PDA

View Full Version : இந்திய கிரிக்கட் வீரர்கள் மீது மீண்டும் 



Narathar
15-09-2005, 11:48 PM
இந்திய கிரிக்கட் வீரர்களை மீண்டும் ஆட்கொள்ளப்போகும் சூதாட்ட விவகாரம்

(இது இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியான தகவல் இந்திய அன்பர்களுக்காக..)


கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் மீண்டும் எழுகிறது மும்பை அழகி வெளியிட்ட தகவல்களால் அதிர்ச்சி

சிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக பிரச்சினை எழுந்துள்ளது.
கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது சூதாட்டம் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கோடிக்கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு என, சூதாட்ட தரகர்கள் உள்ளனர்.
இந்தத் தரகர்கள் வீரர்களை தொடர்பு கொண்டு போட்டி தொடங்குவதற்கு முன்னரே ஆட்டத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என தீர்மானித்து விடுகின்றனர். இதற்காக வீரர்களுக்கு கோடி, கோடியாக பணத்தை அவர்கள் கொட்டிக் கொடுக்கின்றனர்.
சில ஆண்டுகள் பெரிய அளவில் சூதாட்டப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. தற்போது இந்திய வீரர்கள் மீண்டும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரச்சினை எழுந்துள்ளது. மும்பை நடன அழகி தாருன்னுகான் என்பவரை, அதிகமாக சொத்து குவித்ததாக கூறி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியபோது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மும்பை பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாருன்னுகானுக்கும், சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியிலும், அதேபோல் சிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் போட்டியின் போதும் சூதாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.
நியூஸிலாந்தில் நடந்த 3 நாடுகள் இறுதி ஆட்டத்தில் முதலில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 25 ஓவர்களில் இந்திய வீரர்கள் மோசமாக ஆடினர். இதனால் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வேண்டிய ஸ்கோர் 276 இல் நின்றது. இதில் இந்திய அணி தோல்வியையும் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்தித்திருக்கலாம் என மும்பையைச் சேர்ந்த பிரபல பத்திரிகைகளும் ரெலிவிஷன்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் டுபாயில் இருந்து சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மார்ட்டின் ஹாகின்ஸ், அலன் பீக்காக் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு அதிகாரபூர்வமற்றது என்றாலும் ஊழல் தடுப்பு பிரிவினர் இந்தியா வந்துள்ளதால் சூதாட்டம் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. சூதாட்டம் நடந்திருக்கும் பட்சத்தில் அதில் இந்திய வீரர்கள் இடம்பெறாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே இதில் தொடர்புள்ள வீரர்களிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்;
"இந்தியாவிற்கு ஊழல் தடுப்பு பிரிவினர் வந்தது உண்மை. ஆனால் எதற்காக வந்துள்ளனர் என்று தெரியாது. பொதுவாக ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தப் பிரிவினர் பயணம் செய்வது வழக்கம். அதுபோல் தற்போது இந்தியாவிற்கும் வந்திருக்கலாம்" என்றார்.
இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் ரன்பீர்சிங் மகேந்திரா இது குறித்து கூறியதாவது;
ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லிக்கு வந்தது குறித்து எனக்கு எந்தவித தகவலும் கிடையாது. கேள்விப்பட்ட வகையில் 2 அதிகாரிகள் வந்ததாக தெரிகிறது. அவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளாததால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
மேலும், கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி இருக்கும்போது இது தொடர்பாக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

pradeepkt
16-09-2005, 04:55 AM
இன்று கூட இந்திய வீரர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வதற்காக இந்திய கிரிக்கெட் சங்கத்தினர் ஐ சி சி இருக்கும் துபாய்க்குச் செல்கின்றனராம்.
என்று தணியும் இந்த குறுக்கு வழி தாகம்?

baranee
16-09-2005, 09:17 AM
உங்க ஊர் முரளிக்கும் அதில் பங்கு இருக்கும் போல இருக்கே , அதை பற்றி தினக்குரல் எதுவும் எழுதவில்லையா ?
நடன அழகி பற்றி எழுதி இருப்பவர்கள் முரளி பற்றி ஒன்றும் எழுதவில்லையா ?
http://www.mid-day.com/news/city/2005/september/118630.htm

http://www.deccanherald.com/deccanherald/sep152005/index215272005914.asp

babu4780
16-09-2005, 09:19 AM
இன்று கூட இந்திய வீரர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வதற்காக இந்திய கிரிக்கெட் சங்கத்தினர் ஐ சி சி இருக்கும் துபாய்க்குச் செல்கின்றனராம்.
என்று தணியும் இந்த குறுக்கு வழி தாகம்?

