பென்ஸ்
19-12-2005, 12:02 PM
கும்பளாம்பிகையும் நானும்....
+2 -வில் எக்கசக்கமாய் மதிப்பெண் எடுத்ததால் எனக்கு நாகர்கோவிலில் உள்ள போக்கத்த கல்லூரியில் கூட எனக்கு B.A. (தமிழ்) கூட கிடைக்கவில்லை.... வேறு வழி இல்லாமல் என்னை புங்கறை என்னும் ஊரில் என்னை ஆட்டோமொபைல் டிப்பளமோவில் சேர்த்தனர்.... மூன்று வருடங்கள் இப்போது சென்சார் செய்ய படுகிறது....
இங்கு ஏதோ நல்ல மதிபென் எடுப்பேன் என்று தெரியும்... எனவே பொறியியல் படிக்க நான் அம்மாவிடம் கேட்க அவர் வீட்டின் அடுத்துள்ள கல்லூரியில் எனக்கு இலவச சீட் கிடைத்தால் போகலாம் என்று கூற... நான் வழக்கம் போல் பேயாட ஆரம்பித்தேன்.... எனக்கு எப்படியாவது சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் சேர்ந்து படிக்கவேன்டும் என்று இருந்தது... ஆனால் எனக்கு அப்போது வீட்டை பற்றி கவலை பட மனசு வரவில்லை... அம்மாவில் இயலாமை என் கண்ணுக்கு தெரியவில்லை. சரி என்று அம்மாவிடம் சண்டை இட்டு விட்டு பக்கத்து வீட்டு நண்பன் ஒருவனுடன் கேரளவில் உள்ள அவனது கம்பெனியில் சேர்ந்தேன்...
அவனுக்கு உதவியாளனாய்...
அவன் வேலை-- கொத்தன்
நான்.. கையாள்
கும்பளாம்பிகை என்னும் அழகான ஊர்.. என் பாட்டி வீட்டை நியாபக படுத்தும் ஒரு சிறிய வீடு, முன்னாள் ஒரு சிறு கிணறு அதை தொட்டடுத்த நீரோடை... வந்த முதல் நாள் என்னை வேலைக்கு அழைத்து செல்லவில்லை... அங்கு என் கல்லூரி நண்பன் ஒருவன் இருக்க அவனை எல்லாம் கண்டு நலம் விசாரித்தேன்....
ஆடுத்த நாள் விடியல் என் வாழ்வின் மற்றொரு விடியலுக்கு காரனமாய் இருந்தது...
வடசேரிகரை என்னும் இட்த்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டி கொண்டு இருந்தனர். 4 மாடிவரை பில்லர் வார்க்க பட்டு எலும்பு கூடாய் நின்றது அந்த கட்டடம், அதன் பில்லர்களில் உள்ள கப்பிகளை சிறிய பில்லருக்காய் வளைக்க வேன்டும்.. நாங்கள் இருவராய் 4வது மாடியில் எந்த பாதுகாப்புன் இல்லாமல் கம்பி வளைத்தோம்... மூன்று நாட்ட்கள் சென்ற பணி... உடம்பெல்லாம் வலித்தது.... மனசு மட்டும் கல்லாய்...
அடுத்த 2 நாட்ட்கள் மழை வர வேலை இல்லை... மழை நின்றவுடன் கம்பெனியில் உள்ள எல்லோரையும் வேறு இடத்துக்கு அவசர வேலையாக அனுப்பினர்.. என்னை மட்டும் அதே கட்டடத்தில் வார்ப்பத்ர்க்காக வைத்திருந்த பலகைகளை மாற்ற சொல்லி அனுப்பினர்....
மொத்த பலகைகள் சுமார் 2000,
இருக்கும் இடம் ஒரு பழைய கழிப்பிடம்...
சரி.... என்று என் வேலையை துவங்க ஆரம்பித்தேன்...
முதல் சில பலகைகள் வேகமாக போனது .. மேலே இருக்கும் பலகைகள் தீர தீர என் அதிஷ்டம் எட்டிபார்க்க ஆரம்பித்தது...
புழுக்கள்...
மர புழுக்கள்...
தந்தம் கலரில் மண்புழுவைபோல் ஆனல் 3/4 இன்ச் நீளத்திற்க்கு பலகையில் தவழ ஆரம்பித்தது.... நான் நிற்க்கும் இடத்தின் நாற்றம் என்னை குமட்டி கொண்டிருக்க , புழுக்கள் என் மேல் தவள ஆரம்பித்தன... முதலில் தட்டி தள்ளீனேன், பிறகு எனக்கு பழக்கமாகி இருந்தது... ஆனல் அந்த புழுக்களின் கடிதான் வலித்திருந்தது.... மனசும்....
நன்பனின் திருமணம் ஒன்று திருவனந்தபுரத்தில் வைத்து இருப்பது ஆரித்து , அதை சாக்காய் வைத்து வீட்டிற்க்கு கிளம்பி விடலாம் என்று இருந்த போது (கல்யாணத்திற்க்கு இன்னும் 2 நாள் இருந்தது) ஒரு கோவில் டேரஸ் வார்க்கை என்று கூறி என்னையும் அழைத்து சென்றனர்... மண் அரிப்பதற்க்காகதான் என்னை அழைத்து சென்றனர்... ஆனால் அங்கு காங்ரீட் எறிந்து கொடுக்கும் ஒருவர் காயப்பட என்னை அங்கு அனுப்பினர்... புழுக்களின் கடி வேதனை கூட எனக்கு பெரியதாய் தெரியவில்லை... காங்கிரீட் சட்டியின் உரசல் என் கைகளை புண் ஆக்கி இருந்தது.. என் கல் மனதையும்தான்....
இரண்டு நாள் சித்திரவதை தீர திருவனந்தபுரம் வந்தேன்... நண்பர்கள் என் நிலையை கண்டு பரிதாபத்தோடு கண்டித்தனர்.... அடுத்த பஸ் ஏறீ வீடு வந்ந்தேன்... அம்மா சிரித்து கொண்டெ ஒரு கடிதத்தை கொடுக்க அதில் எனக்கு என் வீட்டின் அருகில் உள்ள நான் படித்த கல்லூரியில் இலவச சீட் கிடைத்திருப்பதாக இருந்தது... என் பிடிவாதம் இப்போது சந்தோசமாக மாறி இருக்க அம்மாவை சந்தோசத்தில் கட்டிபிடித்தேன்...
+2 -வில் எக்கசக்கமாய் மதிப்பெண் எடுத்ததால் எனக்கு நாகர்கோவிலில் உள்ள போக்கத்த கல்லூரியில் கூட எனக்கு B.A. (தமிழ்) கூட கிடைக்கவில்லை.... வேறு வழி இல்லாமல் என்னை புங்கறை என்னும் ஊரில் என்னை ஆட்டோமொபைல் டிப்பளமோவில் சேர்த்தனர்.... மூன்று வருடங்கள் இப்போது சென்சார் செய்ய படுகிறது....
இங்கு ஏதோ நல்ல மதிபென் எடுப்பேன் என்று தெரியும்... எனவே பொறியியல் படிக்க நான் அம்மாவிடம் கேட்க அவர் வீட்டின் அடுத்துள்ள கல்லூரியில் எனக்கு இலவச சீட் கிடைத்தால் போகலாம் என்று கூற... நான் வழக்கம் போல் பேயாட ஆரம்பித்தேன்.... எனக்கு எப்படியாவது சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் சேர்ந்து படிக்கவேன்டும் என்று இருந்தது... ஆனால் எனக்கு அப்போது வீட்டை பற்றி கவலை பட மனசு வரவில்லை... அம்மாவில் இயலாமை என் கண்ணுக்கு தெரியவில்லை. சரி என்று அம்மாவிடம் சண்டை இட்டு விட்டு பக்கத்து வீட்டு நண்பன் ஒருவனுடன் கேரளவில் உள்ள அவனது கம்பெனியில் சேர்ந்தேன்...
அவனுக்கு உதவியாளனாய்...
அவன் வேலை-- கொத்தன்
நான்.. கையாள்
கும்பளாம்பிகை என்னும் அழகான ஊர்.. என் பாட்டி வீட்டை நியாபக படுத்தும் ஒரு சிறிய வீடு, முன்னாள் ஒரு சிறு கிணறு அதை தொட்டடுத்த நீரோடை... வந்த முதல் நாள் என்னை வேலைக்கு அழைத்து செல்லவில்லை... அங்கு என் கல்லூரி நண்பன் ஒருவன் இருக்க அவனை எல்லாம் கண்டு நலம் விசாரித்தேன்....
ஆடுத்த நாள் விடியல் என் வாழ்வின் மற்றொரு விடியலுக்கு காரனமாய் இருந்தது...
வடசேரிகரை என்னும் இட்த்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டி கொண்டு இருந்தனர். 4 மாடிவரை பில்லர் வார்க்க பட்டு எலும்பு கூடாய் நின்றது அந்த கட்டடம், அதன் பில்லர்களில் உள்ள கப்பிகளை சிறிய பில்லருக்காய் வளைக்க வேன்டும்.. நாங்கள் இருவராய் 4வது மாடியில் எந்த பாதுகாப்புன் இல்லாமல் கம்பி வளைத்தோம்... மூன்று நாட்ட்கள் சென்ற பணி... உடம்பெல்லாம் வலித்தது.... மனசு மட்டும் கல்லாய்...
அடுத்த 2 நாட்ட்கள் மழை வர வேலை இல்லை... மழை நின்றவுடன் கம்பெனியில் உள்ள எல்லோரையும் வேறு இடத்துக்கு அவசர வேலையாக அனுப்பினர்.. என்னை மட்டும் அதே கட்டடத்தில் வார்ப்பத்ர்க்காக வைத்திருந்த பலகைகளை மாற்ற சொல்லி அனுப்பினர்....
மொத்த பலகைகள் சுமார் 2000,
இருக்கும் இடம் ஒரு பழைய கழிப்பிடம்...
சரி.... என்று என் வேலையை துவங்க ஆரம்பித்தேன்...
முதல் சில பலகைகள் வேகமாக போனது .. மேலே இருக்கும் பலகைகள் தீர தீர என் அதிஷ்டம் எட்டிபார்க்க ஆரம்பித்தது...
புழுக்கள்...
மர புழுக்கள்...
தந்தம் கலரில் மண்புழுவைபோல் ஆனல் 3/4 இன்ச் நீளத்திற்க்கு பலகையில் தவழ ஆரம்பித்தது.... நான் நிற்க்கும் இடத்தின் நாற்றம் என்னை குமட்டி கொண்டிருக்க , புழுக்கள் என் மேல் தவள ஆரம்பித்தன... முதலில் தட்டி தள்ளீனேன், பிறகு எனக்கு பழக்கமாகி இருந்தது... ஆனல் அந்த புழுக்களின் கடிதான் வலித்திருந்தது.... மனசும்....
நன்பனின் திருமணம் ஒன்று திருவனந்தபுரத்தில் வைத்து இருப்பது ஆரித்து , அதை சாக்காய் வைத்து வீட்டிற்க்கு கிளம்பி விடலாம் என்று இருந்த போது (கல்யாணத்திற்க்கு இன்னும் 2 நாள் இருந்தது) ஒரு கோவில் டேரஸ் வார்க்கை என்று கூறி என்னையும் அழைத்து சென்றனர்... மண் அரிப்பதற்க்காகதான் என்னை அழைத்து சென்றனர்... ஆனால் அங்கு காங்ரீட் எறிந்து கொடுக்கும் ஒருவர் காயப்பட என்னை அங்கு அனுப்பினர்... புழுக்களின் கடி வேதனை கூட எனக்கு பெரியதாய் தெரியவில்லை... காங்கிரீட் சட்டியின் உரசல் என் கைகளை புண் ஆக்கி இருந்தது.. என் கல் மனதையும்தான்....
இரண்டு நாள் சித்திரவதை தீர திருவனந்தபுரம் வந்தேன்... நண்பர்கள் என் நிலையை கண்டு பரிதாபத்தோடு கண்டித்தனர்.... அடுத்த பஸ் ஏறீ வீடு வந்ந்தேன்... அம்மா சிரித்து கொண்டெ ஒரு கடிதத்தை கொடுக்க அதில் எனக்கு என் வீட்டின் அருகில் உள்ள நான் படித்த கல்லூரியில் இலவச சீட் கிடைத்திருப்பதாக இருந்தது... என் பிடிவாதம் இப்போது சந்தோசமாக மாறி இருக்க அம்மாவை சந்தோசத்தில் கட்டிபிடித்தேன்...