பாரதி
29-09-2005, 05:03 PM
தேதியில்லா குறிப்புகள்
தோட்டம்
எனக்கு வெவரம் தெரியும் போது ரெண்டு ஏக்கர்ல தோட்டமும், கொஞ்சம் வானம் பாத்த பூமியும் எங்களுக்கு சொந்தமா இருந்திச்சு. தோட்டம்னா நல்ல பெரிய கெணறு, பம்புசெட் வசதியோட இருந்துச்சு. தாத்தா அவரோட புள்ளங்க நாலு பேருக்கும் சரியா இடத்த பிரிச்சு கொடுத்திருந்தாரு. ஊருக்கு வடமேக்க, வடக்காறு ஓரமா, வண்டியோட பக்கத்துலயே இருந்துச்சு. தோட்டத்துக்கு வடக்கயோ இல்லாட்டி மேக்கயோ நடந்தா கொஞ்ச தூரத்துலேயே ஆறு வந்திரும். அதனால கெணத்துல எந்தக்காலத்துலயும் தண்ணி வத்துனதே கெடயாது. கெணறுன்னா சரியான கருங்கல்லுதான். ஊத்து கணக்கா அங்க அங்க கல்லுல இருந்து தண்ணி வரும். எப்படியும் கிட்டத்தட்ட இருபதடிக்கு இருபதடி அளவுக்கு கெணறு இருக்கும். பம்புசெட் எங்க தோட்டத்துல இருந்தாலும் கெணறும் பம்புசெட்டும் சித்தப்பாவுக்கும் எங்களுக்கும் பொதுவானது.
பக்கத்துல ரெண்டு மூணு கெணத்துக்கு பம்பு செட்டு வசதி கெடயாது. அங்க எல்லாம் என்ன செஞ்சிருப்பாங்கன்னா.. கெணத்துக்கு மேல ஒரு பக்கமா சரிவா மண்ணு குமிச்சு மேடா செஞ்சி வச்சிருப்பாங்க. கெணத்த ஒட்டி கமல மாட்டுறதுக்கு ஒரு நெலப்படி மாதிரி மரத்துல செஞ்சி வச்சிருப்பாங்க. பெரிய தோலுல பண்ணுன கொடம் மாதிரி இருக்குறத கயித்துல கட்டி தண்ணி எறைக்க தோதா வச்சிருப்பாங்க. ரெட்டை மாட்டை பூட்டிகிட்டு சரிவா இருக்குற மண்மேட்டுல மேல இருந்து கீழ இருந்து மேல வரும் போது கெணத்துல இருக்குற தண்ணில அது முங்கிக்கும். மேல இருந்து கீழ மாட்ட பத்திகிட்டு வரும் போது நெறஞ்சிருக்கிற தண்ணி வாய்க்கால்ல வந்து கொட்டும். தண்ணி எறைக்க ஒரு ஆளு, தண்ணி பாய்ச்ச ஒரு ஆளுன்னு ரெண்டு பேரு கண்டிப்பா வேலைக்கி வேணும். நாளு முழுக்க வேலையப்பாக்கணும். பாவம்.
எங்க தோட்டத்துக்கு மத்தியில, நல்ல ஒசரத்துல கரண்டுகம்பிக போகும். தோட்டத்துல பம்புசெட்டுக்கு வடக்க இருந்த எடம் மாத்திரம் கொஞ்சம் ஒசரமா இருக்கும்.
தோட்டத்துக்கு வடக்கு பக்கம் மாத்திரம்தான் வேலி இருந்திச்சு. வேலின்னா, கருவேலமரம், கொடுக்காப்புளி மரம், அத்திமரம், பூவரச மரம், வேப்ப மரம் ...இப்படி தினுசா மரங்க இருக்கும். மத்த மூணு பக்கமும் தோட்டந்தாங்கிறதால எல்லாம் வரப்பு மட்டும்தான் எல்லையா இருக்கும். கெணத்து பக்கத்துல அஞ்சாறு தென்னமரம் வரப்போரமா இருக்கும்.
