பாரதி
28-09-2005, 05:50 PM
தேதியில்லா குறிப்புகள்
சினிமா... சினிமா...
இதப்பாத்ததும் உடனே எல்லாரும் வருவாங்கன்னு எனக்கும் நல்லாத்தெரியும். ஏன்னா நானும் ஒரு காலத்துல சினிமான்னா கிறுக்கா இருந்திருக்கேனே..! இந்தப்பதிவுக்கு முடிவு எல்லாம் இருக்காது. வேணும்கிறப்ப எழுதி தொடர்ச்சி 2... தொடர்ச்சி 3..ன்னு போட்டுகிட்டே இருக்கலாம்.
எனக்கு வெவரம் தெரிஞ்சப்ப சினிமா கொட்டகையில தரை டிக்கட்டு 25பைசா இருந்துச்சு. வீட்டுல இருந்து சினிமா போறாங்கன்னா அதுவே பெரிய கூட்டம் மாதிரிதான். எப்பவும் தர டிக்கட்டுக்குத்தான் போவோம். தேனியில ஸ்ரீராம், லெச்சுமின்னு ரெண்டு தியேட்டர்ங்க அப்ப இருந்துச்சு. எங்க ஊருலயும் அப்புறமா பழனியப்பா திரையரங்கம்னு ஒரு டூரிங் டாக்கீஸ் ஆரம்பிச்சாங்க.
ஸ்ரீராமுலயும் லெச்சுமிலயும் தர டிக்கட்டுன்னாலும் பள்ளிக்கூட புள்ளங்க படிக்கிற மாதிரி பெஞ்சுக போட்டிருப்பாங்க. ஆனா டூரிங் டாக்கீஸ்ல தர டிக்கட்டுன்னா மணல்லதான் ஒக்காந்து பாக்கணும். அநேகமா எல்லாத்தியேட்டர்லயும் தர டிக்கட்டுதான் கூட இருக்கும். அங்கதான் கூட்டமும் இருக்கும்.
டூரிங் டாக்கீஸ்ல தர டிக்கட்டுல சின்னப் புள்ளக பூராவும் மணல குமிச்சு, அதுக்கு மேலே உக்காந்து பாக்குங்க. ஏன்னா முன்னாடி ஒக்காந்துருக்குற பெரிசுக தல திரைய மறைக்கும்ல. அங்க கூட்டமில்லன்னு வச்சுக்கங்க, வசதியா துண்ட விரிச்சு படுத்துகிட்டே சினிமா பாக்கலாம். அந்த வசதியெல்லாம் ஏசி தியேட்டர்கள்ல கூட வராதுப்போய். குளுகுளுன்னு இருக்குற அந்த மணல்ல படுத்துக்கிட்டே சினிமா பாத்தோம்னு வைங்க... அப்பா என்னா ஒரு சுகம்.. அதெல்லாம் அனுபவிச்சுப் பாத்தவங்களுக்குத்தான் தெரியும்.
பொம்பளைங்க உக்காருர இடத்துக்கும், ஆம்பளைங்க உக்காரு இடத்துக்கும் நடுவுல மண்ணால ஒரு தடுப்புச்சுவரு கட்டியிருப்பாங்க.
மொதல்ல எல்லாம் நான் அம்மா, அக்காவுங்க கூடத்தான் சினிமாக்கெல்லாம் போவேன். மாசத்துக்கொருக்கா இல்லாட்டி ரெண்டு தடவ போயிட்டு வருவோம். போகும்போதெல்லாம் கும்மாளத்தோட போற நானு, வர்றப்ப எல்லாம் கும்பகர்ணந்தான். யாராச்சும் நம்மள தூக்கிட்டுத்தான் வரணும். நடந்தெல்லாம் வரமுடியாதுன்னு கண்டீசனா சொல்லிப்புடுவேன். டூரிங் டாக்கீஸ்ன்னா பரவால்ல... கொஞ்சம் கிட்டக்கத்தான். ஆனா லெச்சுமி டாக்கீஸ நல்ல தூரம். அவ்ளோ தூரமும் தூக்கிட்டுத்தான் வரணும்னு ரொம்ப அடம் பிடிப்பேன்.
எந்த சினிமாவ முதல்ல பார்த்தேன்னு சரியா சொல்ல முடியல. மணி சித்தப்பா தேவதானப்பட்டி மஞ்சளார் டேமுக்கு மாட்டு வண்டி கட்டிகிட்டு போய் சுத்திப் பார்த்திட்டு, அப்படியே "சூரியன் சந்திரன்" படத்துக்கு கூட்டிட்டு போனாரு. மாயாஜாலக் கதைங்கிறதால நல்லாத்தான் இருந்துச்சு. அப்புறம் முன்னாடியே சொன்ன மாதிரி நெல்லிக்குப்பத்தில் "பூம்புகார்" படம் பாத்துருக்கேன்.
