rambal
21-04-2003, 05:31 PM
நெருஞ்சி முள்.. சிறுகதை..
ஒரு மழை நாள் மதியத்தில் மதுரைக்கு அலுவல் நிமித்தமாக 10வருடங்கள் கழித்துச் செல்கிறேன். ஆட்டோவில் நான். வெளியில் மழை. இது வேறு ஒரு சமயமாயிருந்தால் இறங்கி நனைந்திருப்பேன். சாலையெங்கும் தற்காலிக குறு ஓடைகள் ஓடிக்கொண்டிருந்தன. எனக்குள்ளோ சுனாமி அடித்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் இருக்கிறது, அது அவள். இந்த மழையை ரசிக்கக் கற்றுக் கொடுத்தவள். நனையக் கற்றுக் கொடுத்தவள். மொத்தத்தில் என் ஆசான். ஆட்டோ இப்போது கொஞ்சம் எல்லாவித வாசனைகளும் எல்லா மொழிகளும் கலந்து காற்றில் திரியும் எக்மோருக்கு வந்து சேர்ந்திருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு வைகையைப் பிடிக்க கிளம்பினேன். நல்ல வேளையாக முன்பதிவு செய்திருந்ததால் தப்பித்தேன். இல்லையென்றால் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும். எதற்கெடுத்தாலும் நீண்ட வரிசை. இந்த அவல நிலை என்று ஒழியுமோ? இந்த எண்ணங்கள் கூட அவள் விதைத்ததுதான். ஒருவழியாய் எனது பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்து எனது இருக்கையில் அமர்ந்தேன். எனது ஜன்னலோர இருக்கை. ஆகவே, எந்தக் கவலையுமில்லாமல் தீர்க்கமின்றி வேடிக்கை பார்க்கலாம். பையை மேலே வைத்துவிட்டு உட்கார்ந்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் வண்டி கிளம்பியது. எனது எண்ணங்களும்தான்.
"ஏண்டா உனக்கும் அவங்களுக்கும் ஒரு இதாமே?" நண்பன் சிவா கேட்டான்.
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைடா. வீணாக் கற்பனை பண்ணிக்காதே"
"கற்பனை பண்ணுவது நானா? இல்லை நீயா? எல்லோரும் தப்பா பேசுறாங்கடா"
"யார் தப்பா பேசினாலும் எனக்குக் கவலையில்லை. நீ தப்பா நினைக்கிறியா?"
"இல்லைடா. ஆரம்பத்தில நான் ஒன்னும் நினக்கலை. ஆனால், வரவர உன் நடவடிக்கைகள் அதுக்கு இடம் கொடுத்திடுச்சு."
"so, நீயும் தப்பா நினைக்கிற. அப்படித்தானே."
"ஆமாண்டா."
"சரி.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. ஊர்ல சொல்றதுலதான் நம்பிக்கை. அப்படித்தானே?"
"அப்படி இல்லை."
"பின்ன எப்படியாம்?"
"நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு? எத்தனையோ பேர் இருக்க இவங்களைப் போயி. வேற ஆளே கிடைக்கலையா உனக்கு? அந்த வித்யாவிற்கு என்ன குறைச்சல். அவ உன்னைய எவ்வளவு காதலிக்கிறா தெரியுமா? இதெல்லாம் உனக்கேத் தெரியும். நீ இவங்களோட சுத்துறதுனால அவள் எவ்வளவு feel பண்ணாத் தெரியுமா?"
" ஓஹோ அவள் சொல்லித்தான் இந்த டாபிக்கையே எடுத்தியா நீ? அவளுக்கு என் மேல இருக்கிறது ஒரு விதமான opposite site attraction. இவங்க மேல இருக்கிறது வேற. அதெல்லாம் உனக்குப் புரியாது."
"எது புரியாது? நாய்க்குட்டி மாதிரி அவங்க பின்னாலே போறதும் அவங்க வீட்டுல ராத்திரி படிக்கிறேன்னு சொல்லி அடிக்கிற கூத்துமா?"
இந்த வாசகம் சொல்லி முடிப்பதற்குள் என் கைகள் அவன் கன்னத்தை முத்தமிட்டிருந்தன. அந்த சம்பவத்திற்குப் பிறகு அவனோடு பேசவில்லை.