அப்படியே ஜென்டில்மேன் க்ளைமேக்ஸ் காட்சியிலே வர இசை ய ..பின்னாடி ஓடவிட்டா இன்னும் நல்லாருக்கும்ல ??

Narathar
16-09-2005, 11:44 PM
உங்க ஊர் முரளிக்கும் அதில் பங்கு இருக்கும் போல இருக்கே , அதை பற்றி தினக்குரல் எதுவும் எழுதவில்லையா ?
நடன அழகி பற்றி எழுதி இருப்பவர்கள் முரளி பற்றி ஒன்றும் எழுதவில்லையா ?
http://www.mid-day.com/news/city/2005/september/118630.htm

http://www.deccanherald.com/deccanherald/sep152005/index215272005914.asp

இதோ தினக்குரல் காரர்கள் வஞ்சகம் இல்லாமல் எழுதிவிட்டார்கள்................................


கிரிக்கெட்சூதாட்டவிவகாரத்தில்முரளிக்குதொடர்பு? மும்பைஅழகிதாருன்னுகானிடம்பொலிஸார்விசாரணை
-இந்தியவீரர்கள்மூவரும்சிக்கலாம்


கிரிக்கெட்சூதாட்டவிவகாரம்மீண்டும்சூடுபிடித்துள்ளநிலையில்இந்தவிவகாரத்தில்
இலங்கையின்சுழற்பந்துவீச்சாளர்முத்தையாமுரளிதரன்சிக்கும்வாய்ப்புகளுள்ளதாக
இந்தியப்பத்திரிகைகள்தெரிவித்துள்ளன.


மும்பைநடனஅழகிஒருவருடனானமுரளியின்தொடர்பையடுத்தேசூதாட்டவிவகாரத்தில்
முரளிதரனின்பெயரும்பலமாகஅடிபடுகிறது. இதேநேரம், மும்பைநடனஅழகிதாருன்னுகானுடன்
தொடர்புஇருப்பதாகமும்பைபொலிஸார்தெரிவித்துள்ளனர்.


http://www.thinakural.com/New%20web%20site/web/2005/September/16/sp2.jpg

16 மாதங்களுக்குமுன்முரளிதரன்தனிப்பட்டபயணமாகமும்பைசென்றுள்ளார். அப்போதுஅவருக்குநடனஅழகியைநடிகர்ஆதித்யபஞ்சோலிஅறிமுகப்படுத்திவைத்துள்ளார்.

`மதுபானசாலையில்' நடந்தஇந்தச்சந்திப்பின்போதுமுரளிதரன்நடனஅழகியின்
அழகில்மயங்கியுள்ளார். பின்னர்அவருக்காகஇலட்சக்கணக்கில்பணத்தை
தண்ணியாகசெலவிட்டுள்ளார்என்றதகவலும்பொலிஸாருக்குதெரியவந்திருக்கிறது.


இதனால்முரளிதரன்சூதாட்டபிரச்சினையில்சிக்கஅதிகவாய்ப்புஇருப்பதாககூறப்படுகிறது. இதுகுறித்தும்விசாரணைகள்நடைபெறுகின்றன.


கிரிக்கெட்சூதாட்டத்தில்இந்தியவீரர்கள் 3 பேருக்குதொடர்புஇருப்பதாக
சந்தேகம்எழுந்துள்ளது. இதுதொடர்பாகஐ.சி.சி. அவர்களைகண்காணித்துவருகிறது.

