PDA

View Full Version : வயது வந்தவர்களுக்கு



thirukanaga
22-10-2005, 11:13 PM
தூங்காத பிள்ளை ஒரு சுகம்
தூங்கின்ற மனைவி ஒரு சுகம்
வீம்பாக இருப்பது ஒரு சுகம்
வெறுமனே படுப்பது ஒரு சுகம்
வேண்டாத பகலோ ஒரு சுகம்
வேண்டாதவர் வருவது ஒரு சுகம்
தாங்காத ஏச்சோ ஒரு சுகம்
தீங்காக நடப்பது ஒரு சுகம்
இப்படி இருப்பதில் என்ன சுகம்
இதைவிட இறப்பதே பெரும் சுகம்

இளசு
23-10-2005, 09:46 AM
இறப்பு எல்லாருக்கும் நிச்சயம்
இருக்கும் வரை
வாழ்வைக் கொண்டாடுவதே உத்தமம்.
சாவை எண்ணிக் கலங்கவும் வேண்டாம்..
சாவையே எண்ணி எண்ணி வரவேற்கவும் வேண்டாம்.
இயற்கையை சுவாதீனமாய்
இயல்பாய் ஏற்போம்..
அது வரும்போது..

என்ன திருகனகா அவர்களே
ஏனிந்த நிலையாமை தொனி?

thirukanaga
23-10-2005, 11:18 AM
கூடிவாழ்ந்தால் குடும்பம்
தலைவன் ஒரு பம்பரம்
தலையாட்டும் எந்திரம்
தொலைவில் அவன் சுதந்திரம்
சுமையே அவன் மந்திரம்
தப்பிக்க ஏது மந்திரம்

தஞ்சை தமிழன்
23-10-2005, 02:14 PM
என்ன கவிதை ராஜேந்தரை னினைவு படுத்துகிறது.


சுகம் இல்லாதவைகளை அனுபவிக்கும் போதுதான்
சுகத்தின் சுகம் தெரியும்.


கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்