rambal
12-11-2005, 04:33 AM
விளிம்பின் நுனியில்.. எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மனிதர்களின் கதை) பாகம் 1
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்.
பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்
விலை : 350
இது வரை இவர் எழுதி வந்த அனைத்து சிறுகதைகளும் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. தொகுப்பில் மொத்தம் 90 கதைகள் உள்ளன. இதில் எனக்குப் பிடித்த என்னை பாதித்த கதைகளை இங்குப் பதிகிறேன். இது எத்தனை பாகங்கள் வரும் என்று தெரியாது. ஏனெனில் இப்புத்தகம் மிகப் பெரிய தொகுப்பு.
உலகில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கதைகளும் இருக்கின்றன. அத்தனை மனிதர்களின் கதைகளையும் பிரதியெடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர் எழுத்தாளர்கள். ஒரு கதையை முடித்து காற்றில் சிறகாய் பறக்க விட்டு அமைதியின் ஆழத்தில் சாசுவதமாய் அடுத்த கதையை பிரதியெடுக்க ஆரம்பிக்கின்றனர். யாரும் சொல்லாத கதை, அல்லது சொல்லும் தொனியில் வேறுபாடு, தனக்கே உரித்த மொழிவளம் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் ஒரு கதை எழுதப்படும் பொழுது அது சிறப்பான ஒரு படைப்பாக அமைகிறது. மற்றபடி பின் நவீனத்துவம், நவீனத்துவம், சர்ரியல், அப்ஸ்ட்ராக்ட், நியோ ரியலிசம், மேஜிகல் ரியலிசம்.. என்பதெல்லாம் ஒரு வகை வாய்ப்பாட்டுக் கணக்குதான். அந்த வகையில் இந்தப் புத்தகமெங்கும் கதைகள்.. சொல்லாத கதைகள்.. சொல்லப்பட்ட கதைகள் மாற்றி சொல்லப்பட்டிருத்தல்.. வகை தொகை வாய்ப்பாடுகளில் அடங்கும் அனைத்து இசங்களிலும் கதைகள்.. இவரது பரிசோதனை முயற்சிகள்.. எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இந்தப் புத்தகம் இருக்கிறது.
இவரின் வாழ்வனுபங்களின் எல்லை மிகவும் விரிவடைந்த நிலையில் இருக்கிறது. புத்த மத கதைகள்.. கரிசல் கதைகள்.. பழங்குடியினர் பற்றிய கதைகள். புனைவுக் கதைகள்.. பேண்டசி கதைகள்.. பின் நவீனத்துவ கதைகள்.. சரித்திர கதைகள்.. பைபிள் கதைகள்.. விரிவு கொள்ளும் எல்லையை கதைகளால்
நிரப்பியுள்ளார்.
இப்படி ஒரு வாழ்க்கையை இப்படி ஒருவன் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தான். அதற்கான பதிவு இல்லை. அதை பதியும் முனைப்பில் சற்றும் தளராமல் போராடி அவனது கதையை உருவாக்குகிறார்.
இப்படியாக வாழ்ந்த ஒருவனின் கதைதான் "ஒளியை வாசிக்கின்றவன்".
இந்தக் கதையின் கதாபாத்திரம் பேசும் படங்களுக்கு முந்திய காலகட்டத்தில் வாழ்ந்தவன். தொழில் டாக்கி. ஊமைப்படங்கள் திரையில் ஓட திரைக்குப் பக்கவாட்டில் நின்று கொண்டு கையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு கதை கூறுபவன். இந்தத் தொழிலுக்குப் பெயர் டாக்கி. பேசும் படங்கள் வர ஆரம்பித்து எல்லாத் திரையரங்குகளிலும் அதற்கான சாதனங்களை நிறுவி திரையரங்கம் நவீனமயமாக்கப்படும் வேளை அது. டாக்கிகளுக்கு வேலை போகப் போகும் காலம். டாக்கிகள் ஆபரேட்டராக வேறு வேறு திரையரங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இவனால் அப்படி மாற முடியவில்லை. திரைப்படங்கள் பேசும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அதற்கான காரண காரியங்களை கதை தொட்டுச் செல்கிறது. முன்பின் தெரியாத பார்வையாளர்கள் கூட்டம். மௌனக்காட்சிகள் திரையில் அரங்கேறுகின்றன. பார்வையாளர்களுக்கு அறிமுகம் இல்லாத இவன் ஓடும் சலனக் காட்சிகளுக்குக் கதை சொல்கிறான். அவன் குரலை மக்கள் நம்புகிறார்கள். அவன் கடற்கொள்ளைக்காரனாக,
பிரின்ஸ் ஆப் ராஜ்புத்தாக மாறி கதை சொல்கிறான்.