வரப்புக ஓரமா தண்ணி போறதுக்கு வசதியா சின்ன வாய்க்கால் மாதிரி நெடுக இருக்கும். வரப்போரத்துல அங்கங்க வெண்டக்கா செடிக, ஆமணக்கு செடிக எல்லாம் இருக்கும். வரப்புகளும் கூட புல்லு வெளஞ்சு... சும்மா அப்படியே மெத்தை கணக்கா... நடக்குறதுக்கு ரொம்ப சுகமா இருக்கும்.
தோட்டத்துல என்ன என்ன போட்டுருக்கோம் தெரியுமா! மிளகா, கத்தரிக்கா, கேழ்வரகு, சீனி அவரக்கா, வெங்காயம், தட்டாம்பயிறு, தக்காளி, சோளம், இப்படி நெறய... அப்ப அப்ப மாறிகிட்டே இருக்கும். ஆனா அடிக்கடி போட்டது பருத்திதான். அது என்னமோ பணப்பயிராம். காசு நெறய கெடைக்குமாம்...ஹம். பக்கத்து தோட்டங்கள்ல சூரியகாந்திப்பூ, எள்ளு, கானம், மக்காச்சோளம், நெலக்கடல, சக்கரவள்ளிக்கெழங்கு இதெல்லாம் கூட போட்டிருக்காங்க.
தோட்டம் ஊருல இருந்து கிட்டத்தட்ட ஒண்ணரை இல்லாட்டி ரெண்டு கிலோமீட்டர் தூரமிருக்கும். அப்பா வெள்ளனயே தோட்டத்துக்கு போயிருவாரு.
அப்பல்லாம் போஜராஜா மில்லுல ஆறேமுக்காலுக்கு சங்கு அடிக்குதுன்னா எல்லோரும் வேலைக்கு ரெடியா இருப்பாங்க. தோட்டத்துக்குப் போறவங்க எல்லோரும் பழயசாதத்தை தூக்குவாளியில எடுத்துகிட்டு கெளம்பிருவாங்க. எல்லாரோட தூக்குவாளிக காதுலயும் வெங்காயமோ, வத்தலோ, ஊறுகாயோ தொங்கிகிட்டு இருக்கும்.
அப்பல்லாம் ஒழவு வேல, தோட்டத்துக்கு மருந்தடிக்கிறது, தண்ணி பாய்ச்சுரதத் தவிர கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் பொம்பளைங்களே செஞ்சு முடிச்சுருவாங்க. களையெடுக்குறது, காய் புடுங்குறது, பருத்தி எடுக்குறது இப்படி...
தோட்டம் வச்சிருக்குற சம்சாரிகளுக்கு, ஒவ்வொரு மகசூலுக்கு அப்புறமும் தோட்டத்துக்கு குப்ப உரம் போட்டு, நல்லா உழுது, வெள்ளாமைக்கு தக்கன தண்ணி பாச்சி, அடியுரம், மேலுரம் போட்டு, களையெடுத்து, மருந்தடிச்சு, காவ காத்து, மறுபடி மகசூல் எடுக்குற வரைக்கும் வேல சரியாத்தான் இருக்கும்.
அப்ப அப்ப நானும் தோட்டத்துக்குப் போவனே... அங்க போனா எப்படி அப்பா தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சுராருன்னு சூதானமா பாத்துகிட்டு இருப்பேன். பம்புசெட் ரூமு ரெண்டு அடுக்கா இருக்கும். ரூமுக்கு உள்ள நுழையற இடத்துல தரையெல்லாம் இருக்காது. வெறுமனே பலகைகளை வச்சு அடச்சி, தரை மாதிரி செஞ்சிருப்பாங்க. ஒரு ஓரமா சின்ன வாசல் மாதிரி இருக்கும் பலகையை தூக்குனா.. ஏணிப்படி வழியா கீழ பம்புசெட் இருக்குற இடத்துக்கு போகலாம். மம்பட்டி, கொத்து, சாக்கு இப்படி கொஞ்சம் ஒழவு சாமானுங்க இருக்கும். அப்புறம் வேலக்கி வர்றவங்களோட தூக்குவாளி வைக்கிறதுக்கு, மத்தியானம் வெயிலா இருந்துச்சுன்னா ஒக்காந்து சாப்புடறதுக்கு - இதுக்கெல்லாம் வசதியா இருக்கும்.
