rambal
19-04-2003, 04:48 PM
தான் ஈன்ற குட்டியை
தானேத் தின்னும்
மிருகம் போல்..
நடக்க முயன்ற
குழந்தை வீழ்ந்து
எழுந்து தவிப்பதைப் போல்..
தொட முயன்று
சூடு தாங்காமல்
கீழ் விழும் பீனிக்ஸ் போல்..
விதையைக் கிழித்து
விஸ்வரூபம் எடுக்கும்
மரம் போல்..
சிறகை விரித்து
காற்றைக் கிழித்து
பறக்கும் பறவையைப் போல்...
சிகரம் ஏறி வெறுமை
கண்டு நொந்து தோல்வி சமதளத்தில்
பயணிக்கும் பயணி போல்..
தனியே அமர்ந்து
கரையும்
காகம் போல்...
ஊர் போகும் பாதைக்கு
எதிர்ப்புறம் பயணிக்கும்
கிறுக்கன் போல்...
இப்படி சில நேரங்களில்
இருந்தாலும்...
எதார்த்த உலகின்
வரைமுறைகளுக்குள்
சம்மதமின்றி
அழுது கொண்டேதான்
பலமுறை அடங்கிப் போக வேண்டியிருக்கிறது...
தானேத் தின்னும்
மிருகம் போல்..
நடக்க முயன்ற
குழந்தை வீழ்ந்து
எழுந்து தவிப்பதைப் போல்..
தொட முயன்று
சூடு தாங்காமல்
கீழ் விழும் பீனிக்ஸ் போல்..
விதையைக் கிழித்து
விஸ்வரூபம் எடுக்கும்
மரம் போல்..
சிறகை விரித்து
காற்றைக் கிழித்து
பறக்கும் பறவையைப் போல்...
சிகரம் ஏறி வெறுமை
கண்டு நொந்து தோல்வி சமதளத்தில்
பயணிக்கும் பயணி போல்..
தனியே அமர்ந்து
கரையும்
காகம் போல்...
ஊர் போகும் பாதைக்கு
எதிர்ப்புறம் பயணிக்கும்
கிறுக்கன் போல்...
இப்படி சில நேரங்களில்
இருந்தாலும்...
எதார்த்த உலகின்
வரைமுறைகளுக்குள்
சம்மதமின்றி
அழுது கொண்டேதான்
பலமுறை அடங்கிப் போக வேண்டியிருக்கிறது...