அப்புறமா ஐந்து பூமார்க் பீடிக்காரங்க விளம்பரத்துக்காக செளடம்மன் கோயிலு திடல்ல, சின்னதா தெர கட்டிக் காமிச்ச 'ஜக்கம்மா' படம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. வீரபாண்டி திருவிழா வந்தாப்போதும், ஒரு வாரத்துக்கு ஏகப்பட்ட சினிமா ஓசிக்கு பாக்கலாம். ஆனா சின்னப்பையங்கிறதால நம்மல எல்லாம் வீட்ல விடமாட்டாங்க. சிவராத்திரின்னா போதும் , கொட்டாயில ரெண்டு படம் போடுவான். ஒரு தடவ காசு கொடுத்தா போதும் ரெண்டு படம்லன்னு கூட்டமும் ஜேஜேன்னு இருக்கும். ரெண்டு படத்துல ஒண்ணு கண்டிப்பா சம்பூர்ண ராமாயணமா இருக்கும். அந்த ஒரு படத்தயே நான் முழுசா பாத்ததில்ல! அடுத்தப்படத்த பத்தி என்ன சொல்ல..?
நான் ரெண்டாவது மூணாவது படிக்கிற சமயம். ஒரு பண்டிகை நாள்ல - உள்ளூரு கொட்டாயில எம்ஜியாரு படம் 'இதய வீணை' போட்டிருந்தாங்களா, அக்காவுங்க எல்லாரும் என்னையும் கூட்டிகிட்டு சினிமாவுக்கு போனாங்க. தீப்பெட்டிக் கம்பெனி பக்கத்துல போகும் போதே விநாயகனே.. வினைதீர்ப்பவனே... பாட்டு ஸ்பீக்கர்ல கேட்டதும் அவசர அவசரமா எல்லாரும் ஓடுனோம். ஏன்னா.. படம் போடுறதுக்கு முன்னாடி கடைசியா போடுற பாட்டு அதுதான்.
அன்னைக்கு பாத்து என்னடான்னா... கூட்டம் சும்மா கங்குகரையில்லாம கெடக்கு. நாங்களும் அடிச்சு பிடிச்சு உள்ள போய்ட்டோம்ல. ஆம்பளங்க கூட்டம் நெறய ஆனதால, வர்ற ஆம்பளங்க எல்லாரும் பொம்பளங்க ஒக்காருர பக்கத்துலயும் வந்து உக்காந்திட்டாங்க. கூட்டம் வந்துகிட்டே இருக்கு. படத்த வேற போட்டுட்டாங்க. காஷ்மீர்..பியூட்டிபுல் காஷ்மீர்..ன்னு பாட்டு வந்துச்சோ இல்லையோ... கீத்து கொட்டகைதான...கூரையில இருந்த கம்ப உருவி ஒரு ஆள் சொழட்ட ஆரம்பிச்சாம் பாருங்க. கூட்டம் ஹே..மா..ன்னு கத்திகிட்டு வெளிய ஓடப்பாக்குது. உள்ள கலாட்டா வேற ஆரம்பிச்சிருச்சா.. நாங்களும் ஓட ஆரம்பிச்சோம். வெளிய வர சின்னதா ரெண்டு வழிதான் இருந்திச்சு.
அக்கா என் கைய பிடிச்சுகிட்டே ஓடும் போது முன்னாடி போன என்ன யாரோ வேகமா தள்ளி விட்டாங்களா.. சரியா வாசலுக்கு நேரா கீழ விழுந்துட்டேன். பின்னாடி வர்ற சனம் எல்லாம் அப்படியே திமுதிமுன்னு எம்மேல வந்து விழுறாங்க. அக்கா என்ன கூப்புடுற சத்தமும் கேக்குது. ஆனா பதில் பேச முடியல. கொஞ்ச நேரம் கழிச்சு யாரோ தூக்கிவிட்டாங்க. அதுக்கப்புறம் பாத்தா நான் வீட்ல படுத்துகிட்டுருக்கேன். அக்காவுங்க எல்லாருக்கும் சரியான திட்டு. நெஞ்செல்லாம் ஒரு மாதிரி அடைக்கிறாப்ல இருந்திச்சு. வலி வேற. அம்மா தேங்கா கஞ்சி காய்ச்சிட்டு வந்து ஊட்டி விட்டாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு சினிமாங்கிற பேச்சையே யாரும் எடுக்கல.
-- இதன் தொடர்ச்சி எதிர்காலத்தில் வெளிவரக்கூடும்.
