பாரதி
12-11-2005, 05:23 PM
தேதியில்லாக்குறிப்புகள்
அறுவடை
எங்க ஊர்ல எப்படின்னா, மேக்குலயும் வடக்கயும் தோட்ட வெவசாயம். அந்தப்பக்கமா வடக்காறு ஓடுறதால,கெணத்துல தண்ணி வத்தாம இருக்கும். ஊருக்கு கெழக்க *முத்தேம்பட்டியிலிருந்து, வடக்காறும், முல்லயாறும் சேருற எடம் வரைக்கும் ஆத்துப்பாசனந்தான். ஆத்துல குறுக்கா அணை கட்டி, தண்ணிய வாய்க்கால்ல திருப்பி பாசனத்துக்கு வசதியா செஞ்சு வச்சிருப்பாங்க. சுருக்கமா சொன்னா, வாய்க்காலும் முல்லயாறும் வயலுகளுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும். நெல்லு நட்டு இருக்குறப்ப, எங்கனப் பாத்தாலும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி பச்சப்பசேல்னு கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கும்.
நான் சின்னப்பையனா இருக்குறப்ப எல்லாம், சுருளியருவித்தண்ணியும், பெரியாரு டேமுல இருந்தும் வர்ற தண்ணியும் சேந்து வர்றதால, வருசத்துல முந்நூத்து அறுவத்தஞ்சு நாளும் ஆத்துல தண்ணி ஓடிகிட்டுத்தான் இருக்கும். வருசம் பூராவும் வெவசாயம் நடக்குறதுக்கு ஏதுவா தண்ணிப்பஞ்சமேயில்லாத நெல்லும், கரும்பும் பொன்னா வெளயிற பூமியில்ல அது!
எங்களுக்கு சொந்தமா வயலு கெடயாது. அப்பா அப்பப்ப வயல 'ஒத்தி'க்கு எடுத்து வெவசாயம் பண்ணுவாரு. 'ஒத்தி'ன்னா வயலு சொந்தக்காரங்களுக்கு ஏதாச்சும் பணமுடைன்னா தேவையான பணத்த வாங்கிகிட்டு, வயல வெவசாயத்துக்கு கொடுத்துருவாங்க. பணத்த திருப்பிக் கொடுத்துட்டு வயல திருப்பி எடுத்துக்குவாங்க.
வயலுப்பக்கம் எல்லாம் களிமண்ணுதான். வரப்புக மாத்திரம் கொஞ்சம் கெட்டியா, புல்லு பதிச்ச ஒத்தயடிப்பாத மாதிரி இருக்கும். அதத் தவிர எங்கன கால வச்சாலும் 'சதக்கு' 'புதக்கு'ன்னு காலடி, அரயடிக்கு காலு பொதயும்.
வரப்போரத்துல, படர்தாமர, தொட்டாச்சிணுங்கி செடிக, வெட்டிவேரு, *சேம்ப எல, கோரப்புல்லு எல்லாம் வளந்திருக்கும். இன்னும் பேரு தெரியாத ஒரு புல்லு மாதிரி வலந்திருக்கும். அதப்புடுங்கி அந்த வேர மோந்து பாத்தா கோபால் பல்பொடி வாசம் அப்படியே அடிக்கும். வரப்பு அகலமா இருக்குற எடத்துல தென்ன மரங்க ஒண்ணு ரெண்டு வளந்திருக்கும்.
வயலுக்கு பாயுற தண்ணியில தவள, தண்ணிப்பாம்பு, குட்டி மீனுங்க, கறுப்பும் வெளுப்புமா நண்டுக எல்லாமிருக்கும்.
அப்படி அப்பா 'ஒத்தி'க்கு வயலெடுத்துப் பாக்குறப்ப வீட்ட விட்டு வெள்ளனவே கெளம்பிருவாரு. வர்றப்ப வாய்க்கால்ல குளிச்சிட்டு, துண்டப் போட்டு எங்களுக்காக கெளுத்தி மீனுங்க பிடிச்சிட்டு வருவாரு. எங்களுன்னா சாப்புடுறதுக்கு இல்ல. வீட்டுல இருக்குற கல்லுத்தொட்டியில தண்ணிய நெரப்பி அதுல மீன வளக்குறதுக்கு. அவரு மீன பிடிச்சு, கோரப்புல்லால அதோட செதில்ல கோத்து எடுத்துட்டு வருவாரு. பாக்குறப்ப கோரப்புல்லுல மீனுக வெளஞ்ச மாதிரி இருக்கும்! அப்படிக்கொண்டு வர்ற மீனுங்கள ஆச ஆசயா தண்ணித் தொட்டியில விட்டு சோத்துப் பருக்க எல்லாம் போடுவோம். ஆனா என்ன காரணமோ தெரியல, அப்படி விடுற மீனுங்க எதுவும் அடுத்த நாளு உசுரோட இருந்ததேயில்ல.