செங்கல்பட்டு சந்திப்பு என்ற பலகை கண்ணில் தென்பட்டதும்தான் கிளம்பி 1 மணி நேரம் ஆகிறது என்ற உணர்வுக்கு வந்தேன். வயிற்றில் கொஞ்சம் பசி எடுத்தது. கேண்ட்டீன் வரை போய் பார்க்கலாம் என்று கிளம்பினேன். அது இங்கிருந்து 4 பெட்டிகள் தள்ளி இருந்தது. வழியில் ஒரு கூட்டம் சீட்டு ஆடிக் கொண்டிருந்தது. சிலர் மும்முரமாக ராஜேஸ் குமாரும் இன்னும் சிலர் அன்றைய ஹிண்டுவிலும் லயித்து இருந்தார்கள். இன்னும் வெளியில் தூவானம்தான். அது என்னவோ மனதிற்குள் ஒரு பரவசத்தை விரவியிருந்தது. ஒரு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டேன். பின் என் பெட்டி அடைந்து கதவருகே நின்று கொண்டு வண்டியின் புகைக்கு ஈடாக இல்லாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்த அளவு புகைத்தேன்.
"நேற்று சிவா கூட என்ன சண்டை?"
அதெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது. அந்த சண்டைக்குக் காரணமே நீதான்.
"என்னடா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டிருக்கிறேன். நீ ஏதோ மௌன விரதம் இருக்கிறவன் மாதிரி இருந்தா எப்படி?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை"
"இப்படி மழுப்பலா சொன்னா என்னவோ இருக்குன்னுதான் அர்த்தம். ம்ம் சொல்லு"
"அதான் தகராறுனு தெரியுதுல. பின்ன ஏன் அதையே நோண்டிகிட்டு. விட்டுடுங்க."
"உனக்கு இருந்த ஒரு நல்ல பிரெண்டு அவன். அவன்கிட்டப் போயி. அதான் கேட்டேன். உனக்கு இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்."
மௌனங்களின் பேரிரைச்சலில் இருக்கப் பிடிக்காமல் அங்கிருந்து கிளம்பினேன்.
ஏதோ நெருப்புப் பரவும் உணர்வு வர சிகரெட்டைத் தூக்கி எறிந்தேன்.
என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். இப்போது இன்னும் மழை அதிகமாயிருந்தது. எனக்குள்ளும் மனசு அதைவிட அதிகமாய் அலைபாய்ந்தது. ஜன்னல் வழியே திரியும் எந்தக் காட்சியையும் காணச்சகியாமல் விழி திறந்த தூக்கம் போன்ற நிலை எய்தினேன்.
"ஆமாம், அந்த வித்யாவை கண்டுக்கிடறதே இல்லையாமே? ஏன்? என்னாச்சு?"
"எப்படி கண்டுக்கிடனும்னு சொல்ல வற்றீங்க?"
"அவள் உன்னைக் காதலிக்கிறதா சொல்லி இருக்கிறாள். ஒன்னு அவளைக் காதலிக்கிறேன்னு சொல்லு, இல்லை இல்லைன்னு சொல்லு. அது என்ன ஒன்னும் சொல்லம விட்டேத்தியா ஒரு பெண்ணை அலைய விட்டுப் பார்க்கிறதுல ஒரு ஆனந்தம்?"
"அவளுக்கு என் மேல இருக்கிறது ஒரு விதமான அட்ராக்சன். லவ்வெல்லாம் இல்லை. அதைக் கொச்சைப் படுத்த வேண்டாம்."
"சரி அட்ராக்சன். அதுக்காக இப்படி ஒன்னுமே சொல்லாம அலையவிடுறது நல்லா இல்லை."
"அதுக்கு நான் என்ன பண்ண?"
"நீதான் பண்ணனும். முதல்ல அவள்கிட்டப் போய் பேசு. புரிய வை."
"என்னன்னு?"
"உனக்கு வந்திருக்கிறது லவ்வு இல்லை. ஒருவிதமான ஈர்ப்பு அப்படின்னு"
"அது எனக்கு அவசியமில்லாத வேலை"
"அப்ப எதுதான் உனக்கு அவசியம்? உன் மீது அன்பு செலுத்த ஒரு ஆத்மா அலையும் போது அதை உதாசீணப்படுத்தக் கூடாது. தெரியுதா?"
"ம்ம்ம்"
"அதை சிரிச்சுகிட்டே சொன்னால் என்ன?"
"ஹிஹி போதுமா?"
"போதும்"
இப்படியாக அந்த சம்பாசணை ஒரு முடிவிற்கு வந்தது.
