rambal
01-04-2003, 03:02 PM
தொப்புள் கொடி
அறுந்த பொழுது
முதன் முதலாக...
வயிற்றில் சுரந்த அமிலம்
பசி என்று பேசத்தெரியாத பொழுது
கதறலாக...
தாயின் கதகதப்பை விட்டு
பள்ளிக்குச் சென்ற பொழுது
விம்மலாக...
விளையாட்டில் தோற்று
முதல் தோல்வி ஏற்படுத்திய
அதிர்ச்சியை செரிக்க முடியாமல்..
அடுத்த ஆண்டு அதே தோல்வியை
வெற்றியாக்கிய வைராக்கிய தருணத்தில்
சந்தோஷமாக...
கல்லூரியின் கடைசி நாளில்
கையொப்பமிட்டுக் கொண்டே..
பிரிவு தந்த வேதனையின் வெளிப்பாடாய்..
நம்பிக்கை துரோகம் கண்டு
தொழிலுக்கு மூடு விழாவாகி...
தனிமையில் மொட்டைமாடியில்...
அதே தொழிலை மீண்டும் தொடங்கி
சாதித்து பொழுது..
கர்வமாய்...
காதலியைப் பிரிகையில்
மௌனமாய்..
நட்பைப் பிரிகையில்
வருத்தமாய்...
நாட்டைப் பிரிகையில்..
கையறு நிலையாய்..
எல்லாவற்றையும் விட்டு விட்டு
வெளிநாடு கிளம்பிய பொழுது...
கெட்ட கனவாய் மறக்க முடியாமல்...
விடுமுறையில் அதே
மண்ணை மிதித்த வேளையில்..
தாயின் கதகதப்பாக உணர்ந்து...
எல்லாம் கண்ணீராகி..
கசிந்துருகி..
அறுந்த பொழுது
முதன் முதலாக...
வயிற்றில் சுரந்த அமிலம்
பசி என்று பேசத்தெரியாத பொழுது
கதறலாக...
தாயின் கதகதப்பை விட்டு
பள்ளிக்குச் சென்ற பொழுது
விம்மலாக...
விளையாட்டில் தோற்று
முதல் தோல்வி ஏற்படுத்திய
அதிர்ச்சியை செரிக்க முடியாமல்..
அடுத்த ஆண்டு அதே தோல்வியை
வெற்றியாக்கிய வைராக்கிய தருணத்தில்
சந்தோஷமாக...
கல்லூரியின் கடைசி நாளில்
கையொப்பமிட்டுக் கொண்டே..
பிரிவு தந்த வேதனையின் வெளிப்பாடாய்..
நம்பிக்கை துரோகம் கண்டு
தொழிலுக்கு மூடு விழாவாகி...
தனிமையில் மொட்டைமாடியில்...
அதே தொழிலை மீண்டும் தொடங்கி
சாதித்து பொழுது..
கர்வமாய்...
காதலியைப் பிரிகையில்
மௌனமாய்..
நட்பைப் பிரிகையில்
வருத்தமாய்...
நாட்டைப் பிரிகையில்..
கையறு நிலையாய்..
எல்லாவற்றையும் விட்டு விட்டு
வெளிநாடு கிளம்பிய பொழுது...
கெட்ட கனவாய் மறக்க முடியாமல்...
விடுமுறையில் அதே
மண்ணை மிதித்த வேளையில்..
தாயின் கதகதப்பாக உணர்ந்து...
எல்லாம் கண்ணீராகி..
கசிந்துருகி..