bharathappriyan
12-12-2005, 05:16 PM
காதல் புலம்பல்
--------------
* கண் மை கொண்டே
எனைக் கடத்திச் செல்லும்
மந்திரவாதி நீ.
மாற்று மருந்துண்டு
உண்மையான மந்திரவாதியின் மையிக்கு.
ஆனால் எனக்கு?
* உன்னையுமறியாமல்
என் ஆயுளைக் குறைக்கிறாய்
உன் ஒவ்வொரு சிரிப்பினாலும்.
* உன் உதட்டின் வார்தைகளுக்காகவே
உன் முகம் தேடும்
என் இதயம்
உனைப் பார்த்தவுடன்
பட்டாம்பூச்சியாய் படபடப்பது ஏனோ?
* மெலிந்த தேகம் கொண்டு
என்னையும்
மெலிய வைக்கிறாய்.
* கயிறு அறுபட்ட காற்றாடி போல்
அலைந்து கொண்டிருக்கிறது
மனது நிலையில்லாமல்,
உன் ஒற்றைப் பார்வையால்.
* விக்கல் வரும் போதெல்லாம்
நீ தான் நினைக்கிறாய் என்று
அடுத்த விக்கலை
எதிர்பார்க்கிறது மனது.
* இப்பூமியெங்கும் வியாபித்திருக்கும்
காற்றைப் போல்
எத்தனையோ பெண்கள்.
அதில் நீ,
என் உயிர்க் காற்று.
என்னை சுவாசிக்க வைப்பதால்.
* தினமும் உனது எடையை
சரி பார்க்கிறேன்
எடை பார்க்கும் இயந்திரத்தில்.
ஏனெனில்,
என்னில் தானே நீ இருக்கிறாய்.
*சொல்லி விடத் துடிக்கிறது
மனது,
தரையிலிட்ட மீனாய்.
என் முகம் பார்த்துச் சிரிக்கும்
என் கண்ணடி பிம்பம் ஒரு புறம்.
என் காதல் உணர்வுகளை
ஏளனமாய் பார்க்கும்
நமது நட்பு மறுபுறம்.
தீயிலிட்ட புழுவாய்த் துடிக்கிறேன்.
மரணத்தின் வாசல்களை மிதிக்கிறேன்.
காலத்தின் கைகளில்
காதலைக் கொடுத்து விட்டு
காத்திருக்கிறேன்,
காத்திருப்பேன்,
என் ஆயுள் முழுமைக்கும்.
--------------
* கண் மை கொண்டே
எனைக் கடத்திச் செல்லும்
மந்திரவாதி நீ.
மாற்று மருந்துண்டு
உண்மையான மந்திரவாதியின் மையிக்கு.
ஆனால் எனக்கு?
* உன்னையுமறியாமல்
என் ஆயுளைக் குறைக்கிறாய்
உன் ஒவ்வொரு சிரிப்பினாலும்.
* உன் உதட்டின் வார்தைகளுக்காகவே
உன் முகம் தேடும்
என் இதயம்
உனைப் பார்த்தவுடன்
பட்டாம்பூச்சியாய் படபடப்பது ஏனோ?
* மெலிந்த தேகம் கொண்டு
என்னையும்
மெலிய வைக்கிறாய்.
* கயிறு அறுபட்ட காற்றாடி போல்
அலைந்து கொண்டிருக்கிறது
மனது நிலையில்லாமல்,
உன் ஒற்றைப் பார்வையால்.
* விக்கல் வரும் போதெல்லாம்
நீ தான் நினைக்கிறாய் என்று
அடுத்த விக்கலை
எதிர்பார்க்கிறது மனது.
* இப்பூமியெங்கும் வியாபித்திருக்கும்
காற்றைப் போல்
எத்தனையோ பெண்கள்.
அதில் நீ,
என் உயிர்க் காற்று.
என்னை சுவாசிக்க வைப்பதால்.
* தினமும் உனது எடையை
சரி பார்க்கிறேன்
எடை பார்க்கும் இயந்திரத்தில்.
ஏனெனில்,
என்னில் தானே நீ இருக்கிறாய்.
*சொல்லி விடத் துடிக்கிறது
மனது,
தரையிலிட்ட மீனாய்.
என் முகம் பார்த்துச் சிரிக்கும்
என் கண்ணடி பிம்பம் ஒரு புறம்.
என் காதல் உணர்வுகளை
ஏளனமாய் பார்க்கும்
நமது நட்பு மறுபுறம்.
தீயிலிட்ட புழுவாய்த் துடிக்கிறேன்.
மரணத்தின் வாசல்களை மிதிக்கிறேன்.
காலத்தின் கைகளில்
காதலைக் கொடுத்து விட்டு
காத்திருக்கிறேன்,
காத்திருப்பேன்,
என் ஆயுள் முழுமைக்கும்.