மோட்டார போடுறதுக்கு முன்னாடி முக்கியமா ஒண்ணு செஞ்சாகணும். பம்புசெட்டுல இருந்து தண்ணி வந்து விழுற இடத்துல தொட்டி மாதிரி கட்டியிருப்போம்ல.. அதுல அரையடிக்கு எப்பயும் தண்ணி தேங்கிதான் இருக்கும். அதுல இருந்து ஒரு டப்பா வச்சுகிட்டு தண்ணிய மோண்டு மோண்டு தண்ணி வர்ற பைப்ல ஊத்தணும். பம்புல இருக்குற சின்ன வால்வ தெறந்து வச்சுருக்கணும். எப்ப அந்த வால்வுல தண்ணி பீச்சிகிட்டு அடிக்குதோ, அப்ப வால்வ மூடிட்டு ஒடனே மோட்டாரைப் போடணும். மொதல்ல மெயின் சுட்சு மாதிரி இருக்கும்ல, அந்த சுட்ச கீழ அமுக்கணும், அப்புறமா மேல தூக்கிவிட்ரணும். அப்பத்தான் மோட்டாரு நல்லாத் தண்ணி எறைக்குமாம்.
தொட்டியில விழுந்து, வழிஞ்சு ஓடுற தண்ணிய வசதிக்கு தக்கன அங்கங்க மடைகட்டி திருப்பி விட்டுக்குவாங்க. தோட்டத்துல ஒவ்வொரு பாத்தியாதான் தண்ணிய பாச்சணும். ஒரு பாத்தி முடிஞ்சிருச்சுன்னா அதுக்கு வர்ற தண்ணிக்கு அணை போட்டுட்டு அடுத்த பாத்திக்கு தண்ணியத் திருப்பி விடணும்.
அருவில விழுற தண்ணி கணக்கா, அந்த தண்ணித்தொட்டில நின்னுகிட்டு குழாத்தண்ணில குளிக்கிறதும் ரொம்ப நல்லா இருக்கும். நாளு முழுக்க வேல பாத்துட்டு, வேகமா வர்ற பம்புசெட்டு தண்ணியில குளிச்சா அம்புட்டு அலுப்பும் தூசா பறந்து போயிரும்ல.
--- தொடரும்.
தோட்டம்
எனக்கு வெவரம் தெரியும் போது ரெண்டு ஏக்கர்ல தோட்டமும், கொஞ்சம் வானம் பாத்த பூமியும் எங்களுக்கு சொந்தமா இருந்திச்சு. தோட்டம்னா நல்ல பெரிய கெணறு, பம்புசெட் வசதியோட இருந்துச்சு. தாத்தா அவரோட புள்ளங்க நாலு பேருக்கும் சரியா இடத்த பிரிச்சு கொடுத்திருந்தாரு. ஊருக்கு வடமேக்க, வடக்காறு ஓரமா, வண்டியோட பக்கத்துலயே இருந்துச்சு. தோட்டத்துக்கு வடக்கயோ இல்லாட்டி மேக்கயோ நடந்தா கொஞ்ச தூரத்துலேயே ஆறு வந்திரும். அதனால கெணத்துல எந்தக்காலத்துலயும் தண்ணி வத்துனதே கெடயாது. கெணறுன்னா சரியான கருங்கல்லுதான். ஊத்து கணக்கா அங்க அங்க கல்லுல இருந்து தண்ணி வரும். எப்படியும் கிட்டத்தட்ட இருபதடிக்கு இருபதடி அளவுக்கு கெணறு இருக்கும். பம்புசெட் எங்க தோட்டத்துல இருந்தாலும் கெணறும் பம்புசெட்டும் சித்தப்பாவுக்கும் எங்களுக்கும் பொதுவானது.
