kavitha
14-07-2005, 03:39 AM
ஞானமும் நல்வாழ்க்கையும்
----------------------------------
உயிருள்ள வரை மனிதன் மென்மையானவன்
இறக்கும்போது விறைத்துப் போகிறான்.
புல்லிலிருந்து மரம் வரைக்கும் பல்லாயிரமும்
வாழும்போது மென்மையானதும்
நெகிழ்வானதும்தான்.
இறக்கும்போது விறைத்துச் சருகாகின்றன.
இப்படியாக
திண்மையானதும் வலியதும்
இறப்புக்குத் தோழர்கள்.
நயமானதும் மென்மையானதும்
வாழ்வுக்குத் தோழர்கள்.
எனவே
ஆயுத பலமுடையவன் வெல்வதில்லை.
நன்கு வளர்ந்த மரம்
அழியத்தான் போகிறது.
வலிமையானதும் பெரியதும் கீழே தங்கிவிடு.
நயமானதும் மெல்லியதும் மேலே நிலைக்கும்.
- லா வோத் சூ
.
----------------------------------
உயிருள்ள வரை மனிதன் மென்மையானவன்
இறக்கும்போது விறைத்துப் போகிறான்.
புல்லிலிருந்து மரம் வரைக்கும் பல்லாயிரமும்
வாழும்போது மென்மையானதும்
நெகிழ்வானதும்தான்.
இறக்கும்போது விறைத்துச் சருகாகின்றன.
இப்படியாக
திண்மையானதும் வலியதும்
இறப்புக்குத் தோழர்கள்.
நயமானதும் மென்மையானதும்
வாழ்வுக்குத் தோழர்கள்.
எனவே
ஆயுத பலமுடையவன் வெல்வதில்லை.
நன்கு வளர்ந்த மரம்
அழியத்தான் போகிறது.
வலிமையானதும் பெரியதும் கீழே தங்கிவிடு.
நயமானதும் மெல்லியதும் மேலே நிலைக்கும்.
- லா வோத் சூ
.