PDA

View Full Version : நதியின் சலனங்கள்



bharathappriyan
12-12-2005, 04:34 PM
இனி ஜெயிப்பாய்
---------------
நண்பா,
விழுந்து விட்ட குழந்தையை
கவனித்திருக்கிறாயா?
அதன் கவனம் முழுவதும்
எழுவதில் மட்டுமே இருக்கிறது,
எழுகிறது.
முடியாதவை மட்டும் அழும்.
எழுதல் ஒரு கலை.
வெறியோடு எழு.
எடுத்தவுடன் ஜெயித்தல்
தோற்றல் போன்றது.
தோற்று ஜெயித்தலே
நிஜமான ஜெயித்தல்.
இப்பொது நீ தோற்றிருக்கிறாய்,

இனி ஜெயிப்பாய்.

Narathar
12-12-2005, 06:19 PM
நல்ல டொனிக் உங்கள் கவிதை
நன்றி

இளசு
13-12-2005, 05:52 AM
தோல்வி தரும் பாடங்கள் விலை மதிப்பற்றவை.

அருமையான மன உந்துக் கவிதை.

பாராட்டுகள் பாரதப்ரியன்..

(நம்ம பென்ஸின் கையெழுத்து வரிகளைக் கவனித்திருக்கிறீர்களா?)