை பயணம்.. மழையில் நனைந்து... கதை பேசி, கடற்கரையில் கால் நனைத்து, ஆற்றோரம் மீன் பிடித்து என்று பலவாக போகும் சிந்தனைகளை...:p :p :p :p

சில சினிமாகாரர்கள் படமாக காட்டி மனம் கவர்ந்தாலும், எனக்கு இங்கு கவிதைகளாக படிக்கும் போது....
எனக்கு பிடித்த இடத்தில் என்னையும் என்னவளையும் (???:angry: :angry: ) நிறுத்தி அழகிய கனாகாலத்தில்.....:rolleyes: :rolleyes: :D :D :D :D :D

mukilan
24-02-2006, 04:17 PM
உங்களவளா? தூத்துக்குடியும் நானும் கதைப்படி உங்களின் அவர்கள் (எண்ணிக்கையில்) போலத் தோன்றுகிறதே பென்ஸ். எப்படியாயினும் சரி உங்கள் கனவு நனவாக தமிழ் மன்ற வாழ்த்துக்கள்.

பென்ஸ்
26-02-2006, 06:42 AM
:D :D அதே முகில்ஸ்.....
நன்றி... என்னா வாழ்த்துகள்பா... :rolleyes: :rolleyes: அப்பு, நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா... :p :p
சரி.. சரி.. இருந்தாலும் ஏற்று கொள்கிறேன்...:D :D :D

இளசு
26-02-2006, 06:58 AM
ப்ரியன், பென்ஸ்

முழுமையாய் வாசிக்க எண்ணி நான் தள்ளி நிற்க
இன்னும் இன்னும் இந்த கவிவாகனம் முன்னே செல்ல..

நானும் வருவேன்... பயணிப்பேன்..
நாளை.. மறுநாள்...?
நாள் என்ன? நிச்சயமில்லை..
வருவேன் என்பது மட்டும் நிச்சயம் ஆகட்டும்..

ப்ரியன்
28-02-2006, 11:08 AM
காதல் 14
*********

பெண்ணில்லா எங்கள் வீட்டிற்கும்
நீதான் கோலம் போடுவாய்!

போக வர பார்த்திருக்கிறேன்
அர்த்தமில்லாமல் பேசிப்பேசி
வழிந்து கொண்டிருக்கும்
என்வீட்டு கோலம்
உன்வீட்டு கோலத்திடம்!

- ப்ரியன்.

ப்ரியன்
28-02-2006, 11:08 AM
காதல் 15
********

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
புடவைக் கட்டிக்கொண்டு
வந்த அந்நாளில்
நிலவில் முட்டி நின்று
அம்மாவிடம் வாங்கிக்
கட்டிக் கொண்டதை!

- ப்ரியன்.

ப்ரியன்
28-02-2006, 11:08 AM
காதல் 16
********

காதலர் தினமன்று
உனக்கு கடிதம் கொடுத்த அவனுக்கு
நீ கொடுத்த பதிலடியில்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடி ஒளிந்துக் கொண்டது
என் தைரியம்
தற்காலிகமாய்
என் காதலும்!

- ப்ரியன்.

ப்ரியன்
28-02-2006, 11:09 AM
காதல் 17
*********

அன்று உனக்காக
வாங்கிய ரோஜா
ஒற்றை இதழைக்கூட உதிர்க்கவில்லை இன்னமும்!

- ப்ரியன்.

ப்ரியன்
28-02-2006, 11:09 AM
காதல் 18
********

ஒரு மழைநாளில்
அம்மாவீற்கு முடியாமல்போக
நீ செய்த உதவி கண்டு
அம்மா சொன்னாள்
"இவளைப் போல்
ஒரு மருமகள் வேண்டும்"
இவளே மருமகளாய் வேண்டும்
உனக்கு!
பாவமாய் வேண்டியது இதயம்!

- ப்ரியன்.

ப்ரியன்
28-02-2006, 11:09 AM
காதல் 19
********

உன்னுடன் பேசிக்கொண்டிருக்கையில்
காற்றிலாடும்
கலைந்த கூந்தல் ரசித்திருந்தேன்!
என்னடாவென்றாய் புருவம் தூக்கி!

