PDA

View Full Version : என் அருமை தோழர்களே



venkateshwaran_d1976
28-12-2005, 08:57 AM
enakku mikka magilichi. Tamilil Uraiyada alavilla magilchi, enna ennavendru arumugam seidu kolla sollunga thozhare!
Neenga en varthaiyai matrum vaakiyathai kavanithadarku maatatra magizhchi adaindom thozhare......
Nandrie.
-----------
தமிழில்

எனக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழில் உரையாட அளவில்லா மகிழ்ச்சி, என்னை என்னவென்று அறிமுகம் செய்து கொள்ள சொல்லுங்க தோழரெ!
நீங்க என் வார்த்தையை மற்றும் வாக்கியத்தை கவனித்தற்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம் தோழரே......
நன்றி.

sarcharan
28-12-2005, 09:03 AM
என்னருமை தோழர்களே,

தமிழ்ல பேசணும்.. தமிழ்ல எழுதணும்... அவன்தான் தமிழன்

ஆரம்பமே சரியில்லையே....

sarcharan
28-12-2005, 09:13 AM
வணக்கம் திரு வெங்கடேஸ்வரன் அவர்களே,

தமிழ்மன்றத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....


நண்பர்களே வெங்கடேஸ்வரன் என் இனிய நண்பர்களில் ஒருவர்.

வெங்கடேஸ்வரன் நீங்கள் இ-கலப்பையை இறக்குமதி செய்து கொள்ளுங்கள்
அதன் மூலம் தமிழில் உரையாடலாம்



enakku mikka magilichi. Tamilil Uraiyada alavilla magilchi, enna ennavendru arumugam seidu kolla sollunga thozhare!
Neenga en varthaiyai matrum vaakiyathai kavanithadarku maatatra magizhchi adaindom thozhare......
Nandrie.

மதி
28-12-2005, 09:21 AM
வாருங்கள் வெங்கடேஸ்வரன்..!
மன்றத்தில் உறவாட வந்த உங்களுக்கு எம் வந்தனங்கள்..

தமிழில் பதிய முயலுங்கள்..

பென்ஸ்
28-12-2005, 09:36 AM
வருக,, வருக.. வேங்கடேஸ்வரன்....

இ-கலப்பை இல்லை என்றால் தமிழ்மன்றத்தின் unicode converter-ஐ பயன் படுத்தலாம்...

வழிமுறை அதில் கொடுக்கப்பட்டுள்ளது....

இனிமேல் என்ன வந்த்து கலாசுங்க....

venkateshwaran_d1976
28-12-2005, 09:39 AM
தங்களூக்கு என் இனிய மாலை வணக்கங்கள்
என் நண்பன் உதவியால் என்னால் இயன்ற அளவுக்கு தமிழில் பதிவு செய்துள்ளேன்.
மற்றவை உங்கள் பதிவு கண்டு.
நன்றி.

பென்ஸ்
28-12-2005, 09:48 AM
நீங்களும் பெங்களுரா???

அப்படினா... ????

அடுத்த தமிழ்சங்கம் இங்குதானோ???

வேண்டாம்பா... நம்மூரிலையே வைக்கலாம்...

venkateshwaran_d1976
28-12-2005, 10:35 AM
என்னப்பா இங்கே எல்லொரும் தமிழர்களாகவே இருக்கிங்க....
மிக்க மகிழ்ச்சி. என்ன பண்ணிண்டு இருக்கேள் திரு.பெஞ்சமின்?
ஏன் இங்கு தழிழ் மன்றம் அமைக்க கூடாதா? சொல்லுங்க.
எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தமிழ் நாட்டில் எங்கே இருக்கீங்கள்?
நீங்கள் சரவணனுக்கு நன்பர் அல்லவா?
எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் தமிழில் பதிவு செய்தமைக்கு.
நன்றி.

venkateshwaran_d1976
28-12-2005, 10:36 AM
வெங்கடேஷ்வரன் த.

pradeepkt
28-12-2005, 12:06 PM
வணக்கம் வெங்கடேஸ்வரன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் அளியுங்கள்.

