kavinila
08-12-2005, 07:47 PM
சூரியஒளியில் தொடர்நிழல் போல்
சுற்றி வந்த சொந்தங்கள்
காரிருளாம் துன்பத்தில்
காணாமல் போனதெங்கே
பாரியாய் வந்தவளும்
மாரியாய் அன்பு தந்தாள்
சாரையாய் துன்பம் வர
தூரிகையாய் தொலந்ததெங்கே
விதிவழி வரும் சாவு
விரும்பியபோது வருவதில்லை
தேடி அதை நாம் போனால்
தெய்வமும் அருள்வதில்லை
துன்பங்கள் தொடர்வதில்லை
துணிந்தவனுக்கு துன்பமில்லை
இன்பமென்று ஏதுமில்லை
இடைவிடா துன்பங்களே
வாழ்க்கையில் இன்பங்கள்
சுற்றி வந்த சொந்தங்கள்
காரிருளாம் துன்பத்தில்
காணாமல் போனதெங்கே
பாரியாய் வந்தவளும்
மாரியாய் அன்பு தந்தாள்
சாரையாய் துன்பம் வர
தூரிகையாய் தொலந்ததெங்கே
விதிவழி வரும் சாவு
விரும்பியபோது வருவதில்லை
தேடி அதை நாம் போனால்
தெய்வமும் அருள்வதில்லை
துன்பங்கள் தொடர்வதில்லை
துணிந்தவனுக்கு துன்பமில்லை
இன்பமென்று ஏதுமில்லை
இடைவிடா துன்பங்களே
வாழ்க்கையில் இன்பங்கள்