பாரதி
19-07-2005, 11:00 PM
தேதியில்லா குறிப்புகள்
விளையாட்டு
இது வரைக்கும் என்ன என்ன வெளையாட்டு வெளையாடுனோம்னு நெனச்சுப் பாக்கத் தோணுது. நெனவுல வர்றத மாத்திரம் சொல்றேன். ஏதாச்சும் விட்டுப்போச்சுன்னா, பின்னாடி நெனைவு வந்தா சேத்துக்கிறேன். சரியா..?
சேலைல கட்டி வச்சிருப்பாங்களே - தூளி - கொழந்த தூங்குறதுல போயி வெளாடுறியேன்னு திட்டுனாலும் அதப்பத்தி எல்லாம் கவலைப்படாம - அதுல ஊஞ்சல் ஆடுறது ரொம்பப் பிடிக்கும். வீட்டுத்திண்ணைல சறுக்கு விளையாடுறது பிடிக்கும். அப்புறம் கதவுல - அந்தக்காலக் கதவுல - கைப்பிடிக்காகவும், அழகுக்காகவும் பித்தளையிலோ அல்லது மரத்திலோ அலங்காரமா குமிழு செஞ்சு வச்சிருப்பாங்க - அதப்பிடிச்சுகிட்டு ஒத்த கால்ல நின்னுகிட்டு 'சொய்ங்.. சொய்ங்..'ன்னு இங்கிட்டும் அங்கிட்டும் போய்ட்டு வர வெளாட்டு நல்லா இருக்கும். சமயத்துல கதவுல வர்ற "கிரீச்" சத்தமும் கேட்க சுகமா இருக்கும்ல.
கெணத்துல இருந்து தண்ணி எறைக்க வச்சிருக்குற கமலை ஒண்ணு வீட்டுல கிடக்கும். அத பஸ்ஸல டிரைவர் ஸ்டியரிங்க பிடிச்சி ஓட்ற மாதிரி நெனச்சுகிட்டு அடிக்கடி வெளையாடுவேன். தேஞ்ச சைக்கிளு டயரு இல்லாட்டி ரிம்ல சாட்டைக்கம்பு மாதிரி ஒரு குச்சிய வச்சுகிட்டு தெருவ பூராவும் ரவுண்டு அடிப்போம்ல.
சனி, ஞாயித்துக்கெழமைன்னாலும் சரி, லீவு நாள்னாலும் சரி எப்படா வரும்ணு காத்துகிட்டு இருந்து, சாப்பாடப் பத்தி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாம நாள் முழுக்க வெளையாடிகிட்டே இருந்த அந்தக் காலமே வேற.
வீட்ல அக்காவுங்க கூட புளியங்கொட்ட அதான் புளியமுத்துன்னு சொல்வோம்ல.. அத வச்சு பல்லாங்குழி ஆடுறது, சோழி வச்சுகிட்டு தாயம் ஆடுறது, பரமபதம் வெள்ளாடுறது எல்லாம் உண்டு. சோழில ஒண்ணை மாத்ரம் உள்ளங்கைல பிடிச்சி வச்சிகிட்டு, கைய ஒரு மாதிரி வீசி விட்டா நெனக்கிற மாதிரி தாயம் போடுறதுல நான் கில்லாடில்ல.
தட்டாங்கல்லு வெளையாட்டு - இது என்னன்னா ஆத்து மணல்ல கெடைக்கிற வழுவழுன்னு இருக்குற கூழாங்கல்ல வச்சு வெளையாடுறது. முதல்ல ஒரு கல்ல எடுத்து மேல போட்டுட்டு அது கீழ வர்றதுக்கு முன்னாடி அடுத்த கல்ல எடுக்கணும். அடுத்த தடவ ரெண்டு கல்லயும் மேல போட்டு மூணாவது கல்ல பிடிக்கணும்.. இதோட சட்ட திட்டம் சரியா நெனவில்ல. பொண்ணுங்க எல்லாம் இத நல்லா வெளையாடுவாங்க.
ஒடஞ்ச மண்சட்டில இருந்து 'ஓடு' எடுத்து வட்டமா தேச்சு "நொண்டி" விளையாடுறது. "ரைட்டா.. ரைட்டா.." ந்னு கேட்டுகிட்டே கட்டத்த தாண்டுறது. அப்புறம் வீதியில ஆளுக நடக்க எடமில்லாம, எல்லக்கோடு எல்லாம் கிழிச்சு நொண்டிகிட்டே தொட்டுப் பிடிச்சி ஆடுறது எல்லாம் ரொம்ப கோலாகலமா நடக்கும்.
அப்புறம் ரெண்டு கையாலயும் மணல நீளமா குமிச்சு வைச்சு, சங்கை ஒளிச்சு வச்சு விளையாடுற " சியாங் சியாங் பூனக்குட்டி...... எங்க இருக்கு கண்டுபுடி"ன்னு சொல்லிகிட்டே வெளாடுற வெளையாட்டு. ரெண்டு கையயும் மணலுக்குள்ளே வச்சுகிட்டு எதிராளி கவனிக்காம இருக்குறப்ப சங்கை ஒரு இடத்துல ஒளிச்சு வச்சுட்டு வேற இடத்துல வச்ச மாதிரி பாவ்லா காமிக்கிறது. அப்புறம் எதிராளி ரெண்டு கையையும் உத்தேசமா நாம ஒளிச்சு வச்சிருக்கிற சங்கு மேல ரெண்டு கையையும் சங்கிலி மாதிரி பின்னிகிட்டு மணல அமுக்கி பிடிச்சிகிருவான். நாம வச்ச சங்க திருப்பி எடுக்கணும் அதான் வெளையாட்டு.
வெளக்குமாத்துக் குச்சி வெளயாட்டு - ஒரே அளவா நாலு அஞ்சு இஞ்சு இருக்குற மாதிரி வெளக்குமாத்துக் குச்சிகளை எல்லாம் அம்பது நூறுன்னு மொத்தமா போட்டு, ஒரு குச்சியால ஒவ்வொரு குச்சிய மட்டும் தூக்கி, தனியா பிரிக்குற விளயாட்டு. ஒரு குச்சிய எடுக்கும் போது வேற குச்சி அசஞ்சதோ அவ்ளோதான். அடுத்தாளு கைக்கு ஆட்டம் போயிரும். வீட்ல ஒரு வெளக்குமாத்தையாவது விட்டுவைக்கிறாய்ங்களா சனியனுங்கன்னு எல்லா அம்மாக்களும் திட்டத்தான் செய்வாங்க. அதுக்காக வெளையாட்ட விட்ற முடியுமா..?