பயப்படாதீங்க, சரவணனின் நண்பர் என்பதாலேயே உங்களை நாங்க எல்லாரும் தப்பா நினைக்க மாட்டோம் :D :D :D

sarcharan
28-12-2005, 12:16 PM
ப்ரதீப்பு,

உனக்கு என்னோட நண்பர்கள்னாலே ஒரு தனி பாசம் இல்ல........:D

(பி.கு: அது என்ன B) சிவப்பு மையிட்டு B) அதையும் :angry: போல்டு :angry: பண்ணி உன்னுடைய ....... பாசத்தை வெளிப்படுத்தியிருக்க!!! ::)

(போதும் புள்ள உப்பு அதிகமாச்சுன்னா சாப்புட முடியாது.... இது எங்க சின்ன கவுண்டரு டயலாக்கு..:rolleyes: .)




வணக்கம் வெங்கடேஸ்வரன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் அளியுங்கள்.

பயப்படாதீங்க, சரவணனின் நண்பர் என்பதாலேயே உங்களை நாங்க எல்லாரும் தப்பா நினைக்க மாட்டோம் :D :D :D

sarcharan
28-12-2005, 12:17 PM
சரி சரி விடுறா விடுறா சுனா பானா.. விட்டுக்கடா :) :rolleyes:

அறிஞர்
28-12-2005, 02:44 PM
வாருங்கள் அன்பரே. தமிழில் எழுத பழகிவிட்டீர்கள். கலக்குங்கள்.. நண்பர்களாய் சேர்ந்து இங்கு மகிழ்வுறுவதே மட்டற்ற இன்பம்

aren
28-12-2005, 10:49 PM
வாருங்கள் வெங்கடேஸ்வரன். உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நீங்கள் சரவணனின் நண்பர் மட்டுமல்ல, இனிமேல் எங்களுக்கு நண்பர்.

உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

venkateshwaran_d1976
29-12-2005, 03:16 AM
என்னவோ ஒன்னுமே புரியவில்லை. தமிழிழ் பதிவு செய்வது சிறிது கடினமாகத் தான் உள்ளது. சரவணனுக்கு நன்றி கூறத் தான் வேண்டும். காரணம் இந்த இணையத் தளத்தை எனக்கு அறிமுகம் செய்ததற்கு.
கவிதை சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இங்கு இல்லை.
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு நண்பன்.
வெங்கடேஷ்வரன் த
பெங்களூர்.

மதி
29-12-2005, 03:30 AM
அதென்னங்க..தற்சமயம் பெங்களூர்.

பரஞ்சோதி
29-12-2005, 03:30 AM
நண்பர் வெங்கட் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

வாங்க நம்ம தலையை பார்த்து, நம்ம கட்சியில் சேருங்க.

பெங்களூர் செயலாளர் பதவி உங்களுக்கு தான்.

மதி
29-12-2005, 03:35 AM
நண்பர் வெங்கட் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

வாங்க நம்ம தலையை பார்த்து, நம்ம கட்சியில் சேருங்க.

பெங்களூர் செயலாளர் பதவி உங்களுக்கு தான்.
என்ன பரம்ஸ்..
பதவியெல்லாம் கொடுக்கறீங்க..?!:eek: :eek: :eek:
அப்ப எனக்கு பொருளாளர் பதவியா.....?????:D :D :D :D

aren
29-12-2005, 04:01 AM
என்ன பரம்ஸ்..
பதவியெல்லாம் கொடுக்கறீங்க..?!:eek: :eek: :eek:
அப்ப எனக்கு பொருளாளர் பதவியா.....?????:D :D :D :D

எல்லோரும் பணத்திலேயே குறியாக இருக்கிறீர்கள். என்ன செய்வது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மைதான் போலிருக்கிறது.