பக்கத்துல ரெண்டு மூணு கெணத்துக்கு பம்பு செட்டு வசதி கெடயாது. அங்க எல்லாம் என்ன செஞ்சிருப்பாங்கன்னா.. கெணத்துக்கு மேல ஒரு பக்கமா சரிவா மண்ணு குமிச்சு மேடா செஞ்சி வச்சிருப்பாங்க. கெணத்த ஒட்டி கமல மாட்டுறதுக்கு ஒரு நெலப்படி மாதிரி மரத்துல செஞ்சி வச்சிருப்பாங்க. பெரிய தோலுல பண்ணுன கொடம் மாதிரி இருக்குறத கயித்துல கட்டி தண்ணி எறைக்க தோதா வச்சிருப்பாங்க. ரெட்டை மாட்டை பூட்டிகிட்டு சரிவா இருக்குற மண்மேட்டுல மேல இருந்து கீழ இருந்து மேல வரும் போது கெணத்துல இருக்குற தண்ணில அது முங்கிக்கும். மேல இருந்து கீழ மாட்ட பத்திகிட்டு வரும் போது நெறஞ்சிருக்கிற தண்ணி வாய்க்கால்ல வந்து கொட்டும். தண்ணி எறைக்க ஒரு ஆளு, தண்ணி பாய்ச்ச ஒரு ஆளுன்னு ரெண்டு பேரு கண்டிப்பா வேலைக்கி வேணும். நாளு முழுக்க வேலையப்பாக்கணும். பாவம்.
எங்க தோட்டத்துக்கு மத்தியில, நல்ல ஒசரத்துல கரண்டுகம்பிக போகும். தோட்டத்துல பம்புசெட்டுக்கு வடக்க இருந்த எடம் மாத்திரம் கொஞ்சம் ஒசரமா இருக்கும்.
தோட்டத்துக்கு வடக்கு பக்கம் மாத்திரம்தான் வேலி இருந்திச்சு. வேலின்னா, கருவேலமரம், கொடுக்காப்புளி மரம், அத்திமரம், பூவரச மரம், வேப்ப மரம் ...இப்படி தினுசா மரங்க இருக்கும். மத்த மூணு பக்கமும் தோட்டந்தாங்கிறதால எல்லாம் வரப்பு மட்டும்தான் எல்லையா இருக்கும். கெணத்து பக்கத்துல அஞ்சாறு தென்னமரம் வரப்போரமா இருக்கும்.
வரப்புக ஓரமா தண்ணி போறதுக்கு வசதியா சின்ன வாய்க்கால் மாதிரி நெடுக இருக்கும். வரப்போரத்துல அங்கங்க வெண்டக்கா செடிக, ஆமணக்கு செடிக எல்லாம் இருக்கும். வரப்புகளும் கூட புல்லு வெளஞ்சு... சும்மா அப்படியே மெத்தை கணக்கா... நடக்குறதுக்கு ரொம்ப சுகமா இருக்கும்.
தோட்டத்துல என்ன என்ன போட்டுருக்கோம் தெரியுமா! மிளகா, கத்தரிக்கா, கேழ்வரகு, சீனி அவரக்கா, வெங்காயம், தட்டாம்பயிறு, தக்காளி, சோளம், இப்படி நெறய... அப்ப அப்ப மாறிகிட்டே இருக்கும். ஆனா அடிக்கடி போட்டது பருத்திதான். அது என்னமோ பணப்பயிராம். காசு நெறய கெடைக்குமாம்...ஹம். பக்கத்து தோட்டங்கள்ல சூரியகாந்திப்பூ, எள்ளு, கானம், மக்காச்சோளம், நெலக்கடல, சக்கரவள்ளிக்கெழங்கு இதெல்லாம் கூட போட்டிருக்காங்க.
தோட்டம் ஊருல இருந்து கிட்டத்தட்ட ஒண்ணரை இல்லாட்டி ரெண்டு கிலோமீட்டர் தூரமிருக்கும். அப்பா வெள்ளனயே தோட்டத்துக்கு போயிருவாரு.
அப்பல்லாம் போஜராஜா மில்லுல ஆறேமுக்காலுக்கு சங்கு அடிக்குதுன்னா எல்லோரும் வேலைக்கு ரெடியா இருப்பாங்க. தோட்டத்துக்குப் போறவங்க எல்லோரும் பழயசாதத்தை தூக்குவாளியில எடுத்துகிட்டு கெளம்பிருவாங்க. எல்லாரோட தூக்குவாளிக காதுலயும் வெங்காயமோ, வத்தலோ, ஊறுகாயோ தொங்கிகிட்டு இருக்கும்.