சினிமா... சினிமா...
இதப்பாத்ததும் உடனே எல்லாரும் வருவாங்கன்னு எனக்கும் நல்லாத்தெரியும். ஏன்னா நானும் ஒரு காலத்துல சினிமான்னா கிறுக்கா இருந்திருக்கேனே..! இந்தப்பதிவுக்கு முடிவு எல்லாம் இருக்காது. வேணும்கிறப்ப எழுதி தொடர்ச்சி 2... தொடர்ச்சி 3..ன்னு போட்டுகிட்டே இருக்கலாம்.
எனக்கு வெவரம் தெரிஞ்சப்ப சினிமா கொட்டகையில தரை டிக்கட்டு 25பைசா இருந்துச்சு. வீட்டுல இருந்து சினிமா போறாங்கன்னா அதுவே பெரிய கூட்டம் மாதிரிதான். எப்பவும் தர டிக்கட்டுக்குத்தான் போவோம். தேனியில ஸ்ரீராம், லெச்சுமின்னு ரெண்டு தியேட்டர்ங்க அப்ப இருந்துச்சு. எங்க ஊருலயும் அப்புறமா பழனியப்பா திரையரங்கம்னு ஒரு டூரிங் டாக்கீஸ் ஆரம்பிச்சாங்க.
ஸ்ரீராமுலயும் லெச்சுமிலயும் தர டிக்கட்டுன்னாலும் பள்ளிக்கூட புள்ளங்க படிக்கிற மாதிரி பெஞ்சுக போட்டிருப்பாங்க. ஆனா டூரிங் டாக்கீஸ்ல தர டிக்கட்டுன்னா மணல்லதான் ஒக்காந்து பாக்கணும். அநேகமா எல்லாத்தியேட்டர்லயும் தர டிக்கட்டுதான் கூட இருக்கும். அங்கதான் கூட்டமும் இருக்கும்.
டூரிங் டாக்கீஸ்ல தர டிக்கட்டுல சின்னப் புள்ளக பூராவும் மணல குமிச்சு, அதுக்கு மேலே உக்காந்து பாக்குங்க. ஏன்னா முன்னாடி ஒக்காந்துருக்குற பெரிசுக தல திரைய மறைக்கும்ல. அங்க கூட்டமில்லன்னு வச்சுக்கங்க, வசதியா துண்ட விரிச்சு படுத்துகிட்டே சினிமா பாக்கலாம். அந்த வசதியெல்லாம் ஏசி தியேட்டர்கள்ல கூட வராதுப்போய். குளுகுளுன்னு இருக்குற அந்த மணல்ல படுத்துக்கிட்டே சினிமா பாத்தோம்னு வைங்க... அப்பா என்னா ஒரு சுகம்.. அதெல்லாம் அனுபவிச்சுப் பாத்தவங்களுக்குத்தான் தெரியும்.
பொம்பளைங்க உக்காருர இடத்துக்கும், ஆம்பளைங்க உக்காரு இடத்துக்கும் நடுவுல மண்ணால ஒரு தடுப்புச்சுவரு கட்டியிருப்பாங்க.
மொதல்ல எல்லாம் நான் அம்மா, அக்காவுங்க கூடத்தான் சினிமாக்கெல்லாம் போவேன். மாசத்துக்கொருக்கா இல்லாட்டி ரெண்டு தடவ போயிட்டு வருவோம். போகும்போதெல்லாம் கும்மாளத்தோட போற நானு, வர்றப்ப எல்லாம் கும்பகர்ணந்தான். யாராச்சும் நம்மள தூக்கிட்டுத்தான் வரணும். நடந்தெல்லாம் வரமுடியாதுன்னு கண்டீசனா சொல்லிப்புடுவேன். டூரிங் டாக்கீஸ்ன்னா பரவால்ல... கொஞ்சம் கிட்டக்கத்தான். ஆனா லெச்சுமி டாக்கீஸ நல்ல தூரம். அவ்ளோ தூரமும் தூக்கிட்டுத்தான் வரணும்னு ரொம்ப அடம் பிடிப்பேன்.
எந்த சினிமாவ முதல்ல பார்த்தேன்னு சரியா சொல்ல முடியல. மணி சித்தப்பா தேவதானப்பட்டி மஞ்சளார் டேமுக்கு மாட்டு வண்டி கட்டிகிட்டு போய் சுத்திப் பார்த்திட்டு, அப்படியே "சூரியன் சந்திரன்" படத்துக்கு கூட்டிட்டு போனாரு. மாயாஜாலக் கதைங்கிறதால நல்லாத்தான் இருந்துச்சு. அப்புறம் முன்னாடியே சொன்ன மாதிரி நெல்லிக்குப்பத்தில் "பூம்புகார்" படம் பாத்துருக்கேன்.
