PDA

View Full Version : காதல் வலி!



poo
07-10-2003, 07:06 AM
<span style='color:blue'>
கண்ணுக்குள் காட்சியாய்
கால்பதித்து காணாமல்போனாய்...
காணும் கனம் மீண்டுமெதுவென
கண்ணீர்த்துளிகளால் களம்விரித்தேன்..
நீரால் நனைந்(த்)தாலும்
முகமெங்கும் தீயால்வாடிய வலி..

விரிந்த களத்தில்
விழிகளை ஓடவிட்டதில்
விலகிப்போன உன்னை சிறைபிடித்தேன்..
நெருங்கி அறிமுகமாகையில்
அந்தரத்தில் பறந்து
அருகாமை தவிர்த்து அழகாய்
விலக்கிச்சென்றாய்..
அன்றிலிருந்து இரவுகள் முழுக்க
விண்ணிலிருந்து கீழும்
மண்ணிலிருந்து மேலுமாய்..
சொல்லமுடியாத உணர்வாய்.. வலியாய்..

அக்கா சொன்னாள்..
"காதல் வலிமையானது..."

வலியானதென
சொல்லமறந்தாளா?!!</span>

Anonymous
07-10-2003, 09:56 AM
வணக்கம் பூ

அக்கா சரியாகத் தான் சொன்னார்.
நீங்கள் தான் காதற் போதையில்
சரியாக செவி மடுக்கவில்லை.

அக்கா சொன்னாள்:
"காதல் வலி மெய்யானது"

அதை நீங்கள் திரித்து:
"காதல் வலி மையானது"

mania
07-10-2003, 10:16 AM
சபாஷ்....அப்பிடி போடுங்க.....
அன்புடன்
மணியா

இக்பால்
07-10-2003, 11:51 AM
வலி மை ஆனதோ என இருக்குமோ?

மை=இருட்டு.

பாராட்டுக்கள் பூ தம்பி.

முத்து
07-10-2003, 09:39 PM
அட.. எல்லோரும் புகுந்து வி&#168;ளாயாடுறீங்க.. பாராட்டுக்கள் பூ ..

suma
08-10-2003, 12:36 AM
சிலேடையான கருத்து அருமை. பூ, காதலித்தால் கவிதை வரும் போல் உள்ளது. காதலிப்பவர்கள் இந்த பகுதியில் அதிகம் போல் உள்ளது.

இளசு
08-10-2003, 03:22 AM
வலி தாங்கத் தாங்க வலிமை தானே வரும்.
வாழ்த்துகள் தம்பி பூவுக்கு.

பென்ஸ்
04-05-2006, 01:36 PM
மனதில் புதைத்து வைத்தும் பதில் எழுதாமல் விட்ட ஒரு காதல்
கடிதம் போல, எதோ ஒன்று உந்துதல் மனதில் வர...
திரும்பவும் இந்த கவிதையை தேடி கன்டுபிடித்து பதில் எழுத வந்தேன்....

முகம் தெரியாத ஒரு வழிபோக்கன் எறிந்து சென்ற சில
வார்த்தைகள் இன்னும் கவிதைக்கு இன்னும் அணி சேர்க்க....

இக்பால் அவர்கள் இன்னும் மெருகூட்ட....

"வலி தாங்க தாங்க வலிமையாகும்" என்ற இளசுவின் கருத்தை ஒத்து...
வாழ்த்தி செல்லுகிறென்....

வாழ்த்துகள் பூ....

ஓவியா
04-05-2006, 02:45 PM
அரசர்: அருமை அருமை ஆக,,ஆக,, அனைத்து... கவிதைகளும் அருமை
யா,,,ரங்கெ எடுத்துவாரும் அந்த பொர்க்காசுகலை


காவலன்: வந்தென்...வேந்தெ


அன்புடன்
ஓவிய