PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

பரஞ்சோதி
07-07-2005, 07:48 AM
நண்பர்களே!

கைரளி மலையாள தொலைக்காட்சி சேவையில் அசுவமேதா என்ற ஒரு நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும். அதில் வரும் பிரதிப் என்பவர் எதிரே இருப்பவர் மனதில் நினைத்தவரை கேள்விகள் கேட்டு வெளியே கொண்டு வருவார்.

அதே மாதிரி இங்கே தொடங்க ஆசைப்படுகிறேன்.

போட்டியின் பொதுவான விதிமுறைகள்:

1. போட்டியில் கலந்துக் கொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை எந்த நேரமும் தெரிவிக்கலாம், தனிமடலிலும் தெரிவிக்கலாம் (பரஞ்சோதி, பிரியன், அறிஞர்).

2. போட்டியிடுபவர்கள் யார் யார் என்பது தெரிவிக்கப்படும், அவர்களிடையே இரண்டு போட்டிகள் நடைபெறும், விடைகளை நடுவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

3. கேள்வி கேட்டப்பின்பு ஆமாம், இல்லை என்பதே பதிலாக இருக்க வேண்டும்.

4. 15 கேள்விகள் முடிந்தபின்போ அல்லது அதற்கு முன்பே விடையை அனுப்ப நினைப்பவர்கள் நடுவருக்கு அனுப்பி விட்டு, இங்கே விடை அனுப்பி விட்டதாக அறிவிக்கலாம்.

5. போட்டிகள் முடிந்ததும், விடையை நினைத்தவர் போட்டியின் 15 கேள்வி, பதில்களின் தொகுப்பை கொடுக்க வேண்டும்.

6. அனைவரின் விடைகளும் வந்தப்பின்பு நடுவர் விடையையும், சரியான விடை சொன்னவர்களின் பெயரையும் மட்டுமே அறிவிப்பார். யார்யார் என்ன என்ன சொன்னார்கள் என்பது ரகசியமாக வைக்கப்படும், காரணம் தவறான சொன்னதை வெளியிட்டால் மற்றவர்கள் கிண்டல் செயய்க்கூடுமே என்பதை நினைப்பதை தடுக்க.

7. விடையாக மிகவும் பிரபலமான தமிழக அளவிலோ (நடிகர் ஜெய்சங்கர்), இந்திய அளவிலோ (லாலுபிரசாத் யாதவ்) அல்லது இந்தியாவை சார்ந்த பிற நாட்டவர் (அன்னை தெரசா) நினைக்கலாம்.

8. ஒரு பிரபலம் ஒருமுறை தான் விடையாக தேர்வு செய்யப்பட வேண்டும், விடையாக தேர்வு செய்தப்பின்பு அவரையே தேர்வு செய்வது தடை செய்யப்படுகிறது, பட்டியல் கொடுக்கப்படும்.

9. தர்மசங்கடமான கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும் (எ.கா. அவருக்கு சின்னவீடு இருந்ததா? பாத்ரூமில் வழுக்கி விழுந்தாரா?, விமானத்தில் பயணம் செய்தவரா?).

10. கேள்விகள் முறையாக கேட்கப்பட வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்பதை தெரிந்தப்பின்னரே அவரது வயதை பற்றிய கேள்வி கேட்கப்பட வேண்டும்.

11. பொதுவான கேள்விகள் கேட்பதே நல்லது, குறிப்பாக எம்.ஜி.ஆரை விடையாக நினனத்தால் அவரது பள்ளியின் பெயரொ, அவர் திருமணம் செய்த ஆண்டையோ அனைவராலும் சொல்ல முடியாது, ஒருவேளை ஏதாவது ஒரு ஆண்டை சொன்னால், பின்னர் இணையத்தில் எதையாவது தேடி கொடுத்தால் நன்றாக இருக்காது, அப்படி ஒருவர் தவறாக சொல்லியிருந்தால் அதை நடுவர் அவர்களுக்கு தனிமடலில் தான் சுட்டிக்காட்ட வேண்டும், அதை ஏற்றுக் கொள்வது, நிராகரிப்பதும் நடுவரின் முடிவைப் பொருத்தது.

12. ஒருவர் ஒரு முறை தான் விடையை நடுவருக்கு அனுப்ப வேண்டும், முதன் முறையாக அனுப்பியதையே விடையாக ஏற்றுக் கொள்ளப்படும்.