கோடியில்புரளும்கிரிக்கெட்டில்அவ்வப்போதுசூதாட்டம்தலைதூக்குவதுஉண்டு. 2000 - 2001 ஆம்ஆண்டுதென்ஆபிரிக்கஅணிஇந்தியாவந்தபோதுஅந்தஅணிவீரர்கள்சூதாட்டத்தில்
ஈடுபட்டதுகண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பரபரப்பைஏற்படுத்தியஇந்தபிரச்சினைக்குபிறகு
சூதாட்டபுகார்தலைதூக்காமல்இருந்தது.

இந்தநிலையில்கிரிக்கெட்சூதாட்டபுகார்மீண்டும்விசுவரூபம்எடுக்கஆரம்பித்துள்ளது.

மும்பைநடனஅழகிதாருன்னுகான்வருமானவரித்துறையினரிடம்சிக்கியவிசாரணையில்
கிணறுதோண்டபூதம்கிளம்பியகதையாககிரிக்கெட்சூதாட்டவிவகாரம்வெளிப்பட்டுள்ளது. இதுதொடர்பாகமும்பைபொலிஸார்விசாரணைநடத்திவருகிறார்கள்.


இதில்சமீபத்தில்இலங்கைமற்றும்சிம்பாப்வேயில்நடந்த 3 நாடுகள்போட்டியில்சூதாட்டம்நடந்ததாகதெரியவந்திருப்பதாககூறப்படுகிறது. நடனஅழகிதாருன்னுகான்சூதாட்டகும்பலுடன்தொடர்புவைத்திருந்ததுடன், கிரிக்கெட்வீரர்கள்சிலருடனும்இந்திநடிகர்களுடனும்நெருங்கிய
தொடர்புடையவர்என்றுதெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்துஐ.சி.சி.
ஊழல்தடுப்புஅதிகாரிகள்மார்ட்டின்ஹாகின்ஸ், அலன்பீக்காக்ஆகியோர்மும்பைவந்தனர்.

அவர்கள்டெல்லியில்உள்ளசி.பி.ஐ. அலுவலகத்துக்கும்சென்றுள்ளனர்.

இதனால்சூதாட்டபுகார்மேலும்சூடுபிடித்துள்ளது.

அவர்களிடம்கேட்டதற்குவிபரங்கள்எதனையும்வெளியிடமறுத்துவிட்டனர். இந்தியாவில்விசாரணைநடக்கிறதுஎன்றுமட்டும்பதிலளித்தனர்.

இதற்கிடையில்இந்தசூதாட்டத்தில்இந்தியகிரிக்கெட்வீரர்கள்ஷேவாக், சாகீர்கான், அகர்கார்மற்றும்இந்திசினிமாநட்சத்திரங்கள், சூதாட்டதரகர்கள்ஆகியோருக்குதொடர்பிருப்பதாகபரவலாகபேசப்படுகிறது.

இந்தநிலையில்இந்திநடிகர்ஆதித்யபஞ்சோலிகிரிக்கெட்சூதாட்டத்தில்
தொடர்புடையநடனஅழகிதாருன்னுகானுடன்தனக்குஎந்தவிததொடர்பும்இல்லை
என்றுமறுத்துள்ளார்.

நான்தாருன்னுகானைசந்தித்ததுகிடையாது. அவருக்குஇலங்கைவீரரைஅறிமுப்படுத்தவும்இல்லை. தாருன்னுகானுடன்தொடர்புஇருப்பதாகநிரூபித்தால்தண்டனையைஏற்கத்தயார்என்றுஅவர்கூறியுள்ளார்.

