PDA

View Full Version : அன்பானவளே!



சுவேதா
21-07-2005, 03:30 PM
அன்பானவளே!

கண்ணுக்குள் விம்பமாய்
உள்ளவளே!
கண்மூடி திறக்கும்
முன் எத்தனை
மாயங்கள்
செய்கின்றாய் என்னுள்!

உன்னை நினனத்த
வேளை எதை
பார்த்தாலும் என்
கண்ணில்
நீயாகவே தெரிகின்றது.

உன் விரல்களால்
என் தேகம்
சீண்டுகையில் என்
மனம் வானில்
றெக்கை கட்டிப்
பறக்கின்றது!

ஆசையாய் உன்னை
காண வந்தால்
உன் நாணம் என்னை
காந்தம் போல்
கட்டி இழுக்கிறதடி!

தென்றல் காற்றாய்
தவழ்ந்து
வந்தேன் உன்னருகில்
என்னைக் கண்டதும்
நீ நாணத்தால் புயலாக
ஒடி மறைந்தாயேயடி...

karikaalan
22-07-2005, 06:14 AM
சுவேதாஜி

கவிதை அருமை. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

pradeepkt
22-07-2005, 06:23 AM
இன்னும் நிறைய எழுது சுவேதா

kavitha
22-07-2005, 11:10 AM
நன்றாக உள்ளது தங்கை. இரு பரிமாணத்திலும் முயற்சி செய்

gragavan
22-07-2005, 12:09 PM
இப்பரிமாணம் எப்பரிமாணம் என நினைத்து இருபரிமாணம் கேட்டீர்கள் கவிதா? முப்பரிமாணமும் காட்டுவார் சகோதரி சுவேதா!

( ஹி ஹி சும்மாதான். பரிமாணமுன்னு சொன்னது எதுகை மோனையா சுவேதாவுக்கு பாராட்டு.)

சுவேதா
22-07-2005, 12:51 PM
சுவேதாஜி

கவிதை அருமை. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

நன்றி கரிகாலன் அண்ணா!


இன்னும் நிறைய எழுது சுவேதா
நிச்சயமாக அண்ணா!


நன்றாக உள்ளது தங்கை. இரு பரிமாணத்திலும் முயற்சி செய்
அது என்ன இரு பரிமாணம் கொஞ்சம் சொல்விர்களா அக்கா?


இப்பரிமாணம் எப்பரிமாணம் என நினைத்து இருபரிமாணம் கேட்டீர்கள் கவிதா? முப்பரிமாணமும் காட்டுவார் சகோதரி சுவேதா!

( ஹி ஹி சும்மாதான். பரிமாணமுன்னு சொன்னது எதுகை மோனையா சுவேதாவுக்கு பாராட்டு.)

:):):) நன்றி அண்ணா!
(அது என்ன எதுகை மோனையா :rolleyes: )

pradeepkt
22-07-2005, 05:14 PM
தமிழ் விர்ச்சுவல் பல்கலைக் கழக இணையத்தில பாரு சுவேதா..இலக்கணங்கள் பத்தி எல்லாம் சொல்லி இருக்காங்க.

சுவேதா
22-07-2005, 05:16 PM
ஒ அப்படியா சரி பாக்கின்றேன்!

அறிஞர்
23-07-2005, 07:27 AM
வாழ்த்துக்கள்.. சுவேதா.. இன்னும் தொடருங்கள்......

சுவேதா
23-07-2005, 02:23 PM
நன்றி அண்ணா!

ஆதவா
07-01-2007, 09:47 AM
கண்ணுக்குள் விம்பமாய்
உள்ளவளே!
கண்மூடி திறக்கும்
முன் எத்தனை
மாயங்கள்
செய்கின்றாய் என்னுள்!

உன்னை நினனத்த
வேளை எதை
பார்த்தாலும் என்
கண்ணில்
நீயாகவே தெரிகின்றது.

உன் விரல்களால்
என் தேகம்
சீண்டுகையில் என்
மனம் வானில்
றெக்கை கட்டிப்
பறக்கின்றது!



மீண்டுமொரு காதல் கதை. இம்மாதிரி கவிதைகள் மிக அழகாக எல்லாருக்கும் வரும். உங்களுக்கும் அதேமாதிரிதான்

உன்னை நினனத்த
வேளை எதை
பார்த்தாலும் என்
கண்ணில்
நீயாகவே தெரிகின்றது.

காதல் இது தானே!! அவளை நினைக்கும் போதெல்லாம் அவளாக வருவாள். எல்லாருடைய ரூபத்திலும்.. என் முதல் காதலில் அதை அனுபவித்திருக்கிரேன்.

உன் விரல்களால்
என் தேகம்
சீண்டுகையில் என்
மனம் வானில்
றெக்கை கட்டிப்
பறக்கின்றது!

பார்த்துங்க,.. அப்படியே பறந்திட போறீங்க