Narathar
15-09-2005, 11:48 PM
இந்திய கிரிக்கட் வீரர்களை மீண்டும் ஆட்கொள்ளப்போகும் சூதாட்ட விவகாரம்
(இது இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியான தகவல் இந்திய அன்பர்களுக்காக..)
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் மீண்டும் எழுகிறது மும்பை அழகி வெளியிட்ட தகவல்களால் அதிர்ச்சி
சிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக பிரச்சினை எழுந்துள்ளது.
கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது சூதாட்டம் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கோடிக்கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு என, சூதாட்ட தரகர்கள் உள்ளனர்.
இந்தத் தரகர்கள் வீரர்களை தொடர்பு கொண்டு போட்டி தொடங்குவதற்கு முன்னரே ஆட்டத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என தீர்மானித்து விடுகின்றனர். இதற்காக வீரர்களுக்கு கோடி, கோடியாக பணத்தை அவர்கள் கொட்டிக் கொடுக்கின்றனர்.
சில ஆண்டுகள் பெரிய அளவில் சூதாட்டப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. தற்போது இந்திய வீரர்கள் மீண்டும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரச்சினை எழுந்துள்ளது. மும்பை நடன அழகி தாருன்னுகான் என்பவரை, அதிகமாக சொத்து குவித்ததாக கூறி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியபோது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மும்பை பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாருன்னுகானுக்கும், சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியிலும், அதேபோல் சிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் போட்டியின் போதும் சூதாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.
நியூஸிலாந்தில் நடந்த 3 நாடுகள் இறுதி ஆட்டத்தில் முதலில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 25 ஓவர்களில் இந்திய வீரர்கள் மோசமாக ஆடினர். இதனால் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வேண்டிய ஸ்கோர் 276 இல் நின்றது. இதில் இந்திய அணி தோல்வியையும் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்தித்திருக்கலாம் என மும்பையைச் சேர்ந்த பிரபல பத்திரிகைகளும் ரெலிவிஷன்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் டுபாயில் இருந்து சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மார்ட்டின் ஹாகின்ஸ், அலன் பீக்காக் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு அதிகாரபூர்வமற்றது என்றாலும் ஊழல் தடுப்பு பிரிவினர் இந்தியா வந்துள்ளதால் சூதாட்டம் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. சூதாட்டம் நடந்திருக்கும் பட்சத்தில் அதில் இந்திய வீரர்கள் இடம்பெறாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே இதில் தொடர்புள்ள வீரர்களிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்;
"இந்தியாவிற்கு ஊழல் தடுப்பு பிரிவினர் வந்தது உண்மை. ஆனால் எதற்காக வந்துள்ளனர் என்று தெரியாது. பொதுவாக ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தப் பிரிவினர் பயணம் செய்வது வழக்கம். அதுபோல் தற்போது இந்தியாவிற்கும் வந்திருக்கலாம்" என்றார்.
இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் ரன்பீர்சிங் மகேந்திரா இது குறித்து கூறியதாவது;
ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லிக்கு வந்தது குறித்து எனக்கு எந்தவித தகவலும் கிடையாது. கேள்விப்பட்ட வகையில் 2 அதிகாரிகள் வந்ததாக தெரிகிறது. அவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளாததால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
மேலும், கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி இருக்கும்போது இது தொடர்பாக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
(இது இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியான தகவல் இந்திய அன்பர்களுக்காக..)
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் மீண்டும் எழுகிறது மும்பை அழகி வெளியிட்ட தகவல்களால் அதிர்ச்சி
சிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக பிரச்சினை எழுந்துள்ளது.
கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது சூதாட்டம் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கோடிக்கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு என, சூதாட்ட தரகர்கள் உள்ளனர்.
இந்தத் தரகர்கள் வீரர்களை தொடர்பு கொண்டு போட்டி தொடங்குவதற்கு முன்னரே ஆட்டத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என தீர்மானித்து விடுகின்றனர். இதற்காக வீரர்களுக்கு கோடி, கோடியாக பணத்தை அவர்கள் கொட்டிக் கொடுக்கின்றனர்.
சில ஆண்டுகள் பெரிய அளவில் சூதாட்டப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. தற்போது இந்திய வீரர்கள் மீண்டும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரச்சினை எழுந்துள்ளது. மும்பை நடன அழகி தாருன்னுகான் என்பவரை, அதிகமாக சொத்து குவித்ததாக கூறி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியபோது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மும்பை பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாருன்னுகானுக்கும், சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியிலும், அதேபோல் சிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் போட்டியின் போதும் சூதாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.
நியூஸிலாந்தில் நடந்த 3 நாடுகள் இறுதி ஆட்டத்தில் முதலில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 25 ஓவர்களில் இந்திய வீரர்கள் மோசமாக ஆடினர். இதனால் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வேண்டிய ஸ்கோர் 276 இல் நின்றது. இதில் இந்திய அணி தோல்வியையும் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்தித்திருக்கலாம் என மும்பையைச் சேர்ந்த பிரபல பத்திரிகைகளும் ரெலிவிஷன்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் டுபாயில் இருந்து சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மார்ட்டின் ஹாகின்ஸ், அலன் பீக்காக் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு அதிகாரபூர்வமற்றது என்றாலும் ஊழல் தடுப்பு பிரிவினர் இந்தியா வந்துள்ளதால் சூதாட்டம் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. சூதாட்டம் நடந்திருக்கும் பட்சத்தில் அதில் இந்திய வீரர்கள் இடம்பெறாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே இதில் தொடர்புள்ள வீரர்களிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்;
"இந்தியாவிற்கு ஊழல் தடுப்பு பிரிவினர் வந்தது உண்மை. ஆனால் எதற்காக வந்துள்ளனர் என்று தெரியாது. பொதுவாக ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தப் பிரிவினர் பயணம் செய்வது வழக்கம். அதுபோல் தற்போது இந்தியாவிற்கும் வந்திருக்கலாம்" என்றார்.
இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் ரன்பீர்சிங் மகேந்திரா இது குறித்து கூறியதாவது;
ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லிக்கு வந்தது குறித்து எனக்கு எந்தவித தகவலும் கிடையாது. கேள்விப்பட்ட வகையில் 2 அதிகாரிகள் வந்ததாக தெரிகிறது. அவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளாததால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
மேலும், கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி இருக்கும்போது இது தொடர்பாக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.