வண்டி உளுந்தூர் பேட்டையில் எதிரே வரும் வண்டிக்கு வழி கொடுப்பதற்காக நின்றது. இறங்கி போய் கடையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும் வாழைப்பழமும் வாங்கிக் கொண்டேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு வண்டி எதிர் திசையில் பயணித்துக் கடந்தது. என் வண்டியும் புறப்பட. வண்டி புறப்பட்டுப் போனவுடன் இந்தப் பிளாட்பரங்கள் அனாதையாக அடுத்த ஆதரவிற்காக காத்திருக்கும். இப்படி காத்திருத்தல்களிலேயே ஒரு சுகம் இருக்கிறது, எனது 10 வருட காத்திருத்தல் இன்று சுகமளிக்கவில்லையா? அதுபோல.
"உன் மனசுல என்ன பெரிய இவன்னு நினைப்பா?"
"ஏன் வந்ததும் வராததுமா கத்துறீங்க?"
"பின்ன என்ன? அந்த வித்யாகிட்டப் போய் ஆதரவா பேசுடான்னு சொன்னால் பெரிய அட்வைசாமே. ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு. இது படிக்கிற வயசு. அப்படி இப்படின்னு ஏகத்துக்கு."
"அவள் உங்ககிட்டையும் சொல்லிட்டாளா?"
"பின்ன வேறு யார் யார்கிட்டேல்லாம் சொன்னாள்?"
"எல்லார்கிட்டையும்தான்."
"எல்லார்கிட்டையும்னா?"
"என் தம்பி வரைக்கும். அவன் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் போறான்"
"அவ பெரிய ஆளுதான். இருந்தாலும் பாவம்டா. உனக்காக உருகுறா தெரியுமா?"
"உருகுறதுக்கு அவ ஒண்ணும் வெண்ணை இல்லை. நான் ஒன்னும் நெருப்பும் இல்லை."
"உடனே தத்துவம் பேச ஆரம்பிச்சிடுவியே. வழக்கம் போல் உனக்கு இஷ்டம் இல்லைன்னா இந்த டாபிக்கை விட்டுடுறேன்."
இந்தப் பக்குவம் தான் உன்னிடம் எனக்குப் பிடித்தது. என் மனது புண்படக்கூடாதென்கின்ற கவனம் தான் உன் மீது என்னை மையம் கொள்ளவைத்தது.
வண்டி விழுப்புரம் வந்து சேர்ந்திருந்தது. இங்கு ஒரு இருபது நிமிடங்கள். என் இதயம் இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. மதுரை என்பது 30 லட்சம் மக்களின் நம்பிக்கை மண். அழகர் இறங்கும் அன்று மழை பெய்யும். அது அந்தக் கடவுளாலா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அன்று அந்த முப்பது லட்சம் மக்களின் எண்ணங்களும் அழகர் இறங்கும் அன்று மழை பெய்யும் என்பதாகத்தானிருக்கும். அந்த நம்பிக்கைதான் மழை பெய்யக்காரணம். இப்படி பல எண்ண ஓட்டங்களுக்கிடையில் 20 நிமிடங்கள் கரைந்தது. வண்டி நகரத் தொடங்கியது.
"நான் 1085/1200க்கு. கொஞ்சம் கம்மியாயிடுச்சு. வழக்கம் போல் வேதியியலில் 200க்கு 195. எல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்தது"
"சரி. அடுத்து என்ன?"
"இங்கேயே தியாகராஜாவில சேர்ந்திட வேண்டியதுதான். இல்ல என்றால் கவுன்சிலிங்கில எங்கே கிடைக்குதோ அங்கே போயிட வேண்டியதுதான்."
"அப்படின்னா என்னை பிரிஞ்சு போறதைப் பத்தி உனக்குக் கவலையே இல்லை. அப்படித்தானே."
அந்தக் கேள்வியில் இருந்த பிரிவு எனும் வார்த்தை என் மேல் பல அக்னித் துண்டுகளை அள்ளி எறிந்தது போல் இருந்தது. இருந்தாலும் அதுதான் நிஜம். நிஜம் எப்போதுமே சுடும். வலி நிறைந்தது. அவசர உலகில் வேறு பல நிலைகளை அடைய பிரியத்தான் வேண்டும். ஆனால், இது என்னவோ ஒரு தவிப்பு. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. இது காதலா? குரு மீது கொள்வது காதலாகாது. குருவிற்கு தட்சணையாக மாங்கல்யம் கொடுப்பது தவறல்லவா? அப்படி என்றால் இனக்கவர்ச்சியா? அப்படி இருந்தால் வித்யாவிற்கு அவ்வளவு வியாக்யானம் செய்திருப்பேனா? இது வேறு எதுவோ. அதுக்கு பேர் எல்லாம் வேண்டாம். ஆனால் ஒரு வகை புனிதம். இப்படியாக என்னென்னவோ எண்ணங்கள் ஓடின.
