இளையவன்
05-09-2005, 12:49 PM
மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஜே.வி.பி. ஆதரவு
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளரான மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பை கைவிடுதல்,
சிறிலங்கா என்ற ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு,
2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தல்,
அமைதி முயற்சிகளில் நோர்வை அனுசரணையாளர் பங்களிப்பை மறுபரிசீலனை செய்தல்,
உள்ளிட்ட 12 நிபந்தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது.
1. ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது. முன்னைய பொதுக்கட்டமைப்பை கைவிட்டு விட்டு ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை அரசினூடாக மேற்கொள்ளப்படும் வகையில் புதிய செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது இதர கட்சிகளுடனும் அமைதிப் பேச்சுகள் நடாத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தன்னாட்சி அதிகார சபை உள்ளிட்ட எதுவித அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை அளிக்கும் வகையில் அப்பேச்சுகள் இருக்கக் கூடாது.
3. இனப்பிரச்சனைக்கு முன்வைக்கப்படுகிற எந்தத் தீர்வும் சிறிலங்கா என்கிற ஒற்றையாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.
4. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறிலங்காவின் அரசியல் சாசனத்துக்கு ஏற்பில்லாத, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிற யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் அனைத்தையும் அதிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும்.
5. சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அனுசரணையாளராக செயற்பட்டு வரும் நோர்வே தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பக்க சார்பாக செயற்பட்டு வருகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பணியில் கண்காணிப்புக் குழு முழு அளவில் தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில் அனுசரணையாளராக நோர்வே பணியாற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
6. தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனைகளை முதன்மைப் பணியாகக் கொண்டு சிறிலங்காவில் மூவின மக்களும் எவ்வித அச்சமுமின்றி வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இம்மாகாணங்களில் அனைத்து ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகளும் செயல்படும் வகையில் பல கட்சி அரசியல் முறையை மீளவும் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
7. சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாராம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையானது சிறிலங்காவின் ஜனநாயகத்தை சீர்குலைக்கக் கூடியது. இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையை நீக்குவதை முதன்மைப் பணியாக கொள்ள வேண்டும். இதை 2005 ஆம் ஆண்டு தொடங்க உள்ள 6 ஆவது அரசுத் தலைவரின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே செயற்படுத்த வேண்டும்.
8. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக தாரளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரக் கொள்கையானது சமச்சீரான பொருளாதாரக் கொள்கையாக இருக்க வேண்டும்.
9. தேசியப் பொருளாதாரத்தின் மையமாக விளங்குகிற துறைமுகங்கள், விமான தளங்கள், பெற்றோலியக் கூட்டுத் தாபனம், அரச வங்கிகள், சிறிலங்கா மின்சார சபை உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நீர், கனிம வளங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்கக் கூடாது. தனியார்மயமாக்கல் தொடர்பாக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும்.
10. அனைவருக்குமான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குகிற முயற்சிகள் மற்றும் 1981-இல் கல்வி தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றை கைவிட வேண்டும். கல்வி மேம்பாடு குறித்து புத்திஜீவிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரது கருத்துகளை கவனத்திலெடுத்துக் கொள்ள வேண்டும்.
11. தேசிய உற்பத்திக்குப் பங்காற்றுகிற அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் உள்ளிட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜே.வி.பி. முன் வைக்கிற செயற்திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
12. சிறிலங்கா அரசின் வெளியுவுக் கொள்கையானது அணிசேரா கொள்கையாக இருக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை குறிப்பாக தெற்காசிய பிராந்தியம் மற்றும் ஆசிய நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிற வகையில் இருக்க வேண்டும்.
ஜே.வி.பி.யின் இந்த நிபந்தனைகள் குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து எதுவித கருத்துகளும் வெளியிடப்படவில்லை.
சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் கடந்த ஐந்து நாள் சீனப் பயணத்திற்குள்ளாகவே மகிந்த ராஜபக்சவும், ஜே.வி.பியினரும் பல சுற்று இரகசியப் பேச்சுக்களை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்பாட்டில் மேற்கொண்டனர்.
இந்த இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பான படங்களை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஊடகங்கள் அம்பலப்படுத்திய நிலையிலேயே ஜே.வி.பி. இன்று தனது நிபந்தனைகளுடனான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான தலைமை நீதிமன்றத் தீர்ப்பில் தமக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட்டது குறித்து மிகக் கடும் கோபத்தில் இருக்கும் சந்திரிகா குமாரதுங்க, ஜே.வி.பியுடனான இந்த ரகசியப் பேச்சுகள் குறித்தும் அதிருப்தியில் இருப்பதாகவும் சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:புதினம்
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளரான மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பை கைவிடுதல்,
சிறிலங்கா என்ற ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு,
2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தல்,
அமைதி முயற்சிகளில் நோர்வை அனுசரணையாளர் பங்களிப்பை மறுபரிசீலனை செய்தல்,
உள்ளிட்ட 12 நிபந்தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது.
1. ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது. முன்னைய பொதுக்கட்டமைப்பை கைவிட்டு விட்டு ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை அரசினூடாக மேற்கொள்ளப்படும் வகையில் புதிய செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது இதர கட்சிகளுடனும் அமைதிப் பேச்சுகள் நடாத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தன்னாட்சி அதிகார சபை உள்ளிட்ட எதுவித அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை அளிக்கும் வகையில் அப்பேச்சுகள் இருக்கக் கூடாது.
3. இனப்பிரச்சனைக்கு முன்வைக்கப்படுகிற எந்தத் தீர்வும் சிறிலங்கா என்கிற ஒற்றையாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.
4. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறிலங்காவின் அரசியல் சாசனத்துக்கு ஏற்பில்லாத, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிற யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் அனைத்தையும் அதிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும்.
5. சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அனுசரணையாளராக செயற்பட்டு வரும் நோர்வே தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பக்க சார்பாக செயற்பட்டு வருகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பணியில் கண்காணிப்புக் குழு முழு அளவில் தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில் அனுசரணையாளராக நோர்வே பணியாற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
6. தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனைகளை முதன்மைப் பணியாகக் கொண்டு சிறிலங்காவில் மூவின மக்களும் எவ்வித அச்சமுமின்றி வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இம்மாகாணங்களில் அனைத்து ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகளும் செயல்படும் வகையில் பல கட்சி அரசியல் முறையை மீளவும் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
7. சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாராம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையானது சிறிலங்காவின் ஜனநாயகத்தை சீர்குலைக்கக் கூடியது. இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையை நீக்குவதை முதன்மைப் பணியாக கொள்ள வேண்டும். இதை 2005 ஆம் ஆண்டு தொடங்க உள்ள 6 ஆவது அரசுத் தலைவரின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே செயற்படுத்த வேண்டும்.
8. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக தாரளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரக் கொள்கையானது சமச்சீரான பொருளாதாரக் கொள்கையாக இருக்க வேண்டும்.
9. தேசியப் பொருளாதாரத்தின் மையமாக விளங்குகிற துறைமுகங்கள், விமான தளங்கள், பெற்றோலியக் கூட்டுத் தாபனம், அரச வங்கிகள், சிறிலங்கா மின்சார சபை உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நீர், கனிம வளங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்கக் கூடாது. தனியார்மயமாக்கல் தொடர்பாக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும்.
10. அனைவருக்குமான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குகிற முயற்சிகள் மற்றும் 1981-இல் கல்வி தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றை கைவிட வேண்டும். கல்வி மேம்பாடு குறித்து புத்திஜீவிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரது கருத்துகளை கவனத்திலெடுத்துக் கொள்ள வேண்டும்.
11. தேசிய உற்பத்திக்குப் பங்காற்றுகிற அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் உள்ளிட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜே.வி.பி. முன் வைக்கிற செயற்திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
12. சிறிலங்கா அரசின் வெளியுவுக் கொள்கையானது அணிசேரா கொள்கையாக இருக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை குறிப்பாக தெற்காசிய பிராந்தியம் மற்றும் ஆசிய நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிற வகையில் இருக்க வேண்டும்.
ஜே.வி.பி.யின் இந்த நிபந்தனைகள் குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து எதுவித கருத்துகளும் வெளியிடப்படவில்லை.
சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் கடந்த ஐந்து நாள் சீனப் பயணத்திற்குள்ளாகவே மகிந்த ராஜபக்சவும், ஜே.வி.பியினரும் பல சுற்று இரகசியப் பேச்சுக்களை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்பாட்டில் மேற்கொண்டனர்.
இந்த இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பான படங்களை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஊடகங்கள் அம்பலப்படுத்திய நிலையிலேயே ஜே.வி.பி. இன்று தனது நிபந்தனைகளுடனான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான தலைமை நீதிமன்றத் தீர்ப்பில் தமக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட்டது குறித்து மிகக் கடும் கோபத்தில் இருக்கும் சந்திரிகா குமாரதுங்க, ஜே.வி.பியுடனான இந்த ரகசியப் பேச்சுகள் குறித்தும் அதிருப்தியில் இருப்பதாகவும் சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:புதினம்