PDA

View Full Version : காதல் கொள்வோம் வாரீர்



kavinila
08-12-2005, 09:00 PM
ஒருவருக்கொருவரென்று
உள்ளங்கள் இணைந்த போது
உருவகம் கொண்டதங்கே
உண்மையான குடும்பமொன்று

மோகமும் ஆசையும்
முழுவதுமாய் முடிந்தபோது
இடையிலே விரிசலொன்று
எட்டிஎட்டிப் பார்த்ததங்கே

சுற்றமும் சூழலுமாய்
சுத்திச்சுத்தி சுருதி போட
சுகமெல்லம் சொற்பமாக
சோகங்கள் சூழ்ந்ததங்கே

விதியாலே இணைந்த காதல்
வீதியிலே வந்தபோது
காதலும் கானலாகிக்
காணாமல் போனதங்கே

உண்மையாய் காதலித்தால்
உணர்விலே ஒன்று பட்டால்
மற்றவர் சொல்வதெல்லாம்
மறைந்து நின்றாடிடுமோ

காதலிப்பதென்று சொல்லி
காதலையழிப்பதை விட்டு
காதலுடன் அறிவு சேர்த்து
காதல் கொள்வோம் வாரீர்

உண்மையான காதலென்றால்
உணர்வுகளைப் பரிமாறி
உயிர்களும் இடம் மாறி
ஒன்று பட்டு இருப்பதன்றோ

மதி
09-12-2005, 04:28 AM
கவிநிலா,
அருமையான கவிதை..
சீரான நடை..
காதலிக்கும் பொழுது வராத எண்ணங்களும் சிந்தனைகளும்..சமுதாய நெருக்கடிகளும்..
கலியாணம் முடிந்ததும் வருவதேன்?

உமாமீனா
15-02-2011, 05:12 AM
வாங்க கவிநிலா - நல்லாவே சொன்னிக்க? யாரு இதை புரிஞ்சுக்குவா

dellas
22-02-2011, 03:45 PM
அபாரம் கவிநிலா.
உண்மை மட்டுமே உள்ளத்தில் உறையும், உண்மை அறிவதே அறிவு, அது காதலாய் இருந்தாலும். பாராட்டு.

பிரேம்
23-02-2011, 01:00 AM
"உண்மையான காதலென்றால்
உணர்வுகளைப் பரிமாறி
உயிர்களும் இடம் மாறி
ஒன்று பட்டு இருப்பதன்றோ"

பக்கா..சூப்பர்..:icon_b::aktion033:

Nivas.T
23-02-2011, 04:28 AM
அழகான கவிதை
நல்ல கருத்து

கவிதை அருமை
பாராட்டுகள் கவிநிலா

king44
13-03-2011, 02:03 PM
கண்ணோடு கலந்து இருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்
அவள் என்
உயிரோடு கலந்து விடடாள்
எப்படி விடுவேன்
என் உயிரை!

M.Jagadeesan
13-03-2011, 02:07 PM
காதலுக்காக உயிரை பலபேர் விட்டிருக்கிறார்கள்.
கவிதை நன்று.