புளியங்கொட்ட நெறய கிடைக்கிற சீசன்ல " சப்பாத்து"ன்னு ஒரு வெளையாட்டு. விளையாடுறவங்க எல்லார் கையிலும் சின்னப்பலகை மாதிரி இருக்குற கருங்கல்லு இருக்கும். வெளையாடுறவங்க எல்லாரும் ஆளுக்கு அஞ்சு முத்தோ பத்து முத்தோ வச்சு ஒரு எடத்துல ஒண்ணா குமிச்சி ஒரு வட்டத்துக்குள்ள வச்சிருவோம். நல்ல தூரத்துல நின்னுகிட்டு அவங்க அவங்க கல்லை லாவகமா எறியணும். யாரு கல்லு வட்டத்துக்கு பக்கத்துல வருதோ அவங்கதான் மொதல்ல முத்தைப்பார்த்து கல்லை வீசி எறிவாங்க.. கல்லு பட்டு வெளியில சிதறுற முத்து எல்லாம் அவனுக்குத்தான். தவறி அவன் கல்லு வட்டத்துக்குள்ளேயே விழுந்துச்சுன்னா அவனுக்கு பைன். கூட முத்தை வச்சு மறுபடி ஆட்டம் ஆரம்பிக்கும்.
தீப்பெட்டிய எல்லாம் ஒண்ணுக்கு பின்னாடி ஒண்ணா அடுக்கி ரெயில் வண்டி செஞ்சு வெளையாடுவோம். ரெயிலு பெட்டி எல்லாம் தீப்பெட்டிகதான். கலர் குடிப்போம்ல அந்த பாட்டிலோட மூடிதான் ரெயிலு சக்கரம். வெளக்குமாத்து குச்சிதான் ரெண்டு சக்கரத்த ஒண்ணா சேக்குறது. பெட்டியோட சக்கரங்கள சேக்குறதுக்கு என்ன செய்வோம்னா ... கருவேல மர முள்ளு இருக்கு பாருங்க.. அது எல்லாம் இங்கிலீசு "வி" எழுத்து மாதிரி இருக்கும். அத ஒடைக்காம பத்திரமா எடுத்து ரெண்டு பக்க சக்கரத்துக்கும் சப்போர்ட்டா தீப்பெட்டியில குத்தி வச்சிருவோம். அப்புறம் கலர், அலங்காரம் எல்லாம் ஜெகஜோதியா பண்றதுண்டு. யாரோட ரெயிலு பெரிசுன்னு காமிக்கிறதல அம்புட்டு பேருக்கும் போட்டிதான்.
கோலிக்குண்டு பத்தி சொல்லாம இருக்க முடியுமா என்ன..? வீட்டுக்குள்ள இருந்து தெரு, மைதானம், சந்துன்னு எங்க பார்த்தாலும் வெளையாண்ட வெளையாட்டாச்சே..! எத்தனை வகை வெளையாட்டு...!! கலர்கலரா கோலிக்குண்டு.. குட்டியூண்டுல இருந்து "மண்ட" சைஸ் கோலிக்குண்டு வரைக்கும். அது மாத்ரமா...? வெளையாடும் போது கண்ணாடி கோலிகளை ஒடைக்கணும்கிறதுக்காகவே வச்சிருக்குற பால்ரஸ் - அதாங்க இரும்பு கோலிக்குண்டு. அப்புறம் சோடா பாட்ல இருந்து கெடைக்கிற ஊதா இல்லாட்டி நீல நிற கோலிக்குண்டு.. ஹம்.. எவ்வளவோ குண்டு சேத்து வச்சிருந்தேன்.
கோலிக்குண்டுல 'பேந்தாஸ்' வெளையாட்டு, சுவத்தோரமா இல்லாட்டி மரத்தடியில சதுரமா வரஞ்சு ரெண்டு கோலிகுண்டுகளை மட்டும் போட்டு எதிராளி சொல்ற கோலிய மாத்ரம் அலேக்கா அடிக்கிற வெளையாட்டு, பெரு விரல தரையில வச்சுகிட்டு நடு விரல வளச்சு கோலிக்குண்டால வரிசையா அடுக்கி வச்சிருக்குற கோலிக்குண்டுகள எல்லாத்தையும் சிதறடிக்கிற வெளையாட்டு... இப்படி...ஹம். அம்புட்டுப் பேரு டவுசருப் பையும் ஓட்டையாகுறதுக்கு முக்கியமான காரணம் "சலங், சலங்"ன்னு சத்தம் வர்ற மாதிரி குண்டை நெரப்பிகிட்டு திரிஞ்சதுதானே....!
ரோட்ல பட்டாளத்தம்மன் கோயில்லயும், சாவடியிலயும் பெரிசுங்க வெளையாடுற ஆடு-புலி- ஆட்டம் கொஞ்ச நாள் வெளையாண்டிருக்கேனே.! ஒரு சின்ன டிரிக் தெரிஞ்சா போதும், சும்மா அப்படியே வெளையாட்டு காட்டிரலாம்.
'திருடன் - போலீஸ்' வெளையாட்டு வெளையாட ஆச இருந்தாலும், சாயந்திரம் ஆச்சுன்னா என்னய வீட்ட விட்டு வெளிய அனுப்ப மாட்டங்க. அதனால பசங்க போடுற " தப்பைஸ்" சத்தத்த கேட்டு சந்தோசப்பட்டதோட சரி. ஹம். கொடுத்து வச்ச பக்கத்து வீட்டுப்பசங்க..!
அப்புறம் ஒரு மோசமான வெளையாட்டு. மூங்கில் தப்பைய ஒடிச்சி, தப்பையோட ரெண்டு பக்கத்தையும் கயித்தால கட்டி வில்லு கணக்கா செஞ்சு வச்சிக்கிருவோம். சோளத்தட்டை இருக்குல்ல அத அழகா வெட்டி, ஒரு பக்க நுனியில, கருவேல முள்ள சொருகிகிட்டா அதுதான் அம்பு. மைதானத்துல திரியிற வாயில்லா ஜந்துகள்கிட்ட எங்க வீரதீரப்பிரதாபம் எல்லாத்தையும் காட்டுவோம். அதோட சொந்தக்காரங்க வந்தா ஒரே ஓட்டம்தான். ஆனா இப்ப ஏன் அப்படியெல்லாம் செஞ்சோம்னு நெனச்சு ரொம்ப வேதனையா இருக்கு.
