Shanmuhi
30-11-2005, 01:34 PM
இதயத்தைத் தொட்ட காதல்...
கொழும்பில் உன்னை நேருக்கு நேராக பார்த்தேனோ... அன்று கண்களில் தொடங்கிய காதல் இதயத்தை தொட்டு, தொட்டு சென்றதை இன்னும் மறக்கத்தான் முடியுமா...?
விடுமுறைக்காக லண்டன் நாட்டிலிருந்து வந்தபோது தான் என் கண்களை கைது செய்தாய். காதல் தேசம் அதில் அகதியாய் இருப்பதாய் கூறி, என் சம்மதம் கேட்டு... என் விழி வாசல் தேடி நீ கேட்டபோது என் மௌனங்கள் சம்மதங்களாக தந்தபோது என்னையே உன்னுள் தொலைத்து நின்றேன்.
உன் தோள் அளவு வளர்ந்திருந்த முடி, ஒற்றைக்காதில் நீ அணிந்தருந்த அந்த ஒற்றை கடுக்கன், வெய்யிலின் கொடுமையை தகிப்பதற்காக அணிந்திருந்த அந்த கருப்புக் கண்ணாடியில் உண்மையில் என் கண்களுக்கு நீ மன்மதனாகத்தான் இருந்தாய்.
என் மனதில் சலனமே இல்லாமல் நானும் என் வேலையுமாக இருந்த வேளையில்தான் சுள்ளானாக வந்து என் மனதை சுண்டி இழுத்து காதல் சுகமானது என்பதை எனக்குள் ஏற்படுத்திவிட்டாய்.
ஆட்டோகிராப் நினைவுகளாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டு என்னை லண்டன் அழைப்பதாய் கூறி, நீயும் லண்டன் பறந்தாய்.
காதல் பிரிவின் வேதனை அன்று உணர்ந்தேன். உன் புகைப்படம் பார்த்து, உன்னுடன் தொலைபேசியில் கதைத்து, என் வேதனை தீர நீ மருந்தாய் இருந்தாய். சில மாதங்களின் பின்னே லண்டன் நோக்கிய என் பயணம் ஆரம்பமாகியது.
விமானநிலையத்தில் உன்னைக்கண்டபோது... கொழும்பில் பார்த்தமாதிரியே நீ இருந்தாய். ஆனால் நான் தான் மெலிந்து விட்டேன் என்றாய். உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றே கோயில் கோயிலாக ஏறி ஏறி சாமிக்கு அர்ச்சனை செய்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தேன் என்றேன். நீயும் தலையை அழகாக சிலிர்த்து விட்டு "ஆஹா எல்லாம் இறைவன் தந்த வரம்" என்று தலை அசைத்தபோது என் உடம்பில் மின்சார அலைகள் ஊற்றெடுத்தன.
வீடு வந்த போது, வீட்டை வைத்திருக்கும் அழகைக் கண்டு அதிசயித்துவிட்டேன்.
ஆஹா எத்தணை அழகு. வைக்கவேண்டிய பொருட்களையெல்லாம் என்ன லாவகமாக அடுக்கி வைத்திருக்கும் ஓவ்வொன்றையும் பார்த்தேன் ரசித்தேன்.
மெய்மறந்து நின்றதில் சிறது நேரம் உன்னைக் காணமால் துடித்து அறையேங்கும் தேடினேன். உன்னைக் காணவில்லையே என்ற ஏக்கத்துடன் நின்றபோதுதான் அங்கே மேசைமீது இருந்த டோபை க் கண்டு துடித்துப்போனேன். ஆ... என்ன இது இதைக் கண்டு மயங்கிவிட்டேனா... என் துடிப்பு அடங்குவதற்குள் நீயும் என்முன்னே வந்தாய் மொட்டையாக... காதல் கிறுக்கனே... திருட்டு ராஸ்கல்... என்னை ஏமாற்றி விட்டாயே... என்று நாலுவார்த்தை வாய்க்கு வந்தபடி பேச வார்த்தைகளைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன்.
ஆனால்... சொல்லத் துடித்த வார்த்தைகள் வர மறுத்தன. காதல் கண்களில் தோன்றி இதயத்தைத் தொட்ட காதலாயிற்றே... இந்த டோப் முடியை விட இந்த மொட்டை தான் உனக்கு ஜோர் என்று கூறி என் மனதைக் கவர்ந்த அந்த டோபாவை எடுத்து குப்பைத்தொட்டிக்குள் எறிந்தேன்
கொழும்பில் உன்னை நேருக்கு நேராக பார்த்தேனோ... அன்று கண்களில் தொடங்கிய காதல் இதயத்தை தொட்டு, தொட்டு சென்றதை இன்னும் மறக்கத்தான் முடியுமா...?