வயலுக்கு போயிட்டு வர்றப்ப வீட்டுல இருக்குற பசுமாடுகளுக்கு புல்லும் அறுத்துட்டு வருவாரு. எல்லாம் வரப்புல வெளயற புல்லுதான்.
நெல்லு அறுவடைக்குப்பின்னாடி அடுத்த 'நடவு'க்கு எடயில, உரத்துக்குன்னு அகத்திக்கீரையோ இல்லாட்டி வேற ஒரு செடி - எனக்குப்பேரு தெரியல - நடுவாங்க. ரெண்டுமே எப்படின்னா , சும்மா சடசடன்னு தன்னப்போல ஆளுசரத்துக்கு வளந்திரும். நடவு சமயத்துக்கு முன்னாடி டிராக்டர வச்சு, எல்லாச்செடிகளையும் வயல்ல நல்லாப் புதஞ்சு போயி உரமா மாறுற மாதிரி செஞ்சுருவாங்க. அங்கங்க தலய காட்டுற செடிகள எல்லாம் கால்ல மிதிச்சி களிமண்ல அமுக்கிருவாங்க.
இங்ஙன எல்லாம் எப்படின்னா ஒரே மாதிரி வெள்ளாமதான். இன்ன மாதிரி நெல்லு போடுவோம் - இல்லாட்டி கரும்பு போடுவோம்னு முடிவு பண்ணி ஒரே மாதிரி வெவசாயம் பண்ணுவாங்க. யாராச்சும் எப்பவாச்சும் மாத்தி வெள்ளாம செய்யுறதும் உண்டுதான். ஒரே மாதிரி செஞ்சா பூச்சி,பொட்டுனால வர்ற சேதம் கொறச்சலாம். வந்தாலும் போனாலும் ஊருக்கு வந்தது நமக்கும் ஆச்சுன்னு மனச தேத்திக்க வசதியாக இருக்குமோ என்னவோ..?
பொதுவா சம்சாரிங்க வீட்டுல எல்லாம், *வெத நெல்ல கருதறுக்குறதல இருந்தே எடுத்து வச்சுகிட்டு வருவாங்க. காலப்போக்குல கடைல வெத நெல்ல வாங்கி வெவசாயம் பண்றது மாதிரி ஆகிப்போச்சு.
நெல்லு நடவுக்கு மொதல்ல *நாத்தங்கால சரியா ஏற்பாடு பண்ணனும். வயல்ல ஒரு எடத்த மாத்திரம் தண்ணி விட்டு பதப்படுத்தி, நல்லா 'பரம்பு' அடிப்பாங்க. பரம்பு அடிக்கிறதுன்னா - சுமாரா பத்து, பன்னெண்டு அடி நீளம் இருக்குற வைரம் பாஞ்ச மரத்த, "ட" மாதிரி செஞ்சு நடுவுல இரும்பு வளையம் எல்லாம் அடிச்சிருப்பாங்க. காளமாட்ட பூட்டி, நடுப் பரம்பு மேலே ஆளு நின்னுகிட்டு நாத்தாங்கால எல்லாம் சுத்தி வர்றப்ப வயலு ஒரே மட்டமா ஆகிரும்.
வயலுக்கு தண்ணி பாச்ச, காவல் காக்க இருக்குறவங்கள நீராணிக்கம்னு அப்பா சொல்லுவாரு. அக்கம்பக்கம் இருக்குற வயல எல்லாம் ஒருத்தரே பாத்துக்குவாரு. எங்க வயலுக்கு அப்படி இருந்தவரு பேரு 'மண்டவாடன்".
அப்படி ஒரு தடவ 'ஒத்தி'க்கு வயலு வெள்ளாம செய்றப்ப - ஒரு நாளு கெழம பாத்து, குடும்பத்தோட சாணி, சந்தனம், மஞ்சத்தூளு, சப்பட்டையா கருங்கல்லுக, குங்குமம், எலுமிச்சம்பழம், வாழப்பழம், தேங்கா, ஊதுவத்தி, சூடம், *மரக்காலு, வெத நெல்லு எல்லாம் எடுத்துகிட்டு வயலுக்குப் போனோம். கூட காவக்காரரும் வந்தாரு.