"கூந்தலில் தொங்கிக் கொண்டு
ஊஞ்சல் ஆடுகிறது என் இதயம்!"

கேட்டவள்,கொஞ்சம் முறைத்து
சடசடவென
சிரிப்பூ தூவினாய்!

அடடா!கவிஞனே!
இன்னும் சொல்லேன்!
என நீ கேட்க
முதன்முதலாய்
வெட்கம் கற்றேன்!

- ப்ரியன்.

sarcharan
28-02-2006, 11:43 AM
விடலைப்பருவ ஆசைகள் சொல்லவும் வேண்டுமோ...

ப்ரியன்
10-03-2006, 09:35 AM
காதல் 20
*******
கவிதையாய் நான் சொன்ன காதல்
உனக்குப் புறிந்ததோ?
புரிந்தும் புரியாததாய் நடிக்கிறாயோ?
எண்ணி மயங்கிகிடந்த நாளில்
மொட்டைமாடி இரவில்
"விக்கி" எனக்கொரு கவிதை வேண்டும்
என் 'கவி'தைக்கு இல்லா கவிதையா?
சொல்ல வந்த கணம்!
வெட்கபூ பூத்தபடிச் சொல்லி முடித்தாய்
என் காதலனுக்கு தர...
அந்நேரத்தில் மடிந்தது என் உயிர்;
இன்றைக்கும்,
அதோ!அங்கு வானெங்கும்
நட்சத்திரங்களாய்
சிதறிக் கிடப்பவை
இதயம் சிதறிய சில்லுகள்!

- ப்ரியன்.

பென்ஸ்
10-03-2006, 10:05 AM
எங்கே வாசித்ததா என்று தெரியாது...
நீ எனக்கு
இல்லாமல் போனாலும்
சொல்லாமல் போகாதே..

மேலும் வாசித்த ஒரு நல்ல கவிதை
எழுது எழுது
எனக்கு ஒரு கடிதம் எழுது
என்னை நேசிக்கிறாய் என்றல்ல
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது எழுது...

இது இருந்தும் இழந்த நிலை,
இருப்பதை பறிகொடுத்துவிடுவோமோ என்றா நிலை..
ஆனால் இந்த நிலைதான் ஒருவன் தன் காதலை வேளிபடுத்த முதல் காரணமாக இருக்கும்...

ஆனோ பெண்ணோ இதை விட நல்லது கிடைக்கும் என்ற எண்ணம்தானே கதலையும் கற்பளித்து விடுகிறது....

அப்புறம் நம் தமிழ்மன்ற நன்பர் கல்வெட்டு சொன்னது போல்
யாருக்கும்
பிடிக்காமல் போவேன் எனத்
தெரிந்திருந்தால்!!
உதாசினப்படுத்தியிருக்க மாட்டேனடி
உன்னை!!??
என்று எண்ணவும் தோன்றும்...

இன்னும் மனித மனதுகளை சுன்டிவிடும் கவிதைகளை தொடருங்கள் ப்ரியன்..

ப்ரியன்
13-03-2006, 10:04 AM
காதல் 21
********

அவளோ?இவளோ!
என் காதலி என
பார்வை வீச வேண்டிய வயசடி!
அவனோ?இல்லை இவனோ?
உன் காதலன் என
நீ பேசும் ஆணிடமெல்லாம்
பொறாமை பார்வை வீச வைத்தாயே
கொடுமையடி கொடுமை!

- ப்ரியன்.

ப்ரியன்
17-03-2006, 11:04 AM
காதல் 22
**************

நல்ல கவிஞன் என்பாய்;
நல்ல நண்பனென்பாய்
என்னை நான் அறிய
தரும் பொழுதுகளில்;

உன் காதலைச் சேதப்படுத்த
விரும்பியதில்லையாதலால்
நல்ல காதலன் எனச்
சொல்லிக் கொள்வேன்
என்னையே நான்!

- ப்ரியன்.

ப்ரியன்
27-04-2006, 01:24 PM
காதல் 23
*********

அவன் அப்படிச் சொன்னான்
இப்படி சொன்னான்
என காதலன் புராணம்
நீ பாடி சிலாகித்திருக்க
சிரித்தப்படி கேட்டுக் கொண்டிருப்பேன்
மனதின்
மூலையில் குத்தவைத்து
அழுது கொண்டிருக்கும்
என் காதல்!

