родрпАрокройрпН
28-01-2006, 05:56 PM
போதை
அவனைப் பெற்றவள் ஏங்க
அவனால் பெற்றவள் வாட
அவன் பெற்றதுகள் மாழ
அவன் மட்டும் ஆனந்தமாய்
போதைக்கு போர்வையாகЕЕЕЕ.
படியென்று தாய் சொல்லி-பொறுப்பை
பிடியென்று தந்தை சொல்லி
வடிவெந்தன் மகன்
துடிப்போடு வாழ்வானென பார்த்திருக்கЕ
குடியென்ற நாயால்
கடியுண்ட மூடன்
குடியாலே குடி
Уமிடியாவது அறியாது
விடிவென்பதுணராமல்
குடியின் பிடியில்Е..-வாழ்க்கை
மடியும் நிலையில்!மதுவே மோட்சமென
தவறணையே தஞ்சமென
தவமிருந்தான் அந்த தவசி
வறுமையே வாழ்க்கையாக
வாழ்க்கையே வெறுமையாக
வாடியது அவன் சுற்றம்!
ஆம்!
போதைக்கு போர்வையாக இருந்தவன்
முடிவில்-
போதைப் போர்வைக்குள்
பொசுங்கிப்போனான்!!
அவனைப் பெற்றவள் ஏங்க
அவனால் பெற்றவள் வாட
அவன் பெற்றதுகள் மாழ
அவன் மட்டும் ஆனந்தமாய்
போதைக்கு போர்வையாகЕЕЕЕ.
படியென்று தாய் சொல்லி-பொறுப்பை
பிடியென்று தந்தை சொல்லி
வடிவெந்தன் மகன்
துடிப்போடு வாழ்வானென பார்த்திருக்கЕ
குடியென்ற நாயால்
கடியுண்ட மூடன்
குடியாலே குடி
Уமிடியாவது அறியாது
விடிவென்பதுணராமல்
குடியின் பிடியில்Е..-வாழ்க்கை
மடியும் நிலையில்!மதுவே மோட்சமென
தவறணையே தஞ்சமென
தவமிருந்தான் அந்த தவசி
வறுமையே வாழ்க்கையாக
வாழ்க்கையே வெறுமையாக
வாடியது அவன் சுற்றம்!
ஆம்!
போதைக்கு போர்வையாக இருந்தவன்
முடிவில்-
போதைப் போர்வைக்குள்
பொசுங்கிப்போனான்!!