PDA

View Full Version : உள்ளக் குமுறல்



thirukanaga
20-12-2005, 07:56 PM
அடே.....
கண்ணை மூடி விண்ணைப்பார்த்து
மண்ணைப்போடும் மனிதா..
அறியாவுலகில் குறியைப்போட்டு
நெறியில் வாழ
நீ உள்ளே மூடி உன்னை மறைத்து
உந்தன் நெஞ்சில் வினையை விதைத்து
அல்லும் பகலும் ஆடுகின்றாய்...
ஆடு...
அடங்கியர் போல் நீயும் அடங்கும் வரை

pradeepkt
21-12-2005, 03:55 AM
ஆடும் வரை ஆட்டம்.
அருமையான கவிதை.

kavitha
21-12-2005, 08:37 AM
நெறியில் வாழ
நீ உள்ளே மூடி உன்னை மறைத்து
உந்தன் நெஞ்சில் வினையை விதைத்து
ஒவ்வொருக்கும் ஒரு நெறி! தீவிரவாதத்தின் சாரமே அதுதானே!நன்னெறி நன்மை தரும். தீய நெறி அவர்களையே அழிக்கும். கவிதை நன்றாக இருக்கிறது கனகா.

thirukanaga
21-12-2005, 11:31 AM
நன்றி
ஒவ்வுருவருக்கும் உள்ளே போனால் எவ்வளவு வினையைக் காணலாம்

இளசு
22-12-2005, 06:56 AM
கவீயின் விமர்சனத்தில் கனகாவின் கவிதை அழகு...

பாராட்டுகள் இருவருக்கும்.