PDA

View Full Version : கடவுளே



thirukanaga
17-10-2005, 12:24 PM
கடவுளே

ஓடும் வினையது
உள்ளத்தில் உனைநினைத்தால்
கூடும் சுகமது
உன் கூடவே நானிருந்தால்
பாவம் விலகுது
உன் பார்வை என் மேலிருந்தால்

பாடியவர் போனதெல்லாம் சொர்க்கம்
பாவிகள் எங்களுக்குள் ஏனோ தர்க்கம்
அனைவரையும் அழைத்துவிடு உன் பக்கம்
அழிவானேன் இப்படி ஆளுக்கொரு பக்கம்

Narathar
17-10-2005, 12:32 PM
அனைவரையும் அழைத்துவிடு உன் பக்கம்
அழிவானேன் இப்படி ஆளுக்கொரு பக்கம்

உஙகளை போன்றவர்களின் கோரிக்கைக்கு செவி சசய்த்துத்தானே
சுனாமி என்றும் கத்ரீனா என்றும் ஏர்த்குயிக் என்றும் விடாது தன் பாசக்கயிற்றை வீசிகொண்டிருக்கின்றார்.........?

இளசு
21-10-2005, 10:52 PM
சரணாகதித் தத்துவம் எளிமையாக..
பாராட்டுகள் திருகனகா..
தொடருங்கள் உங்கள் பாணிக் கவிதைகளை...