View Full Version : பனித்துளி
பிரியன்
28-08-2005, 02:46 PM
நேற்றிரவு நாம் பேசிக் கொண்டதை
வேடிக்கை பார்த்த விண்மீன்களெல்லாம்
மலர்களின் மீது பனித்துளிகளாகி
வருகிறதின்று
உன் கூந்தலில் சூடிக்கொள்ள.....
pradeepkt
28-08-2005, 02:54 PM
ஆகா,
விண்மீன்களுக்கே இத்தனை மயக்கமா?
நீவிர் காதல் நாயகன் ஐயா.
Nanban
28-08-2005, 06:38 PM
விண்மீன்கள்
பனித்துகள்களாய்
பரந்து கிடந்த வெளியில்
காலையில் கால் பதிக்க வேண்டாம்.
துளித்துளியாய்
சிதறிக் கிடக்கும்
உன் எந்த முகத்தில்
முதன்முதலாய்
கால்களைப் பதிப்பேன்?
பெருத்துக் கிடக்கும் உடல்
மூச்சு விட சிரமப்பட்டாலும்
புல்தரையில் நடவாமலே
எண்ணிக் கொண்டிருப்பேன் -
உன்னை
எத்தனை முறை
நீ வந்து போகிறாய் என்று?!!
மன்மதன்
29-08-2005, 05:02 AM
பருவ மங்கை
உன் பரு
முகத்தை பார்த்தால்
என் துரு பிடித்த இதயம்
கூட தூசு தட்டி
மிளிர்கிறது...
சிகப்பு நிற
பனித்துளியை
கண்டு மழை நீர்
கூட உன் முகத்தை
சீண்டாமல் சற்றே
தூர தள்ளி விழுகிறது பார்..
-
மன்மதன்
pradeepkt
29-08-2005, 05:15 AM
அட மன்மதா,
பிரமாதம்யா...
பிரியனுக்கேத்த பதில் கவிதைகள் திரும்ப ஆரம்பித்து விட்டன!!
அருமை.
மன்மதன்
29-08-2005, 05:19 AM
டச் விட்டு போயிடுச்சு. எழுதவே வரலை. அதான் இப்போ எழுதி பழகுகிறேன்..
pradeepkt
29-08-2005, 05:26 AM
இன்னும் பழகி இன்னும் நிறைய எழுதப்பா.
வாழ்த்துகள்.
gragavan
29-08-2005, 05:58 AM
வீண்மீனுக்கும் - உனது
கண்மீனுக்கும் நடந்தது போட்டி
தோற்றவைகள் பனித்துளிகளாக
உதிர்ந்து விட்டன!
பிரியன்
29-08-2005, 05:59 AM
அசத்தல் ராகவன்... இன்னும் இன்னும் கவிதை எழுதுங்கள்
gragavan
29-08-2005, 06:11 AM
நன்றி பிரியன். இன்னமும் நல்லவிதமாக முயல்கிறேன்.
மன்மதன்
29-08-2005, 06:30 AM
கவிதை அசத்தல் இராகவன்..
gragavan
29-08-2005, 07:07 AM
நன்றி மாம்ஸ்.
kavitha
31-08-2005, 06:18 AM
அட எல்லோரும் விண்மீன் பாட்டு பாடி அசத்துறீங்களே...
எனக்கும் ஏதாச்சும் தோணுதானு பார்க்கிறேன். ம்...
"நீ கண்சிமிட்டி சிரிக்கிறாய்
நான் கண்பார்த்தும் சரிகிறேன்"
பிரியன்
31-08-2005, 06:26 AM
அட எல்லோரும் விண்மீன் பாட்டு பாடி அசத்துறீங்களே...
எனக்கும் ஏதாச்சும் தோணுதானு பார்க்கிறேன். ம்...
"நீ கண்சிமிட்டி சிரிக்கிறாய்
நான் கண்பார்த்தும் சரிகிறேன்"
கவிதா கண் பார்த்தும் என்பதற்கு பதில் கண் பார்த்ததும் என்று இருக்க வேண்டுமோ
kavitha
31-08-2005, 06:45 AM
இல்லை பிரியன். கண் பார்த்தும் என்பது தான் என் கண்ணோட்டதில் எழுதியது.
"என் கண் பார்த்தும் கூட மயக்கத்தில் சரிகிறேன்" என்பதாகக் கொள்க!
நேற்றிரவு நாம் பேசிக் கொண்டதை
வேடிக்கை பார்த்த விண்மீன்களெல்லாம்
மலர்களின் மீது பனித்துளிகளாகி
வருகிறதின்று
உன் கூந்தலில் சூடிக்கொள்ள.....
அருமையான சிந்தனை. பார்த்துங்க.. எல்லா விண்மீன்களும் வந்துட்டா வானம் ங்ற தாய் அழகா இருக்கமாட்டா!!
ஷீ-நிசி
07-01-2007, 12:17 PM
நிலவிற்கு வெளியில்தானே
விண்மீன்கள் இருக்கும் -இங்கே
நிலவுக்குள்ளேயே இருக்கின்றதே
உன் கண்மீன்களைத் தானடி சொல்கிறேன்!