பாரதி
26-08-2005, 01:38 AM
தேதி இல்லா குறிப்புகள்
பெரியம்மா
ஊர்ல இருந்து பெரியம்மா வர்றாங்கன்னு கொஞ்ச நாளக்கி முன்னாடியே கடுதாசி வந்துச்சா, எப்படா அவங்களப் பாக்கப்போறோம்னு இருந்துச்சு.. அவங்கள நானு அது வரைக்கும் பாத்ததே இல்ல. அம்மா கூடப் பொறந்தவங்க அந்தப் பெரியம்மா.
அப்ப நான் ரெண்டாப்பு படிச்சுகிட்டுருந்தேன். வயல்ல நெல்லு நடவு நட்டுகிருந்தத வேடிக்க பாத்துகிட்டு இருந்தனா அப்பதான் சொன்னாங்க பெரியம்மா வந்திருக்காங்கன்னு..! ஓரே ஓட்டமா... வாய்க்கால எல்லாம் தாண்டி மூச்சிரைக்க வீட்டுக்கு வந்துப் பாத்தா....
பெரியம்மா நல்ல ஒசரம். வெள்ளக்கலர்ல சேல - இங்ஙன கட்டுற மாதிரி கட்டாம, வித்தியாசமா கட்டிருந்தாங்க. மொழங்கை வரைக்கும் சட்டை போட்டிருந்தாங்க. தலமுடியெல்லாம் சுத்தமா நரச்சுப் போயிருந்துச்சு. கொண்ட எல்லாம் போடாம கிராப்பு மாதிரி முடி வச்சுகிட்டு. பாக்க சிரிச்ச முகத்தோட இருந்தாங்க. சுருக்கமா சொல்லணும்னா பெரியம்மா சும்மா அப்படியே இந்திராகாந்தி கணக்கா இருந்தாங்க.
என்னைய பாத்ததும் அடையாளம் தெரிஞ்சது போல. வாரி கட்டிப்புடிச்சுகிட்டு ரொம்ப அன்பா விசாரிச்சாங்க. எனக்கு சந்தோசம் தாங்கல.
பெரியம்மா ரொம்ப சின்ன வயசுலயே டெல்லி போயிட்டாங்களாம். அப்பல்லாம் கடுதாசி போட்டாலே போயி சேரறதுக்கு மாசக்கணக்காகும். அதனால குடும்பதுல நடந்த நல்லது பொல்லாதத பத்தி எல்லாம் வெலாவாரியா தெரிஞ்சுக்க வேணாமா...? அப்படி விசயங்கள எல்லாம் பேசுறதுக்கே ரெண்டு மூணு நாளக்கி மேலாகி போச்சு. நாள் முச்சூடும் வர்றவங்க கிட்ட பேசுறதுக்கே பெரியம்மாவுக்கு நேரம் சரியா இருந்துச்சு. டெல்லில எம்ஜியாரு, இந்திராகாந்திய எல்லாம் பாத்து பேசி இருக்காங்க, போட்டோ எல்லாம் எடுத்திருக்காங்கன்னு அவங்க சொன்னத கேட்டதும் இங்க கேட்ட அத்தன பேரு வாய ஆன்னு பொளந்துட்டாங்க.
எல்லார் கூடயும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்குற மாதிரி பழகுனாங்க. வீட்டு வேலைல கூடமாட ஒத்தாசய இருந்தாங்க. டெல்லில என்ன பண்றாங்க.. பக்கத்துல யாரெல்லாம் இருக்காங்க.. எப்படியெல்லாம் பழகுவாங்க... என்னென்ன பண்டிகை எல்லாம் கொண்டாடுவாங்க.. வெலவாசி எல்லாம் எப்படி? மழ விழுதா இல்லையா..ன்னு பலதையும் பேசிகிட்டாங்க. அப்படிப் பேசிகிட்ட்டு இருக்கும் போது பெரியம்மா சொன்னாங்க... இன்னும் எத்தன வருசந்தான் ஊர மறந்துட்டு, சொந்தக்காரங்கள எல்லாம் விட்டுட்டு தன்னந்தனியா இருக்குறது. எனக்கென்ன குடும்பமா குட்டியா...?அங்க இருக்குறத எல்லாம் விட்டுட்டு இங்கனயே வந்து குடும்பத்தோட தங்கிரலாம்னு நெனச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. சொந்தக்காரங்க எல்லாரும் அதாஞ்சரி, அப்படித்தான் செய்யணும்-னு சொன்னாங்க.
