PDA

View Full Version : விட்டுக்கொடுத்த பெண்!!



Narathar
10-10-2005, 10:33 AM
விட்டுக்கொடுத்த பெண்!!

ஒரு ஆபத்தான சூழ்நிலலயில் ஹெலியில் 11 பேர் ஒரு கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.

10 ஆண்களும் 1 பெண்ணும் அவர்களுள் அடக்கம்............

10 பேரைத்ததங்கும் சக்திதான் கயிற்றுக்கிருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதும் யாராவது 1வர் குதித்தால்தான் மற்ற 10 பேரும் தப்பலாம் என்ற சூழ்நிலை.

யார் குதிப்பது? எல்லோருக்கும் குழப்பம்........

''லேடீஸ் பர்ஸ்ட்'' என்ற கோட்பபட்டுக்கமைய எல்லோர் பார்வவயும் பெண்மேல் விழுந்தது.

நிலமையை உணர்ந்த பெண் மிக உருக்கமாக பேசத்தொடங்கினாள்

''அன்பர்களே...............

பெண் என்பவள் விட்டுக்கொடுப்பதை தன் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டு வாழ்பவள்.

மகளாய் - அப்பாவுக்காக விட்டுக்கொடுக்கின்றோம்
மனனவியாய் - கணவனுக்கு விட்டுக்கொடுக்கின்றோம்
தாயாய் - மகனுக்கு விட்டுக்கொடுக்கின்றோம்

எனவே இன்று உங்கள் அனைவருக்கும் நண்பியாய் நான் விட்டுக்கொடுக்கின்றேன்.......''

என்று அவள் தனது உருக்கமான பேச்சை முடித்ததும்.
கயிற்றை பற்றியிருந்த 10 ஆண்களும் தன்னையும் அறியாது தங்கள் கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

இப்போது அவள் மட்டும் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தாள்

thempavani
10-10-2005, 10:38 AM
ஆகா...நல்ல பெண்...

Narathar
10-10-2005, 10:41 AM
ஆகா...நல்ல பெண்...

இப்போ சந்தோஷமா? :) :) :)

thempavani
10-10-2005, 10:42 AM
நான் அந்த பதிவை செய்தபின் அதற்கு நீங்கள் தரும் பதில்பதிவைப் படிப்பதற்காகத்தான் காத்திருந்தேன்..நீங்கள் இப்போ சொல்லிவிட்டீர்கள்..

பிரியன்
10-10-2005, 10:42 AM
பெண்கள் புத்திசாலி என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறாள் இந்தப்பெண். ஆண்கள் வழக்கம் போலவே பெண்மையை பாரட்டி அம்போ ஆகிவிடுவது என்பது காலம் காலமாக இருக்கும் எதார்த்தம்

Narathar
10-10-2005, 10:58 AM
பெண்கள் புத்திசாலி என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறாள் இந்தப்பெண். ஆண்கள் வழக்கம் போலவே பெண்மையை பாரட்டி அம்போ ஆகிவிடுவது என்பது காலம் காலமாக இருக்கும் எதார்த்தம்

ஆனால் பெண்குலம் (சில ஆண்களும்:) ;) :) ) அப்படிச்சொல்வதில்லயே?.............

நாராயணா!!! நான் இங்குள்ள பெண்களை சொல்லவில்லை.

gragavan
10-10-2005, 11:05 AM
பெண்கள் புத்திசாலி என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறாள் இந்தப்பெண். ஆண்கள் வழக்கம் போலவே பெண்மையை பாரட்டி அம்போ ஆகிவிடுவது என்பது காலம் காலமாக இருக்கும் எதார்த்தம்அதிலும் இது போன்ற கற்பனைக் கதைகளில்.

பிரியன்
10-10-2005, 11:06 AM
அதிலும் இது போன்ற கற்பனைக் கதைகளில்.

அதே அதே :) :) .

பரஞ்சோதி
10-10-2005, 11:43 AM
மக்கா, யார் அந்த பெண், சுவேதாவா, தேம்பாவா?

ஆனா புத்திசாலி பெண் என்பதால் சந்தேகம் வருது.