"இந்தாக் குடி" என்று காபி கப்பை நீட்டியிருந்தாள்.
குடித்துவிட்டு
"சரி நான் கிளம்புறேன்".
வண்டி திருச்சிராப்பள்ளியை நெருங்கிக் கொண்டிருந்தது. வானம் கொஞ்சம் இருட்டியிருந்தது என் மனதைப் போலவே. மதுரைக்குப் போய் அவளைப் பார்க்க முடியுமா? வேறு எங்காவது மாற்றலாகி போயிருந்தால்? இந்த எண்ணமே என்னை அணு அணுவாக அறுத்தது.
"என்ன யோசனை?"
"இல்லை சென்னையிலதான் சீட் கிடைச்சிருக்கு. இங்கே கிடைக்கலை. அதான்"
"அதுக்கென்ன?"
"உங்களைப் பிரிஞ்சு போறதைப் பத்தித்தான்."
"இதுக்கா? இவ்வளவு யோசனை. வாழ்க்கைங்கிறது ரயில் பயணம் போல். உன்னோட ஊர் போறதுக்கு நீ அடுத்த ரெயிலைப் பிடிச்சாகணும். அதனால் இந்த ஸ்டேசன்ல இறங்கப் போற பேசஞ்சர் நீ. என்னோட ஊர் என்பது இன்னும் வரவில்லை. உனக்காக நான் இறங்கினாலோ இல்லை எனக்காக நீ இறங்காமல் விட்டாலோ நாம இரண்டு பேரில் ஒருவர் அவர் ஊர் போய் சேர முடியாது. அதனால கலங்காமல் இரு."
இதுதான் உன்னிடம் எனக்குப் பிடித்தது. இந்தத்தெளிவான அணுகுமுறை. இதற்காகத்தான் உன் மேல் ஓர் இனம் புரியா ஒரு உணர்வு. இதை எப்படி சொல்லி உனக்கு விளங்கவைப்பேன் பெண்ணே. பதினேழில் இருக்கும் நான் 26ல் இருக்கும் உன்மேல் வைப்பது பாசமா? காதலா? அன்பா? எனக்கு விளங்கவில்லை. குழப்பத்துடன் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் சென்னைக்கு படிக்கக் கிளம்பினேன். அதன்பிறகு இன்றுதான் திரும்புகிறேன். அதுவும் கூட பணி நிமித்தமாக.
வண்டி மதுரைக்கு வந்து சேர்ந்தது. என் பழைய நினைவுகளும் ஒரு வழியாய் அமைதியடைந்திருந்தன.மழை மட்டும் ஓய்வதாயில்லை. மழைத்தூறல்களுக்கிடையே அடுத்த நாள் காலை அலுவல்களை முடித்துக் கொண்டு அவள் இருந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு அவள் இல்லை என்பதற்கு பல அடையாளங்கள் இருந்தன. விசாரித்ததில் அவள் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றலாகி ஆரப்பாளையம் மாறி போய் விட்டிருந்தது தெரிய வந்தது. நான் விடுவதாய் இல்லை. எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்ற ஓர் உணர்வு என்னை அரித்துக் கொண்டிருந்தது. ஆரப்பாளையம் சென்று தேடினேன். கடைசியில் கொலம்பஸ் மனனிலைக்கு வந்தேன். அந்த வீட்டை நெருங்கும் போதே ஒரு படபடப்பு. அந்த வீட்டுக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள் ஒருவர் வந்து விசாரித்தார். விபரம் கேட்டவுடன் என்னை வராந்தாவில் சேர் போட்டு அமரவைத்தார். அங்கிருந்து ஹாலில் தெரிந்த புகைப்படம் பார்த்ததில் என்னை வரவேற்றவர்தான் அவளின் கணவர் என்று தெரிந்து கொண்டேன். அவளுக்கு மணமாகியிருந்தது தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு சத்தமில்லாமல் வெளியேறி மெயின் ரோட்டிற்கு வந்துவிட்டேன்.