இவன் சர்க்கஸின் கோமாளி, ஸ்ரீகிருஷ்ணன், ஹம்சன், கௌசிக ரிஷி எல்லாம் இவனேதான்.. சாயைகளின் உருவங்களில் வாழும் வாழ்க்கையை வரமாக வாங்கி வந்தவன். நவீனமயமாக்கலுக்குப் பலிகடா ஆக்கப்பட்ட கனவுத் தொழிற்சாலையின் முதல் உதிரி. படங்கள் பேசுவதால் சலனத்திரையின் கதாபாத்திரமாக வாழ்ந்து வந்த இவனது பாவனை சீர்குலைகிறது. இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். இது இவனுடைய தற்காலிக முடிவல்ல. ஒட்டு மொத்த திரைப்படங்களும் பேச ஆரம்பித்ததுதான் அபத்தங்களின் ஆரம்பம்.
ஒரு உணர்வை பேசாமல் முக பாவனையில் வெளிப்படுத்தும் போதுதான் சினிமா சிறந்ததாக இருக்கிறது. சார்லி சாப்ளின்..
கதாபாத்திரங்களின் உணர்வை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பேசும் சினிமா என்பது ரசிகனுடைய ரசனையை ஒரு வட்டத்திற்குள் அடைப்பதாகும். இவ்வாறு பலவாறாக பேசும் சினிமா பற்றிய பல்வேறு அபிப்ராயங்கள் நிலவி வந்த காலகட்டத்தில் கதை நடப்பதாக நாம் நினைத்துப் பார்த்தால் இந்தக் கதை பல படிமங்களை விளக்கிச் சொல்லும்..
மனிதர்களின் கதை தொடரும்...
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்.
பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்
விலை : 350
இது வரை இவர் எழுதி வந்த அனைத்து சிறுகதைகளும் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. தொகுப்பில் மொத்தம் 90 கதைகள் உள்ளன. இதில் எனக்குப் பிடித்த என்னை பாதித்த கதைகளை இங்குப் பதிகிறேன். இது எத்தனை பாகங்கள் வரும் என்று தெரியாது. ஏனெனில் இப்புத்தகம் மிகப் பெரிய தொகுப்பு.
உலகில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கதைகளும் இருக்கின்றன. அத்தனை மனிதர்களின் கதைகளையும் பிரதியெடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர் எழுத்தாளர்கள். ஒரு கதையை முடித்து காற்றில் சிறகாய் பறக்க விட்டு அமைதியின் ஆழத்தில் சாசுவதமாய் அடுத்த கதையை பிரதியெடுக்க ஆரம்பிக்கின்றனர். யாரும் சொல்லாத கதை, அல்லது சொல்லும் தொனியில் வேறுபாடு, தனக்கே உரித்த மொழிவளம் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் ஒரு கதை எழுதப்படும் பொழுது அது சிறப்பான ஒரு படைப்பாக அமைகிறது. மற்றபடி பின் நவீனத்துவம், நவீனத்துவம், சர்ரியல், அப்ஸ்ட்ராக்ட், நியோ ரியலிசம், மேஜிகல் ரியலிசம்.. என்பதெல்லாம் ஒரு வகை வாய்ப்பாட்டுக் கணக்குதான். அந்த வகையில் இந்தப் புத்தகமெங்கும் கதைகள்.. சொல்லாத கதைகள்.. சொல்லப்பட்ட கதைகள் மாற்றி சொல்லப்பட்டிருத்தல்.. வகை தொகை வாய்ப்பாடுகளில் அடங்கும் அனைத்து இசங்களிலும் கதைகள்.. இவரது பரிசோதனை முயற்சிகள்.. எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இந்தப் புத்தகம் இருக்கிறது.
