ilanthirayan
07-12-2005, 01:16 PM
அலை சுமக்கும்
நுரைப் பூப்போல
மனம் மிதந்து
சிரிக்கும் வரம் வேண்டும்
தலை தடவும்
தென்றல் போல
துயர் படரும்
மனம் தடவித்
தேற்றும் தரம் வேண்டும்
பட்டினிப் பானைதனை
பந்திச் சந்தையில்
போட்டுடைத்துப்
பசியாற்றும் மனம் வேண்டும்
அசைந்தாடும் தென்றலின்
கொண்டையில் பூச்சூடி
வாழ்க்கையின் விளக்கம்
வழிசொல்லும் நிலை வேண்டும்
அல்லா யேசு புத்தன் ஈசன்
அருகிருந்து தவம் செய்யும்
அருங்காட்சி நான் காணும்
நாளொன்று வர வேண்டும்
நுரைப் பூப்போல
மனம் மிதந்து
சிரிக்கும் வரம் வேண்டும்
தலை தடவும்
தென்றல் போல
துயர் படரும்
மனம் தடவித்
தேற்றும் தரம் வேண்டும்
பட்டினிப் பானைதனை
பந்திச் சந்தையில்
போட்டுடைத்துப்
பசியாற்றும் மனம் வேண்டும்
அசைந்தாடும் தென்றலின்
கொண்டையில் பூச்சூடி
வாழ்க்கையின் விளக்கம்
வழிசொல்லும் நிலை வேண்டும்
அல்லா யேசு புத்தன் ஈசன்
அருகிருந்து தவம் செய்யும்
அருங்காட்சி நான் காணும்
நாளொன்று வர வேண்டும்