13. விடைகண்டுபிடிக்ககுறைந்தது 10 கேள்விகள் கேட்க வேண்டும், அதிகப்பட்சம் 3 மதிப்பெண், அப்புறம் 10வதுகேள்வியிலேயேவிடைகண்டுபிடித்தால் 3 மதிப்பெண்கள்,,11, 12 ல் கண்டுபிடித்தால் 2 மதிப்பெண்கள், 13,14,15ல் கண்டுபிடித்தால் 1 மதிப்பெண். அப்படி 15க்குள்அவசரப்பட்டு விடை சொல்லி அது தவறானால் 1 மதிப்பெண் குறைக்கப்படும்.விடை கண்டுபிடிப்பவர் விடையை நடுவருக்கு அனுப்பியவுடன் மற்றவர்களும் அனுப்பலாம், அவர்களுக்கும் 3, 2, 1 என்ற விகிதத்திலும், தவறாக சொன்னால் 1 மதிப்பெண். குறையாது.

14. போட்டியாளர்கள் தவிர மற்றவர்கள் கமெண்ட் அடிக்கலாம், ஆனால் விடையையோ அல்லது கோந்தையோ கொட்டக்கூடாது.

15. போட்டியாளர்களைத் தவிர மற்றவர்கள், விடை கண்டுபிடிப்பவர் விடையை நடுவருக்கு அனுப்பிவிட்டதாகச் சொன்னப்பின்பு தான் நடுவருக்கு மட்டுமே விடை அனுப்ப வேண்டும்.

16. விடையை மனதில் நினைத்து போட்டியிட நினைப்பவர், விடையை நடுவருக்கு அனுப்பும் போது அவரைப் பற்றிய சிறு குறிப்பையோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறு காணப்படும் தளங்களின் விபரம் கொடுக்கலாம்.

17. கேள்விக்கு பதில் சொல்பவர் தவறாக ஆமாம், இல்லை என்று சொல்லி அதனால் விடைக்கான வழி மாறிவிட்டால், அதை நடுவர் தளத்தில் உடனே சரி செய்யலாம், ஒருவேளை போட்டி முடிந்தப்பின்பு கண்டுபிடிக்கப்பட்டால் கேள்வி கேட்டவருக்கு ! மதிப்பெண்ணும், இதர போட்டியாளர்களும் ½ மதிப்பெண்ணும் கிடைக்கும்.

18. விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்படலாம்.

19.நடுவரின் தீர்ப்பே இறுதியானடு, உறுதியானது, கடுமையானது.
---------
முக்கிய அறிவிப்பு
பதில் தெரிவிக்கும்போது டைட்டில் (சப்ஜெக்டில்) போட்டி எண் மாத்திரம் குறிப்பிடுங்கள்.
என் போட்டி, பரம்ஸ் போட்டி என குறிப்பிட வேண்டாம்.
ஒரு மெயிலில் ஒரு பதில் மாத்திரம் அனுப்புங்கள் (2 அல்லது 3 பதில்களை தெரிவிக்கவேண்டாம், தனித்தனியாக அனுப்பவும்)

பிரியன்
07-07-2005, 08:10 AM
ம். நான் தயார்.

பரஞ்சோதி
07-07-2005, 08:12 AM
கேள்வி எண் 1.

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா?

பிரியன்
07-07-2005, 08:50 AM
இல்லை

mania
07-07-2005, 09:15 AM
கேள்வி எண் 1.

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா?

:D மூன்று கேள்விகள் ஆகிவிட்டன....:D ..நாலாவது கேள்வியை கேள்....:rolleyes:
அன்புடன்
அம்பயர் மணியா...:D .

அறிஞர்
07-07-2005, 09:33 AM
வித்தியாசமான..முயற்சி... ஜமாயுங்கள்.. அன்பரே...

பரஞ்சோதி
07-07-2005, 09:50 AM
:D மூன்று கேள்விகள் ஆகிவிட்டன....:D ..நாலாவது கேள்வியை கேள்....:rolleyes:
அன்புடன்
அம்பயர் மணியா...:D .

தலை, கலக்குறீங்க, நல்ல வேளை உங்களிடம் கேள்விகள் கேட்கவில்லை.

அஸ்வமேதா நிகழ்ச்சியில் இது போன்று தான் கேட்பார்கள், ஆனால் உலக அளவில் புகழ் பெற்றவர்கள் பெயர் வரும்.