இவரின் வாழ்வனுபங்களின் எல்லை மிகவும் விரிவடைந்த நிலையில் இருக்கிறது. புத்த மத கதைகள்.. கரிசல் கதைகள்.. பழங்குடியினர் பற்றிய கதைகள். புனைவுக் கதைகள்.. பேண்டசி கதைகள்.. பின் நவீனத்துவ கதைகள்.. சரித்திர கதைகள்.. பைபிள் கதைகள்.. விரிவு கொள்ளும் எல்லையை கதைகளால்
நிரப்பியுள்ளார்.
இப்படி ஒரு வாழ்க்கையை இப்படி ஒருவன் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தான். அதற்கான பதிவு இல்லை. அதை பதியும் முனைப்பில் சற்றும் தளராமல் போராடி அவனது கதையை உருவாக்குகிறார்.
இப்படியாக வாழ்ந்த ஒருவனின் கதைதான் "ஒளியை வாசிக்கின்றவன்".
இந்தக் கதையின் கதாபாத்திரம் பேசும் படங்களுக்கு முந்திய காலகட்டத்தில் வாழ்ந்தவன். தொழில் டாக்கி. ஊமைப்படங்கள் திரையில் ஓட திரைக்குப் பக்கவாட்டில் நின்று கொண்டு கையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு கதை கூறுபவன். இந்தத் தொழிலுக்குப் பெயர் டாக்கி. பேசும் படங்கள் வர ஆரம்பித்து எல்லாத் திரையரங்குகளிலும் அதற்கான சாதனங்களை நிறுவி திரையரங்கம் நவீனமயமாக்கப்படும் வேளை அது. டாக்கிகளுக்கு வேலை போகப் போகும் காலம். டாக்கிகள் ஆபரேட்டராக வேறு வேறு திரையரங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இவனால் அப்படி மாற முடியவில்லை. திரைப்படங்கள் பேசும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அதற்கான காரண காரியங்களை கதை தொட்டுச் செல்கிறது. முன்பின் தெரியாத பார்வையாளர்கள் கூட்டம். மௌனக்காட்சிகள் திரையில் அரங்கேறுகின்றன. பார்வையாளர்களுக்கு அறிமுகம் இல்லாத இவன் ஓடும் சலனக் காட்சிகளுக்குக் கதை சொல்கிறான். அவன் குரலை மக்கள் நம்புகிறார்கள். அவன் கடற்கொள்ளைக்காரனாக,
பிரின்ஸ் ஆப் ராஜ்புத்தாக மாறி கதை சொல்கிறான்.
இவன் சர்க்கஸின் கோமாளி, ஸ்ரீகிருஷ்ணன், ஹம்சன், கௌசிக ரிஷி எல்லாம் இவனேதான்.. சாயைகளின் உருவங்களில் வாழும் வாழ்க்கையை வரமாக வாங்கி வந்தவன். நவீனமயமாக்கலுக்குப் பலிகடா ஆக்கப்பட்ட கனவுத் தொழிற்சாலையின் முதல் உதிரி. படங்கள் பேசுவதால் சலனத்திரையின் கதாபாத்திரமாக வாழ்ந்து வந்த இவனது பாவனை சீர்குலைகிறது. இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். இது இவனுடைய தற்காலிக முடிவல்ல. ஒட்டு மொத்த திரைப்படங்களும் பேச ஆரம்பித்ததுதான் அபத்தங்களின் ஆரம்பம்.
ஒரு உணர்வை பேசாமல் முக பாவனையில் வெளிப்படுத்தும் போதுதான் சினிமா சிறந்ததாக இருக்கிறது. சார்லி சாப்ளின்..
கதாபாத்திரங்களின் உணர்வை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பேசும் சினிமா என்பது ரசிகனுடைய ரசனையை ஒரு வட்டத்திற்குள் அடைப்பதாகும். இவ்வாறு பலவாறாக பேசும் சினிமா பற்றிய பல்வேறு அபிப்ராயங்கள் நிலவி வந்த காலகட்டத்தில் கதை நடப்பதாக நாம் நினைத்துப் பார்த்தால் இந்தக் கதை பல படிமங்களை விளக்கிச் சொல்லும்..
மனிதர்களின் கதை தொடரும்...