ஊர்ல இருந்து வர்றப்பயே பெரியம்மா விதவிதமா பலகாரம் கொண்டு வந்திருந்தாங்க. அந்த ஊரு துணிமணி,பண்டபாத்திரம் கூட கொண்டு வந்திருந்தாங்க. கிண்ணம், டம்ளர், பாத்திரம் எல்லாம் மஞ்சளா பித்தளைல இல்லாம, பளபளன்னு வெள்ளி மாதிரி இருந்துச்சு. என்னமோ எவர்சில்வராம்ல அதுல செஞ்சதாம். துருப்பிடிக்காது, கருக்காதுன்னு சொல்லிகிட்டாங்க. அது வரைக்கும் அலுமினியம், பித்தள, வெங்கலம் இல்லாட்டி மண்ணுபாத்திரம்தான் எல்லாரு வீட்லயும் இருக்கும்.பெரியம்மா கொண்டு வந்தது எல்லாம் வித்தியாசமா இருந்துச்சு.
நாங்கூட காப்பி சாப்புடறதுக்குன்னு ஒரு பெரிய டம்ளரை எடுத்து வச்சுகிட்டு அதுலதான் சாப்புடுவேன்.. யாரும் அதத் தொடக்கூடாதுன்னு சொல்லிட்டேன். சின்னது பெரிசுன்னு இருந்த பாத்திரங்க எல்லாம் பாக்கவே கொள்ள அழகு. கூடப்படிக்கிற பசங்க எல்லாம் ஒங்க பெரியம்மா டெல்லிலயா இருக்காங்கன்னு பொறாமையோட கேப்பாய்ங்க... கேக்கும் போதெல்லாம் சொல்லி எனக்கு மாளல. எங்க பெரியம்மா டில்லில இருக்காங்கன்னா அது எனக்கு பெருமைதானே..!
பெரியம்மா வந்து கொஞ்ச நாள் ஆகியிருக்கும். அப்ப பக்கத்துல இருந்த அவங்க பொறந்த ஊருக்கு - அதாங்க தேவதானப்பட்டி பக்கத்துல இருக்குல்ல எருமலநாயக்கம்பட்டி - அங்க போயிட்டு வர்றேன்னு சொல்லி கெளம்புனாங்க. அங்க இருக்குறவங்களயும் பாக்கணுமா இல்லியா...? அங்க இருக்குறவங்களுக்கும் கொடுக்குறதுக்கு, இங்ஙன கொடுத்தத போக மீதியிருந்த சாமான எல்லாம் பொட்டலம் கட்டிகிட்டாங்க.
பஸ்ஸ ஏத்தி விடுறதுக்கு அம்மாவும் நானும்தான் பஸ்ஸ்டாப்புக்கு போனோம். பஸ்ஸ வர்றதுக்கு கொஞ்ச நேரம் ஆச்சு. பெரியம்மா நெறய விசயங்கள அம்மாகிட்ட பேசிகிட்டே இருந்தாங்க. களப்பு கடையில மிக்சரு பலகாரம் வாங்குறதுக்கு பெரியம்மா காசு எல்லாம் கொடுத்தாங்க.
பெரியகுளம் போற பஸ்ஸ வந்துச்சு. சாமான் கட்டி வச்சிருந்த பொட்டலத்த முதல்ல தூக்கி பஸ்ஸக்குள்ள வச்சுட்டு, அதுக்கப்புறமா பெரியம்மாவும் பஸ்ஸல ஏறுனாங்க. படியில நின்னுகிட்டு பெரியம்மா போயிட்டு ரெண்டு மூணு நாள்ல வந்திர்றேன்னு எங்ககிட்ட சொன்னாங்களா... அப்பத்தான் அம்மா பெரியம்மாகிட்ட சொன்னாங்க - இனிமே இங்க வராதன்னு. அப்ப பெரியம்மா மொகத்துல தெரிஞ்ச அதிர்ச்சிய இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியல. அதுக்கப்புறமா அவங்க என்ன ஆனாங்கன்னு தெரியவே இல்ல.