இது ஒரு புது முயற்சி தான்.

பரஞ்சோதி
07-07-2005, 09:52 AM
வித்தியாசமான..முயற்சி... ஜமாயுங்கள்.. அன்பரே...

நன்றி அறிஞரே! அடுத்ததாக நீங்களும் கேட்கலாம்.

பரஞ்சோதி
07-07-2005, 09:54 AM
இல்லை

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேராதவர்.

கேள்வி இரண்டு.

2) அவர் ஒரு பெண்?

பிரியன்
07-07-2005, 09:56 AM
இல்லை

thempavani
07-07-2005, 09:59 AM
அண்ணா அப்படியானால் ஆண்தான்..விடாதீர்கள் பிரியனை...

thempavani
07-07-2005, 10:00 AM
பிரியன் மதம் சார்ந்தவரா?

(அண்ணா நாங்கள் கேள்வி கேட்கலாமா???)

thempavani
07-07-2005, 10:00 AM
தலை, கலக்குறீங்க, நல்ல வேளை உங்களிடம் கேள்விகள் கேட்கவில்லை.

அஸ்வமேதா நிகழ்ச்சியில் இது போன்று தான் கேட்பார்கள், ஆனால் உலக அளவில் புகழ் பெற்றவர்கள் பெயர் வரும்.

இது ஒரு புது முயற்சி தான்.

உங்க தலையை யாருதான் கேள்வி கேட்கப்போகிறார்கள் என்று பார்க்கப் போகிறேன்...

பிரியன்
07-07-2005, 10:17 AM
பிரியன் மதம் சார்ந்தவரா?

(அண்ணா நாங்கள் கேள்வி கேட்கலாமா???)

இல்லை

பரஞ்சோதி
07-07-2005, 10:21 AM
பிரியன் மதம் சார்ந்தவரா?

(அண்ணா நாங்கள் கேள்வி கேட்கலாமா???)

சகோதரி இது எனக்கும் பிரியனுக்கும் இடையே நடைபெறும் கேள்வி பதில் போராட்டம்.

நீங்க தனியாக தலைப்பு தொடங்கி ஒருவரை அழைத்து கேளுங்கள். நான் கூட தயார் தான்.

thempavani
07-07-2005, 10:22 AM
கேள்வி எண் 1.

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா?


இல்லை

கேள்வி இரண்டு.


2) அவர் ஒரு பெண்?


இல்லை

கேள்வி மூன்று


பிரியன் மதம் சார்ந்தவரா??


இல்லை

thempavani
07-07-2005, 10:23 AM
சகோதரி இது எனக்கும் பிரியனுக்கும் இடையே நடைபெறும் கேள்வி பதில் போராட்டம்.

நீங்க தனியாக தலைப்பு தொடங்கி ஒருவரை அழைத்து கேளுங்கள். நான் கூட தயார் தான்.

சரியண்ணா..ஆனால் என்னதான் பேசுகிறீர்கள் என்று ஒட்டு கேட்க கட்டாயம் வருவேன்...

பரஞ்சோதி
07-07-2005, 10:26 AM
1) அரசியல், விளையாட்டு, சினிமாவை சேராதவர்.

2) ஆண்

பிரியன்

மூன்றாவது கேள்வி இதோ

3) தென் இந்தியா (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா,ஒரிஸா ) சேர்ந்தவர்?

பிரியன்
07-07-2005, 10:28 AM
ஆம்...

பரஞ்சோதி
07-07-2005, 10:43 AM
தென்னிந்தியாவை சேர்ந்த ஆண், சினிமா, விளையாட்டு, அரசியலை சேராதவர்.

கேள்வி 4: மருத்துவம், இலக்கியம் (தமிழ் மொழி, கதை, கவிதை, கட்டுரை ), தொழில் துறையை சேர்ந்தவர்?

பிரியன்
07-07-2005, 10:45 AM
ஆம்...

பரஞ்சோதி
07-07-2005, 11:24 AM
தென்னிந்தியாவை சேர்ந்த ஆண், மருத்துவம், இலக்கியம் (தமிழ் மொழி, கதை, கவிதை, கட்டுரை ), தொழில் துறையை சேர்ந்தவர்.

அடுத்த கேள்வி 5.

இலக்கியத்தை சார்ந்தவர்?

pradeepkt
07-07-2005, 11:30 AM
என்னா கேள்வி ...
கிட்டத்தட்ட இதுவரைக்கும் அண்ணா 20 கேள்வி கேட்டுட்டாரு!!! :)
நல்ல முயற்சி.

