kavitha
25-11-2005, 07:01 AM
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்குமாம் குறிஞ்சி!
11ம் திங்களில் பிறந்தவளே!
என் முதல் தோழியே!
நீ பிறந்த இத்தினத்தினை
ஆண்டாண்டுக்கும் போற்றுவேன்.
ஊடலில் தாம் நாம் நட்பானோம்
ஞாபகம் இருக்கிறதா?
4ம் வகுப்பினிலே
கைக்குட்டைச் சண்டை போட்டோமே!
ஒன்று போல் சிந்தனை
ஒன்று போல் பேச்சு
ஒன்று போல் அன்பு
அதன் அடையாளம் தானோ என்னவோ
ஒன்று போல் இருந்தது
நம் கைக்குட்டையும்...
ஏதோ ஒன்று அதில் தொலைந்துபோக
பழியை நீயோ என்மீது வைத்தாய்
நானோ அன்பை உன்மீது வைத்தேன்.
இப்போது போலவே
அப்போதும் நான் அப்பாவி..
பிறர்க்கண் வருந்துவேனே அன்றி
என் துயர் கண்ணுறேன்!
உன் கைக்குட்டைக்காக
வீட்டில் அடிவாங்கி
கொண்டுவந்த உண்டியல் சேமிப்பை
என்ன செய்தாயோ தெரியாது..
அவ்வப்போது என் கைத்தீ வடுவை மட்டும்
நெருடி வருடிக்கொள்வேன்...
நம் நினைவுகளைப்போலவே...
தீப்புண் வாங்கியது நான்
தேம்பி தேம்பி அழுதது நீ
என்னை விட உயர்ந்தவள் நீ
உயரத்திலும் சரி...
வயதிலும் சரி...
ஆனால் நட்பிற்குப்பிறகு
என் அன்புக்கு மட்டுமே நீ
அடிபணிந்தாய்
நமக்குள்
கருப்பு, வெளுப்பு என்றோ
உயரம், குட்டை என்றோ
இந்து, கிறிஸ்துவம் என்றோ
இன்றுவரை பேதம் கிடையாது.
சண்டைக்குப் பிறகோ
நம் இருவர் வீட்டிலும்
எல்லைக்கோடுகள்.
அந்தக்கோடுகளை எல்லாம்
தாண்டியது - நமது
பாண்டி ஆடும் வயசு
நான் நகம் கடிக்கக்கூடாதென்று
நகப்பூச்சு பூசிவிடுவாய் நீ
நீ முடிவளர்க்கவேண்டும் என்று
தினம் பூ தருவேன் நான்
உன்னைப்பார்த்து நான்
நகம் வெட்ட ஆரம்பித்தேன்
என்னைப்பார்த்து நீ
முடி வளர்க்க ஆரம்பித்தாய்
நான்கு வருடங்களில்
நாம் செய்த சேட்டைகளும், சாதுர்யங்களும்
போட்டி போட்டன நமக்குள்...
ஆனால்
ஒரு நாளும் பொறாமை பட்டதில்லை
அது தான் அந்தக்காலத்திற்கு
பொறாமை வந்ததோ...
தந்தை இழப்பால் நான் சென்றேன் திருச்சி
இட மாற்றத்தால் நீ சென்றாய் மதுரை
வழி நெடுகக்கண்ணீரோடு
மீண்டும் ஒருநாள்
நிச்சயம் சந்திப்போம் என்ற
ஒரேஒரு நம்பிக்கைத் தேம்பலுடன்
பிரிந்தோம் நாம்
உடல் தான் பிரிந்தது!
உள்ளம் எங்கே பிரிந்தது?
வருடத்திற்கு ஒரு முறை
உன் கடிதம் மட்டும் எனக்கு
வந்து சேரும் முகவரி இன்றி...
ஓடியது..ஓடியது..
காலம் நம் வயதையும் சேர்த்துக்கொண்டு ஓடியது
நானோ புகுந்த வீட்டில்..
நீயோ பட்டதாரியாய்...
நீ எங்கே?
நான் எங்கே?
இருவரும் அறியோம்..
12 வருடங்களுக்குப்பிறகு
அந்த கால தேவதை
எனக்கு வரம் அருளியது
முன்னோட்டமாய் என் தங்கை ஓதினாள்
இந்த வாரத்தில் "உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது" என்று!
திடீரென உன் குரல்...
என் தொலைபேசியில்...
அதே குரல்... அதே வாஞ்சை
அவளே... அவளே தான்!
"இன்று உன்னைச் சந்திக்க வருகிறேன்" என்று
எப்படி இருப்பாளோ? என நானும்
இப்படி இருப்பாயோ? என நீயும்
ஆள் அதிகமில்லா
ரயில் நிலையத்தில் காத்துக் காத்து
கண்கள் தேடின...