அப்புறமா ஐந்து பூமார்க் பீடிக்காரங்க விளம்பரத்துக்காக செளடம்மன் கோயிலு திடல்ல, சின்னதா தெர கட்டிக் காமிச்ச 'ஜக்கம்மா' படம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. வீரபாண்டி திருவிழா வந்தாப்போதும், ஒரு வாரத்துக்கு ஏகப்பட்ட சினிமா ஓசிக்கு பாக்கலாம். ஆனா சின்னப்பையங்கிறதால நம்மல எல்லாம் வீட்ல விடமாட்டாங்க. சிவராத்திரின்னா போதும் , கொட்டாயில ரெண்டு படம் போடுவான். ஒரு தடவ காசு கொடுத்தா போதும் ரெண்டு படம்லன்னு கூட்டமும் ஜேஜேன்னு இருக்கும். ரெண்டு படத்துல ஒண்ணு கண்டிப்பா சம்பூர்ண ராமாயணமா இருக்கும். அந்த ஒரு படத்தயே நான் முழுசா பாத்ததில்ல! அடுத்தப்படத்த பத்தி என்ன சொல்ல..?
நான் ரெண்டாவது மூணாவது படிக்கிற சமயம். ஒரு பண்டிகை நாள்ல - உள்ளூரு கொட்டாயில எம்ஜியாரு படம் 'இதய வீணை' போட்டிருந்தாங்களா, அக்காவுங்க எல்லாரும் என்னையும் கூட்டிகிட்டு சினிமாவுக்கு போனாங்க. தீப்பெட்டிக் கம்பெனி பக்கத்துல போகும் போதே விநாயகனே.. வினைதீர்ப்பவனே... பாட்டு ஸ்பீக்கர்ல கேட்டதும் அவசர அவசரமா எல்லாரும் ஓடுனோம். ஏன்னா.. படம் போடுறதுக்கு முன்னாடி கடைசியா போடுற பாட்டு அதுதான்.
அன்னைக்கு பாத்து என்னடான்னா... கூட்டம் சும்மா கங்குகரையில்லாம கெடக்கு. நாங்களும் அடிச்சு பிடிச்சு உள்ள போய்ட்டோம்ல. ஆம்பளங்க கூட்டம் நெறய ஆனதால, வர்ற ஆம்பளங்க எல்லாரும் பொம்பளங்க ஒக்காருர பக்கத்துலயும் வந்து உக்காந்திட்டாங்க. கூட்டம் வந்துகிட்டே இருக்கு. படத்த வேற போட்டுட்டாங்க. காஷ்மீர்..பியூட்டிபுல் காஷ்மீர்..ன்னு பாட்டு வந்துச்சோ இல்லையோ... கீத்து கொட்டகைதான...கூரையில இருந்த கம்ப உருவி ஒரு ஆள் சொழட்ட ஆரம்பிச்சாம் பாருங்க. கூட்டம் ஹே..மா..ன்னு கத்திகிட்டு வெளிய ஓடப்பாக்குது. உள்ள கலாட்டா வேற ஆரம்பிச்சிருச்சா.. நாங்களும் ஓட ஆரம்பிச்சோம். வெளிய வர சின்னதா ரெண்டு வழிதான் இருந்திச்சு.
அக்கா என் கைய பிடிச்சுகிட்டே ஓடும் போது முன்னாடி போன என்ன யாரோ வேகமா தள்ளி விட்டாங்களா.. சரியா வாசலுக்கு நேரா கீழ விழுந்துட்டேன். பின்னாடி வர்ற சனம் எல்லாம் அப்படியே திமுதிமுன்னு எம்மேல வந்து விழுறாங்க. அக்கா என்ன கூப்புடுற சத்தமும் கேக்குது. ஆனா பதில் பேச முடியல. கொஞ்ச நேரம் கழிச்சு யாரோ தூக்கிவிட்டாங்க. அதுக்கப்புறம் பாத்தா நான் வீட்ல படுத்துகிட்டுருக்கேன். அக்காவுங்க எல்லாருக்கும் சரியான திட்டு. நெஞ்செல்லாம் ஒரு மாதிரி அடைக்கிறாப்ல இருந்திச்சு. வலி வேற. அம்மா தேங்கா கஞ்சி காய்ச்சிட்டு வந்து ஊட்டி விட்டாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு சினிமாங்கிற பேச்சையே யாரும் எடுக்கல.
-- இதன் தொடர்ச்சி எதிர்காலத்தில் வெளிவரக்கூடும்.