கருங்கல்ல எல்லாம் நல்லா கழுவி, சந்தனம் பூசி அலங்காரம் பண்ணாங்க. அப்புறம் சாணிய கோபுரம் மாதிரி செஞ்சு புள்ளையார் புடிச்சாங்க. தேங்கா ஒடச்சு சாமி கும்பிட்டு, வயலோட நாலு மூலைலயும் எலுமிச்சம்பழத்த வெட்டிப்போட்டாங்க. அப்புறம் அப்பா மரக்கால்ல வெத நெல்ல போட்டு கைய வீசி நாத்தங்கால்ல எறிஞ்சார். அதுக்கப்புறமா நாத்தங்கால்ல எறங்குன காவக்காரரு லாவகமா எடது கக்கத்துல மரக்கால வச்சுகிட்டு, வலது கை முழுக்க வெத நெல்ல அள்ளி, தனக்கு எடப்பக்கமும் வலப்பக்கமும் சரியா வர்ற மாதிரி விசிறி தெளிக்கிறது பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும். நடையும், கைவீச்சும் தப்பாம இருக்கும்.
சொன்ன மாதிரி ஒரே அளவுல நெல்லு எல்லாம் நாத்தங்கால்ல வெளஞ்சு நிக்கிற அழகே தனி. நடவுக்கும் கருதறுப்புக்கும் வழக்கமா காக்கிவாடம்பட்டியில இருந்து கங்காணிக ஆம்பளகளயும் பொம்பளகளயும் கூப்பிட்டு வந்திருவாங்க. எசப்பாட்டோட வேல நடக்குற வேகத்த பாத்தா நாமல்லாம் அசந்துருவோம். சின்ன வெவசாயிக எல்லாம் முடிஞ்ச வரைக்கும் சொந்த ஆளுங்கள வச்சே நடவு, அறுவட எல்லாம் பண்ணிக்குவாங்க.
வழக்கம் போல களயெடுக்குறது, பூச்சி மருத்தடிக்கிறது, ஒரம் போடுறது எல்லாம் காலாகாலத்துல நடக்கும். கருதறுக்குற நேரம்னா ஊர்ல எல்லார் மூஞ்சியிலேயும் களைக்கு கொறவிருக்காது.
நெல்லுக்கருத அறுத்து, நெல்லுக்கட்டா கட்டி, வரப்பு வழியா வந்து, வாய்க்கால தாண்டி இருக்குற களத்துமேடுக்கு கொண்டு வந்து சேக்குறது பெரும்பாடுதான். ஒருதடவ சின்ன வயல ஒத்திக்கு எடுத்து செய்யுறப்ப, வயல்ல இருந்து களத்துமேட்டுக்கு நெல்லுக்கட்ட தூக்கிட்டு வந்தேன். எவ்வளவு தூரம்னு நெனக்கிறீங்க? கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர் இருக்கும் - ஒரு தடவ கொண்டு வந்து சேக்குறதுக்குள்ளேயே தல கழுத்துக்குள்ள பொதஞ்சுகிட்ட மாதிரி ஆகிப்போச்சு. வரப்புல வழுக்கி விழாம நடந்து வர்றதே ஒரு பெரிய விசயம்.
ம்ம்... அறுவடைக்காலத்துல பாத்தா வயல்ல எல்லாம் ஒரே கூட்டமாத்தான் இருக்கும். எலிபிடிக்க வர்றவங்க, அந்த எலிக தங்கி இருந்த வலயில இருக்குற நெல்ல எடுக்குறவங்க, நண்டு பிடிக்கிறவங்க, பாதையில விழுற *கருத எல்லாம் பொருக்குறவங்க, வேல பாக்குறவங்க, வேடிக்க பாக்குறவங்கன்னு சும்மா ஜேஜேன்னு இருக்கும்.
பள்ளிக்கூடத்துக்கு கெழக்க இருந்த வயல்ல வெள்ளாம செஞ்சப்ப, அறுத்த கருத எல்லாம் களத்துமேட்டுக்கு கொண்டு வந்து சேத்தாங்க. பெரிய சைசு கல்லுல *வாகா போட்டு கையில *வக்கல்ல செஞ்ச *உரிய வச்சுகிட்டு, நெல்லத் தட்டுனாங்க. ஆளுங்க நெல்லுக்கட்ட பிரிச்சு லாவகமா அடிக்கிறவங்க கையில போட, அத வாகா ரெண்டு தட்டு தட்டி பின்னாடி சுழட்டி எறியிறத பாக்கணுமே.. அட.. அட... அப்படி சேருற வக்கல ஒருத்தரு சமமா பரவுற மாதிரி கையில வச்சிருக்குற கம்பால - *கவக்கோல் - தள்ளி விட்டுகிட்டே இருந்தாரு.