- ப்ரியன்.

ப்ரியன்
27-04-2006, 01:25 PM
காதல் 24
*********

அறிமுகப்படுத்தியதில்லை;
தூரமிருந்தும் அடையாளம்
காட்டியதில்லை;
உன் காதலனின்
பெயரும்கூட அறிய தந்ததில்லை;
ஆனாலும்
உன்னை விடுத்துப் பார்த்தால்
நான் மட்டுமே அறிவேன்
உன் காதலனை
உன்னுள் இருக்கும் காதலை;
இருக்கட்டும்
அவன் வரம் பெறவதற்கென்றே
பிறந்த ஆடவன்;
நான் சாபம் வாங்கவே
வந்த முடவன்!

- ப்ரியன்.

ப்ரியன்
27-04-2006, 01:26 PM
காதல் 25
*********

மொட்டைமாடியில் அமர்ந்து
கல்லூரி
கடைசி வருடத்தின்
கடைசி தேர்வுக்காக
படித்துக் கொண்டிருக்கையில்;
பக்கதிலிருந்த என் நோட்டு புத்தகத்தை
அனுமதி இல்லாமல்
எடுத்துப் பார்த்தவள்
கவிதைகள் எல்லாம்
உன்னைக் குறித்து இருக்க
பட்டென முடி
சட்டென பறந்து போனாய்;
ஆற்றி முடியாமல்
அழுது கொண்டே இருந்தது
அம்மா நீ
சொல்லாமல் போனாதாய்
கவிதை!

- ப்ரியன்.

ப்ரியன்
14-06-2006, 02:50 AM
காதல் 26
*********

அடுத்தடுத்த நாட்கள்
பேசாது நீயிருக்க
ஊமையாகிப் போனது
நான்!
ஊனமாகிப் போனது
மனது

- ப்ரியன்.

ப்ரியன்
14-06-2006, 02:50 AM
காதல் 27
*********

கல்லூரி கடைசிநாளில்
எல்லோரும்
கலந்திருக்க
பிரிவு் கவலையில்
கரைந்திருக்க!
என் கண்களும்
அழுது கிடந்தன
நீ பேசாததால்
இறந்துப் போன - எந்தன்
இதயத்திற்காக!

- ப்ரியன்.

ப்ரியன்
14-06-2006, 02:52 AM
காதல் 28
*********

விடுமுறைக்கு ஊருக்கு பயணம்
வழியனுப்ப வலிய எனை
அனுப்பும் உன் அப்பா!
பாதையெங்கும் மெளன
முட்களுடன் பயணம்!

குடிக்க தண்ணீரும்
படிக்க சில புத்தகங்களும்
வாங்கி வந்தவனுக்கு
நன்றிகூட இல்லாதா நீ!

கைப் பையை கூட
என்னிடம் தராமால்
அந்நியமாய் நீ!

முதன்முதலாய்
உன் அண்மை வேண்டா
நிமிடங்கள் அவை!

மெல்ல மெல்ல
இரயில் நகர ஆரம்பிக்க
போ!போ!
மனம் சொல்ல
போய் ஏறிக் கொள்
என கடைசியாய் என் மெளனமும்
கலந்த வினாடியில்!

'உன்னை விட்டுப் போவேனோ?
என் உயிரை தனியே விட்டு போவேனோ?'
என நீ கட்டியணைக்க
கூவி அழைத்து
கையசைத்து நகர்ந்தது
இரயில்!

நிமிர்ந்து பார்த்தவள்
நீ தான்டா இத்துணை நாட்களாய்
நான் சொல்லிச் சொல்லி
உன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த காதலன் என்றபடி
மீண்டும் என் நெஞ்சில் முகம்புதைத்து
அப்போதும் 'பெயர்' சொல்லாமலே
சொல்ல

அதிவேக ரயிலாய் பயணப்பட்டது என் மனது!


- ப்ரியன்.

ப்ரியன்
14-06-2006, 02:54 AM
யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே :confused: மறந்திருக்கும் :p

என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன்.

;) மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு :eek: