PDA

View Full Version : என்னைநீ மன்னித்துவிடு



thirukanaga
16-12-2005, 04:29 PM
அம்மா
நான் அழைக்க நீ வருவாய்
நான் துயில நீ அணைப்பாய்
காலையில் கண்ணிலும்
மாலையில் கனவிலும்
எனைக்காக்கும் தாயே.

காதலெனும் வலிவந்து
காலத்திலும் ஓர்வழிவந்து
கல்யாணத்தில் விழித்தபோது...

காமத்தின் களிப்போடு
பிள்ளைப்பாசம் எனை மறைக்க
பெற்றதாய் நினைவுவெல்லாம்
அற்றதாய்ப் போனதிங்கே

பற்றுவைத்து கற்றுவைத்து
நற்றறிவை எனக்களித்தாய்
என்னைநீ மன்னித்துவிடு
இயன்றவரை. என்தாயே...

Narathar
17-12-2005, 12:09 AM
அந்த கவலை வேண்டாம்.............
நீங்கள் கேட்காமலேயே மன்னிப்பவள்தான் ''தாய்''

அறிஞர்
17-12-2005, 05:40 AM
மன்னிக்க பெறும் உள்ளம் படைத்தவர் தாய்....

காக்கைக்கு தன் குஞ்சு... பொன் குஞ்சு போல்
தாய்க்கு தன் பிள்ளை என்றும் முக்கியமே...

RRaja
22-12-2005, 08:25 AM
பெற்றோரை எதிர்த்து காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டவர்களின் அடிமன உறுத்தலின் எச்சமாய் கவிதை எட்டிப்பார்க்கிறது.