மரத்துல ஏறி பசங்க வெளையாடுற " காக்கா - குஞ்சு" ஆட்டம். இது எப்படின்னா பூமில ஒரு வட்டம் கிழிச்சு, ஒரு குச்சிய அதுக்கு நடுவுல வச்சிருவாங்க. யாரு சாட்-பூட்-த்ரீல தோத்துப் போறாங்களோ அவங்கதான் மொதல்ல மத்தவங்கள தொட வரணும். இந்த வெளையாட்டு வெளையாடுறதுக்குண்ணே ரெண்டு மூணு எடத்துல ஆல மரம் வசதியா இருக்கும். நெறய கெளைகளும், விழுதுகளும் இருக்கும் - ஏற இறங்க எல்லாம் வசதியா... பசங்க சும்மா கொரங்கு மாதிரி கெளைக்கு கெளை தாவிகிட்டே இருப்பாய்ங்க. பயங்கிறதே கொஞ்சம் கூட தெரியாத வயசுல்ல. தொட வர்றவன்கிட்ட மாட்டிக்காம கீழே போயி அந்தக்குச்சிய எடுத்துட்டா .. தொட வர்றவன் தோத்துப்போயி திருப்பி வெளையாட்ட ஆரம்பிக்கணும்.
ஆத்துல குளிக்கிறப்ப தண்ணிக்குள்ள ஒளிஞ்சு வெளையாடுற தொட்டுக் கண்டுபிடி ஆட்டம். அதுல யாரு முதல்ல தொட்டு வர்றதுன்னு சொல்றதுக்கு ஒரு வழி இருக்கு. எல்லாரும் "சாட் - பூட் - த்ரீ" சொல்லி ரெண்டு கைகளையும் ஒண்ணா சேர்க்கும் போது யாரு கைய மாத்தி வச்சிருக்காங்களோ அவங்கதான் மொதல்ல தேடுற ஆளா இருக்கணும்னு சொல்றது. இல்லாட்டி நடுவிரலையும் பெரு விரலையும் மடக்கி, தண்ணிக்கு மேலெ வச்சு, தண்ணில படுற மாதிரி சுண்டும் போது"டொபுக்"ன்னு ஒரு சத்தம் வரணும். வந்தா சரி. வரலைன்னா அவந்தான் தேடிக்கண்டுபிடிக்கிற ஆளா இருக்கணும். வெளையாடும் போது தண்ணிக்கு அடில தொட்டா பிரயோசனமில்ல.. தொடலைன்னு ஏமாத்திருவாய்ங்க. அதனால குடுமிய பிடிச்சு தண்ணிக்கு வெளியில காமிச்சாத்தான் தேடுறதுல இருந்து அவனுக்கு விடுதல. யாரு மாட்டிக்கிட்டானோ அவன் தேடுற ஆளா மாறிருவான். வாய்க்கால்ல வெளையாடும் போது பாத்தீங்கன்னா " சேம்ப எலை"க்கும், படர்தாமரைக்கும் நடுவுல ஒளிஞ்சிகிட்டு சும்மா அப்படி ஒரு வெளையாட்டு காட்டுவாய்ங்க பாருங்க... நேரம் போறதே தெரியாது.
அநேகமா களத்து மேடு இல்லாட்டி மைதானத்துல வெளையாடுவோம் - நல்ல வேப்ப மரத்தோட அளவான கெளைய ஒடச்சி, அளவெடுத்து துண்டாக்கி, பட்டைய எல்லாம் சீவி விளையாடுற 'கிட்டி'ங்கிற கிட்டிப்புள் விளையாட்டுப் பத்தி எல்லாருக்கும் தெரியும்தான. ரெண்டு பக்கமும் கூரா இருக்குற சின்ன கம்பை, பெரிய கம்பால ஒரு ஓரமா தட்டி, சின்னக்கம்பு மேல வர்ற சமயம், வசதிக்கு தக்கன, கீழ விழுந்துராம ரெண்டு மூணு தடவை லேசா தட்டி அப்புறம் ஓங்கி தூரமா போய் விழுற மாதிரி அடிக்கிறது. அடிச்ச இடத்துல இருந்து சின்னக்கம்பு போய் விழுந்த தூரம் வரைக்கும் பெரிய கம்பை அடிக்குச்சி மாதிரி வச்சிகிட்டு அளக்குறது.. ஓங்கி அடிக்கிறதுக்கு முன்னாடி சின்னக் கம்பை எத்தனை தடவ தட்டினோமோ அத்தன தடவ அந்த தூரத்த பெருக்கிக்கிறது. மொத்தம் மூணு தடவைல ரொம்ப தூரத்த யாரு காண்பிக்கிறாய்ங்களோ அவங்களே ஜெயிச்சவய்ங்க. ஒரு சமயம் ஒருத்தன் கிட்டி அடிச்சதுல, அது நேரா என் கண்ணுல பட்டு மூணு நாளைக்கு ஒரு கண்ணு பந்து மாதிரி வீங்கிகிச்சே..!!
பம்பரம் - கடையில கெடக்கிற பம்பரத்தை விட நாமளே செய்ற பம்பரம்தான் ஸ்ட்ராங்கா இருக்கும். அந்த வெளையாட்டுல நல்லா வெளையாடணும்கிறத விட அடுத்தவன் பம்பரத்தை எப்படி ஒடைக்கிறதுன்னுதான் அவ்ளோ பயலும் யோசிப்பாய்ங்க. சாட்டைல பம்பரத்தை சுத்தி, காத்துல வீசி, கீழ விடாம உள்ளங்கைலயே சுத்த வச்சு புடிக்கிறது நல்லா இருக்கும்.