கை தட்டிய மகான்கள் யார் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளேன்.

pradeepkt
10-10-2005, 12:10 PM
பிரியன், அறிஞர், புதுசு ராசா, வேற யாரு?
மீதிப் பேருதான் அறிஞர் ஆராய்ச்சிக் கூட மாணவர்களா இருக்கும்.
இதுக்கு எதுக்குண்ணா தனிப்படை?

Narathar
10-10-2005, 12:16 PM
மக்கா, யார் அந்த பெண், சுவேதாவா, தேம்பாவா?

ஆனா புத்திசாலி பெண் என்பதால் சந்தேகம் வருது.

கை தட்டிய மகான்கள் யார் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளேன்.

தொடங்கிட்டாங்கய்யா..........
தொடங்கிட்டாங்க!!!!

rajasi13
10-10-2005, 12:35 PM
பிரியன், அறிஞர், புதுசு ராசா, வேற யாரு?
மீதிப் பேருதான் அறிஞர் ஆராய்ச்சிக் கூட மாணவர்களா இருக்கும்.
இதுக்கு எதுக்குண்ணா தனிப்படை?
என்னாது புதுசு ராசாவா? அது சரி, அறிஞரே இவங்களுக்கெல்லாம் நம்ம ஆராய்சிக்கூடத்துல கண்டுபிடிச்ச வல்லாரை மாத்திரை குடுத்தாத்தான் எல்லாம் ஞாபகம் வரும். பத்துபேர் இருக்கறது அவங்க அணியிலங்கரத மறந்துடறாங்க. எல்லாம் சரி ஹெலி பறந்துகிட்டுதான் இருந்த்ததா?

Narathar
10-10-2005, 01:02 PM
ஹெலி பறந்துகிட்டுதான் இருந்த்ததா?

இல்லை ஹெலியை நிப்பாட்டி வச்சு
அவங்க மேலே தொங்கிகிட்டு இருந்தாங்க...............

நாராயணா!!!

அறிஞர்
10-10-2005, 10:03 PM
நல்ல சிரிப்புக்கள்.... வாழ்த்துக்கள்.... அன்பரே....

மன்மதன்
11-10-2005, 04:38 AM
நல்ல சிரிப்பு நாராயணா.. அந்த 10 பேர் லிஸ்ட் கொடுங்க நாராயணா :D :D

rajasi13
11-10-2005, 05:27 AM
இல்லை ஹெலியை நிப்பாட்டி வச்சு
அவங்க மேலே தொங்கிகிட்டு இருந்தாங்க...............

நாராயணா!!!
அதான பாத்தேன்..

Narathar
12-10-2005, 09:59 AM
நல்ல சிரிப்பு நாராயணா.. அந்த 10 பேர் லிஸ்ட் கொடுங்க நாராயணா :D :D

ஐவரணியின் தீர்மானத்துக்கு விடப்படுகிறது........... நாராயணா!!!

அறிஞர்
15-10-2005, 04:52 AM
ஐவரணியின் தீர்மானத்துக்கு விடப்படுகிறது........... நாராயணா!!!ஐவரணியில் இருந்த, இருக்கும் நண்பர்களை சேர்த்தா 10 தேறுமே..... அதுக்கு பேர வேற சொல்லணுமா என்ன

Narathar
16-10-2005, 05:33 AM
அதைத்தான் நானும் சொன்னேன்.............

ஆனால் அந்த மூன்றாம் அணி அமைத்திருப்பவரை தவிற

அறிஞர்
17-10-2005, 04:03 AM
அதைத்தான் நானும் சொன்னேன்.............

ஆனால் அந்த மூன்றாம் அணி அமைத்திருப்பவரை தவிற நான் குறிப்பிட்டது... ஐவரணி மட்டுமே.. அன்பரே

mania
17-10-2005, 04:37 AM
ஐவரணியில் இருந்த, இருக்கும் நண்பர்களை சேர்த்தா 10 தேறுமே..... அதுக்கு பேர வேற சொல்லணுமா என்ன

:D எடை கணக்கை வைச்சு பாத்தா மகளிர் அணியிலேயிருந்து மூணு பேரை அனுப்பினா போறுமே...???:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D