rambal
11-11-2005, 01:17 PM
விளிம்பின் நுனியில்.. யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் நாவல் (பதவி மோகம்)
சதுரங்கத்தில் காய்கள் தானாக நகருதல் கூடாது..
என் வாழ்க்கை சதுரங்கத்தில் வரும் கறுப்பு மந்திரியின் வாழ்க்கை. கறுப்புக் கட்டங்களின் குறுக்கே மட்டும் நகரும் விதியுடன் வாழ்பவன். (லுமூம்பா சொல்வது)
இன்னும் எத்தனையோ விதிமுறைகள். வாழ்வே ஒரு கடையாட்டமா? சதுரங்கக்காய்களில் எந்த காய் நாம்? எந்த விதிமுறைகள் நம் மீது ஏற்றப்பட்டுள்ளது. சிப்பாயா? ராணியா? இந்த நாவல் சோமிட்சிய எனும் கற்பனை எல்லைப் பரப்பொன்றுக்குள் நிகழும்ளரசியல் நிகழ்வுகளை
பதிக்கிறது. ஆறு மாதக் குழந்தையை அடுத்த தலைவனாக ஏற்றுக் கொள்வதும் அவன் ஒரு குறிப்பிட்ட பருவம் வளரும் வரை மதகுரு அரசியல் மற்றும் தலைவனைப் பராமரிப்பதும் நிகழ்கிறது. பல கட்ட அரசியல் நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. தலைவனாக (ராஜா) தேர்ந்தெடுக்கப்படுகிற சிறுவனுக்கு சகலமும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அனைத்து போர் தந்திரங்களும், அரசியல் சாசனங்களும், அனைத்து மதச் சடங்குகளும்.. நீளும் பட்டியல் இறுதியில் மனிதத்தைத் தொலைத்து விட்ட மனப்பாட இயந்திரத்தை உருவாக்குகிறது. மனப்பாட இயந்திரத்திற்கு மனசு ஒன்று இருந்து கொண்டு விடாது துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இறுதியில் எளிய அன்பே போதுமானது என்று அங்கிருந்து தப்பி விடுகிறான். காடுகளில் பயணம் செய்யும் லுமூம்பாவின் பார்வை மூலம் வேறு கட்ட மனிதர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். கறுப்பினம் என்று மிஷினரியில் எள்ளி நகையாடப்படும் லுமூம்பா அமெச்சூர் மலையேறிக்கான லைசன்சுடன் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மலைகளில் எல்லாம் ஏறி இறங்குகிறான். அவனைப் பொறுத்த வரையில் மனிதர்களுக்கு நடுவில் வாழ்வதை விட காட்டிலும் மலை முகட்டிலும் வாழ்வது பாதுகாப்பானதாகத் தெரிகிறது. மனிதர்களை விட கொடிய விலங்குகள் மேல்.
தலைவனை பராமரிக்கும் மதகுருவிற்கோ பொம்மையாக ஒருவனை வைத்துக் கொண்டு நாட்டை தன் இஷ்டம் போல் ஆள்வதற்கு விரும்புகிறான். ஆகையால் தலைவனுக்கு நிறைய தேர்வுகள்
வைக்கிறான். அலைக்கழிக்கிறான். மக்களை மதுவில் ஆழ்த்தி பரிபூரண நித்திரையில் ஆழ்த்தி வைத்திருக்கிறான். இந்த இடம் கவனத்திற்குரியது. காந்தி மது ஒழிப்பிற்கு ஈடுபட்டதற்குக் காரணமே
மக்கள் போதையின் பிடியில் இருந்தால் சிந்திக்க மாட்டார்கள். எவன் ஆண்டால் நமக்கென்ன? என்ற எண்ணம் மேலோங்கி விடும். இருந்தும் சீனாவின் படையெடுப்பிற்குப் பிறகு மதகுருவிற்கு நாட்டை இழக்க வேண்டி வருகிறது. அவன் தன்னுடன் சிறுவன் (இப்பொழுது 17 வயது இளைஞன்) மற்றும் தனது ஆசை நாயகி ஆகியோருடன் இந்திய எல்லைக்குள் பாதுகாப்பாக இருப்பதற்காக வருகிறான். மேஜர் க்ரூஷ் என்பவரிடம் ஒவ்வொருவரும் தங்களது கதைகளைச் சொல்கின்றனர். நாவல் விரிவு கொள்கிறது.
அரசியல் நிகழ்வுகள் என்பதை நேரடி அரசியல் அல்லாது தன் உலகம் சார்ந்த அரசியல் என்று பார்க்கும் அளவு இன்று அரசியலை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில் நாவல் அரசியல் ஒரு பகடையாட்டம்
என்று விவரிக்கிறது. ஜெயிப்பது பற்றி மட்டுமே குறிக்கோளுடன் ஆடப்படும் பகடையாட்டம். பணயமாக அப்பாவி மக்கள், அதிகாரிகள்...
பகடையாட்டம் என்பதே எந்த ஒரு அதிகாரமுமற்ற ஒரு ராஜாவிற்காக பலியாகும் அப்பாவிகளின் விளையாட்டுதானே..
ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
பதிப்பகம்: தமிழினி
சதுரங்கத்தில் காய்கள் தானாக நகருதல் கூடாது..
என் வாழ்க்கை சதுரங்கத்தில் வரும் கறுப்பு மந்திரியின் வாழ்க்கை. கறுப்புக் கட்டங்களின் குறுக்கே மட்டும் நகரும் விதியுடன் வாழ்பவன். (லுமூம்பா சொல்வது)
இன்னும் எத்தனையோ விதிமுறைகள். வாழ்வே ஒரு கடையாட்டமா? சதுரங்கக்காய்களில் எந்த காய் நாம்? எந்த விதிமுறைகள் நம் மீது ஏற்றப்பட்டுள்ளது. சிப்பாயா? ராணியா? இந்த நாவல் சோமிட்சிய எனும் கற்பனை எல்லைப் பரப்பொன்றுக்குள் நிகழும்ளரசியல் நிகழ்வுகளை
பதிக்கிறது. ஆறு மாதக் குழந்தையை அடுத்த தலைவனாக ஏற்றுக் கொள்வதும் அவன் ஒரு குறிப்பிட்ட பருவம் வளரும் வரை மதகுரு அரசியல் மற்றும் தலைவனைப் பராமரிப்பதும் நிகழ்கிறது. பல கட்ட அரசியல் நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. தலைவனாக (ராஜா) தேர்ந்தெடுக்கப்படுகிற சிறுவனுக்கு சகலமும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அனைத்து போர் தந்திரங்களும், அரசியல் சாசனங்களும், அனைத்து மதச் சடங்குகளும்.. நீளும் பட்டியல் இறுதியில் மனிதத்தைத் தொலைத்து விட்ட மனப்பாட இயந்திரத்தை உருவாக்குகிறது. மனப்பாட இயந்திரத்திற்கு மனசு ஒன்று இருந்து கொண்டு விடாது துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இறுதியில் எளிய அன்பே போதுமானது என்று அங்கிருந்து தப்பி விடுகிறான். காடுகளில் பயணம் செய்யும் லுமூம்பாவின் பார்வை மூலம் வேறு கட்ட மனிதர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். கறுப்பினம் என்று மிஷினரியில் எள்ளி நகையாடப்படும் லுமூம்பா அமெச்சூர் மலையேறிக்கான லைசன்சுடன் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மலைகளில் எல்லாம் ஏறி இறங்குகிறான். அவனைப் பொறுத்த வரையில் மனிதர்களுக்கு நடுவில் வாழ்வதை விட காட்டிலும் மலை முகட்டிலும் வாழ்வது பாதுகாப்பானதாகத் தெரிகிறது. மனிதர்களை விட கொடிய விலங்குகள் மேல்.
தலைவனை பராமரிக்கும் மதகுருவிற்கோ பொம்மையாக ஒருவனை வைத்துக் கொண்டு நாட்டை தன் இஷ்டம் போல் ஆள்வதற்கு விரும்புகிறான். ஆகையால் தலைவனுக்கு நிறைய தேர்வுகள்
வைக்கிறான். அலைக்கழிக்கிறான். மக்களை மதுவில் ஆழ்த்தி பரிபூரண நித்திரையில் ஆழ்த்தி வைத்திருக்கிறான். இந்த இடம் கவனத்திற்குரியது. காந்தி மது ஒழிப்பிற்கு ஈடுபட்டதற்குக் காரணமே
மக்கள் போதையின் பிடியில் இருந்தால் சிந்திக்க மாட்டார்கள். எவன் ஆண்டால் நமக்கென்ன? என்ற எண்ணம் மேலோங்கி விடும். இருந்தும் சீனாவின் படையெடுப்பிற்குப் பிறகு மதகுருவிற்கு நாட்டை இழக்க வேண்டி வருகிறது. அவன் தன்னுடன் சிறுவன் (இப்பொழுது 17 வயது இளைஞன்) மற்றும் தனது ஆசை நாயகி ஆகியோருடன் இந்திய எல்லைக்குள் பாதுகாப்பாக இருப்பதற்காக வருகிறான். மேஜர் க்ரூஷ் என்பவரிடம் ஒவ்வொருவரும் தங்களது கதைகளைச் சொல்கின்றனர். நாவல் விரிவு கொள்கிறது.
அரசியல் நிகழ்வுகள் என்பதை நேரடி அரசியல் அல்லாது தன் உலகம் சார்ந்த அரசியல் என்று பார்க்கும் அளவு இன்று அரசியலை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில் நாவல் அரசியல் ஒரு பகடையாட்டம்
என்று விவரிக்கிறது. ஜெயிப்பது பற்றி மட்டுமே குறிக்கோளுடன் ஆடப்படும் பகடையாட்டம். பணயமாக அப்பாவி மக்கள், அதிகாரிகள்...
பகடையாட்டம் என்பதே எந்த ஒரு அதிகாரமுமற்ற ஒரு ராஜாவிற்காக பலியாகும் அப்பாவிகளின் விளையாட்டுதானே..
ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
பதிப்பகம்: தமிழினி