பெரியம்மா
ஊர்ல இருந்து பெரியம்மா வர்றாங்கன்னு கொஞ்ச நாளக்கி முன்னாடியே கடுதாசி வந்துச்சா, எப்படா அவங்களப் பாக்கப்போறோம்னு இருந்துச்சு.. அவங்கள நானு அது வரைக்கும் பாத்ததே இல்ல. அம்மா கூடப் பொறந்தவங்க அந்தப் பெரியம்மா.
அப்ப நான் ரெண்டாப்பு படிச்சுகிட்டுருந்தேன். வயல்ல நெல்லு நடவு நட்டுகிருந்தத வேடிக்க பாத்துகிட்டு இருந்தனா அப்பதான் சொன்னாங்க பெரியம்மா வந்திருக்காங்கன்னு..! ஓரே ஓட்டமா... வாய்க்கால எல்லாம் தாண்டி மூச்சிரைக்க வீட்டுக்கு வந்துப் பாத்தா....
பெரியம்மா நல்ல ஒசரம். வெள்ளக்கலர்ல சேல - இங்ஙன கட்டுற மாதிரி கட்டாம, வித்தியாசமா கட்டிருந்தாங்க. மொழங்கை வரைக்கும் சட்டை போட்டிருந்தாங்க. தலமுடியெல்லாம் சுத்தமா நரச்சுப் போயிருந்துச்சு. கொண்ட எல்லாம் போடாம கிராப்பு மாதிரி முடி வச்சுகிட்டு. பாக்க சிரிச்ச முகத்தோட இருந்தாங்க. சுருக்கமா சொல்லணும்னா பெரியம்மா சும்மா அப்படியே இந்திராகாந்தி கணக்கா இருந்தாங்க.
என்னைய பாத்ததும் அடையாளம் தெரிஞ்சது போல. வாரி கட்டிப்புடிச்சுகிட்டு ரொம்ப அன்பா விசாரிச்சாங்க. எனக்கு சந்தோசம் தாங்கல.
பெரியம்மா ரொம்ப சின்ன வயசுலயே டெல்லி போயிட்டாங்களாம். அப்பல்லாம் கடுதாசி போட்டாலே போயி சேரறதுக்கு மாசக்கணக்காகும். அதனால குடும்பதுல நடந்த நல்லது பொல்லாதத பத்தி எல்லாம் வெலாவாரியா தெரிஞ்சுக்க வேணாமா...? அப்படி விசயங்கள எல்லாம் பேசுறதுக்கே ரெண்டு மூணு நாளக்கி மேலாகி போச்சு. நாள் முச்சூடும் வர்றவங்க கிட்ட பேசுறதுக்கே பெரியம்மாவுக்கு நேரம் சரியா இருந்துச்சு. டெல்லில எம்ஜியாரு, இந்திராகாந்திய எல்லாம் பாத்து பேசி இருக்காங்க, போட்டோ எல்லாம் எடுத்திருக்காங்கன்னு அவங்க சொன்னத கேட்டதும் இங்க கேட்ட அத்தன பேரு வாய ஆன்னு பொளந்துட்டாங்க.
எல்லார் கூடயும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்குற மாதிரி பழகுனாங்க. வீட்டு வேலைல கூடமாட ஒத்தாசய இருந்தாங்க. டெல்லில என்ன பண்றாங்க.. பக்கத்துல யாரெல்லாம் இருக்காங்க.. எப்படியெல்லாம் பழகுவாங்க... என்னென்ன பண்டிகை எல்லாம் கொண்டாடுவாங்க.. வெலவாசி எல்லாம் எப்படி? மழ விழுதா இல்லையா..ன்னு பலதையும் பேசிகிட்டாங்க. அப்படிப் பேசிகிட்ட்டு இருக்கும் போது பெரியம்மா சொன்னாங்க... இன்னும் எத்தன வருசந்தான் ஊர மறந்துட்டு, சொந்தக்காரங்கள எல்லாம் விட்டுட்டு தன்னந்தனியா இருக்குறது. எனக்கென்ன குடும்பமா குட்டியா...?அங்க இருக்குறத எல்லாம் விட்டுட்டு இங்கனயே வந்து குடும்பத்தோட தங்கிரலாம்னு நெனச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. சொந்தக்காரங்க எல்லாரும் அதாஞ்சரி, அப்படித்தான் செய்யணும்-னு சொன்னாங்க.