மதி
29-12-2005, 04:15 AM
எல்லோரும் பணத்திலேயே குறியாக இருக்கிறீர்கள். என்ன செய்வது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மைதான் போலிருக்கிறது.
அப்படி இல்லை ஆரென்.
பணத்தை பாதுகாப்பது ஒரு சவால்..;) ;)
சவாலை சமாளிக்க நான் ரெடினு சொன்னேன்..ஹி..ஹி..:D :D

sarcharan
29-12-2005, 05:41 AM
அது எப்படி வெங்கடேஸ்வரனை பாத்ததும் அப்படி ஒரு பதவி கொடுக்க தோணிற்று உங்களுக்கு?
அவர் HR dept ஐ சேர்ந்தவர் தான் என்றாலும் இந்த பதவி கொஞ்சம் கூடுதல்தான்

அப்படியே அடியேனுக்கும் ஒரு நல்ல பதவி கொடுங்கள். (எ-டு: தலைவர், உபதலைவர்,பெட்டகப்பாடுகாவலர்,......)




அப்படி இல்லை ஆரென்.
பணத்தை பாதுகாப்பது ஒரு சவால்..;) ;)
சவாலை சமாளிக்க நான் ரெடினு சொன்னேன்..ஹி..ஹி..:D :D

pradeepkt
29-12-2005, 09:04 AM
அது எப்படி வெங்கடேஸ்வரனை பாத்ததும் அப்படி ஒரு பதவி கொடுக்க தோணிற்று உங்களுக்கு?
அவர் HR dept ஐ சேர்ந்தவர் தான் என்றாலும் இந்த பதவி கொஞ்சம் கூடுதல்தான்

அப்படியே அடியேனுக்கும் ஒரு நல்ல பதவி கொடுங்கள். (எ-டு: தலைவர், உபதலைவர்,பெட்டகப்பாடுகாவலர்,......)
தலைவர் பதவி என்றென்றும் தலைக்குத்தான்... நம்ம இயக்கம் அதில திமுக அதிமுக மாதிரி...
உபதலைவர் - பெங்களூர் சரகத்துக்கு பென்ஸூ இருக்காரு இப்பதைக்கு...
ஆமா படாத பாடு பட்டாலும் பெட்டகப் பாதுகாவலர் பதவி உனக்குத் தந்திருவோம்... பென்ஸூ கூடப் பேசிக்க... ஆனா மொதல்ல ஒரு பெட்டகம் வாங்கி வச்சிரு.. :D

பாரதி
30-12-2005, 12:13 AM
அன்பு நண்பர் வெங்கடேஷை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் நண்பர்களுடன் இணைந்து நானும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

venkateshwaran_d1976
30-12-2005, 02:33 AM
என் இனிய காலை வணக்கங்கள்
இனிக்கும் காலை பொழுதில் ஒரு தித்திக்கும் செய்தி. நான் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் விடுமுறையில் செல்கிறேன் வருவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகி விடும். மீண்டும் உங்களை சந்திக்கும் பொழுது நான் விடுமுறை கழித்த விதம் பற்றி உங்களுடன் மறக்காமல் பகிர்ந்து கொள்வேன் அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது

pradeepkt
30-12-2005, 07:32 AM
உங்கள் விடுமுறை நல்லபடியாகக் கழியட்டும்...
சரி, நீங்க போறதுனாலயே நாங்க எல்லாரும் மகிழ்ச்சியா இருப்போமின்னு சொல்றீங்க போல... ச்சே ச்சே... நாங்க உங்க வருகையை எதிர்பார்த்துட்டுதானே இருக்கோம் :D :D :D

அறிஞர்
30-12-2005, 01:58 PM
என் இனிய காலை வணக்கங்கள்
இனிக்கும் காலை பொழுதில் ஒரு தித்திக்கும் செய்தி. நான் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் விடுமுறையில் செல்கிறேன் வருவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகி விடும். மீண்டும் உங்களை சந்திக்கும் பொழுது நான் விடுமுறை கழித்த விதம் பற்றி உங்களுடன் மறக்காமல் பகிர்ந்து கொள்வேன் அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது ஒருவார விடுமுறை காலங்கள் நன்றாக அமையட்டும் வாழ்த்துக்கள்

aren
30-12-2005, 02:15 PM
என் இனிய காலை வணக்கங்கள்
இனிக்கும் காலை பொழுதில் ஒரு தித்திக்கும் செய்தி.

