PDA

View Full Version : பார்க்கும்....



rambal
01-04-2003, 12:22 PM
பார்க்கும்..

கிழிந்த தகரத்தைத் தைத்து
நகரும் தேன்கூடாய்
மாநகரப் பேருந்துகள்
நின்று போகும்...

ஒரு இரு சக்கரவாகனம்
தர தரவென்று புலம்பிக் கொண்டே
போகும்...

பூக்கள் மெல்ல சிரித்துக் கொண்டே
ஓரவிழியியால்...
அதற்கு பதிலாய்
ஒரு பல் இளிப்பு மறுபுறம் இருந்து...

அருகில் இருக்கும்
வேம்பில் அமர்ந்து
மார்கழி மாத சங்கீத காலம்
என்று குயில் கூவுவதையும் வேடிக்கையாய்...

உதடுகளுக்கு வேலை நிறுத்தம்
கொடுத்து
காத்திருத்தல்கள்
முக்கியமாய்ப் போன
பொழுதில்
அமைதியாய்
பார்க்கும்....

இளசு
01-04-2003, 07:20 PM
கூரியப் பதிவுகள் அருமை.

kanni
02-04-2003, 04:14 AM
காத்திருப்பின் கனதி கவிதையாய்...................என் முன் காட்சியாய்
தேர்ந்த கவிஞனின் சொல்லடுக்காய், என்னைத் திரும்பத் திரும்பப்
பார்க்க வைத்த நான் ரசித்து ரசித்து மகிழ்ந்த கவிதை.
நன்றியுடன் கன்னி.

Narathar
02-04-2003, 05:43 AM
கிழிந்த தகரத்தைத் தைத்து
நகரும் தேன்கூடாய்
மாநகரப் பேருந்துகள்
நின்று போகும்...



பல்லவன் காரர்கள்
ப(டை)கை கொண்டு வராதிருக்கட்டும்

aren
02-04-2003, 12:47 PM
பல்லவனின் உண்மையான நிலை அதுதானே.

Nanban
10-01-2004, 12:12 PM
ஒரு பஸ் நிலையக் காட்சி.......

அத்தனை களேபரத்திற்கும் நடுவில் அமைதி கொண்டு மனம் பார்க்கிறது. எதை? காதலியை?