பரஞ்சோதி
07-07-2005, 11:38 AM
என்னா கேள்வி ...
கிட்டத்தட்ட இதுவரைக்கும் அண்ணா 20 கேள்வி கேட்டுட்டாரு!!! :)
நல்ல முயற்சி.

தம்பி நீங்க கைரளி அசுவமேதா நிகழ்ச்சி பார்த்தது இல்லையா? அதை நடத்துபவர் பெயர் பிரதீப், மகா அறிவாளி.

எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று, மலையாளம் என்றாலும் நன்றாக புரியும்.

pradeepkt
07-07-2005, 11:41 AM
எப்போன்னு சொல்லுங்கண்ணா, நானும் பார்க்கிறேன்.
என் பேரு வச்ச எல்லாருமே அறிவாளிகளாத்தான் இருப்பாங்களோ? :D

பிரியன்
07-07-2005, 12:21 PM
இல்லை...

பிரியன்
07-07-2005, 12:22 PM
பிரதீப் அது பரஞ்சோதி கேள்விக்கான விடை. நீங்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் ;) ;) ;) ;) ;)

pradeepkt
08-07-2005, 05:07 AM
பிரதீப் அது பரஞ்சோதி கேள்விக்கான விடை. நீங்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் ;) ;) ;) ;) ;)
அடப்பாவி... நானே ஒண்ணும் நினைக்கலை... இப்படி விளக்கம் வேறயா? :D

mania
08-07-2005, 05:13 AM
அடப்பாவி... நானே ஒண்ணும் நினைக்கலை... இப்படி விளக்கம் வேறயா? :D

:D பிரியன் சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.....:D இன்றுதான் அதை ரசிக்கும் அனுபவம் எனக்கு.........நன்றி.....ப்ரதீப்......:rolleyes:
அன்புடன்
ரசிக்கும் (மற்றவர் செலவில் ) மணியா....:D

mania
08-07-2005, 05:18 AM
எப்போன்னு சொல்லுங்கண்ணா, நானும் பார்க்கிறேன்.

என் பேரு வச்ச எல்லாருமே அறிவாளிகளாத்தான் இருப்பாங்களோ? :D

:D அதில் சந்தேகமே இல்லை......உன் தந்தை(உனக்கு பெயர் வைத்தவர் ) நல்ல அறிவாளிதானே......:) (உன் தந்தையாக இருந்தும் ).....:D
அன்புடன்
மணியா....:D

poo
08-07-2005, 07:13 AM
பரம்ஸ்... அசத்துங்க..



(நம்ம சன் மியூஸிக்ல கேக்கற கேள்விகளும்..
அதுக்கு அவங்க குடுக்கற க்ளுக்களும்..அடடா.. தலை..
கவனிச்சிருக்கீங்களா?!!)

mania
08-07-2005, 07:19 AM
பரம்ஸ்... அசத்துங்க..



(நம்ம சன் மியூஸிக்ல கேக்கற கேள்விகளும்..
அதுக்கு அவங்க குடுக்கற க்ளுக்களும்..அடடா.. தலை..
கவனிச்சிருக்கீங்களா?!!)

:D அவங்க உடம்பை அஷ்ட கோணலாக பண்ணிக்கொள்வதை பார்த்தவுடன் வேற சேனலுக்கு போயிடுவேன்.....ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா...:D

பிரியன்
09-07-2005, 04:41 AM
பரஞ்சோதி நான் தயார்

பரஞ்சோதி
09-07-2005, 04:42 AM
தென்னிந்தியாவை சேர்ந்த ஆண், மருத்துவம், தொழில் துறையை சேர்ந்தவர்.

அடுத்த கேள்வி 6.

அவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ சமுகசேவையில் ஆர்வம் கொண்டவர்களா?

பரஞ்சோதி
09-07-2005, 04:45 AM
பரஞ்சோதி நான் தயார்

மன்னிக்க வேண்டும் பிரியன், கடந்த இரு நாட்களாக விடுமுறை, வேலை காரணமாக மன்றம் வரவில்லை.

பிரியன்
09-07-2005, 04:47 AM
இல்லை

பரஞ்சோதி
09-07-2005, 04:57 AM
கேள்வி எண்: 7

தொழில்துறையை சார்ந்த தமிழர்?

