PDA

View Full Version : நிலவைப் பிரசவித்தவள்



ப்ரியன்
06-01-2006, 11:25 AM
உன் தாயை சந்திக்கையில்
கேட்கவென பிரபஞ்சம் பற்றிய
ஒராயிரம் சந்தேகங்களைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்!
பின்னே,
நிலவைப் பிரசவித்தவளிடம்தானே
கேட்க வேண்டும்
பிரபஞ்ச இரகசியங்களை!

- ப்ரியன்.

aren
06-01-2006, 01:23 PM
காதலியை நிலவுடன் அழகாக ஒப்பிட்டிருக்கிறீர்கள்.

நன்றாக உள்ளது. தொடருங்கள்.

இளசு
07-01-2006, 11:12 PM
அழகுப்பெண்ணின் தாயார் என்றால்?!

அசத்துவதற்கு 'அத்தையை' புகழ்வது நல்ல வழி..

அசத்துங்கள் ப்ரியன்..

அறிஞர்
10-01-2006, 07:58 PM
என்ன இளசு.. வீட்டுல வில்லங்கத்தை உண்டாக்கிவிடுவீர் போல....
----
அருமை பிரியன் தொடருங்கள்

பென்ஸ்
11-01-2006, 02:43 AM
ப்ரியன்...

பிழைத்து கொள்வீர்கள்...மாமியாரையும் ஈசியா கைக்குள்ளால போட்டு வைக்க இது ஒரு வழியோ??? :D :D

நானும் கேட்க வேண்டும் என்று தான் நினைப்பேன் அவள் தாயிடம்,
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு நிலவில் எப்படி
இரு சூரியனை புதைத்தாய்
அவள் பார்வைகள்
என்னை சுடுகின்றன...
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதத்தில் ஒரு முறை மட்டும்
முழுமுகம் காட்ட அனுமைதியோ?
நாணமோ...???
முகம் மறைக்கிறாள் மறுதினக்களில்..
விடுமுறை எடுக்க சொல்லாதீர்
என் இரவுகளில் இருள்...


இம்ம்.. என்னமோ... ஒன்னுமே புரியலை உலகத்திலை...:rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
11-01-2006, 03:52 AM
உங்களுக்குப் புரியலையா?
எனக்கு உங்கள் நிலைமை நல்லாப் புரிஞ்சு போச்சப்பூ :D :rolleyes:

மதி
11-01-2006, 04:08 AM
உங்களுக்குப் புரியலையா?
எனக்கு உங்கள் நிலைமை நல்லாப் புரிஞ்சு போச்சப்பூ :D :rolleyes:
என்ன தான் புரிஞ்சுசோ...!
எப்படி தான் இந்த மனிதருக்கு காதல், காதலி-ன்னா...கவிதை பொத்துக்கிட்டு வருதோ...தெரியல..:eek: :eek:

அறிஞர்
11-01-2006, 04:07 PM
என்ன தான் புரிஞ்சுசோ...!
எப்படி தான் இந்த மனிதருக்கு காதல், காதலி-ன்னா...கவிதை பொத்துக்கிட்டு வருதோ...தெரியல..:eek: :eek: நீங்களும்.. நல்ல பெண்ணா பாருங்கள்... காதலியுங்கள்.. கவிதை தானாக வரும்

மதி
16-01-2006, 06:48 AM
நீங்களும்.. நல்ல பெண்ணா பாருங்கள்... காதலியுங்கள்.. கவிதை தானாக வரும்
எனக்கும் அந்த அனுபவம் இருந்ததினால் தான் கேட்கிறேன்.

ப்ரியன்
17-01-2006, 11:23 AM
காதலியை நிலவுடன் அழகாக ஒப்பிட்டிருக்கிறீர்கள்.
நன்றாக உள்ளது. தொடருங்கள்.

அவள் அழகானதாலேயே அழகாகவும் ஒப்பிட முடிகிறது ஆரன்

ப்ரியன்
17-01-2006, 11:27 AM
அசத்துவதற்கு 'அத்தையை' புகழ்வது நல்ல வழி..
[/B]

கண்டிப்பாக இளசு அத்தை இல்லாமல் இவள் ஏது?அதனால் காதலியை புகழுதலில் கால் பங்காவது அத்தைக்கும் சேர வேண்டும்... ;)

ப்ரியன்
17-01-2006, 11:28 AM
அருமை பிரியன் தொடருங்கள்

நன்றி அறிஞர்

ப்ரியன்
17-01-2006, 11:31 AM
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு நிலவில் எப்படி
இரு சூரியனை புதைத்தாய்
அவள் பார்வைகள்
என்னை சுடுகின்றன...
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதத்தில் ஒரு முறை மட்டும்
முழுமுகம் காட்ட அனுமைதியோ?
நாணமோ...???
முகம் மறைக்கிறாள் மறுதினக்களில்..
விடுமுறை எடுக்க சொல்லாதீர்
என் இரவுகளில் இருள்...


