rambal
17-11-2005, 02:52 PM
பிரபஞ்சம் பற்றிய ஐந்தடுக்குக் கவிதை..
நீர்ப்பரப்பின் மேல் விழும்
மழைத்துளி ஏற்படுத்திய
வட்டங்களாய்
உணர்ந்திருக்கிறேன்
சமயங்களிலேனும்..
அணைக்காமல் எரிந்த
சிகரெட்டை வந்தணைக்கும்
மழைத்துளியின் பராபகாரியம்
செய்திருக்கிறேன்
எப்போதாவது..
சும்மாவேணும்
தன் இருப்பை நிலை நிறுத்த
திறந்த கதவை மூடுவதும்
திறப்பதுமாய் காற்றின் லீலை
நடத்திப்பார்த்திருக்கிறேன்
அவ்வப்பொழுது..
தீப்பொறியை தன்னுள்
பதுக்கி வைத்துக்கொண்டு
உரசும் பொழுது மட்டும்
வெளிப்படுத்தும் கல்லாய்
இருந்திருக்கிறேன்
சில வேளைகளில்..
மலை முகடுகள்
போர்த்தியிருக்கும்
பேரமைதியின் ஆழத்தில்
உறைந்திருக்கிறேன்
இப்போது..
நீர்ப்பரப்பின் மேல் விழும்
மழைத்துளி ஏற்படுத்திய
வட்டங்களாய்
உணர்ந்திருக்கிறேன்
சமயங்களிலேனும்..
அணைக்காமல் எரிந்த
சிகரெட்டை வந்தணைக்கும்
மழைத்துளியின் பராபகாரியம்
செய்திருக்கிறேன்
எப்போதாவது..
சும்மாவேணும்
தன் இருப்பை நிலை நிறுத்த
திறந்த கதவை மூடுவதும்
திறப்பதுமாய் காற்றின் லீலை
நடத்திப்பார்த்திருக்கிறேன்
அவ்வப்பொழுது..
தீப்பொறியை தன்னுள்
பதுக்கி வைத்துக்கொண்டு
உரசும் பொழுது மட்டும்
வெளிப்படுத்தும் கல்லாய்
இருந்திருக்கிறேன்
சில வேளைகளில்..
மலை முகடுகள்
போர்த்தியிருக்கும்
பேரமைதியின் ஆழத்தில்
உறைந்திருக்கிறேன்
இப்போது..