தீப்பெட்டிப்படத்தை சேத்து வைக்கிற வெளையாட்டும் இருந்திருக்கே. கோயில்பட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஏழாயிரம் பண்ணைன்னு ஏகப்பட்ட இடத்துல இருந்து கலர்கலரா, விதவிதமா தீப்பெட்டிப் படங்க நெறய வரும். அஞ்சு காசு, பத்துக்காசுன்னு கடல கொடுத்தா, பாக்கெட்டா குடுப்பாய்ங்க. கை நெறய படத்த வச்சுகிட்டு, ஒத்தையா ரெட்டையா வெளையாட்டு வெளையாடி நெறய படம் சேத்துருக்கேன்.
பள்ளிக்கூடத்துல சொல்லித்தந்தது கபடியும், சாப்ட் பால் வெளையாட்டும்தான். கபடி சுமாரா வெளையாடுவேன். ஒரு தடவ என் சைடு ஆளுங்க எல்லாரும் அவுட்டாகிட்டாங்க. நான் மாத்திரம்தான் ஆட்டத்துல இருந்தேன். எதிராளி சீனிவாசன் கபடி பாடி வந்தான். ஒரு ஆளு மாத்திரம் இருக்குறப்ப ஒதைக்கக்கூடாதுன்னு ரூல்ஸ். ஆனா அவன் என் நெஞ்சைப்பாத்து ஒதைச்சான். நான் விடல. அவன இறுக்கப்புடிச்சுகிட்டேன். அவனால திமிர முடியல. மூச்சை விட்டுட்டான். நம்ம பயலுவலுக்கு ஒரே கொண்டாட்டம். ஆனா ஒரு நிமிசத்துக்கு அப்புறமா எனக்கு கிறுகிறுன்னு வருது. ஓரமா போயி படுத்துகிட்டேன். மூச்சு விட முடியல. நெஞ்செல்லாம் சரியான வலி. டாக்டர்கிட்ட போயி காமிக்கிற அளவுக்கு ஆகிப்போச்சு. ரத்தம் கட்டிக்காம இருக்கணும்னு ரெண்டு மாசத்துக்கு ஊசி, மாத்திரைன்னு உசுர வாங்கிட்டாரு டாக்டரு. அதுக்குப் பின்னாடிதான் வலி கொறஞ்சது.
சாப்ட் பால்- வெளையாட்டுல வைக்கோல வச்சு தச்ச பெரிய உருண்டைதான் பந்து!. அத ஓங்கி அடிக்கிற அளவுக்கு எனக்கு அந்த வயசுல தெம்பு கெடயாது. அப்புறம் எதுன்னாலே தெரியாம ஆச வந்து கேட்டது, வெளையாண்டது கிரிக்கெட். நான் ரொம்ப சின்ன பையனா இருந்ததால எனக்கு டீம்ல ஆடுறதுக்கு எல்லாம் இடமே தரமாட்டாய்ங்க,ஹம். ரொம்ப சின்ன வயசுல மொத தடவயா மேற்கிந்தியாவோட இந்தியா வெளையாண்ட கிரிக்கெட் மேச்சோட ரேடியோ கமெண்டரி கேட்டிருக்கேன். அவங்க சொல்றது எதுவும் புரியலைன்னாலும், ஸ்கோரை மட்டும் ஆசையா பேப்பர்ல கிறுக்கி வச்சிக்கிருவேன். உள்ளூர்ல நடந்த ஒரு மேட்சுல நம்மளயும் ஆளா மதிச்சு சப்ஸ்டிடூயூட்டா - அதான் ஒப்புக்கு சப்பாணிம்மாய்ங்கல்ல - அத மாதிரி போட்டாய்ங்க. ஒரு சமயத்துல மிட்டான்ல நின்னுகிட்டு இருக்குறப்ப ஒரு கேச்சு வந்திச்சு. ஆஹா... சூப்பரா பந்தப் பிடிக்கப்போறோம்னு நெனச்சுகிட்டு ஒரு செகண்டு பகல்கனவு கண்டதுல, மூக்கு ஒடஞ்சு ரத்தம் வந்ததுதான் மிச்சம்.. ஹம்.
அப்புறம் டென்னிகாய்ட் கொஞ்ச நாளு வெளையாடினேன். வேலைக்கி சேந்த பின்னாடி கேரம்போர்டு, டேபிள் டென்னிஸ், வாலிபால், பேட்மிண்டன் இதெல்லாம் கொஞ்ச நாளு வெளையாடி இருக்கேன். நெஜம்மா ஆச வந்து கத்துகிட்டு வெளையாடுனது செஸ்ஸ. இந்த வெளையாட்டு பின்னாடி பல வகையிலும் ரொம்ப உதவியா இருந்துச்சு. ரொம்ப நல்லா வெளையாடுற ஒருத்தர ஜெயிச்சு கம்பெனி டீம்ல இடம் பிடிச்சேன். ஒரு எட்டு ஒம்போது வருசம் இருக்கும் - நான் வெளிநாடு வர வரைக்கும் டீம்ல சேர யாரும் என்னய சேலஞ்ச் பண்ணவே இல்ல..!! கொஞ்ச டோர்ணமெண்ட்ல எல்லாம் வெளையாடுற அளவுக்கு அதுல கிறுக்கு புடிச்சி திரிஞ்சிருக்கேன்னா பாத்துக்கங்க.
எல்லா எளவட்டங்களும் கத்துக்குற சீட்டு வெளையாட்டு - ஹாஸ்டல்லயும் பசங்களோடயும் இருந்தப்ப தெரிஞ்சுகிட்டது. ரம்மி, கழுத (!) - அட சீட்டு வெளையாட்டுப் பேருதாங்க - அதையும் கத்துகிட்டேன். பொறுமையும், கவனமும் இருந்தா ஜெயிக்கிறது ரொம்ப ஈஸி. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கொஞ்ச நாளு 'பிரிட்ஜ்' கத்துகிட்டேன். ஆனா அத நல்லா வெளையாடி பழகுறதுக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு வர வேண்டியதால அரகுறையா நின்னு போச்சு.
இப்பல்லாம் பசங்களுக்கு வெளையாட நேரமில்லாம போறதப் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு. கெடைக்கிற கொஞ்ச நேரத்தையும் டிவி பாக்குறதுலதான் இஷ்டம்னு உக்காந்துகிறாய்ங்க. என்ன பண்றது சொல்லுங்க...? கொஞ்ச நாளா நம்ம பசங்க 'சன்பீஸ்ட்' பிஸ்கட்தான் வேணுங்கிறாய்ங்க. காரணம் என்னடான்னு பாத்தா விஜய் படத்த சேத்து வைக்கணுமாம்...!!