அடிச்ச நெல்ல எல்லாம் 'அம்பாரம்' போல செஞ்சு, ஒரு ஓட்ட மண்ணுப் பானையில சாணித்தண்ணி கரச்சு, அம்பாரத்துல வட்ட வட்டமா போட்டாங்க. ஏதாச்சும் களவு போனா கண்டுபிடிக்கிறதுக்காம்! அதாவது அப்படி வட்டம் போட்ட அம்பாரத்துல எங்காச்சும் நெல்ல கொஞ்சம் எடுத்தாலும் போதும், நெல்லு சரியிறதுல வட்டம் கலஞ்சிரும்ல - அதுக்குத்தான்.
அன்னைக்கு ராத்திரி முழுக்க அரிக்கேன் லைட்ட எரிய வச்சுகிட்டு ஆளு மாத்தி ஆளு காவல் இருந்தோம். அன்னைக்கி பாத்து மழ வேற வர்ற மாதிரியிருந்ததால பாலிதீன் பையால செஞ்ச தார்ப்பாய வச்சு அம்பாரத்த எல்லாம் மூடிட்டு, ஒரு சின்ன கூடாரம் மாதிரி தார்ப்பாய போட்டுகிட்டு, கொட்டுற மழைல காவலுக்கு இருந்தோம்.
அடுத்த நாளு வைக்கப்போருல இருக்குறத எல்லாம் வட்டமா விசிறிப்போட்டு, மாட்டக்கட்டி "போர'டிச்சாங்க. மாடுகளுக்கு எல்லாம் வாய்க்கூண்டு - கருத சாப்ட்றக்கூடாதுல்ல - போட்ருந்தாங்க.
இப்படி எல்லா வேலயும் முடிச்சி, நெல்லும் வக்கலும் தனித்தனியா ஆச்சு. கருதறுக்க வந்தவங்க, கங்காணிக, நீராணிக்கம் இப்படி எல்லாருக்கும் கூலியா நெல்லு கொடுக்குறதுதான் வழக்கம். அம்பாரத்துல இருந்து மரக்கால வச்சுகிட்டு ஆம்புளகளா இவ்வளவு, பொம்பளகளா இவ்வளவுன்னு கங்காணி மளமளன்னு அளந்து கொடுத்தாரு. அவரு கூலியயும் எடுத்துகிட்டாரு. நீராணிக்கத்துக்கும், களத்துமேட்டுல கூடமாட ஒத்தாச செஞ்சவங்களுக்கும் கூலி கொடுத்தாச்சு. எல்லாரோட சந்தோசத்தையும் அவங்க மூஞ்சியில பாக்க முடியுது.
வக்கலு மாடுகளுக்கு தீவனத்துக்கு ஆகும்கிறதால அத விக்கல. மீதி இருக்குற நெல்ல வீட்டுல கொண்டு வந்து சேக்குறதுக்கு நாங்க கொஞ்சம் கூட கஷ்டமே படல. மூணு மாசமா - வெத நெல்லு வாங்கி, பரம்படிச்சு, நாத்து நட்டு, கள பறிச்சு, மருந்தடிச்சு, உரம் போட்டு, காவல்காத்து - *கடசீல வீட்டுக்கு வந்து சேந்த நெல்லு எவ்வளவு தெரியுமா..? அர மூடை!
* முத்தேம்பட்டி - முத்துத்தேவன்பட்டி.
* சேம்ப எல - சேம்பல் இலை, தண்ணீர் ஒட்டாத பெரிய இலைகள்
* நாத்தங்கால் - நாற்றங்கால்
* வெத - விதை
* மரக்காலு - மரக்கால் - இரும்புத்தகடால் செய்யப்பட்ட பெரிய அளவுப்பாத்திரம்.
* கருத - கதிர் - நெற்கதிர்
* உரி - பச்சை வைக்கோலால் பின்னப்பட்டு, இரண்டு பக்கங்களிலும் வளையங்களைக் கொண்ட, நெற்கதிரை கல்லில் அடிப்பதற்காக செய்யப்பட்ட உரி.
* வாகா - வகையாக
* கவக்கோல் - கவைக்கோல் - சிலம்பு போன்று, நுனியில் கூராகவும், வளைந்தும் இருக்கக்கூடிய இரும்புத்துண்டுகளை பொருத்திய கருவி.
