PDA

View Full Version : தலைப்பு தெரியாது



thirukanaga
25-12-2005, 12:53 AM
படுக்கையில் படுக்கப்போனால் ஏதோ பதைபதைப்பு
கண்களில் நீர் சொட்ட காலம் சென்ற நினைப்பு
ஒருவருமறியால் ஊருக்குள் புகுந்த கடல்நீர்
நானுறங்கும் நேரத்தில் மீண்டும் புகுந்திடுமோ
விழியைத் திறந்திருந்தால் விழிமுழுக்க கண்ணீர்
சுனாமியால் மடிந்தவர்கள் என் கண்களின் முன்னில்
எல்லோரும் இறப்பதென்று எனக்கு நன்றாய் தெரியும்
இருந்தும் எனக்குள்ளே ஏனிந்த இனம்புரியாப் பயம்

aren
25-12-2005, 05:41 AM
இறப்பு என்பது எப்படியிருக்கும் என்பது தெரியாததால் அந்த இனம்புரியாப் பயம் இருக்கலாமோ.

கவிதை அருமை!!

சுனாமி - தமிழகம் என்றென்றும் மறக்கமுடியாத ஒரு வார்த்தை. எத்தனை அழிவுகளை ஏற்படுத்தியது.

இளசு
28-12-2005, 12:54 AM
சுனாமி - இந்த புதிய சொல்லைக் கற்றது மட்டும் கசக்கிறது.

நினைவுக்கவிதைக்கு நன்றி திருகனகா..