Nanban
22-08-2005, 07:14 PM
ஓய்வு.....
' போகலாம்'
காலமிட்ட கட்டளை
வந்து சேர்ந்த அன்று
இந்த வெளிவிட்டு
வெளியேறுகிறது அந்தப் பறவை.
உச்சம் தொடும் பறத்தலின் ஒலியில்
கீழே கிடக்கும் மௌனம் சிதைந்தாலும்
இந்த பறவையின் நுரைப்பூவாய உற்சாகத்தில்
விரியும் இறக்கைகளை சலனப்படுத்தவில்லை.
விரிந்த இந்த இறகுகள் மடிந்து
மார்போடு இறுகுகையில்
அந்தப் பறவையின்
கனத்த இதயத்தின் ஈரக்கசிவு
உலராது பரவுகிறது எங்கும்.
உடலும் மனமும் எடுபிடி செயலில் புதைய
இன்று பறத்தல் மறந்து நடக்கிறது.
சில நேரங்களில் அரிதாக அமைந்துவிடும்
நள்ளிரவின் தனிமையில்
ஒருசில சங்கீத சங்கதிகளையோ
ஒருசில மந்திர வசனங்களையோ
முணுமுணுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்
பிரபஞ்ச மௌனங்களின் எல்லையற்ற வெளியில்
காலகாலத்துக்கும் அலைந்து கொண்டிருக்கும் -
ஏதாவது ஒரு புதிய பறவை ஒன்றை
சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடன்.
எவராலும் உருவாக்கிட முடிவதில்லை
வெற்றிடங்களை.
வெளிகள் எப்பொழுதும் நிரம்பிக் கொண்டேயிருக்கின்றன
புதிய பறவைகளால்
புதிய சிறகுகளால்
புதிய உயிர்ப்புகளால்
அவைகளும் என்றாவது ஒருநாள்
ஒரு பழைய பறவையைச் சந்தித்து
ஒரு அடி தாழப் பறந்து
வணக்கம் சொல்லி புன்னகைத்துப் போகலாம்.
அவைகள் என்றென்றும்
தங்களைத் தயார்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
நன்றியுடன் போய்வா சொல்லி அனுப்புகின்றன.
ஓரிடம் காலியானாலன்றி
ஒரு புதிய சிறகு விரிய இடமில்லை என்பதை
காலம் தெரிந்தே வைத்திருக்கிறது.
' போகலாம்'
காலமிட்ட கட்டளை
வந்து சேர்ந்த அன்று
இந்த வெளிவிட்டு
வெளியேறுகிறது அந்தப் பறவை.
உச்சம் தொடும் பறத்தலின் ஒலியில்
கீழே கிடக்கும் மௌனம் சிதைந்தாலும்
இந்த பறவையின் நுரைப்பூவாய உற்சாகத்தில்
விரியும் இறக்கைகளை சலனப்படுத்தவில்லை.
விரிந்த இந்த இறகுகள் மடிந்து
மார்போடு இறுகுகையில்
அந்தப் பறவையின்
கனத்த இதயத்தின் ஈரக்கசிவு
உலராது பரவுகிறது எங்கும்.
உடலும் மனமும் எடுபிடி செயலில் புதைய
இன்று பறத்தல் மறந்து நடக்கிறது.
சில நேரங்களில் அரிதாக அமைந்துவிடும்
நள்ளிரவின் தனிமையில்
ஒருசில சங்கீத சங்கதிகளையோ
ஒருசில மந்திர வசனங்களையோ
முணுமுணுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்
பிரபஞ்ச மௌனங்களின் எல்லையற்ற வெளியில்
காலகாலத்துக்கும் அலைந்து கொண்டிருக்கும் -
ஏதாவது ஒரு புதிய பறவை ஒன்றை
சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடன்.
எவராலும் உருவாக்கிட முடிவதில்லை
வெற்றிடங்களை.
வெளிகள் எப்பொழுதும் நிரம்பிக் கொண்டேயிருக்கின்றன
புதிய பறவைகளால்
புதிய சிறகுகளால்
புதிய உயிர்ப்புகளால்
அவைகளும் என்றாவது ஒருநாள்
ஒரு பழைய பறவையைச் சந்தித்து
ஒரு அடி தாழப் பறந்து
வணக்கம் சொல்லி புன்னகைத்துப் போகலாம்.
அவைகள் என்றென்றும்
தங்களைத் தயார்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
நன்றியுடன் போய்வா சொல்லி அனுப்புகின்றன.
ஓரிடம் காலியானாலன்றி
ஒரு புதிய சிறகு விரிய இடமில்லை என்பதை
காலம் தெரிந்தே வைத்திருக்கிறது.