* வக்கல் - வைக்கோல்
* கடசீல -கடைசியில்
அறுவடை
எங்க ஊர்ல எப்படின்னா, மேக்குலயும் வடக்கயும் தோட்ட வெவசாயம். அந்தப்பக்கமா வடக்காறு ஓடுறதால,கெணத்துல தண்ணி வத்தாம இருக்கும். ஊருக்கு கெழக்க *முத்தேம்பட்டியிலிருந்து, வடக்காறும், முல்லயாறும் சேருற எடம் வரைக்கும் ஆத்துப்பாசனந்தான். ஆத்துல குறுக்கா அணை கட்டி, தண்ணிய வாய்க்கால்ல திருப்பி பாசனத்துக்கு வசதியா செஞ்சு வச்சிருப்பாங்க. சுருக்கமா சொன்னா, வாய்க்காலும் முல்லயாறும் வயலுகளுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும். நெல்லு நட்டு இருக்குறப்ப, எங்கனப் பாத்தாலும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி பச்சப்பசேல்னு கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கும்.
நான் சின்னப்பையனா இருக்குறப்ப எல்லாம், சுருளியருவித்தண்ணியும், பெரியாரு டேமுல இருந்தும் வர்ற தண்ணியும் சேந்து வர்றதால, வருசத்துல முந்நூத்து அறுவத்தஞ்சு நாளும் ஆத்துல தண்ணி ஓடிகிட்டுத்தான் இருக்கும். வருசம் பூராவும் வெவசாயம் நடக்குறதுக்கு ஏதுவா தண்ணிப்பஞ்சமேயில்லாத நெல்லும், கரும்பும் பொன்னா வெளயிற பூமியில்ல அது!
எங்களுக்கு சொந்தமா வயலு கெடயாது. அப்பா அப்பப்ப வயல 'ஒத்தி'க்கு எடுத்து வெவசாயம் பண்ணுவாரு. 'ஒத்தி'ன்னா வயலு சொந்தக்காரங்களுக்கு ஏதாச்சும் பணமுடைன்னா தேவையான பணத்த வாங்கிகிட்டு, வயல வெவசாயத்துக்கு கொடுத்துருவாங்க. பணத்த திருப்பிக் கொடுத்துட்டு வயல திருப்பி எடுத்துக்குவாங்க.
வயலுப்பக்கம் எல்லாம் களிமண்ணுதான். வரப்புக மாத்திரம் கொஞ்சம் கெட்டியா, புல்லு பதிச்ச ஒத்தயடிப்பாத மாதிரி இருக்கும். அதத் தவிர எங்கன கால வச்சாலும் 'சதக்கு' 'புதக்கு'ன்னு காலடி, அரயடிக்கு காலு பொதயும்.
வரப்போரத்துல, படர்தாமர, தொட்டாச்சிணுங்கி செடிக, வெட்டிவேரு, *சேம்ப எல, கோரப்புல்லு எல்லாம் வளந்திருக்கும். இன்னும் பேரு தெரியாத ஒரு புல்லு மாதிரி வலந்திருக்கும். அதப்புடுங்கி அந்த வேர மோந்து பாத்தா கோபால் பல்பொடி வாசம் அப்படியே அடிக்கும். வரப்பு அகலமா இருக்குற எடத்துல தென்ன மரங்க ஒண்ணு ரெண்டு வளந்திருக்கும்.
வயலுக்கு பாயுற தண்ணியில தவள, தண்ணிப்பாம்பு, குட்டி மீனுங்க, கறுப்பும் வெளுப்புமா நண்டுக எல்லாமிருக்கும்.
அப்படி அப்பா 'ஒத்தி'க்கு வயலெடுத்துப் பாக்குறப்ப வீட்ட விட்டு வெள்ளனவே கெளம்பிருவாரு. வர்றப்ப வாய்க்கால்ல குளிச்சிட்டு, துண்டப் போட்டு எங்களுக்காக கெளுத்தி மீனுங்க பிடிச்சிட்டு வருவாரு. எங்களுன்னா சாப்புடுறதுக்கு இல்ல. வீட்டுல இருக்குற கல்லுத்தொட்டியில தண்ணிய நெரப்பி அதுல மீன வளக்குறதுக்கு. அவரு மீன பிடிச்சு, கோரப்புல்லால அதோட செதில்ல கோத்து எடுத்துட்டு வருவாரு. பாக்குறப்ப கோரப்புல்லுல மீனுக வெளஞ்ச மாதிரி இருக்கும்! அப்படிக்கொண்டு வர்ற மீனுங்கள ஆச ஆசயா தண்ணித் தொட்டியில விட்டு சோத்துப் பருக்க எல்லாம் போடுவோம். ஆனா என்ன காரணமோ தெரியல, அப்படி விடுற மீனுங்க எதுவும் அடுத்த நாளு உசுரோட இருந்ததேயில்ல.
