View Full Version : காதல் வலி
மீனலோஷனி
10-10-2003, 12:24 PM
கண்களை மூடுகின்றேன்
கண்ணிர்த்துளிகள் நிறைந்து
பெருக்கெடுத்த படி
பேரருவியாய் என் கன்னத்தில் வடிந்தபடி
தொண்டைக்குள் அடைப்பு
காதுமடல் வரை ஓர் சிவப்பு
அரித்தெடுக்கும் மனவலியை
அழிக்க முடியாத என் நிலமையை
தன்னந்தனியாய் தள்ளாடுகிறேன்
துணைக்கு ஆள் இன்றி திண்டாடுகின்றேன்
கண்களைத்திறந்தால்
கண்ணீரில் இருந்து பிரிந்தால்
வெளியே வாழ்க்கை எனக்காய் காத்து இருக்கின்றது
என்று அறிந்து இருந்தும்
வலியை என்னால் பிரியமுடியவில்லை
இக்பால்
10-10-2003, 12:26 PM
அழகான கவிதை தங்கை.
கற்பனைதானே?!!! -பாராட்டுக்கள்.
-அன்புடன் அண்ணா.
puppy
10-10-2003, 03:49 PM
அருமையான கவிதை
மீனலோஷனி பாராட்டுக்கள்..
என் காதல் வலியைவிட தங்களுடையது வலிமையாய்..
இன்னும் எழுதுங்கள்!!
Nanban
11-10-2003, 05:13 AM
கண்களைத்திறந்தால்
கண்ணீரில் இருந்து பிரிந்தால்
வெளியே வாழ்க்கை எனக்காய் காத்து இருக்கின்றது
என்று அறிந்து இருந்தும்
வலியை என்னால் பிரியமுடியவில்லை
வாழ்க்கை காத்திருக்கிறது என்று தெரிந்தும், யாரோ கொடுத்த வலியை நீங்கள் ஏன் சுமக்கிறீர்கள்? தூக்கி நினைவுப் பரண்களில் எறிந்து விட்டு, வாழ்க்கையை வாழப் போங்கள்..........
Hayath
12-10-2003, 05:20 AM
மீனலோஷனி உங்கள் கவிதை அருமை...பெரும்பாலனவர்கள் வாழ்கையில் சந்தித்தவற்றை கவிதையாக்கியுள்ளீர்கள்.
வாழ்க்கையில் காதலும்...காதல் வலிகளும் தவிர்க்க முடியாதவை...சிறிது கால வாழ்க்கையில் இவற்றையெல்லாம் போட்டு குழப்பி கொண்டிருக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க மறதி என்னும் மகுடத்தை அணிந்து கொள்ளுங்கள்.
முத்து
12-10-2003, 01:19 PM
அருமையான கவிதை..
உயிரோட்டமுள்ள வரிகள் ...
நன்றி .. மற்றும் பாராட்டுக்கள் மீனலோஷனி
படிக்கும் மனமும் வலிக்கிறது தோழியே
இன்னும் பகிருங்கள் வலி குறைய...
nalayiny
14-10-2003, 09:57 PM
வாசகர்களின் வழிகளில் நீர் திவலைகளை உருவாக்க வைக்கும் உன்னத கவிதை. பாராட்டுக்கள். மீனு.
மீனலோஷனி
16-10-2003, 02:59 PM
கருத்துக்கள் கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் பல.
மீனலோஷனி
16-10-2003, 03:00 PM
அபிப்ராயம் கூறிய நண்பர்கள்/நண்பிகளுக்கு
எனது மனங்கனிந்த நன்றிகள்
Narathar
17-10-2003, 06:59 AM
கண்களைத்திறந்தால்
கண்ணீரில் இருந்து பிரிந்தால்
வெளியே வாழ்க்கை எனக்காய் காத்து இருக்கின்றது
என்று அறிந்து இருந்தும்
வலியை என்னால் பிரியமுடியவில்லை
xxxxx
ரசித்தேன்................................
ஜெயாஸ்தா
15-10-2007, 02:16 PM
காதல் என்றாலே நிழலாய் கண்ணீரும், மனவலியும் வந்துவிடுமோ...!
நல்ல கவிதை சகோதரியே.... அப்படியே கொஞ்சம் சமூகக்கவிதைகளும் கொடுங்கள்.
சுகந்தப்ரீதன்
16-10-2007, 09:41 AM
என்ன அண்ணா.. சகோதரி இப்ப எல்லாம் மன்றம் வரதேயில்ல போலிருக்கு.. அது தெரியாம நீங்க வேண்டுகோள் விடுக்கிறீங்க..!(ஏன்னே தெரியலப்பா நல்லா எழுதுறவங்க எல்லாம் இப்ப வரதே இல்ல மன்றத்துக்கு.. அண்ணாச்சி அடிக்க வராங்க நம்ப கவிஞருங்க.. எஸ்கேப்...!)