இப்போது வானம் தெளிவாகி இருந்தது.
ஒரு மழை நாள் மதியத்தில் மதுரைக்கு அலுவல் நிமித்தமாக 10வருடங்கள் கழித்துச் செல்கிறேன். ஆட்டோவில் நான். வெளியில் மழை. இது வேறு ஒரு சமயமாயிருந்தால் இறங்கி நனைந்திருப்பேன். சாலையெங்கும் தற்காலிக குறு ஓடைகள் ஓடிக்கொண்டிருந்தன. எனக்குள்ளோ சுனாமி அடித்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் இருக்கிறது, அது அவள். இந்த மழையை ரசிக்கக் கற்றுக் கொடுத்தவள். நனையக் கற்றுக் கொடுத்தவள். மொத்தத்தில் என் ஆசான். ஆட்டோ இப்போது கொஞ்சம் எல்லாவித வாசனைகளும் எல்லா மொழிகளும் கலந்து காற்றில் திரியும் எக்மோருக்கு வந்து சேர்ந்திருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு வைகையைப் பிடிக்க கிளம்பினேன். நல்ல வேளையாக முன்பதிவு செய்திருந்ததால் தப்பித்தேன். இல்லையென்றால் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும். எதற்கெடுத்தாலும் நீண்ட வரிசை. இந்த அவல நிலை என்று ஒழியுமோ? இந்த எண்ணங்கள் கூட அவள் விதைத்ததுதான். ஒருவழியாய் எனது பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்து எனது இருக்கையில் அமர்ந்தேன். எனது ஜன்னலோர இருக்கை. ஆகவே, எந்தக் கவலையுமில்லாமல் தீர்க்கமின்றி வேடிக்கை பார்க்கலாம். பையை மேலே வைத்துவிட்டு உட்கார்ந்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் வண்டி கிளம்பியது. எனது எண்ணங்களும்தான்.
"ஏண்டா உனக்கும் அவங்களுக்கும் ஒரு இதாமே?" நண்பன் சிவா கேட்டான்.
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைடா. வீணாக் கற்பனை பண்ணிக்காதே"
"கற்பனை பண்ணுவது நானா? இல்லை நீயா? எல்லோரும் தப்பா பேசுறாங்கடா"
"யார் தப்பா பேசினாலும் எனக்குக் கவலையில்லை. நீ தப்பா நினைக்கிறியா?"
"இல்லைடா. ஆரம்பத்தில நான் ஒன்னும் நினக்கலை. ஆனால், வரவர உன் நடவடிக்கைகள் அதுக்கு இடம் கொடுத்திடுச்சு."
"so, நீயும் தப்பா நினைக்கிற. அப்படித்தானே."
"ஆமாண்டா."
"சரி.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. ஊர்ல சொல்றதுலதான் நம்பிக்கை. அப்படித்தானே?"
"அப்படி இல்லை."
"பின்ன எப்படியாம்?"
"நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு? எத்தனையோ பேர் இருக்க இவங்களைப் போயி. வேற ஆளே கிடைக்கலையா உனக்கு? அந்த வித்யாவிற்கு என்ன குறைச்சல். அவ உன்னைய எவ்வளவு காதலிக்கிறா தெரியுமா? இதெல்லாம் உனக்கேத் தெரியும். நீ இவங்களோட சுத்துறதுனால அவள் எவ்வளவு feel பண்ணாத் தெரியுமா?"
" ஓஹோ அவள் சொல்லித்தான் இந்த டாபிக்கையே எடுத்தியா நீ? அவளுக்கு என் மேல இருக்கிறது ஒரு விதமான opposite site attraction. இவங்க மேல இருக்கிறது வேற. அதெல்லாம் உனக்குப் புரியாது."
"எது புரியாது? நாய்க்குட்டி மாதிரி அவங்க பின்னாலே போறதும் அவங்க வீட்டுல ராத்திரி படிக்கிறேன்னு சொல்லி அடிக்கிற கூத்துமா?"
இந்த வாசகம் சொல்லி முடிப்பதற்குள் என் கைகள் அவன் கன்னத்தை முத்தமிட்டிருந்தன. அந்த சம்பவத்திற்குப் பிறகு அவனோடு பேசவில்லை.