இளையவன்
17-09-2005, 08:15 AM
துடுப்பாட்ட சூதாட்டத்தில் தனக்கு தொடர்பிருப்பதாக வெளியாகும் செய்திகளை இலங்கை துடுப்பாட்ட அணியின் நட்சத்திரச் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மறுத்துள்ளார். துடுப்பாட்ட நிர்ணய சதி தொடர்பாக மும்பை காவல்துறையினரால் நேற்று வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்ட மதுபானச்சாலை நாட்டியக்காரி தாருன்னு கானுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக வெளியாகிய செய்திகளையும் முரளிதரன் முற்றாக மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஒரு வாரகாலமாக இந்திய செய்தி ஏடுகளில் முக்கிய செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த இரு நாட்களாக இந்தகைய செய்திகளில் முரளிதரனுடைய பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையிலேயே, இது தொடர்பாக நேற்று முந்நாள் வியாழக் கிழமை தனது சட்ட ஆலோசகர்களைச் சந்தித்து முரளிதரன், இது குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் சாத்தியங்கள் குறித்து விசாரணைகளை நடத்துமாறு கேட்டுள்ளார். இதே நேரம் இந்தச் செய்திகள் குறித்து முரளிதரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை ஸ்ரீ லங்கா துடுகப்பாட்ட கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் கிரிக்கட் சூதாட்டம் மற்றும் ஆட்ட நிர்ணய சதியில் எனக்கும் தொடர்பிருப்பது போல் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அவற்றுடன் எனக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை. இந்த செய்திகளானது என்னை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ள அதே நேரம் இந்தச் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை.

அண்மைக் காலங்களில் மும்பைக்கு பரிசளிப்பு வைபவங்களுக்காகவும், எங்கள் குடும்ப அலுவல்களுக்காகவும் சில தடவைகள் சென்றுவந்துள்ளேன். ஒரு சந்தர்ப்பத்தில் நடிகர் ஆதித்யா பஞ்சோலியை சந்தித்தேன். அப்போது அவர் என்னை இரவு விருந்திற்காக அழைத்திருந்தார். அவருடன் தீபா மதுபானச்சாலைக்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் கழிந்தபின் நான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிவிட்டேன்.
ஆனால் ஊடகங்கள் தெரிவிப்பது போன்று நான் எவரையும் சந்திக்கவில்லை. தாருன்னுகான் என்ற பெண்ணுடன் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனது வாழ்நாளில் நான் மதுபானச்சாலைக்குச் சென்றது அந்த ஒருதடவைதான். ஆனால் எனக்கும் இந்த மதுபானச்சாலைக்கும், நடனக்காரிக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுவது ஒரு அப்பட்டமான பொய். எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

அறிஞர்
19-09-2005, 08:11 PM
சூதாட்டம் இல்லாத கிரிக்கெட்டா..... இவதான் நம்ம முத்தையாவுடன் இணைத்து பேசப்பட்டவள்

http://i13.photobucket.com/albums/a282/aringar/muthaiah.jpg[/URL][URL="http://mail.google.com/mail/?view=att&disp=attd&attid=0.12&th=1066ba644fd947b8"] (http://i13.photobucket.com/albums/a282/aringar/muthaiah.jpg)

பரஞ்சோதி
19-09-2005, 08:21 PM
போல்ட் செய்பவரே போல்ட் ஆகிவிட்டாரே!

பிரியன்
20-09-2005, 03:53 AM
சூதாட்டம் இல்லாத கிரிக்கெட்டா..... இவதான் நம்ம முத்தையாவுடன் இணைத்து பேசப்பட்டவள்

http://i13.photobucket.com/albums/a282/aringar/muthaiah.jpg

என்னதான் பொண்ணு அழகா இருந்தாலும் முரளிதரன் மீது சந்தேகப் பட முடியவில்லை. இந்த ஊடகங்கள் எல்லாவற்றையும் பெரிது படுத்தி வெளியிடுபவை. அண்மை எடுத்துகாட்டு. பாராளுமன்ற வளாக தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜிலானி. பத்திரிக்கைகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு தங்கள் புலனாய்வு மூளையைக் கசக்கி அவர்தான் குற்றவாளி என்று கதை எழுதின( அவை எல்லாம் போலிசார் தயாரித்த அறிக்கைகள் என்பது வேறு விசயம் ). ஆனால் உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்...
முரளி மீது சந்தேகப்படுவதைக் காட்டிலும் நாம் சிறிது காலம் காத்திருக்கலாம்.....

pradeepkt
20-09-2005, 05:16 AM
இந்தப் பொண்ணுதான் அந்தப் பொண்ணா?
பேசாம நானும் கிரிக்கெட் விளையாடக் கத்துகிட்டு இருக்கலாம் போல?

