இராசகுமாரன்
15-08-2005, 06:12 AM
இனிய தமிழ் சொந்தங்களே...
உங்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...!
மின் புத்தகங்கள் பகிர்தல் இடையில் மென்பொருள் மாற்றத்திற்கு பிறகு நின்று விட்டிருந்தது. அதற்காக ஒரு தனி வசதி ஏற்பாடு செய்வதற்காக காத்திருந்தேன். இப்போது அந்த வசதி ஏற்பாடு செய்யப் பட்டுவிட்டது என்ற நற்செய்தியுடன் வந்துள்ளேன்.
நான் மின் புத்தகங்களை இங்கே வெளியிடும் வரை காத்திருக்க வேண்டாம் என்பதற்காக இந்த வசதி செய்யப் பட்டுள்ளது. நீங்களே பதிவேற்றம் செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி உண்டு. ஆனால், சோதனையோட்டமாக முதலில் இந்த வசதியை இங்குள்ள மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கிறேன்.
அடுத்த மாதத்திலிருந்து மன்றத்தில் தொடர்ந்து பங்காற்றும் நம் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்க இருக்கிறேன். அதற்காக நம் பழைய அனுமதி முறையான "பண்பட்ட உறுப்பினர்" என்ற தகுதி மீண்டும் வருகிறது.
இந்த தகுதி பெற முன்பு போல் குறிப்பிட்ட தமிழ் பதிவுகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் போவது கிடையாது. தமிழில் எழுதுகிறீர்கள் என்பதற்கு சான்றாக ஒன்றிரண்டு பதிப்புகள் இருந்தாலே போதும்.
தேவையில்லாமல் நம் மன்றத்து பதிவிறக்கங்களை அதிகமாக இறக்கி நமது மன்றத்துக்கு ஊறு விளைவிக்க நினைப்பவர்களிடம் இருந்து காக்க இங்கு ஒரு தலைப்பு ஆரம்பிக்கப் பட்டு அதில் விண்ணப்பிபவர்களுக்கு மட்டும் இதற்காக அனுமதி கேட்பவர்களுக்கு மட்டும் கொடுக்கப் படும்.
தமிழ் மன்றத்தைக்கும், தமிழ் மன்றத்து நண்பர்களுக்கும் தீங்கு விளைவிக்க நினைக்காத அத்தனை பேருக்கும் இங்கே அனுமதி உண்டு.
நண்பர்களுடன் பழகும் நல்ல மனமும், தரமான குணமும், கொண்ட அனைத்து தமிழ்மன்றம் உறுப்பினர்களுக்ககும் இந்த அனுமதி உண்டு.
சுட்டி... இங்கே (http://www.tamilmantram.com/vb/downloads.php)
விரைவில் இது மேலே உள்ள மெனுவில் தோன்றும்.
உங்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...!
மின் புத்தகங்கள் பகிர்தல் இடையில் மென்பொருள் மாற்றத்திற்கு பிறகு நின்று விட்டிருந்தது. அதற்காக ஒரு தனி வசதி ஏற்பாடு செய்வதற்காக காத்திருந்தேன். இப்போது அந்த வசதி ஏற்பாடு செய்யப் பட்டுவிட்டது என்ற நற்செய்தியுடன் வந்துள்ளேன்.
நான் மின் புத்தகங்களை இங்கே வெளியிடும் வரை காத்திருக்க வேண்டாம் என்பதற்காக இந்த வசதி செய்யப் பட்டுள்ளது. நீங்களே பதிவேற்றம் செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி உண்டு. ஆனால், சோதனையோட்டமாக முதலில் இந்த வசதியை இங்குள்ள மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கிறேன்.
அடுத்த மாதத்திலிருந்து மன்றத்தில் தொடர்ந்து பங்காற்றும் நம் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்க இருக்கிறேன். அதற்காக நம் பழைய அனுமதி முறையான "பண்பட்ட உறுப்பினர்" என்ற தகுதி மீண்டும் வருகிறது.
இந்த தகுதி பெற முன்பு போல் குறிப்பிட்ட தமிழ் பதிவுகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் போவது கிடையாது. தமிழில் எழுதுகிறீர்கள் என்பதற்கு சான்றாக ஒன்றிரண்டு பதிப்புகள் இருந்தாலே போதும்.
தேவையில்லாமல் நம் மன்றத்து பதிவிறக்கங்களை அதிகமாக இறக்கி நமது மன்றத்துக்கு ஊறு விளைவிக்க நினைப்பவர்களிடம் இருந்து காக்க இங்கு ஒரு தலைப்பு ஆரம்பிக்கப் பட்டு அதில் விண்ணப்பிபவர்களுக்கு மட்டும் இதற்காக அனுமதி கேட்பவர்களுக்கு மட்டும் கொடுக்கப் படும்.
தமிழ் மன்றத்தைக்கும், தமிழ் மன்றத்து நண்பர்களுக்கும் தீங்கு விளைவிக்க நினைக்காத அத்தனை பேருக்கும் இங்கே அனுமதி உண்டு.
நண்பர்களுடன் பழகும் நல்ல மனமும், தரமான குணமும், கொண்ட அனைத்து தமிழ்மன்றம் உறுப்பினர்களுக்ககும் இந்த அனுமதி உண்டு.
சுட்டி... இங்கே (http://www.tamilmantram.com/vb/downloads.php)
விரைவில் இது மேலே உள்ள மெனுவில் தோன்றும்.