PDA

View Full Version : தாமரைக்கனி மரணம்



பிரியன்
14-09-2005, 07:46 AM
திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நகராட்சித் தலைவருமான திரு, தாமரைக்கனி இன்று அதிகாலையில் மரணமடைந்தார்...

அரசியல் வேறுபாடு காரணமாக இவரும் இவரது மகனுமான இன்பத்தமிழனும் பேசிக் கொள்வதில்லை.. கடைசிக் காலத்தில் மனதளவில் மிகவும் நொந்து போயிருந்தார்...

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

gragavan
14-09-2005, 08:07 AM
தாமரைக்கனியினரின் உறவினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆன்மா இறையடியில் அமைதி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

மன்மதன்
14-09-2005, 08:10 AM
தாமரைக்கனியினரின் உறவினர்கள், கட்சிக்காரர்கள்..அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

mukilan
14-09-2005, 08:39 AM
சமீபத்தில் கூட ஆனந்த விகடனில் தன் மகன் ஆணழகனின் திருமணம் குறித்தும், தனது அரசியல் மறு வாழ்வு குறித்தும் அவர் அளித்த பேட்டி கண்டு அவர் தன்னம்பிக்கையை பெரிதும் வியந்தேன். வாழ்வின் கடைசி காலத்தில் அரசியல் அப்பாவி ஆகி விட்டாரே! ஆத்மா அமைதி அடையட்டும்.

pradeepkt
14-09-2005, 08:52 AM
ஆமாம் தாமரைக்கனி கடைசி வரையில் தன்மானத்துக்காகத் தன் மகன் கூடப் பேசுவதில்லை. ஆனாலும் தன்னம்பிக்கையில் கொஞ்சம் கூடத் தளரவில்லை.
அவரது ஆத்மா சாந்தி அடையவும் உறவினர்களும் நண்பர்களும் ஆறுதல் அடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

aren
14-09-2005, 09:39 AM
தாமிரைக்கனி அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்டது முதலில் அதுவே பின்னர் அவருடைய மகன் வழியில் பிரச்சனையானது.

அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆதமா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பரஞ்சோதி
14-09-2005, 02:40 PM
தாமரைக்கனி அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

தொகுதி மக்களுக்கு நன்மை செய்து நல்ல தொகுதி பிரதிநிதியாக திகழ்ந்தவர். எந்த அரசியல் அலையிலும் அடித்துச் செல்லாதவர்.

அறிஞர்
14-09-2005, 03:45 PM
துணிச்சல் உள்ள, தன்மானமிக்க மனிதர்..... குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்