poo
07-10-2003, 07:06 AM
<span style='color:blue'>
கண்ணுக்குள் காட்சியாய்
கால்பதித்து காணாமல்போனாய்...
காணும் கனம் மீண்டுமெதுவென
கண்ணீர்த்துளிகளால் களம்விரித்தேன்..
நீரால் நனைந்(த்)தாலும்
முகமெங்கும் தீயால்வாடிய வலி..
விரிந்த களத்தில்
விழிகளை ஓடவிட்டதில்
விலகிப்போன உன்னை சிறைபிடித்தேன்..
நெருங்கி அறிமுகமாகையில்
அந்தரத்தில் பறந்து
அருகாமை தவிர்த்து அழகாய்
விலக்கிச்சென்றாய்..
அன்றிலிருந்து இரவுகள் முழுக்க
விண்ணிலிருந்து கீழும்
மண்ணிலிருந்து மேலுமாய்..
சொல்லமுடியாத உணர்வாய்.. வலியாய்..
அக்கா சொன்னாள்..
"காதல் வலிமையானது..."
வலியானதென
சொல்லமறந்தாளா?!!</span>
கண்ணுக்குள் காட்சியாய்
கால்பதித்து காணாமல்போனாய்...
காணும் கனம் மீண்டுமெதுவென
கண்ணீர்த்துளிகளால் களம்விரித்தேன்..
நீரால் நனைந்(த்)தாலும்
முகமெங்கும் தீயால்வாடிய வலி..
விரிந்த களத்தில்
விழிகளை ஓடவிட்டதில்
விலகிப்போன உன்னை சிறைபிடித்தேன்..
நெருங்கி அறிமுகமாகையில்
அந்தரத்தில் பறந்து
அருகாமை தவிர்த்து அழகாய்
விலக்கிச்சென்றாய்..
அன்றிலிருந்து இரவுகள் முழுக்க
விண்ணிலிருந்து கீழும்
மண்ணிலிருந்து மேலுமாய்..
சொல்லமுடியாத உணர்வாய்.. வலியாய்..
அக்கா சொன்னாள்..
"காதல் வலிமையானது..."
வலியானதென
சொல்லமறந்தாளா?!!</span>