rambal
19-04-2003, 07:55 AM
ஏதேதோ
கண்கள் தேடி
இறுதியில்
எனக்குள் அகப்பட்டு பின்
என்னை இம்சித்து
என் சுவாசமாய் மாறி
என் கனவுகளில்
கூட எனைத்தண்டித்து
அந்த உருண்ட விழி..
கன்னக்குழி..
தெற்றுப்பல் சிரிப்பு..
இப்படியான சிலாகிப்புகளில்
எனைத் திரியவிட்டு..
ஓரவிழியில் தெறித்து ஓடும்
மின்னலைப் பிடிக்கப் போய்
ஐன்ஸ்டீனாய் ஆகி..
அந்தத் திமிரும்
தெனாவட்டும் கலந்த
உன் பார்வை வரத்திற்கு
தினமும் எனை ஏங்கவிட்டு...
படிக்கடிகளில் தொற்றிக் கொண்டு
திரிந்த என்னை
அந்த மந்திரக் குரலுக்கு கட்டுப் பட்டு
உன் உதடு உச்சரிக்கும்
ஓசையைக் கேட்பதற்காக
படிக்கட்டுகளையே
விவாகரத்து செய்துவிட்டு..
உனக்குப் பிடிக்காத
என் நீளக்கூந்தலை
வெட்டப்போய்
முடி திருத்துபவனிடம்
சண்டையிட்டு..
இப்படியாக உனக்கு நான் எழுதும் கடிதம் ஆரம்பிக்கிறது..
அன்பே.....
கண்கள் தேடி
இறுதியில்
எனக்குள் அகப்பட்டு பின்
என்னை இம்சித்து
என் சுவாசமாய் மாறி
என் கனவுகளில்
கூட எனைத்தண்டித்து
அந்த உருண்ட விழி..
கன்னக்குழி..
தெற்றுப்பல் சிரிப்பு..
இப்படியான சிலாகிப்புகளில்
எனைத் திரியவிட்டு..
ஓரவிழியில் தெறித்து ஓடும்
மின்னலைப் பிடிக்கப் போய்
ஐன்ஸ்டீனாய் ஆகி..
அந்தத் திமிரும்
தெனாவட்டும் கலந்த
உன் பார்வை வரத்திற்கு
தினமும் எனை ஏங்கவிட்டு...
படிக்கடிகளில் தொற்றிக் கொண்டு
திரிந்த என்னை
அந்த மந்திரக் குரலுக்கு கட்டுப் பட்டு
உன் உதடு உச்சரிக்கும்
ஓசையைக் கேட்பதற்காக
படிக்கட்டுகளையே
விவாகரத்து செய்துவிட்டு..
உனக்குப் பிடிக்காத
என் நீளக்கூந்தலை
வெட்டப்போய்
முடி திருத்துபவனிடம்
சண்டையிட்டு..
இப்படியாக உனக்கு நான் எழுதும் கடிதம் ஆரம்பிக்கிறது..
அன்பே.....