பிரியன்
09-07-2005, 05:05 AM
இல்லை. அதுதான் மருத்துவதுறையை சார்ந்தவ்ர் என்று கூறி விட்டேனே

பரஞ்சோதி
09-07-2005, 05:16 AM
கேள்வி எண்: 8

இதயசிகிச்சை, செக்ஸ் மருத்துவம், சித்த மருத்துவத்தை சேர்ந்தவர்?

பிரியன்
09-07-2005, 05:20 AM
இல்லை

பரஞ்சோதி
09-07-2005, 05:30 AM
கேள்வி எண்:9

இவரது துணைவியாரும் மருத்துவர்?

பிரியன்
09-07-2005, 05:33 AM
இல்லை

பரஞ்சோதி
09-07-2005, 05:40 AM
கடைசி கேள்வி எண்: 10

பிரியன் என் தனிமடல் உங்களுக்கு வரவில்லையா?
(பழி வாங்கிட்டீங்கய்யா )

பிரியன்
09-07-2005, 05:44 AM
இல்லை- இரு கேள்விகளுக்கும் பதிலாக கொள்க

பிரியன்
09-07-2005, 05:47 AM
நான் நினைத்தவர் எனது அப்பாவின் நண்பர். மருத்துவதுறையில் தலைமை மருந்தாளுநராக உள்ளார் - அந்த மாமாவுக்கும் அத்தைக்குமே எனது தீபங்கள் பேசும் சமர்ப்பணம்

பரஞ்சோதி
09-07-2005, 05:49 AM
நன்றி பிரியன்.

இப்போ உங்க அப்பாவின் நண்பரை பற்றி சிறு குறிப்பு கொடுங்க.

பரஞ்சோதி
09-07-2005, 05:51 AM
முதல் பாயிண்ட் பிரியனுக்கு செல்கிறது.

நண்பர்களே!

நீங்க மனதில் நினைப்பவர் மிகவும் பிரபலமானவராக இருக்க வேண்டும், மேலும் இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அடுத்து நான் அழைப்பது மணியா அண்ணாவை.

பிரியன்
09-07-2005, 05:55 AM
கண்டிப்பாக - அதற்கு சற்று அவகாசம் வேண்டும். இன்று அறைக்கு சென்றபின் பொறுமையாக விரிவாக பதிக்கிறேன். அவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை..

அவர்கள் ராஜப்பா - ஜெயசீலி

என்னைப்பொறுத்தவரை எனது உறவினர்கள் எல்லோரையும் விட எனக்கு மிக முக்கியமானவர்கள், பிடித்தவர்கள் அவர்கள். நான் காதலை மிகவும் நேசிக்க காரணம் அவர்கள் இருவருக்குமிடையே இன்றும் இருக்கும் ஆழ்ந்த அன்பே. எனது கவிதை காதலி- அந்த அத்தை போன்ற மனமுடையவளாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்தான்..



மிகவும் நன்றி பரஞ்சோதி....

பிரியன்
09-07-2005, 05:59 AM
முதல் பாயிண்ட் பிரியனுக்கு செல்கிறது.

நண்பர்களே!

நீங்க மனதில் நினைப்பவர் மிகவும் பிரபலமானவராக இருக்க வேண்டும், மேலும் இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அடுத்து நான் அழைப்பது மணியா அண்ணாவை.

ஆனாலும் உங்களுக்கு தைரியம் கொஞ்சம் அதிகம்தானய்யா??

எப்படியோ மதிப்பெண் கிடைத்துவிட்டது எனக்கு பிரியமானவரிடமிருந்தே

பரஞ்சோதி
09-07-2005, 06:15 AM
கண்டிப்பாக - அதற்கு சற்று அவகாசம் வேண்டும். இன்று அறைக்கு சென்றபின் பொறுமையாக விரிவாக பதிக்கிறேன். அவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை..

அவர்கள் ராஜப்பா - ஜெயசீலி

என்னைப்பொறுத்தவரை எனது உறவினர்கள் எல்லோரையும் விட எனக்கு மிக முக்கியமானவர்கள், பிடித்தவர்கள் அவர்கள். நான் காதலை மிகவும் நேசிக்க காரணம் அவர்கள் இருவருக்குமிடையே இன்றும் இருக்கும் ஆழ்ந்த அன்பே. எனது கவிதை காதலி- அந்த அத்தை போன்ற மனமுடையவளாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்தான்..