.... (தொடரும்)
11ம் திங்களில் பிறந்தவளே!
என் முதல் தோழியே!
நீ பிறந்த இத்தினத்தினை
ஆண்டாண்டுக்கும் போற்றுவேன்.
ஊடலில் தாம் நாம் நட்பானோம்
ஞாபகம் இருக்கிறதா?
4ம் வகுப்பினிலே
கைக்குட்டைச் சண்டை போட்டோமே!
ஒன்று போல் சிந்தனை
ஒன்று போல் பேச்சு
ஒன்று போல் அன்பு
அதன் அடையாளம் தானோ என்னவோ
ஒன்று போல் இருந்தது
நம் கைக்குட்டையும்...
ஏதோ ஒன்று அதில் தொலைந்துபோக
பழியை நீயோ என்மீது வைத்தாய்
நானோ அன்பை உன்மீது வைத்தேன்.
இப்போது போலவே
அப்போதும் நான் அப்பாவி..
பிறர்க்கண் வருந்துவேனே அன்றி
என் துயர் கண்ணுறேன்!
உன் கைக்குட்டைக்காக
வீட்டில் அடிவாங்கி
கொண்டுவந்த உண்டியல் சேமிப்பை
என்ன செய்தாயோ தெரியாது..
அவ்வப்போது என் கைத்தீ வடுவை மட்டும்
நெருடி வருடிக்கொள்வேன்...
நம் நினைவுகளைப்போலவே...
தீப்புண் வாங்கியது நான்
தேம்பி தேம்பி அழுதது நீ
என்னை விட உயர்ந்தவள் நீ
உயரத்திலும் சரி...
வயதிலும் சரி...
ஆனால் நட்பிற்குப்பிறகு
என் அன்புக்கு மட்டுமே நீ
அடிபணிந்தாய்
நமக்குள்
கருப்பு, வெளுப்பு என்றோ
உயரம், குட்டை என்றோ
இந்து, கிறிஸ்துவம் என்றோ
இன்றுவரை பேதம் கிடையாது.
சண்டைக்குப் பிறகோ
நம் இருவர் வீட்டிலும்
எல்லைக்கோடுகள்.
அந்தக்கோடுகளை எல்லாம்
தாண்டியது - நமது
பாண்டி ஆடும் வயசு
நான் நகம் கடிக்கக்கூடாதென்று
நகப்பூச்சு பூசிவிடுவாய் நீ
நீ முடிவளர்க்கவேண்டும் என்று
தினம் பூ தருவேன் நான்
உன்னைப்பார்த்து நான்
நகம் வெட்ட ஆரம்பித்தேன்
என்னைப்பார்த்து நீ
முடி வளர்க்க ஆரம்பித்தாய்
நான்கு வருடங்களில்
நாம் செய்த சேட்டைகளும், சாதுர்யங்களும்
போட்டி போட்டன நமக்குள்...
ஆனால்
ஒரு நாளும் பொறாமை பட்டதில்லை
அது தான் அந்தக்காலத்திற்கு
பொறாமை வந்ததோ...
தந்தை இழப்பால் நான் சென்றேன் திருச்சி
இட மாற்றத்தால் நீ சென்றாய் மதுரை
வழி நெடுகக்கண்ணீரோடு
மீண்டும் ஒருநாள்
நிச்சயம் சந்திப்போம் என்ற
ஒரேஒரு நம்பிக்கைத் தேம்பலுடன்
பிரிந்தோம் நாம்
உடல் தான் பிரிந்தது!
உள்ளம் எங்கே பிரிந்தது?
வருடத்திற்கு ஒரு முறை
உன் கடிதம் மட்டும் எனக்கு
வந்து சேரும் முகவரி இன்றி...
ஓடியது..ஓடியது..
காலம் நம் வயதையும் சேர்த்துக்கொண்டு ஓடியது
நானோ புகுந்த வீட்டில்..
நீயோ பட்டதாரியாய்...
நீ எங்கே?
நான் எங்கே?
இருவரும் அறியோம்..
12 வருடங்களுக்குப்பிறகு
அந்த கால தேவதை
எனக்கு வரம் அருளியது
முன்னோட்டமாய் என் தங்கை ஓதினாள்
இந்த வாரத்தில் "உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது" என்று!
திடீரென உன் குரல்...
என் தொலைபேசியில்...
அதே குரல்... அதே வாஞ்சை
அவளே... அவளே தான்!
"இன்று உன்னைச் சந்திக்க வருகிறேன்" என்று
எப்படி இருப்பாளோ? என நானும்
இப்படி இருப்பாயோ? என நீயும்
ஆள் அதிகமில்லா
ரயில் நிலையத்தில் காத்துக் காத்து
கண்கள் தேடின...
.... (தொடரும்)