செங்கல்பட்டு சந்திப்பு என்ற பலகை கண்ணில் தென்பட்டதும்தான் கிளம்பி 1 மணி நேரம் ஆகிறது என்ற உணர்வுக்கு வந்தேன். வயிற்றில் கொஞ்சம் பசி எடுத்தது. கேண்ட்டீன் வரை போய் பார்க்கலாம் என்று கிளம்பினேன். அது இங்கிருந்து 4 பெட்டிகள் தள்ளி இருந்தது. வழியில் ஒரு கூட்டம் சீட்டு ஆடிக் கொண்டிருந்தது. சிலர் மும்முரமாக ராஜேஸ் குமாரும் இன்னும் சிலர் அன்றைய ஹிண்டுவிலும் லயித்து இருந்தார்கள். இன்னும் வெளியில் தூவானம்தான். அது என்னவோ மனதிற்குள் ஒரு பரவசத்தை விரவியிருந்தது. ஒரு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டேன். பின் என் பெட்டி அடைந்து கதவருகே நின்று கொண்டு வண்டியின் புகைக்கு ஈடாக இல்லாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்த அளவு புகைத்தேன்.
"நேற்று சிவா கூட என்ன சண்டை?"
அதெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது. அந்த சண்டைக்குக் காரணமே நீதான்.
"என்னடா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டிருக்கிறேன். நீ ஏதோ மௌன விரதம் இருக்கிறவன் மாதிரி இருந்தா எப்படி?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை"
"இப்படி மழுப்பலா சொன்னா என்னவோ இருக்குன்னுதான் அர்த்தம். ம்ம் சொல்லு"
"அதான் தகராறுனு தெரியுதுல. பின்ன ஏன் அதையே நோண்டிகிட்டு. விட்டுடுங்க."
"உனக்கு இருந்த ஒரு நல்ல பிரெண்டு அவன். அவன்கிட்டப் போயி. அதான் கேட்டேன். உனக்கு இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்."
மௌனங்களின் பேரிரைச்சலில் இருக்கப் பிடிக்காமல் அங்கிருந்து கிளம்பினேன்.
ஏதோ நெருப்புப் பரவும் உணர்வு வர சிகரெட்டைத் தூக்கி எறிந்தேன்.
என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். இப்போது இன்னும் மழை அதிகமாயிருந்தது. எனக்குள்ளும் மனசு அதைவிட அதிகமாய் அலைபாய்ந்தது. ஜன்னல் வழியே திரியும் எந்தக் காட்சியையும் காணச்சகியாமல் விழி திறந்த தூக்கம் போன்ற நிலை எய்தினேன்.
"ஆமாம், அந்த வித்யாவை கண்டுக்கிடறதே இல்லையாமே? ஏன்? என்னாச்சு?"
"எப்படி கண்டுக்கிடனும்னு சொல்ல வற்றீங்க?"
"அவள் உன்னைக் காதலிக்கிறதா சொல்லி இருக்கிறாள். ஒன்னு அவளைக் காதலிக்கிறேன்னு சொல்லு, இல்லை இல்லைன்னு சொல்லு. அது என்ன ஒன்னும் சொல்லம விட்டேத்தியா ஒரு பெண்ணை அலைய விட்டுப் பார்க்கிறதுல ஒரு ஆனந்தம்?"
"அவளுக்கு என் மேல இருக்கிறது ஒரு விதமான அட்ராக்சன். லவ்வெல்லாம் இல்லை. அதைக் கொச்சைப் படுத்த வேண்டாம்."
"சரி அட்ராக்சன். அதுக்காக இப்படி ஒன்னுமே சொல்லாம அலையவிடுறது நல்லா இல்லை."
"அதுக்கு நான் என்ன பண்ண?"
"நீதான் பண்ணனும். முதல்ல அவள்கிட்டப் போய் பேசு. புரிய வை."
"என்னன்னு?"
"உனக்கு வந்திருக்கிறது லவ்வு இல்லை. ஒருவிதமான ஈர்ப்பு அப்படின்னு"
"அது எனக்கு அவசியமில்லாத வேலை"
"அப்ப எதுதான் உனக்கு அவசியம்? உன் மீது அன்பு செலுத்த ஒரு ஆத்மா அலையும் போது அதை உதாசீணப்படுத்தக் கூடாது. தெரியுதா?"
"ம்ம்ம்"
"அதை சிரிச்சுகிட்டே சொன்னால் என்ன?"
"ஹிஹி போதுமா?"
"போதும்"
இப்படியாக அந்த சம்பாசணை ஒரு முடிவிற்கு வந்தது.