ஊர்ல இருந்து வர்றப்பயே பெரியம்மா விதவிதமா பலகாரம் கொண்டு வந்திருந்தாங்க. அந்த ஊரு துணிமணி,பண்டபாத்திரம் கூட கொண்டு வந்திருந்தாங்க. கிண்ணம், டம்ளர், பாத்திரம் எல்லாம் மஞ்சளா பித்தளைல இல்லாம, பளபளன்னு வெள்ளி மாதிரி இருந்துச்சு. என்னமோ எவர்சில்வராம்ல அதுல செஞ்சதாம். துருப்பிடிக்காது, கருக்காதுன்னு சொல்லிகிட்டாங்க. அது வரைக்கும் அலுமினியம், பித்தள, வெங்கலம் இல்லாட்டி மண்ணுபாத்திரம்தான் எல்லாரு வீட்லயும் இருக்கும்.பெரியம்மா கொண்டு வந்தது எல்லாம் வித்தியாசமா இருந்துச்சு.
நாங்கூட காப்பி சாப்புடறதுக்குன்னு ஒரு பெரிய டம்ளரை எடுத்து வச்சுகிட்டு அதுலதான் சாப்புடுவேன்.. யாரும் அதத் தொடக்கூடாதுன்னு சொல்லிட்டேன். சின்னது பெரிசுன்னு இருந்த பாத்திரங்க எல்லாம் பாக்கவே கொள்ள அழகு. கூடப்படிக்கிற பசங்க எல்லாம் ஒங்க பெரியம்மா டெல்லிலயா இருக்காங்கன்னு பொறாமையோட கேப்பாய்ங்க... கேக்கும் போதெல்லாம் சொல்லி எனக்கு மாளல. எங்க பெரியம்மா டில்லில இருக்காங்கன்னா அது எனக்கு பெருமைதானே..!
பெரியம்மா வந்து கொஞ்ச நாள் ஆகியிருக்கும். அப்ப பக்கத்துல இருந்த அவங்க பொறந்த ஊருக்கு - அதாங்க தேவதானப்பட்டி பக்கத்துல இருக்குல்ல எருமலநாயக்கம்பட்டி - அங்க போயிட்டு வர்றேன்னு சொல்லி கெளம்புனாங்க. அங்க இருக்குறவங்களயும் பாக்கணுமா இல்லியா...? அங்க இருக்குறவங்களுக்கும் கொடுக்குறதுக்கு, இங்ஙன கொடுத்தத போக மீதியிருந்த சாமான எல்லாம் பொட்டலம் கட்டிகிட்டாங்க.
பஸ்ஸ ஏத்தி விடுறதுக்கு அம்மாவும் நானும்தான் பஸ்ஸ்டாப்புக்கு போனோம். பஸ்ஸ வர்றதுக்கு கொஞ்ச நேரம் ஆச்சு. பெரியம்மா நெறய விசயங்கள அம்மாகிட்ட பேசிகிட்டே இருந்தாங்க. களப்பு கடையில மிக்சரு பலகாரம் வாங்குறதுக்கு பெரியம்மா காசு எல்லாம் கொடுத்தாங்க.
பெரியகுளம் போற பஸ்ஸ வந்துச்சு. சாமான் கட்டி வச்சிருந்த பொட்டலத்த முதல்ல தூக்கி பஸ்ஸக்குள்ள வச்சுட்டு, அதுக்கப்புறமா பெரியம்மாவும் பஸ்ஸல ஏறுனாங்க. படியில நின்னுகிட்டு பெரியம்மா போயிட்டு ரெண்டு மூணு நாள்ல வந்திர்றேன்னு எங்ககிட்ட சொன்னாங்களா... அப்பத்தான் அம்மா பெரியம்மாகிட்ட சொன்னாங்க - இனிமே இங்க வராதன்னு. அப்ப பெரியம்மா மொகத்துல தெரிஞ்ச அதிர்ச்சிய இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியல. அதுக்கப்புறமா அவங்க என்ன ஆனாங்கன்னு தெரியவே இல்ல.