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
விளையாட்டு
இது வரைக்கும் என்ன என்ன வெளையாட்டு வெளையாடுனோம்னு நெனச்சுப் பாக்கத் தோணுது. நெனவுல வர்றத மாத்திரம் சொல்றேன். ஏதாச்சும் விட்டுப்போச்சுன்னா, பின்னாடி நெனைவு வந்தா சேத்துக்கிறேன். சரியா..?
சேலைல கட்டி வச்சிருப்பாங்களே - தூளி - கொழந்த தூங்குறதுல போயி வெளாடுறியேன்னு திட்டுனாலும் அதப்பத்தி எல்லாம் கவலைப்படாம - அதுல ஊஞ்சல் ஆடுறது ரொம்பப் பிடிக்கும். வீட்டுத்திண்ணைல சறுக்கு விளையாடுறது பிடிக்கும். அப்புறம் கதவுல - அந்தக்காலக் கதவுல - கைப்பிடிக்காகவும், அழகுக்காகவும் பித்தளையிலோ அல்லது மரத்திலோ அலங்காரமா குமிழு செஞ்சு வச்சிருப்பாங்க - அதப்பிடிச்சுகிட்டு ஒத்த கால்ல நின்னுகிட்டு 'சொய்ங்.. சொய்ங்..'ன்னு இங்கிட்டும் அங்கிட்டும் போய்ட்டு வர வெளாட்டு நல்லா இருக்கும். சமயத்துல கதவுல வர்ற "கிரீச்" சத்தமும் கேட்க சுகமா இருக்கும்ல.
கெணத்துல இருந்து தண்ணி எறைக்க வச்சிருக்குற கமலை ஒண்ணு வீட்டுல கிடக்கும். அத பஸ்ஸல டிரைவர் ஸ்டியரிங்க பிடிச்சி ஓட்ற மாதிரி நெனச்சுகிட்டு அடிக்கடி வெளையாடுவேன். தேஞ்ச சைக்கிளு டயரு இல்லாட்டி ரிம்ல சாட்டைக்கம்பு மாதிரி ஒரு குச்சிய வச்சுகிட்டு தெருவ பூராவும் ரவுண்டு அடிப்போம்ல.
சனி, ஞாயித்துக்கெழமைன்னாலும் சரி, லீவு நாள்னாலும் சரி எப்படா வரும்ணு காத்துகிட்டு இருந்து, சாப்பாடப் பத்தி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாம நாள் முழுக்க வெளையாடிகிட்டே இருந்த அந்தக் காலமே வேற.
வீட்ல அக்காவுங்க கூட புளியங்கொட்ட அதான் புளியமுத்துன்னு சொல்வோம்ல.. அத வச்சு பல்லாங்குழி ஆடுறது, சோழி வச்சுகிட்டு தாயம் ஆடுறது, பரமபதம் வெள்ளாடுறது எல்லாம் உண்டு. சோழில ஒண்ணை மாத்ரம் உள்ளங்கைல பிடிச்சி வச்சிகிட்டு, கைய ஒரு மாதிரி வீசி விட்டா நெனக்கிற மாதிரி தாயம் போடுறதுல நான் கில்லாடில்ல.
தட்டாங்கல்லு வெளையாட்டு - இது என்னன்னா ஆத்து மணல்ல கெடைக்கிற வழுவழுன்னு இருக்குற கூழாங்கல்ல வச்சு வெளையாடுறது. முதல்ல ஒரு கல்ல எடுத்து மேல போட்டுட்டு அது கீழ வர்றதுக்கு முன்னாடி அடுத்த கல்ல எடுக்கணும். அடுத்த தடவ ரெண்டு கல்லயும் மேல போட்டு மூணாவது கல்ல பிடிக்கணும்.. இதோட சட்ட திட்டம் சரியா நெனவில்ல. பொண்ணுங்க எல்லாம் இத நல்லா வெளையாடுவாங்க.
ஒடஞ்ச மண்சட்டில இருந்து 'ஓடு' எடுத்து வட்டமா தேச்சு "நொண்டி" விளையாடுறது. "ரைட்டா.. ரைட்டா.." ந்னு கேட்டுகிட்டே கட்டத்த தாண்டுறது. அப்புறம் வீதியில ஆளுக நடக்க எடமில்லாம, எல்லக்கோடு எல்லாம் கிழிச்சு நொண்டிகிட்டே தொட்டுப் பிடிச்சி ஆடுறது எல்லாம் ரொம்ப கோலாகலமா நடக்கும்.
அப்புறம் ரெண்டு கையாலயும் மணல நீளமா குமிச்சு வைச்சு, சங்கை ஒளிச்சு வச்சு விளையாடுற " சியாங் சியாங் பூனக்குட்டி...... எங்க இருக்கு கண்டுபுடி"ன்னு சொல்லிகிட்டே வெளாடுற வெளையாட்டு. ரெண்டு கையயும் மணலுக்குள்ளே வச்சுகிட்டு எதிராளி கவனிக்காம இருக்குறப்ப சங்கை ஒரு இடத்துல ஒளிச்சு வச்சுட்டு வேற இடத்துல வச்ச மாதிரி பாவ்லா காமிக்கிறது. அப்புறம் எதிராளி ரெண்டு கையையும் உத்தேசமா நாம ஒளிச்சு வச்சிருக்கிற சங்கு மேல ரெண்டு கையையும் சங்கிலி மாதிரி பின்னிகிட்டு மணல அமுக்கி பிடிச்சிகிருவான். நாம வச்ச சங்க திருப்பி எடுக்கணும் அதான் வெளையாட்டு.
வெளக்குமாத்துக் குச்சி வெளயாட்டு - ஒரே அளவா நாலு அஞ்சு இஞ்சு இருக்குற மாதிரி வெளக்குமாத்துக் குச்சிகளை எல்லாம் அம்பது நூறுன்னு மொத்தமா போட்டு, ஒரு குச்சியால ஒவ்வொரு குச்சிய மட்டும் தூக்கி, தனியா பிரிக்குற விளயாட்டு. ஒரு குச்சிய எடுக்கும் போது வேற குச்சி அசஞ்சதோ அவ்ளோதான். அடுத்தாளு கைக்கு ஆட்டம் போயிரும். வீட்ல ஒரு வெளக்குமாத்தையாவது விட்டுவைக்கிறாய்ங்களா சனியனுங்கன்னு எல்லா அம்மாக்களும் திட்டத்தான் செய்வாங்க. அதுக்காக வெளையாட்ட விட்ற முடியுமா..?