வண்டி உளுந்தூர் பேட்டையில் எதிரே வரும் வண்டிக்கு வழி கொடுப்பதற்காக நின்றது. இறங்கி போய் கடையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும் வாழைப்பழமும் வாங்கிக் கொண்டேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு வண்டி எதிர் திசையில் பயணித்துக் கடந்தது. என் வண்டியும் புறப்பட. வண்டி புறப்பட்டுப் போனவுடன் இந்தப் பிளாட்பரங்கள் அனாதையாக அடுத்த ஆதரவிற்காக காத்திருக்கும். இப்படி காத்திருத்தல்களிலேயே ஒரு சுகம் இருக்கிறது, எனது 10 வருட காத்திருத்தல் இன்று சுகமளிக்கவில்லையா? அதுபோல.
"உன் மனசுல என்ன பெரிய இவன்னு நினைப்பா?"
"ஏன் வந்ததும் வராததுமா கத்துறீங்க?"
"பின்ன என்ன? அந்த வித்யாகிட்டப் போய் ஆதரவா பேசுடான்னு சொன்னால் பெரிய அட்வைசாமே. ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு. இது படிக்கிற வயசு. அப்படி இப்படின்னு ஏகத்துக்கு."
"அவள் உங்ககிட்டையும் சொல்லிட்டாளா?"
"பின்ன வேறு யார் யார்கிட்டேல்லாம் சொன்னாள்?"
"எல்லார்கிட்டையும்தான்."
"எல்லார்கிட்டையும்னா?"
"என் தம்பி வரைக்கும். அவன் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் போறான்"
"அவ பெரிய ஆளுதான். இருந்தாலும் பாவம்டா. உனக்காக உருகுறா தெரியுமா?"
"உருகுறதுக்கு அவ ஒண்ணும் வெண்ணை இல்லை. நான் ஒன்னும் நெருப்பும் இல்லை."
"உடனே தத்துவம் பேச ஆரம்பிச்சிடுவியே. வழக்கம் போல் உனக்கு இஷ்டம் இல்லைன்னா இந்த டாபிக்கை விட்டுடுறேன்."
இந்தப் பக்குவம் தான் உன்னிடம் எனக்குப் பிடித்தது. என் மனது புண்படக்கூடாதென்கின்ற கவனம் தான் உன் மீது என்னை மையம் கொள்ளவைத்தது.
வண்டி விழுப்புரம் வந்து சேர்ந்திருந்தது. இங்கு ஒரு இருபது நிமிடங்கள். என் இதயம் இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. மதுரை என்பது 30 லட்சம் மக்களின் நம்பிக்கை மண். அழகர் இறங்கும் அன்று மழை பெய்யும். அது அந்தக் கடவுளாலா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அன்று அந்த முப்பது லட்சம் மக்களின் எண்ணங்களும் அழகர் இறங்கும் அன்று மழை பெய்யும் என்பதாகத்தானிருக்கும். அந்த நம்பிக்கைதான் மழை பெய்யக்காரணம். இப்படி பல எண்ண ஓட்டங்களுக்கிடையில் 20 நிமிடங்கள் கரைந்தது. வண்டி நகரத் தொடங்கியது.
"நான் 1085/1200க்கு. கொஞ்சம் கம்மியாயிடுச்சு. வழக்கம் போல் வேதியியலில் 200க்கு 195. எல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்தது"
"சரி. அடுத்து என்ன?"
"இங்கேயே தியாகராஜாவில சேர்ந்திட வேண்டியதுதான். இல்ல என்றால் கவுன்சிலிங்கில எங்கே கிடைக்குதோ அங்கே போயிட வேண்டியதுதான்."
"அப்படின்னா என்னை பிரிஞ்சு போறதைப் பத்தி உனக்குக் கவலையே இல்லை. அப்படித்தானே."
அந்தக் கேள்வியில் இருந்த பிரிவு எனும் வார்த்தை என் மேல் பல அக்னித் துண்டுகளை அள்ளி எறிந்தது போல் இருந்தது. இருந்தாலும் அதுதான் நிஜம். நிஜம் எப்போதுமே சுடும். வலி நிறைந்தது. அவசர உலகில் வேறு பல நிலைகளை அடைய பிரியத்தான் வேண்டும். ஆனால், இது என்னவோ ஒரு தவிப்பு. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. இது காதலா? குரு மீது கொள்வது காதலாகாது. குருவிற்கு தட்சணையாக மாங்கல்யம் கொடுப்பது தவறல்லவா? அப்படி என்றால் இனக்கவர்ச்சியா? அப்படி இருந்தால் வித்யாவிற்கு அவ்வளவு வியாக்யானம் செய்திருப்பேனா? இது வேறு எதுவோ. அதுக்கு பேர் எல்லாம் வேண்டாம். ஆனால் ஒரு வகை புனிதம். இப்படியாக என்னென்னவோ எண்ணங்கள் ஓடின.
