bharathappriyan
05-12-2005, 03:24 PM
பூமியும் நீயும்
ஒன்று தான்.
விலக நினைக்கும் போதெல்லாம்,
உன்னை நோக்கியே
இழுக்கிறாய்.
------------------------------
கோவில்களுக்கு செல்லும் போது
ஓரிடத்தில் கூட
நின்று விடாதே,
நீயும் ஒரு சிலை என்று
எல்லோரும்
வணங்க போகிறார்கள்.
------------------------------
இன்றாவது வெளியில் வராதே.
தினமும் நீ
அதிகம் வேலை கொடுப்பதாக
இறைவனிடம்
அழுகிறது
உன் வீட்டு திருச்டி பொம்மை.
------------------------------
சோசியக்காரனிடம் கேட்டேன்
என் ஆயுள் எவ்வளவு என்று.
எங்கே உன் ஆயுள் ரேகை என்று
அதிர்ச்சியுடன் கேட்டான்.
அப்பொதுதான் உரைத்தது,
அது
உன் கையிலல்லவா ஓடிக் கொண்டிருக்கிறது.
-----------------------------------------
இதய மாற்று
கடினம் என்கிறது
இம் மானுடம்.
இவர்களுக்குத் தெரியுமா பெண்ணே,
நம் இதயம்
எப்போதே மாறிப் போனதென்று.
----------------------------------------
பெண்ணே,
கடற்கரையில் ஏன் கால் பதித்தாய்,
உன் நினைவுகளையே
மீண்டும் மீண்டும் தேடும்
என் உள்ளம் போல்
உன் பாதம் தேடி
கரை வருகின்றன அலைகள்
ஓய்வில்லாமல்.
-----------------------------------------
ஒன்று தான்.
விலக நினைக்கும் போதெல்லாம்,
உன்னை நோக்கியே
இழுக்கிறாய்.
------------------------------
கோவில்களுக்கு செல்லும் போது
ஓரிடத்தில் கூட
நின்று விடாதே,
நீயும் ஒரு சிலை என்று
எல்லோரும்
வணங்க போகிறார்கள்.
------------------------------
இன்றாவது வெளியில் வராதே.
தினமும் நீ
அதிகம் வேலை கொடுப்பதாக
இறைவனிடம்
அழுகிறது
உன் வீட்டு திருச்டி பொம்மை.
------------------------------
சோசியக்காரனிடம் கேட்டேன்
என் ஆயுள் எவ்வளவு என்று.
எங்கே உன் ஆயுள் ரேகை என்று
அதிர்ச்சியுடன் கேட்டான்.
அப்பொதுதான் உரைத்தது,
அது
உன் கையிலல்லவா ஓடிக் கொண்டிருக்கிறது.
-----------------------------------------
இதய மாற்று
கடினம் என்கிறது
இம் மானுடம்.
இவர்களுக்குத் தெரியுமா பெண்ணே,
நம் இதயம்
எப்போதே மாறிப் போனதென்று.
----------------------------------------
பெண்ணே,
கடற்கரையில் ஏன் கால் பதித்தாய்,
உன் நினைவுகளையே
மீண்டும் மீண்டும் தேடும்
என் உள்ளம் போல்
உன் பாதம் தேடி
கரை வருகின்றன அலைகள்
ஓய்வில்லாமல்.
-----------------------------------------