புளியங்கொட்ட நெறய கிடைக்கிற சீசன்ல " சப்பாத்து"ன்னு ஒரு வெளையாட்டு. விளையாடுறவங்க எல்லார் கையிலும் சின்னப்பலகை மாதிரி இருக்குற கருங்கல்லு இருக்கும். வெளையாடுறவங்க எல்லாரும் ஆளுக்கு அஞ்சு முத்தோ பத்து முத்தோ வச்சு ஒரு எடத்துல ஒண்ணா குமிச்சி ஒரு வட்டத்துக்குள்ள வச்சிருவோம். நல்ல தூரத்துல நின்னுகிட்டு அவங்க அவங்க கல்லை லாவகமா எறியணும். யாரு கல்லு வட்டத்துக்கு பக்கத்துல வருதோ அவங்கதான் மொதல்ல முத்தைப்பார்த்து கல்லை வீசி எறிவாங்க.. கல்லு பட்டு வெளியில சிதறுற முத்து எல்லாம் அவனுக்குத்தான். தவறி அவன் கல்லு வட்டத்துக்குள்ளேயே விழுந்துச்சுன்னா அவனுக்கு பைன். கூட முத்தை வச்சு மறுபடி ஆட்டம் ஆரம்பிக்கும்.
தீப்பெட்டிய எல்லாம் ஒண்ணுக்கு பின்னாடி ஒண்ணா அடுக்கி ரெயில் வண்டி செஞ்சு வெளையாடுவோம். ரெயிலு பெட்டி எல்லாம் தீப்பெட்டிகதான். கலர் குடிப்போம்ல அந்த பாட்டிலோட மூடிதான் ரெயிலு சக்கரம். வெளக்குமாத்து குச்சிதான் ரெண்டு சக்கரத்த ஒண்ணா சேக்குறது. பெட்டியோட சக்கரங்கள சேக்குறதுக்கு என்ன செய்வோம்னா ... கருவேல மர முள்ளு இருக்கு பாருங்க.. அது எல்லாம் இங்கிலீசு "வி" எழுத்து மாதிரி இருக்கும். அத ஒடைக்காம பத்திரமா எடுத்து ரெண்டு பக்க சக்கரத்துக்கும் சப்போர்ட்டா தீப்பெட்டியில குத்தி வச்சிருவோம். அப்புறம் கலர், அலங்காரம் எல்லாம் ஜெகஜோதியா பண்றதுண்டு. யாரோட ரெயிலு பெரிசுன்னு காமிக்கிறதல அம்புட்டு பேருக்கும் போட்டிதான்.
கோலிக்குண்டு பத்தி சொல்லாம இருக்க முடியுமா என்ன..? வீட்டுக்குள்ள இருந்து தெரு, மைதானம், சந்துன்னு எங்க பார்த்தாலும் வெளையாண்ட வெளையாட்டாச்சே..! எத்தனை வகை வெளையாட்டு...!! கலர்கலரா கோலிக்குண்டு.. குட்டியூண்டுல இருந்து "மண்ட" சைஸ் கோலிக்குண்டு வரைக்கும். அது மாத்ரமா...? வெளையாடும் போது கண்ணாடி கோலிகளை ஒடைக்கணும்கிறதுக்காகவே வச்சிருக்குற பால்ரஸ் - அதாங்க இரும்பு கோலிக்குண்டு. அப்புறம் சோடா பாட்ல இருந்து கெடைக்கிற ஊதா இல்லாட்டி நீல நிற கோலிக்குண்டு.. ஹம்.. எவ்வளவோ குண்டு சேத்து வச்சிருந்தேன்.
கோலிக்குண்டுல 'பேந்தாஸ்' வெளையாட்டு, சுவத்தோரமா இல்லாட்டி மரத்தடியில சதுரமா வரஞ்சு ரெண்டு கோலிகுண்டுகளை மட்டும் போட்டு எதிராளி சொல்ற கோலிய மாத்ரம் அலேக்கா அடிக்கிற வெளையாட்டு, பெரு விரல தரையில வச்சுகிட்டு நடு விரல வளச்சு கோலிக்குண்டால வரிசையா அடுக்கி வச்சிருக்குற கோலிக்குண்டுகள எல்லாத்தையும் சிதறடிக்கிற வெளையாட்டு... இப்படி...ஹம். அம்புட்டுப் பேரு டவுசருப் பையும் ஓட்டையாகுறதுக்கு முக்கியமான காரணம் "சலங், சலங்"ன்னு சத்தம் வர்ற மாதிரி குண்டை நெரப்பிகிட்டு திரிஞ்சதுதானே....!
ரோட்ல பட்டாளத்தம்மன் கோயில்லயும், சாவடியிலயும் பெரிசுங்க வெளையாடுற ஆடு-புலி- ஆட்டம் கொஞ்ச நாள் வெளையாண்டிருக்கேனே.! ஒரு சின்ன டிரிக் தெரிஞ்சா போதும், சும்மா அப்படியே வெளையாட்டு காட்டிரலாம்.
'திருடன் - போலீஸ்' வெளையாட்டு வெளையாட ஆச இருந்தாலும், சாயந்திரம் ஆச்சுன்னா என்னய வீட்ட விட்டு வெளிய அனுப்ப மாட்டங்க. அதனால பசங்க போடுற " தப்பைஸ்" சத்தத்த கேட்டு சந்தோசப்பட்டதோட சரி. ஹம். கொடுத்து வச்ச பக்கத்து வீட்டுப்பசங்க..!
அப்புறம் ஒரு மோசமான வெளையாட்டு. மூங்கில் தப்பைய ஒடிச்சி, தப்பையோட ரெண்டு பக்கத்தையும் கயித்தால கட்டி வில்லு கணக்கா செஞ்சு வச்சிக்கிருவோம். சோளத்தட்டை இருக்குல்ல அத அழகா வெட்டி, ஒரு பக்க நுனியில, கருவேல முள்ள சொருகிகிட்டா அதுதான் அம்பு. மைதானத்துல திரியிற வாயில்லா ஜந்துகள்கிட்ட எங்க வீரதீரப்பிரதாபம் எல்லாத்தையும் காட்டுவோம். அதோட சொந்தக்காரங்க வந்தா ஒரே ஓட்டம்தான். ஆனா இப்ப ஏன் அப்படியெல்லாம் செஞ்சோம்னு நெனச்சு ரொம்ப வேதனையா இருக்கு.