"இந்தாக் குடி" என்று காபி கப்பை நீட்டியிருந்தாள்.
குடித்துவிட்டு
"சரி நான் கிளம்புறேன்".
வண்டி திருச்சிராப்பள்ளியை நெருங்கிக் கொண்டிருந்தது. வானம் கொஞ்சம் இருட்டியிருந்தது என் மனதைப் போலவே. மதுரைக்குப் போய் அவளைப் பார்க்க முடியுமா? வேறு எங்காவது மாற்றலாகி போயிருந்தால்? இந்த எண்ணமே என்னை அணு அணுவாக அறுத்தது.
"என்ன யோசனை?"
"இல்லை சென்னையிலதான் சீட் கிடைச்சிருக்கு. இங்கே கிடைக்கலை. அதான்"
"அதுக்கென்ன?"
"உங்களைப் பிரிஞ்சு போறதைப் பத்தித்தான்."
"இதுக்கா? இவ்வளவு யோசனை. வாழ்க்கைங்கிறது ரயில் பயணம் போல். உன்னோட ஊர் போறதுக்கு நீ அடுத்த ரெயிலைப் பிடிச்சாகணும். அதனால் இந்த ஸ்டேசன்ல இறங்கப் போற பேசஞ்சர் நீ. என்னோட ஊர் என்பது இன்னும் வரவில்லை. உனக்காக நான் இறங்கினாலோ இல்லை எனக்காக நீ இறங்காமல் விட்டாலோ நாம இரண்டு பேரில் ஒருவர் அவர் ஊர் போய் சேர முடியாது. அதனால கலங்காமல் இரு."
இதுதான் உன்னிடம் எனக்குப் பிடித்தது. இந்தத்தெளிவான அணுகுமுறை. இதற்காகத்தான் உன் மேல் ஓர் இனம் புரியா ஒரு உணர்வு. இதை எப்படி சொல்லி உனக்கு விளங்கவைப்பேன் பெண்ணே. பதினேழில் இருக்கும் நான் 26ல் இருக்கும் உன்மேல் வைப்பது பாசமா? காதலா? அன்பா? எனக்கு விளங்கவில்லை. குழப்பத்துடன் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் சென்னைக்கு படிக்கக் கிளம்பினேன். அதன்பிறகு இன்றுதான் திரும்புகிறேன். அதுவும் கூட பணி நிமித்தமாக.
வண்டி மதுரைக்கு வந்து சேர்ந்தது. என் பழைய நினைவுகளும் ஒரு வழியாய் அமைதியடைந்திருந்தன.மழை மட்டும் ஓய்வதாயில்லை. மழைத்தூறல்களுக்கிடையே அடுத்த நாள் காலை அலுவல்களை முடித்துக் கொண்டு அவள் இருந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு அவள் இல்லை என்பதற்கு பல அடையாளங்கள் இருந்தன. விசாரித்ததில் அவள் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றலாகி ஆரப்பாளையம் மாறி போய் விட்டிருந்தது தெரிய வந்தது. நான் விடுவதாய் இல்லை. எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்ற ஓர் உணர்வு என்னை அரித்துக் கொண்டிருந்தது. ஆரப்பாளையம் சென்று தேடினேன். கடைசியில் கொலம்பஸ் மனனிலைக்கு வந்தேன். அந்த வீட்டை நெருங்கும் போதே ஒரு படபடப்பு. அந்த வீட்டுக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள் ஒருவர் வந்து விசாரித்தார். விபரம் கேட்டவுடன் என்னை வராந்தாவில் சேர் போட்டு அமரவைத்தார். அங்கிருந்து ஹாலில் தெரிந்த புகைப்படம் பார்த்ததில் என்னை வரவேற்றவர்தான் அவளின் கணவர் என்று தெரிந்து கொண்டேன். அவளுக்கு மணமாகியிருந்தது தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு சத்தமில்லாமல் வெளியேறி மெயின் ரோட்டிற்கு வந்துவிட்டேன்.
இப்போது வானம் தெளிவாகி இருந்தது.