விடுமுறைக்காக லண்டன் நாட்டிலிருந்து வந்தபோது தான் என் கண்களை கைது செய்தாய். காதல் தேசம் அதில் அகதியாய் இருப்பதாய் கூறி, என் சம்மதம் கேட்டு... என் விழி வாசல் தேடி நீ கேட்டபோது என் மௌனங்கள் சம்மதங்களாக தந்தபோது என்னையே உன்னுள் தொலைத்து நின்றேன்.
உன் தோள் அளவு வளர்ந்திருந்த முடி, ஒற்றைக்காதில் நீ அணிந்தருந்த அந்த ஒற்றை கடுக்கன், வெய்யிலின் கொடுமையை தகிப்பதற்காக அணிந்திருந்த அந்த கருப்புக் கண்ணாடியில் உண்மையில் என் கண்களுக்கு நீ மன்மதனாகத்தான் இருந்தாய்.
என் மனதில் சலனமே இல்லாமல் நானும் என் வேலையுமாக இருந்த வேளையில்தான் சுள்ளானாக வந்து என் மனதை சுண்டி இழுத்து காதல் சுகமானது என்பதை எனக்குள் ஏற்படுத்திவிட்டாய்.
ஆட்டோகிராப் நினைவுகளாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டு என்னை லண்டன் அழைப்பதாய் கூறி, நீயும் லண்டன் பறந்தாய்.
காதல் பிரிவின் வேதனை அன்று உணர்ந்தேன். உன் புகைப்படம் பார்த்து, உன்னுடன் தொலைபேசியில் கதைத்து, என் வேதனை தீர நீ மருந்தாய் இருந்தாய். சில மாதங்களின் பின்னே லண்டன் நோக்கிய என் பயணம் ஆரம்பமாகியது.
விமானநிலையத்தில் உன்னைக்கண்டபோது... கொழும்பில் பார்த்தமாதிரியே நீ இருந்தாய். ஆனால் நான் தான் மெலிந்து விட்டேன் என்றாய். உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றே கோயில் கோயிலாக ஏறி ஏறி சாமிக்கு அர்ச்சனை செய்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தேன் என்றேன். நீயும் தலையை அழகாக சிலிர்த்து விட்டு "ஆஹா எல்லாம் இறைவன் தந்த வரம்" என்று தலை அசைத்தபோது என் உடம்பில் மின்சார அலைகள் ஊற்றெடுத்தன.
வீடு வந்த போது, வீட்டை வைத்திருக்கும் அழகைக் கண்டு அதிசயித்துவிட்டேன்.
ஆஹா எத்தணை அழகு. வைக்கவேண்டிய பொருட்களையெல்லாம் என்ன லாவகமாக அடுக்கி வைத்திருக்கும் ஓவ்வொன்றையும் பார்த்தேன் ரசித்தேன்.
மெய்மறந்து நின்றதில் சிறது நேரம் உன்னைக் காணமால் துடித்து அறையேங்கும் தேடினேன். உன்னைக் காணவில்லையே என்ற ஏக்கத்துடன் நின்றபோதுதான் அங்கே மேசைமீது இருந்த டோபை க் கண்டு துடித்துப்போனேன். ஆ... என்ன இது இதைக் கண்டு மயங்கிவிட்டேனா... என் துடிப்பு அடங்குவதற்குள் நீயும் என்முன்னே வந்தாய் மொட்டையாக... காதல் கிறுக்கனே... திருட்டு ராஸ்கல்... என்னை ஏமாற்றி விட்டாயே... என்று நாலுவார்த்தை வாய்க்கு வந்தபடி பேச வார்த்தைகளைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன்.
ஆனால்... சொல்லத் துடித்த வார்த்தைகள் வர மறுத்தன. காதல் கண்களில் தோன்றி இதயத்தைத் தொட்ட காதலாயிற்றே... இந்த டோப் முடியை விட இந்த மொட்டை தான் உனக்கு ஜோர் என்று கூறி என் மனதைக் கவர்ந்த அந்த டோபாவை எடுத்து குப்பைத்தொட்டிக்குள் எறிந்தேன்