மரத்துல ஏறி பசங்க வெளையாடுற " காக்கா - குஞ்சு" ஆட்டம். இது எப்படின்னா பூமில ஒரு வட்டம் கிழிச்சு, ஒரு குச்சிய அதுக்கு நடுவுல வச்சிருவாங்க. யாரு சாட்-பூட்-த்ரீல தோத்துப் போறாங்களோ அவங்கதான் மொதல்ல மத்தவங்கள தொட வரணும். இந்த வெளையாட்டு வெளையாடுறதுக்குண்ணே ரெண்டு மூணு எடத்துல ஆல மரம் வசதியா இருக்கும். நெறய கெளைகளும், விழுதுகளும் இருக்கும் - ஏற இறங்க எல்லாம் வசதியா... பசங்க சும்மா கொரங்கு மாதிரி கெளைக்கு கெளை தாவிகிட்டே இருப்பாய்ங்க. பயங்கிறதே கொஞ்சம் கூட தெரியாத வயசுல்ல. தொட வர்றவன்கிட்ட மாட்டிக்காம கீழே போயி அந்தக்குச்சிய எடுத்துட்டா .. தொட வர்றவன் தோத்துப்போயி திருப்பி வெளையாட்ட ஆரம்பிக்கணும்.
ஆத்துல குளிக்கிறப்ப தண்ணிக்குள்ள ஒளிஞ்சு வெளையாடுற தொட்டுக் கண்டுபிடி ஆட்டம். அதுல யாரு முதல்ல தொட்டு வர்றதுன்னு சொல்றதுக்கு ஒரு வழி இருக்கு. எல்லாரும் "சாட் - பூட் - த்ரீ" சொல்லி ரெண்டு கைகளையும் ஒண்ணா சேர்க்கும் போது யாரு கைய மாத்தி வச்சிருக்காங்களோ அவங்கதான் மொதல்ல தேடுற ஆளா இருக்கணும்னு சொல்றது. இல்லாட்டி நடுவிரலையும் பெரு விரலையும் மடக்கி, தண்ணிக்கு மேலெ வச்சு, தண்ணில படுற மாதிரி சுண்டும் போது"டொபுக்"ன்னு ஒரு சத்தம் வரணும். வந்தா சரி. வரலைன்னா அவந்தான் தேடிக்கண்டுபிடிக்கிற ஆளா இருக்கணும். வெளையாடும் போது தண்ணிக்கு அடில தொட்டா பிரயோசனமில்ல.. தொடலைன்னு ஏமாத்திருவாய்ங்க. அதனால குடுமிய பிடிச்சு தண்ணிக்கு வெளியில காமிச்சாத்தான் தேடுறதுல இருந்து அவனுக்கு விடுதல. யாரு மாட்டிக்கிட்டானோ அவன் தேடுற ஆளா மாறிருவான். வாய்க்கால்ல வெளையாடும் போது பாத்தீங்கன்னா " சேம்ப எலை"க்கும், படர்தாமரைக்கும் நடுவுல ஒளிஞ்சிகிட்டு சும்மா அப்படி ஒரு வெளையாட்டு காட்டுவாய்ங்க பாருங்க... நேரம் போறதே தெரியாது.
அநேகமா களத்து மேடு இல்லாட்டி மைதானத்துல வெளையாடுவோம் - நல்ல வேப்ப மரத்தோட அளவான கெளைய ஒடச்சி, அளவெடுத்து துண்டாக்கி, பட்டைய எல்லாம் சீவி விளையாடுற 'கிட்டி'ங்கிற கிட்டிப்புள் விளையாட்டுப் பத்தி எல்லாருக்கும் தெரியும்தான. ரெண்டு பக்கமும் கூரா இருக்குற சின்ன கம்பை, பெரிய கம்பால ஒரு ஓரமா தட்டி, சின்னக்கம்பு மேல வர்ற சமயம், வசதிக்கு தக்கன, கீழ விழுந்துராம ரெண்டு மூணு தடவை லேசா தட்டி அப்புறம் ஓங்கி தூரமா போய் விழுற மாதிரி அடிக்கிறது. அடிச்ச இடத்துல இருந்து சின்னக்கம்பு போய் விழுந்த தூரம் வரைக்கும் பெரிய கம்பை அடிக்குச்சி மாதிரி வச்சிகிட்டு அளக்குறது.. ஓங்கி அடிக்கிறதுக்கு முன்னாடி சின்னக் கம்பை எத்தனை தடவ தட்டினோமோ அத்தன தடவ அந்த தூரத்த பெருக்கிக்கிறது. மொத்தம் மூணு தடவைல ரொம்ப தூரத்த யாரு காண்பிக்கிறாய்ங்களோ அவங்களே ஜெயிச்சவய்ங்க. ஒரு சமயம் ஒருத்தன் கிட்டி அடிச்சதுல, அது நேரா என் கண்ணுல பட்டு மூணு நாளைக்கு ஒரு கண்ணு பந்து மாதிரி வீங்கிகிச்சே..!!
பம்பரம் - கடையில கெடக்கிற பம்பரத்தை விட நாமளே செய்ற பம்பரம்தான் ஸ்ட்ராங்கா இருக்கும். அந்த வெளையாட்டுல நல்லா வெளையாடணும்கிறத விட அடுத்தவன் பம்பரத்தை எப்படி ஒடைக்கிறதுன்னுதான் அவ்ளோ பயலும் யோசிப்பாய்ங்க. சாட்டைல பம்பரத்தை சுத்தி, காத்துல வீசி, கீழ விடாம உள்ளங்கைலயே சுத்த வச்சு புடிக்கிறது நல்லா இருக்கும்.
தீப்பெட்டிப்படத்தை சேத்து வைக்கிற வெளையாட்டும் இருந்திருக்கே. கோயில்பட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஏழாயிரம் பண்ணைன்னு ஏகப்பட்ட இடத்துல இருந்து கலர்கலரா, விதவிதமா தீப்பெட்டிப் படங்க நெறய வரும். அஞ்சு காசு, பத்துக்காசுன்னு கடல கொடுத்தா, பாக்கெட்டா குடுப்பாய்ங்க. கை நெறய படத்த வச்சுகிட்டு, ஒத்தையா ரெட்டையா வெளையாட்டு வெளையாடி நெறய படம் சேத்துருக்கேன்.