வயலுக்கு போயிட்டு வர்றப்ப வீட்டுல இருக்குற பசுமாடுகளுக்கு புல்லும் அறுத்துட்டு வருவாரு. எல்லாம் வரப்புல வெளயற புல்லுதான்.
நெல்லு அறுவடைக்குப்பின்னாடி அடுத்த 'நடவு'க்கு எடயில, உரத்துக்குன்னு அகத்திக்கீரையோ இல்லாட்டி வேற ஒரு செடி - எனக்குப்பேரு தெரியல - நடுவாங்க. ரெண்டுமே எப்படின்னா , சும்மா சடசடன்னு தன்னப்போல ஆளுசரத்துக்கு வளந்திரும். நடவு சமயத்துக்கு முன்னாடி டிராக்டர வச்சு, எல்லாச்செடிகளையும் வயல்ல நல்லாப் புதஞ்சு போயி உரமா மாறுற மாதிரி செஞ்சுருவாங்க. அங்கங்க தலய காட்டுற செடிகள எல்லாம் கால்ல மிதிச்சி களிமண்ல அமுக்கிருவாங்க.
இங்ஙன எல்லாம் எப்படின்னா ஒரே மாதிரி வெள்ளாமதான். இன்ன மாதிரி நெல்லு போடுவோம் - இல்லாட்டி கரும்பு போடுவோம்னு முடிவு பண்ணி ஒரே மாதிரி வெவசாயம் பண்ணுவாங்க. யாராச்சும் எப்பவாச்சும் மாத்தி வெள்ளாம செய்யுறதும் உண்டுதான். ஒரே மாதிரி செஞ்சா பூச்சி,பொட்டுனால வர்ற சேதம் கொறச்சலாம். வந்தாலும் போனாலும் ஊருக்கு வந்தது நமக்கும் ஆச்சுன்னு மனச தேத்திக்க வசதியாக இருக்குமோ என்னவோ..?
பொதுவா சம்சாரிங்க வீட்டுல எல்லாம், *வெத நெல்ல கருதறுக்குறதல இருந்தே எடுத்து வச்சுகிட்டு வருவாங்க. காலப்போக்குல கடைல வெத நெல்ல வாங்கி வெவசாயம் பண்றது மாதிரி ஆகிப்போச்சு.
நெல்லு நடவுக்கு மொதல்ல *நாத்தங்கால சரியா ஏற்பாடு பண்ணனும். வயல்ல ஒரு எடத்த மாத்திரம் தண்ணி விட்டு பதப்படுத்தி, நல்லா 'பரம்பு' அடிப்பாங்க. பரம்பு அடிக்கிறதுன்னா - சுமாரா பத்து, பன்னெண்டு அடி நீளம் இருக்குற வைரம் பாஞ்ச மரத்த, "ட" மாதிரி செஞ்சு நடுவுல இரும்பு வளையம் எல்லாம் அடிச்சிருப்பாங்க. காளமாட்ட பூட்டி, நடுப் பரம்பு மேலே ஆளு நின்னுகிட்டு நாத்தாங்கால எல்லாம் சுத்தி வர்றப்ப வயலு ஒரே மட்டமா ஆகிரும்.
வயலுக்கு தண்ணி பாச்ச, காவல் காக்க இருக்குறவங்கள நீராணிக்கம்னு அப்பா சொல்லுவாரு. அக்கம்பக்கம் இருக்குற வயல எல்லாம் ஒருத்தரே பாத்துக்குவாரு. எங்க வயலுக்கு அப்படி இருந்தவரு பேரு 'மண்டவாடன்".
அப்படி ஒரு தடவ 'ஒத்தி'க்கு வயலு வெள்ளாம செய்றப்ப - ஒரு நாளு கெழம பாத்து, குடும்பத்தோட சாணி, சந்தனம், மஞ்சத்தூளு, சப்பட்டையா கருங்கல்லுக, குங்குமம், எலுமிச்சம்பழம், வாழப்பழம், தேங்கா, ஊதுவத்தி, சூடம், *மரக்காலு, வெத நெல்லு எல்லாம் எடுத்துகிட்டு வயலுக்குப் போனோம். கூட காவக்காரரும் வந்தாரு.
