PDA

View Full Version : ஹைக்கூ முரண்



kavinila
02-01-2006, 09:20 PM
யார் கண் பட்டதோ
பட்டுப்போனது
என் வீட்டு
கள்ளிச் செடி


------------------


வேலைக்காரப் பையனின்
அழுக்கு பெனியனில்
சவர்க்கார விளம்பரம்.


---------------------

aren
02-01-2006, 10:54 PM
கவிநிலா, அருமை. தொடருங்கள்.

கள்ளிச்செடியே பட்டுப்போகும் அளவிற்கு கண்படுவது யார். அவருடைய சக்தி எப்படியிருக்கும், நினைக்கவே பயமாக உள்ளது. என் வீட்டிற்கு அவர்கள் வருவதற்கு தடா!!!

இளசு
03-01-2006, 08:22 PM
இரண்டு முரண் காட்சிகளும் அருமை.

வாழ்த்துகள் கவிநிலா..

பென்ஸ்
04-01-2006, 06:40 AM
இரண்டும் பார்வைகள் தான்...
ஒன்று பட்டு போகவைத்தது...
மற்றது மனதை தொட்டு போனது....

வாழ்த்துகள்... கவிநிலா...

உமாமீனா
15-02-2011, 05:46 AM
பார்வையின் முரண்