பிரியன்
20-09-2005, 05:19 AM
இந்தப் பொண்ணுதான் அந்தப் பொண்ணா?
பேசாம நானும் கிரிக்கெட் விளையாடக் கத்துகிட்டு இருக்கலாம் போல?
விநாச காலே விபரீத புத்தி:D :D :D :D

பரஞ்சோதி
20-09-2005, 05:24 AM
விநாச காலே விபரீத புத்தி:D :D :D :D

பிரியன், புரியாத பாசையில் திட்டுகிறார்,நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

உம், நானும் கூட கிரிக்கெட் பிளேயர் என்று சொல்லிகிட்டு அலைகிறேன். எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். B)

Narathar
20-09-2005, 11:59 AM
பிரியன், புரியாத பாசையில் திட்டுகிறார்,நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது தெரியாதா? இதுதான் அந்நியன் பாசையாயிற்றே?!!!


உம், நானும் கூட கிரிக்கெட் பிளேயர் என்று சொல்லிகிட்டு அலைகிறேன். எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். B)

கையில பட் மட்டும் இருந்தா போதுமா?
மனதில் பெட்டு கட்டும் தில்லு வேணும்

rajasi13
28-09-2005, 07:14 AM
சூதாட்டம் இல்லாத கிரிக்கெட்டா..... இவதான் நம்ம முத்தையாவுடன் இணைத்து பேசப்பட்டவள்

http://i13.photobucket.com/albums/a282/aringar/muthaiah.jpg[/URL][URL="http://mail.google.com/mail/?view=att&disp=attd&attid=0.12&th=1066ba644fd947b8"] (http://i13.photobucket.com/albums/a282/aringar/muthaiah.jpg)
இந்த பெண் பெயர் தாருன்னும் கான் இல்லை. இவர் ஒரு நடிகை. தன் படத்தை வெளியிட்டு சிலர் வதந்தி பரப்புவதாக இவர் புகார் தெரிவித்திருக்கிறார்.

பரஞ்சோதி
28-09-2005, 08:39 AM
இவர் ஒரு தெலுங்கு நடிகை, இப்படி போட்டு மானத்தை வாங்கிட்டாங்க.

pradeepkt
28-09-2005, 08:43 AM
தெலுங்குப் படமெல்லாம் நான் இன்னும் நிறையப் பாக்கணுமோ,
அண்ணாத்தை அமீரகத்தில இருந்து ஆந்திராவில நடக்குறதைப் புட்டுப் புட்டு வைக்கிறாரே

rajasi13
28-09-2005, 09:18 AM
என்னிடம் தாருன்னும் கான் படம் இருக்கு எப்படி அப்லோட் செய்வது

மன்மதன்
28-09-2005, 09:53 AM
எனக்கு ஜிமெயிலில் அனுப்பி வையுங்க :D :D

rajasi13
28-09-2005, 11:33 AM
எனக்கு ஜிமெயிலில் அனுப்பி வையுங்க :D :D
G Mail ID என்ன?

பிரியன்
28-09-2005, 02:57 PM
manmadan@gmail.com

poo
29-09-2005, 09:34 AM
யாரோ ஒரு தெலுங்கு நடிகை புகைப்படத்தை தாருணம்கான் என ஜி-மெயிலில் பரவ விட்டார்களே..

அதையே மீண்டும் போட்டு வெறுப்பேற்றி விடாதீர்கள் ராஜா!

rajasi13
29-09-2005, 09:44 AM
யாரோ ஒரு தெலுங்கு நடிகை புகைப்படத்தை தாருணம்கான் என ஜி-மெயிலில் பரவ விட்டார்களே..

அதையே மீண்டும் போட்டு வெறுப்பேற்றி விடாதீர்கள் ராஜா!
நண்பர் மன்மதனுக்கு அனுப்பி இருக்கிறேன்.