கருங்கல்ல எல்லாம் நல்லா கழுவி, சந்தனம் பூசி அலங்காரம் பண்ணாங்க. அப்புறம் சாணிய கோபுரம் மாதிரி செஞ்சு புள்ளையார் புடிச்சாங்க. தேங்கா ஒடச்சு சாமி கும்பிட்டு, வயலோட நாலு மூலைலயும் எலுமிச்சம்பழத்த வெட்டிப்போட்டாங்க. அப்புறம் அப்பா மரக்கால்ல வெத நெல்ல போட்டு கைய வீசி நாத்தங்கால்ல எறிஞ்சார். அதுக்கப்புறமா நாத்தங்கால்ல எறங்குன காவக்காரரு லாவகமா எடது கக்கத்துல மரக்கால வச்சுகிட்டு, வலது கை முழுக்க வெத நெல்ல அள்ளி, தனக்கு எடப்பக்கமும் வலப்பக்கமும் சரியா வர்ற மாதிரி விசிறி தெளிக்கிறது பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும். நடையும், கைவீச்சும் தப்பாம இருக்கும்.
சொன்ன மாதிரி ஒரே அளவுல நெல்லு எல்லாம் நாத்தங்கால்ல வெளஞ்சு நிக்கிற அழகே தனி. நடவுக்கும் கருதறுப்புக்கும் வழக்கமா காக்கிவாடம்பட்டியில இருந்து கங்காணிக ஆம்பளகளயும் பொம்பளகளயும் கூப்பிட்டு வந்திருவாங்க. எசப்பாட்டோட வேல நடக்குற வேகத்த பாத்தா நாமல்லாம் அசந்துருவோம். சின்ன வெவசாயிக எல்லாம் முடிஞ்ச வரைக்கும் சொந்த ஆளுங்கள வச்சே நடவு, அறுவட எல்லாம் பண்ணிக்குவாங்க.
வழக்கம் போல களயெடுக்குறது, பூச்சி மருத்தடிக்கிறது, ஒரம் போடுறது எல்லாம் காலாகாலத்துல நடக்கும். கருதறுக்குற நேரம்னா ஊர்ல எல்லார் மூஞ்சியிலேயும் களைக்கு கொறவிருக்காது.
நெல்லுக்கருத அறுத்து, நெல்லுக்கட்டா கட்டி, வரப்பு வழியா வந்து, வாய்க்கால தாண்டி இருக்குற களத்துமேடுக்கு கொண்டு வந்து சேக்குறது பெரும்பாடுதான். ஒருதடவ சின்ன வயல ஒத்திக்கு எடுத்து செய்யுறப்ப, வயல்ல இருந்து களத்துமேட்டுக்கு நெல்லுக்கட்ட தூக்கிட்டு வந்தேன். எவ்வளவு தூரம்னு நெனக்கிறீங்க? கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர் இருக்கும் - ஒரு தடவ கொண்டு வந்து சேக்குறதுக்குள்ளேயே தல கழுத்துக்குள்ள பொதஞ்சுகிட்ட மாதிரி ஆகிப்போச்சு. வரப்புல வழுக்கி விழாம நடந்து வர்றதே ஒரு பெரிய விசயம்.
ம்ம்... அறுவடைக்காலத்துல பாத்தா வயல்ல எல்லாம் ஒரே கூட்டமாத்தான் இருக்கும். எலிபிடிக்க வர்றவங்க, அந்த எலிக தங்கி இருந்த வலயில இருக்குற நெல்ல எடுக்குறவங்க, நண்டு பிடிக்கிறவங்க, பாதையில விழுற *கருத எல்லாம் பொருக்குறவங்க, வேல பாக்குறவங்க, வேடிக்க பாக்குறவங்கன்னு சும்மா ஜேஜேன்னு இருக்கும்.
பள்ளிக்கூடத்துக்கு கெழக்க இருந்த வயல்ல வெள்ளாம செஞ்சப்ப, அறுத்த கருத எல்லாம் களத்துமேட்டுக்கு கொண்டு வந்து சேத்தாங்க. பெரிய சைசு கல்லுல *வாகா போட்டு கையில *வக்கல்ல செஞ்ச *உரிய வச்சுகிட்டு, நெல்லத் தட்டுனாங்க. ஆளுங்க நெல்லுக்கட்ட பிரிச்சு லாவகமா அடிக்கிறவங்க கையில போட, அத வாகா ரெண்டு தட்டு தட்டி பின்னாடி சுழட்டி எறியிறத பாக்கணுமே.. அட.. அட... அப்படி சேருற வக்கல ஒருத்தரு சமமா பரவுற மாதிரி கையில வச்சிருக்குற கம்பால - *கவக்கோல் - தள்ளி விட்டுகிட்டே இருந்தாரு.
அடிச்ச நெல்ல எல்லாம் 'அம்பாரம்' போல செஞ்சு, ஒரு ஓட்ட மண்ணுப் பானையில சாணித்தண்ணி கரச்சு, அம்பாரத்துல வட்ட வட்டமா போட்டாங்க. ஏதாச்சும் களவு போனா கண்டுபிடிக்கிறதுக்காம்! அதாவது அப்படி வட்டம் போட்ட அம்பாரத்துல எங்காச்சும் நெல்ல கொஞ்சம் எடுத்தாலும் போதும், நெல்லு சரியிறதுல வட்டம் கலஞ்சிரும்ல - அதுக்குத்தான்.
அன்னைக்கு ராத்திரி முழுக்க அரிக்கேன் லைட்ட எரிய வச்சுகிட்டு ஆளு மாத்தி ஆளு காவல் இருந்தோம். அன்னைக்கி பாத்து மழ வேற வர்ற மாதிரியிருந்ததால பாலிதீன் பையால செஞ்ச தார்ப்பாய வச்சு அம்பாரத்த எல்லாம் மூடிட்டு, ஒரு சின்ன கூடாரம் மாதிரி தார்ப்பாய போட்டுகிட்டு, கொட்டுற மழைல காவலுக்கு இருந்தோம்.
அடுத்த நாளு வைக்கப்போருல இருக்குறத எல்லாம் வட்டமா விசிறிப்போட்டு, மாட்டக்கட்டி "போர'டிச்சாங்க. மாடுகளுக்கு எல்லாம் வாய்க்கூண்டு - கருத சாப்ட்றக்கூடாதுல்ல - போட்ருந்தாங்க.
இப்படி எல்லா வேலயும் முடிச்சி, நெல்லும் வக்கலும் தனித்தனியா ஆச்சு. கருதறுக்க வந்தவங்க, கங்காணிக, நீராணிக்கம் இப்படி எல்லாருக்கும் கூலியா நெல்லு கொடுக்குறதுதான் வழக்கம். அம்பாரத்துல இருந்து மரக்கால வச்சுகிட்டு ஆம்புளகளா இவ்வளவு, பொம்பளகளா இவ்வளவுன்னு கங்காணி மளமளன்னு அளந்து கொடுத்தாரு. அவரு கூலியயும் எடுத்துகிட்டாரு. நீராணிக்கத்துக்கும், களத்துமேட்டுல கூடமாட ஒத்தாச செஞ்சவங்களுக்கும் கூலி கொடுத்தாச்சு. எல்லாரோட சந்தோசத்தையும் அவங்க மூஞ்சியில பாக்க முடியுது.
வக்கலு மாடுகளுக்கு தீவனத்துக்கு ஆகும்கிறதால அத விக்கல. மீதி இருக்குற நெல்ல வீட்டுல கொண்டு வந்து சேக்குறதுக்கு நாங்க கொஞ்சம் கூட கஷ்டமே படல. மூணு மாசமா - வெத நெல்லு வாங்கி, பரம்படிச்சு, நாத்து நட்டு, கள பறிச்சு, மருந்தடிச்சு, உரம் போட்டு, காவல்காத்து - *கடசீல வீட்டுக்கு வந்து சேந்த நெல்லு எவ்வளவு தெரியுமா..? அர மூடை!
* முத்தேம்பட்டி - முத்துத்தேவன்பட்டி.
* சேம்ப எல - சேம்பல் இலை, தண்ணீர் ஒட்டாத பெரிய இலைகள்
* நாத்தங்கால் - நாற்றங்கால்
* வெத - விதை
* மரக்காலு - மரக்கால் - இரும்புத்தகடால் செய்யப்பட்ட பெரிய அளவுப்பாத்திரம்.
* கருத - கதிர் - நெற்கதிர்
* உரி - பச்சை வைக்கோலால் பின்னப்பட்டு, இரண்டு பக்கங்களிலும் வளையங்களைக் கொண்ட, நெற்கதிரை கல்லில் அடிப்பதற்காக செய்யப்பட்ட உரி.
* வாகா - வகையாக
* கவக்கோல் - கவைக்கோல் - சிலம்பு போன்று, நுனியில் கூராகவும், வளைந்தும் இருக்கக்கூடிய இரும்புத்துண்டுகளை பொருத்திய கருவி.
* வக்கல் - வைக்கோல்
* கடசீல -கடைசியில்