PDA

View Full Version : கவிதை



kalvettu
15-09-2005, 12:23 PM
அழகாய் தான் இருந்தது
பிறந்த
என் குழந்தை!!
சாயல் மட்டும் வேறாக!?
திருத்தப்பட்ட எனது கவிதை.

இளசு
12-10-2005, 09:14 PM
படைப்பாளியின் சுயகௌரவம்....
பளிச் கவிதை..
பாராட்டுகள் கல்வெட்டு அவர்களே..

kavitha
13-10-2005, 07:14 AM
உங்களது இயற்பெயரை அறிந்துகொள்ளலாமா கல்வெட்டு அவர்களே.. இதை ஏற்கனவே ஒரு புத்தகத்தில் நான் படித்ததாக ஞாபகம்.(மன்றத்தில் நீங்கள் ஏற்கனவே பதித்தது நீங்கலாக)

பிரியன்
13-10-2005, 07:15 AM
கவிதா இந்த சுட்டிக்கு செல்லுங்கள்- அவரை பற்றிய அறிமுகம் இருக்கிறது
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5551

kavitha
21-10-2005, 11:19 AM
சுட்டி தந்தமைக்கு நன்றி பிரியன்

gragavan
21-10-2005, 11:42 AM
நல்ல கவிதை கல்வெட்டு. உண்மையிலேயே கல்லில் வெட்டியது போல சொல்லியிருக்கின்றீர்கள். பாராட்டுகள். சரியோ முறையோ தவறோ காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதான்.

தஞ்சை தமிழன்
21-10-2005, 11:42 AM
கவிதையில் என்ன சொல்கிறார் கல்வெட்டு.

படைப்பாளியின் மேல் மற்றவரின் தாக்கம் அதிகமாகிவிட்டது என்றா?

அல்லது

படைப்பாளி சோரம் போனதாகவா?