:) நன்றாக வந்திருக்கிறது பெஞ்சமின்...

ஏனோ எனக்கு என் கல்லூரி வகுப்பில் என் தோழிக்கு
"ஒரு நிலவில்
இரு சூரியன்கள்"

என அவள் விழிகள் பற்றி எழுதி தந்தது நியாபகம் வருகிறது...

பி.கு : அவள் என் தோழி மட்டுமே :) காதலி அல்ல

ப்ரியன்
17-01-2006, 11:32 AM
உங்களுக்குப் புரியலையா?
எனக்கு உங்கள் நிலைமை நல்லாப் புரிஞ்சு போச்சப்பூ :D :rolleyes:

எனக்குப் புரியவில்லையே பிரதீப்? யாரு நம்ம பெஞ்சமின சொல்லுறீகளா?

ப்ரியன்
17-01-2006, 11:35 AM
என்ன தான் புரிஞ்சுசோ...!
எப்படி தான் இந்த மனிதருக்கு காதல், காதலி-ன்னா...கவிதை பொத்துக்கிட்டு வருதோ...தெரியல..

யாரு நம்ம பெஞ்சமிக்கா?

என்ன பெஞ்சமின் பதிலே காணோம்?

ப்ரியன்
17-01-2006, 11:36 AM
நீங்களும்.. நல்ல பெண்ணா பாருங்கள்... காதலியுங்கள்.. கவிதை தானாக வரும்
திருத்தம் : கொஞ்சம் கவிதை இரசிக்கக்கூடியப் பெண்ணாய் பாருங்கள்

ப்ரியன்
17-01-2006, 11:38 AM
எனக்கும் அந்த அனுபவம் இருந்ததினால் தான் கேட்கிறேன்.
ம்ம்ம்ம்

பென்ஸ்
17-01-2006, 06:38 PM
:) நன்றாக வந்திருக்கிறது பெஞ்சமின்...

ஏனோ எனக்கு என் கல்லூரி வகுப்பில் என் தோழிக்கு
"ஒரு நிலவில்
இரு சூரியன்கள்"

என அவள் விழிகள் பற்றி எழுதி தந்தது நியாபகம் வருகிறது...

பி.கு : அவள் என் தோழி மட்டுமே :) காதலி அல்ல

எனக்கு சத்தியமா அந்த பெண்ணை தெரியாது....அதனால்
1, பி.கு. இட தேவை இல்லை :rolleyes: :rolleyes: :D :D
2, நான் இந்த வரிகளை அவரிடன் இருந்து சுட வில்லை :D :D :p
3, இவ்வளவு முன் ஜாக்கிரதையாக குறிப்பு விட காரணம் என்ன பயமா???
நம்ம தலையே.... மாமி தமிழ்மன்றம் வரமாட்டார்கள் என்ற
நம்பிக்கையில் என்ன என்ன டயலாக் விடுவார் தெரியுமா????
பயப்படாதீர்கள்....:D :D :D

பென்ஸ்
17-01-2006, 06:43 PM
யாரு நம்ம பெஞ்சமிக்கா?
என்ன பெஞ்சமின் பதிலே காணோம்?

ஐயோ..ஐயோ... உங்களை எல்லாம் பாத்தா....:D :D :D :D

kavitha
19-01-2006, 10:12 AM
ம்.ம்.. போட்டுத்தாக்குங்க ப்ரியன். காதலிக்குப் பதில் மாமியார் வெட்கப்படப்போகிறார்!


நம்ம தலையே.... மாமி தமிழ்மன்றம் வரமாட்டார்கள் என்ற
நம்பிக்கையில் என்ன என்ன டயலாக் விடுவார் தெரியுமா????
பயப்படாதீர்கள்.... அட இத நீங்க முன்னயே சொல்லலையே! :D

ப்ரியன்
19-01-2006, 11:26 AM
மாமி தமிழ்மன்றம் வரமாட்டார்கள் என்ற
நம்பிக்கையில் என்ன என்ன டயலாக் விடுவார் தெரியுமா????பயப்படாதீர்கள்
என்னையா சொல்லுகிறீர்கள்...என்னைத்தான் என்றால் என்னவள் அவ்வப்போது தமிழ்மன்றம் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்...

ப்ரியன்
19-01-2006, 11:27 AM
ம்.ம்.. போட்டுத்தாக்குங்க ப்ரியன். காதலிக்குப் பதில் மாமியார் வெட்கப்படப்போகிறார்!

:)


அட இத நீங்க முன்னயே சொல்லலையே! :D

அதான் இப்போ சொல்லியாச்சுல்ல