PDA

View Full Version : பொய் சொல்லாதே...........



Narathar
10-10-2005, 07:57 PM
கணவன் மனைவிக்கிடையில் ஒரு வாக்குவாதம்..........



மனைவி:
நீங்கள் செய்யிறது கொஞ்சம் கூட சரியில்லை...
எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரையுமே நீங்கள்
மதிப்பதில்லை....

கணவன்:
பொய் சொல்லாதே...........
நான் என் மாமியாரை விட உனது மாமியாரைத்தானே அதிகம் நேசிக்கின்றேன்........

மனைவி:
????!!!!!!!

அறிஞர்
10-10-2005, 10:01 PM
கணவன்:பொய் சொல்லாதே...........
நான் என் மாமியாரை விட உனது மாமியாரைத்தானே அதிகம் நேசிக்கின்றேன்........

மனைவி:
????!!!!!!! என்ன அன்பரே.. வீட்டில் இப்படிதான் சமாளிக்கிறீர்களா

மன்மதன்
11-10-2005, 04:50 AM
சிந்திக்க வைத்த சிரிப்பு நாரதரே :D :D

gragavan
11-10-2005, 05:26 AM
நாரதா நாரதா........கலகப் பிரியா...........வீட்டிற்குப் போக வேண்டாமா!

aren
12-10-2005, 08:58 AM
நாரதரே இப்படி மனைவியை கவிழ்க்கலாமா?

ஆமாம் இதிலிருந்து உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. அப்படி ஆகியிருந்தால் இப்படி எழுத மனம் வருமா? பிழைத்துக்கொண்டீர்கள்.

Narathar
12-10-2005, 09:10 AM
நாரதரே இப்படி மனைவியை கவிழ்க்கலாமா?

ஆமாம் இதிலிருந்து உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. அப்படி ஆகியிருந்தால் இப்படி எழுத மனம் வருமா? பிழைத்துக்கொண்டீர்கள்.

மனிவி இணையப்பக்கம் வராதவராக இருந்தால்............???

aren
12-10-2005, 09:30 AM
மனிவி இணையப்பக்கம் வராதவராக இருந்தால்............???

கல்யாணமாகியிருந்தால் இப்படி எழுதவே தைரியம்வராது கனவில்கூட.

gragavan
12-10-2005, 09:36 AM
மனிவி இணையப்பக்கம் வராதவராக இருந்தால்............???உங்களோடு இணைய பக்கம் வந்தால்தான் மனைவி :D :D :D

Narathar
12-10-2005, 09:57 AM
உங்களோடு இணைய பக்கம் வந்தால்தான் மனைவி :D :D :D

அட இப்போ இப்படியொரு தகுதியும் வேண்டுமா?
ஏற்கனவே கஷ்டம்......... இதுல இது வேரவா?

pradeepkt
12-10-2005, 03:23 PM
என்னா சிலேடை,
ராகவா, எனக்கென்னவோ கொஞ்சம் சந்தேகமா இருக்கே...

Narathar
13-10-2005, 08:23 PM
என்னா சிலேடை,
ராகவா, எனக்கென்னவோ கொஞ்சம் சந்தேகமா இருக்கே...

இப்போ என்ன சந்தேகம்?

பரஞ்சோதி
13-10-2005, 08:51 PM
பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும் என்ற நாரதரின் வாக்கை நான் பின்பற்ற இருக்கிறேன்.

சுவேதா
14-10-2005, 01:56 AM
:D:D:D:D:D

thempavani
14-10-2005, 08:54 AM
அம்மா சுவேதா சும்மா சிரிக்காமல் நம்ம அண்ணி அனைவரின் தொடர்பு எண்களை சேகரி...உதவும்...

என்னிடம் பரம்ஸ் அண்ணாவோடது இருக்கு..இதில் ஆரேன் அண்ணாவோட எண்ணும் கிடைக்கும்...மற்றதை நயமாக பேசி வாங்கிவிட்டு எனக்கு தனிமடல் கொடு..

aren
14-10-2005, 09:59 AM
அம்மா சுவேதா சும்மா சிரிக்காமல் நம்ம அண்ணி அனைவரின் தொடர்பு எண்களை சேகரி...உதவும்...

என்னிடம் பரம்ஸ் அண்ணாவோடது இருக்கு..இதில் ஆரேன் அண்ணாவோட எண்ணும் கிடைக்கும்...மற்றதை நயமாக பேசி வாங்கிவிட்டு எனக்கு தனிமடல் கொடு..

நான் என்ன தவறு செய்தேன். என்னை ஏன் இப்படி மாட்டிவிடுகிறீர்கள்.

இனிமேல் நான் உங்கள் கட்சி.

thempavani
14-10-2005, 10:40 AM
சுவேதா அண்ணன் ஆரேன் நம்ம கட்சிக்கு வந்துட்டாங்க..அதனால் மத்தவங்க எண்ணை மட்டும் கண்டுபிடி...

pradeepkt
14-10-2005, 11:16 AM
என்ன ஒரு ஆள் சேர்ப்பு டெக்னிக்கு?
ஜெ. தோத்தாங்க போங்க...

Narathar
14-10-2005, 02:52 PM
பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும் என்ற நாரதரின் வாக்கை நான் பின்பற்ற இருக்கிறேன்.

பொய்யா? அப்படியென்றால்????

பரஞ்சோதி
14-10-2005, 02:56 PM
பொய்யா? அப்படியென்றால்????

அதாவது உங்களுக்கு உண்மையாகப்பட்டது, மற்றவர்களுக்கு பொய்யாகத் தெரியும். :D

அறிஞர்
15-10-2005, 04:41 AM
பொய்யா? அப்படியென்றால்???? எப்பவும் வாயிலிருந்து வருமே... அதைதான் சொல்லுகிறார்காள்

Narathar
16-10-2005, 05:28 AM
எப்பவும் வாயிலிருந்து வருமே... அதைதான் சொல்லுகிறார்காள்

உங்கள் வாயிலிருந்து வருவதையா?

பரஞ்சோதி
16-10-2005, 06:05 AM
உங்கள் வாயிலிருந்து வருவதையா?

நாரதரே! அப்போ நீங்க கொட்டாவி விட்டாக்கூட அது பொய் தானா? :D

அறிஞர்
17-10-2005, 03:56 AM
நாரதரே! அப்போ நீங்க கொட்டாவி விட்டாக்கூட அது பொய் தானா? :D எப்படி இப்படி சரியா சொல்லுறீங்க பரம்ஸ்

விகடன்
14-04-2009, 09:56 AM
அட... ஆமால்ல???
மள மள என்று சொல்லிவிட்டாள் கேட்பவர் விளங்கி தெளிந்துவர நாழிகையாகும். அதற்குள் சுதாகரித்துவிடலாம்....

யாரப்பா அங்கே..... திருமணமானவங்க எல்லாம் இந்த யுத்தியை கவனிச்சு வைச்சுக்கோங்கப்பா...