இந்த செய்தி தித்திப்பானது உங்களுக்கு எங்களிடமிருந்து ஒரு வாரம் விடுதலை கிடைத்ததாலா? இருக்கட்டும்.

உங்கள் விடுமுறை சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.

பிரதீப்பிடம் ரொம்ப பேசாதீர்கள் உங்கள் விடுமுறை பற்றி. அப்புறம் மழை வரும் என்று சொல்லிவிடுவார். அதனால் ஜாக்கிரதை.

கொஞ்சம் சிண்டுமுடிச்சுவிடும்
ஆரென்

pradeepkt
31-12-2005, 05:48 AM
மழை வரும்னு சொன்னாத் தப்பா?

சிண்டை அவிழ்க்க முயற்சி செய்யும்
பிரதீப்

aren
31-12-2005, 06:31 AM
மழை வரும்னு சொன்னாத் தப்பா?

சிண்டை அவிழ்க்க முயற்சி செய்யும்
பிரதீப்

இதற்கு "தலை" பதில் சொல்வார்.

இந்த வருடம் மழை தேவையானது பெய்துவிட்டது. ஆகையால் இன்னும் பெய்து நம் நண்பரின் விடுமுறையை கெடுக்கவேண்டாம்.

மழை பெய்யாது. விடுமுறையை சிறப்பாக அனுபவித்துவிட்டு வாருங்கள். - இது ஆரனின் ஆருடம்.

ilanthirayan
31-12-2005, 03:03 PM
என் அருமைத் தோழரே !

அலை கடலெனத் திரண்டிருக்கும் தமிழ் மன்றத்தின் அன்புள்ளங்களுடன் சேர்ந்து நானும் உங்களை இரு கரம் நீட்டி வருக வருகவென வரவேற்கின்றேன்.... ஹ..ஹ..ஹப்ப்பா (மூச்சு வாங்குகின்றது.... அது சரி மூச்சு என்னத்தை வாங்கும்... கேள்வி தலையைக் கடாய்க்கீது.....)

--- பதிலை எதிர்பார்க்கும் அன்பு இளந்திரையன்

venkateshwaran_d1976
12-01-2006, 09:47 AM
என்ன நண்பர்களே நலம் தானே? நான் விடுமுறை முடித்து வந்து விட்டேன். சென்னையில் அப்படி ஒன்றும் வெயில் இல்லாதது மனதுக்கு ஆறுதல் அளித்தது. அங்கு மெரீனா கடற்கரைக்கு சென்றேன். கடல் நீரில் கால் நனைக்க ஏனோ மனதில் ஒரே பயமாக இருந்தது, வருத்தத்துடன் சொல்கிறேன் எட்ட நின்று ரசித்துவிட்டு வந்தேன். மற்றும் துணி கடலாம் போத்தீஸ் சென்று வந்தேன். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படி என் விடுமுறை இல்லை. ஆனால் சந்தோஷமாக என் குடும்பத்துடன் செலவிட்டேன்.

துடிப்புடன் இரு
துணிச்சலுடன் செயல்படு!

நன்றி.

மதி
12-01-2006, 11:27 AM
என்ன நண்பர்களே நலம் தானே? நான் விடுமுறை முடித்து வந்து விட்டேன்.
.....
துடிப்புடன் இரு
துணிச்சலுடன் செயல்படு!

நன்றி.
நண்பரே..
குடும்பத்துடன் குதுகலமாய் நேரம் செலவிட்டதே நல்ல விஷயம் தானே..
தங்கள் விடுமுறை இனிதே அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி..
வாங்க.. வந்து கலக்குங்க..!