அப்பல்லாம் ஒழவு வேல, தோட்டத்துக்கு மருந்தடிக்கிறது, தண்ணி பாய்ச்சுரதத் தவிர கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் பொம்பளைங்களே செஞ்சு முடிச்சுருவாங்க. களையெடுக்குறது, காய் புடுங்குறது, பருத்தி எடுக்குறது இப்படி...
தோட்டம் வச்சிருக்குற சம்சாரிகளுக்கு, ஒவ்வொரு மகசூலுக்கு அப்புறமும் தோட்டத்துக்கு குப்ப உரம் போட்டு, நல்லா உழுது, வெள்ளாமைக்கு தக்கன தண்ணி பாச்சி, அடியுரம், மேலுரம் போட்டு, களையெடுத்து, மருந்தடிச்சு, காவ காத்து, மறுபடி மகசூல் எடுக்குற வரைக்கும் வேல சரியாத்தான் இருக்கும்.
அப்ப அப்ப நானும் தோட்டத்துக்குப் போவனே... அங்க போனா எப்படி அப்பா தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சுராருன்னு சூதானமா பாத்துகிட்டு இருப்பேன். பம்புசெட் ரூமு ரெண்டு அடுக்கா இருக்கும். ரூமுக்கு உள்ள நுழையற இடத்துல தரையெல்லாம் இருக்காது. வெறுமனே பலகைகளை வச்சு அடச்சி, தரை மாதிரி செஞ்சிருப்பாங்க. ஒரு ஓரமா சின்ன வாசல் மாதிரி இருக்கும் பலகையை தூக்குனா.. ஏணிப்படி வழியா கீழ பம்புசெட் இருக்குற இடத்துக்கு போகலாம். மம்பட்டி, கொத்து, சாக்கு இப்படி கொஞ்சம் ஒழவு சாமானுங்க இருக்கும். அப்புறம் வேலக்கி வர்றவங்களோட தூக்குவாளி வைக்கிறதுக்கு, மத்தியானம் வெயிலா இருந்துச்சுன்னா ஒக்காந்து சாப்புடறதுக்கு - இதுக்கெல்லாம் வசதியா இருக்கும்.
மோட்டார போடுறதுக்கு முன்னாடி முக்கியமா ஒண்ணு செஞ்சாகணும். பம்புசெட்டுல இருந்து தண்ணி வந்து விழுற இடத்துல தொட்டி மாதிரி கட்டியிருப்போம்ல.. அதுல அரையடிக்கு எப்பயும் தண்ணி தேங்கிதான் இருக்கும். அதுல இருந்து ஒரு டப்பா வச்சுகிட்டு தண்ணிய மோண்டு மோண்டு தண்ணி வர்ற பைப்ல ஊத்தணும். பம்புல இருக்குற சின்ன வால்வ தெறந்து வச்சுருக்கணும். எப்ப அந்த வால்வுல தண்ணி பீச்சிகிட்டு அடிக்குதோ, அப்ப வால்வ மூடிட்டு ஒடனே மோட்டாரைப் போடணும். மொதல்ல மெயின் சுட்சு மாதிரி இருக்கும்ல, அந்த சுட்ச கீழ அமுக்கணும், அப்புறமா மேல தூக்கிவிட்ரணும். அப்பத்தான் மோட்டாரு நல்லாத் தண்ணி எறைக்குமாம்.
தொட்டியில விழுந்து, வழிஞ்சு ஓடுற தண்ணிய வசதிக்கு தக்கன அங்கங்க மடைகட்டி திருப்பி விட்டுக்குவாங்க. தோட்டத்துல ஒவ்வொரு பாத்தியாதான் தண்ணிய பாச்சணும். ஒரு பாத்தி முடிஞ்சிருச்சுன்னா அதுக்கு வர்ற தண்ணிக்கு அணை போட்டுட்டு அடுத்த பாத்திக்கு தண்ணியத் திருப்பி விடணும்.
அருவில விழுற தண்ணி கணக்கா, அந்த தண்ணித்தொட்டில நின்னுகிட்டு குழாத்தண்ணில குளிக்கிறதும் ரொம்ப நல்லா இருக்கும். நாளு முழுக்க வேல பாத்துட்டு, வேகமா வர்ற பம்புசெட்டு தண்ணியில குளிச்சா அம்புட்டு அலுப்பும் தூசா பறந்து போயிரும்ல.
--- தொடரும்.