பள்ளிக்கூடத்துல சொல்லித்தந்தது கபடியும், சாப்ட் பால் வெளையாட்டும்தான். கபடி சுமாரா வெளையாடுவேன். ஒரு தடவ என் சைடு ஆளுங்க எல்லாரும் அவுட்டாகிட்டாங்க. நான் மாத்திரம்தான் ஆட்டத்துல இருந்தேன். எதிராளி சீனிவாசன் கபடி பாடி வந்தான். ஒரு ஆளு மாத்திரம் இருக்குறப்ப ஒதைக்கக்கூடாதுன்னு ரூல்ஸ். ஆனா அவன் என் நெஞ்சைப்பாத்து ஒதைச்சான். நான் விடல. அவன இறுக்கப்புடிச்சுகிட்டேன். அவனால திமிர முடியல. மூச்சை விட்டுட்டான். நம்ம பயலுவலுக்கு ஒரே கொண்டாட்டம். ஆனா ஒரு நிமிசத்துக்கு அப்புறமா எனக்கு கிறுகிறுன்னு வருது. ஓரமா போயி படுத்துகிட்டேன். மூச்சு விட முடியல. நெஞ்செல்லாம் சரியான வலி. டாக்டர்கிட்ட போயி காமிக்கிற அளவுக்கு ஆகிப்போச்சு. ரத்தம் கட்டிக்காம இருக்கணும்னு ரெண்டு மாசத்துக்கு ஊசி, மாத்திரைன்னு உசுர வாங்கிட்டாரு டாக்டரு. அதுக்குப் பின்னாடிதான் வலி கொறஞ்சது.
சாப்ட் பால்- வெளையாட்டுல வைக்கோல வச்சு தச்ச பெரிய உருண்டைதான் பந்து!. அத ஓங்கி அடிக்கிற அளவுக்கு எனக்கு அந்த வயசுல தெம்பு கெடயாது. அப்புறம் எதுன்னாலே தெரியாம ஆச வந்து கேட்டது, வெளையாண்டது கிரிக்கெட். நான் ரொம்ப சின்ன பையனா இருந்ததால எனக்கு டீம்ல ஆடுறதுக்கு எல்லாம் இடமே தரமாட்டாய்ங்க,ஹம். ரொம்ப சின்ன வயசுல மொத தடவயா மேற்கிந்தியாவோட இந்தியா வெளையாண்ட கிரிக்கெட் மேச்சோட ரேடியோ கமெண்டரி கேட்டிருக்கேன். அவங்க சொல்றது எதுவும் புரியலைன்னாலும், ஸ்கோரை மட்டும் ஆசையா பேப்பர்ல கிறுக்கி வச்சிக்கிருவேன். உள்ளூர்ல நடந்த ஒரு மேட்சுல நம்மளயும் ஆளா மதிச்சு சப்ஸ்டிடூயூட்டா - அதான் ஒப்புக்கு சப்பாணிம்மாய்ங்கல்ல - அத மாதிரி போட்டாய்ங்க. ஒரு சமயத்துல மிட்டான்ல நின்னுகிட்டு இருக்குறப்ப ஒரு கேச்சு வந்திச்சு. ஆஹா... சூப்பரா பந்தப் பிடிக்கப்போறோம்னு நெனச்சுகிட்டு ஒரு செகண்டு பகல்கனவு கண்டதுல, மூக்கு ஒடஞ்சு ரத்தம் வந்ததுதான் மிச்சம்.. ஹம்.
அப்புறம் டென்னிகாய்ட் கொஞ்ச நாளு வெளையாடினேன். வேலைக்கி சேந்த பின்னாடி கேரம்போர்டு, டேபிள் டென்னிஸ், வாலிபால், பேட்மிண்டன் இதெல்லாம் கொஞ்ச நாளு வெளையாடி இருக்கேன். நெஜம்மா ஆச வந்து கத்துகிட்டு வெளையாடுனது செஸ்ஸ. இந்த வெளையாட்டு பின்னாடி பல வகையிலும் ரொம்ப உதவியா இருந்துச்சு. ரொம்ப நல்லா வெளையாடுற ஒருத்தர ஜெயிச்சு கம்பெனி டீம்ல இடம் பிடிச்சேன். ஒரு எட்டு ஒம்போது வருசம் இருக்கும் - நான் வெளிநாடு வர வரைக்கும் டீம்ல சேர யாரும் என்னய சேலஞ்ச் பண்ணவே இல்ல..!! கொஞ்ச டோர்ணமெண்ட்ல எல்லாம் வெளையாடுற அளவுக்கு அதுல கிறுக்கு புடிச்சி திரிஞ்சிருக்கேன்னா பாத்துக்கங்க.
எல்லா எளவட்டங்களும் கத்துக்குற சீட்டு வெளையாட்டு - ஹாஸ்டல்லயும் பசங்களோடயும் இருந்தப்ப தெரிஞ்சுகிட்டது. ரம்மி, கழுத (!) - அட சீட்டு வெளையாட்டுப் பேருதாங்க - அதையும் கத்துகிட்டேன். பொறுமையும், கவனமும் இருந்தா ஜெயிக்கிறது ரொம்ப ஈஸி. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கொஞ்ச நாளு 'பிரிட்ஜ்' கத்துகிட்டேன். ஆனா அத நல்லா வெளையாடி பழகுறதுக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு வர வேண்டியதால அரகுறையா நின்னு போச்சு.
இப்பல்லாம் பசங்களுக்கு வெளையாட நேரமில்லாம போறதப் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு. கெடைக்கிற கொஞ்ச நேரத்தையும் டிவி பாக்குறதுலதான் இஷ்டம்னு உக்காந்துகிறாய்ங்க. என்ன பண்றது சொல்லுங்க...? கொஞ்ச நாளா நம்ம பசங்க 'சன்பீஸ்ட்' பிஸ்கட்தான் வேணுங்கிறாய்ங்க. காரணம் என்னடான்னு பாத்தா விஜய் படத்த சேத்து வைக்கணுமாம்...!!
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா