PDA

View Full Version : அறி(யா)முகம்



kavithai_malar
06-10-2005, 09:00 AM
முகம் பார்த்ததில்லை
குரல் கேட்டதில்லை
இருந்தால் என்ன?

உனக்கும் எனக்கும்
பொதுவாய் எத்தனையோ?
கீழே கிடக்கும் பூமி
மேலே தெரியும் வானம்
நமக்குள் இருக்கும் மனிதம்...

தொலையட்டும் தூரம்
தொடரட்டும் நட்பு!


மலர்.

பிரியன்
06-10-2005, 09:06 AM
முகம் பார்த்ததில்லை

தொலையட்டும் தூரம்
தொடரட்டும் நட்பு!


மலர்.

உண்மையான வரிகள் மலர். அருமையான கவிதை மூலம் மன்றத்தில் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

மன்றத்தில் மற்றுமொரு கவிஞர் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.:)

பெயருக்கேற்றாவேறே படைப்புகளும் இருக்கும் என்பதை உறுதி செய்திருக்க்கிறது உங்கள் அறிமுகம்...

aren
06-10-2005, 09:07 AM
வாருங்கள் மலர் அவர்களே. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். அருமையான கவிதை.

gragavan
06-10-2005, 09:26 AM
வாருங்கள் மலர். அருமையான கவிதை. நட்பு வளரட்டும். எங்கும் இன்பம் பரவட்டும்.

pradeepkt
06-10-2005, 09:41 AM
நல்ல கவிதை மலர் மூலம் அறிமுகமான மலர் அவர்களுக்கு வரவேற்புகள்.
மன்றத்தில் கலந்திருந்து இது போல் பல கவிதை மலர் மாலைகள் தொடுக்க வாழ்த்துகள்.

ஜீவா
06-10-2005, 09:53 AM
ஆகா...அருமையான கவிதையான அறிமுகம்..

ஒரு சின்ன விண்ணப்பம்.. நீங்கள் காதல் கவிதைகள் நிறைய எழுத வேண்டும்.. நம் மன்றத்தில் மற்ற விஷயங்களை பற்றி கவிதை எழுத நண்பன்,கவிதா,பூ, ராகவன் அண்ணா என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஆனால், காதல் கவிதை எழுத பிரியன்,மன்மதன் போன்று சில பேர்தான்.. பிரியன் கூட கொஞ்ச நாள் எழுத மாட்டேன் என்று சொல்லிட்டாரு..

அதனால, உங்களிடமிருந்து நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறோம்..

மன்மதன்
06-10-2005, 09:55 AM
நியாயமான கோரிக்கை ஜீவாவுடையது.. அதை கவிதை_மலர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை கொள்கிறோம்..
அன்புடன் வரவேற்கிறேன்..

பரஞ்சோதி
06-10-2005, 10:03 AM
அருமையான கவிதையோடு அறிமுகம் ஆன உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

தலைப்பே கலக்கல்.

Narathar
06-10-2005, 12:58 PM
கவிதை + மலர்

இரண்டும் எனக்கு பிடித்தமான விடயங்கள்
அதுபோள் உங்கள் அனைத்து பதிவுகளும் மன்றத்திலுள்ள அனைவருக்கும் பிடித்துப்போக வாழ்த்துகிறேன்

kavithai_malar
07-10-2005, 08:55 AM
வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

பாரதி
07-10-2005, 09:42 AM
நட்புவாசம் வீசும் கவிதையுடன் வந்த கவிதை மலரை வரவேற்பதில் மகிழ்கிறேன். உங்களை இன்னும் கொஞ்சம் அறிமுகம் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும் நண்பரே. வாழ்த்துக்கள்.

அறிஞர்
10-10-2005, 10:07 PM
வாருங்கள் மலரே...

தங்களின் கவிதைகள் மன்றத்திற்கு மெருகேற்றட்டும்

Duraiprabu
22-01-2006, 10:11 AM
BEST WISHES MALAR

Duraiprabu
22-01-2006, 10:16 AM
BEST WISHES MALAR
[


:p

இளசு
22-01-2006, 10:10 PM
முகம் பார்த்ததில்லை
குரல் கேட்டதில்லை
இருந்தால் என்ன?

உனக்கும் எனக்கும்
பொதுவாய் எத்தனையோ?
கீழே கிடக்கும் பூமி
மேலே தெரியும் வானம்
நமக்குள் இருக்கும் மனிதம்...

தொலையட்டும் தூரம்
தொடரட்டும் நட்பு!


மலர்.


கூடுதலாய் இணையத் தமிழும்
இணைந்த இதய எண்ணவோட்டங்களும்..


அசத்தல் அறிமுகக் கவிதை தந்த மலருக்கு
மலர்ச்செண்டு வரவேற்புகள்.. வாழ்த்துகள்..

aren
22-01-2006, 10:59 PM
வெறும் அறிமுகக்கவிதையுடன் நின்றுவிட்டீர்களே? வாருங்கள், இங்கே வந்து உங்கள் கவிதைகளை அள்ளித்தாருங்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
26-01-2006, 05:44 PM
அழகாய் ஓர் அறிமுகம். அற்புதமான வரிகள் அன்பர்கள் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டது.
உங்கள் பங்களிப்பை காண ஆவலாய் உள்ளோம்.

பென்ஸ்
26-01-2006, 06:40 PM
வணக்கம் கவிதைமலர்....

உங்கள் வரவு நல்வரவாகுக.....