மிகவும் நன்றி பரஞ்சோதி....

பிரியன், மாமா, அத்தை அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

உங்களுடைய ஏக்கம் தான் அனைவருக்கும் இருக்கும்.

என்னுடைய சிறு கருத்து தவறாக நினைக்க வேண்டாம், அத்தை மாதிரி மனமுடைய பெண் கிடைக்க வேண்டும் என்பதை விட அந்த மாமா மாதிரி உங்களை மணக்க இருக்கும் பெண்ணிடம் நடந்து கொள்வேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள், வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும்.

பிரியன்
09-07-2005, 06:20 AM
அது கவிதையில் உயிரோட்டமான காதல் இருக்கவேண்டும் என்பதற்காக குறிப்பிட்டிருந்தேன். அந்த மாமா மாதிரி இருக்க மாட்டேன் என்று நான் எங்கும் சொல்லவில்லை ஐயா. என்னைப் பொறுத்தவரை என்னை மணந்து கொள்பவளுக்கு மனதளவிலும்உண்மையாகவே இருப்பேன். எனது தொகுப்பின் கடைசி கவிதை படிக்கும் போது உங்களுக்கு இது புரியும் என்று நம்புகிறேன்....

பரஞ்சோதி
09-07-2005, 08:13 AM
நன்றி பிரியன்.

அடுத்த போட்டிக்கு நண்பர் அறிஞரை அழைக்கிறேன்.

உங்கள் மனதில் இந்திய அளவில் பிரபலமானவரை நினைத்துக் கொள்ளுங்கள். செய்திதாட்கள், சாதனை மற்றும் அடிக்கடி செய்திகள் வந்து பிரபலமானவராக இருக்கலாம்.

அறிஞர்
09-07-2005, 10:35 AM
நன்றி பிரியன்.

அடுத்த போட்டிக்கு நண்பர் அறிஞரை அழைக்கிறேன்.

உங்கள் மனதில் இந்திய அளவில் பிரபலமானவரை நினைத்துக் கொள்ளுங்கள். செய்திதாட்கள், சாதனை மற்றும் அடிக்கடி செய்திகள் வந்து பிரபலமானவராக இருக்கலாம்.முன்பு அழைத்தது போல் திங்கட்கிழமை மணியாவை... கேள்வி கேளுங்கள்.. அடுத்து ஏதாவது அம்மிணியை கேளுங்கள்... அதற்கு பின் சில ரவுண்டுகளில் என்னை கேளுங்கள்...

பரஞ்சோதி
09-07-2005, 10:53 AM
அறிஞரே!

அம்மிணி எல்லாம் மின்மினி மாதிரி உடனுக்குடன் மறைந்து போய் விடுகிறார்கள், அதான் மன்றத்தில் அதிக நேரம் இருக்கும் உங்களை அழைத்தேன், பரவாயில்லை.

இதோ தேம்பா சகோதரி அல்லது சுவேதாவை அழைக்கிறேன். உடனே உங்கள் விருப்பம் சொல்லுங்கள்

சுவேதா
09-07-2005, 01:06 PM
ம்ம் நான் தயார்.

பரஞ்சோதி
09-07-2005, 01:22 PM
சகோதரி நன்றி.

உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள், அவரைப் பற்றிகேள்விகள் கேட்கிறேன் சரியா?

பரஞ்சோதி
09-07-2005, 01:24 PM
கேள்வி எண் 1:

தமிழகத்தை சேர்ந்தவர்?

ஆம், இல்லை என்ற பதில் மட்டும் போதும்.

சுவேதா
09-07-2005, 01:44 PM
இல்லை

சுவேதா
09-07-2005, 01:45 PM
சகோதரி நன்றி.

உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள், அவரைப் பற்றிகேள்விகள் கேட்கிறேன் சரியா?

:) சரி

thempavani
09-07-2005, 03:06 PM
முன்பு அழைத்தது போல் திங்கட்கிழமை மணியாவை... கேள்வி கேளுங்கள்.. அடுத்து ஏதாவது அம்மிணியை கேளுங்கள்... அதற்கு பின் சில ரவுண்டுகளில் என்னை கேளுங்கள்...

:confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused:
;);););););););););););););););););)
:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

பரஞ்சோதி
10-07-2005, 08:02 AM
சுவேதா சகோதரி நீங்க மனதில் நினைத்தவர்
தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல, இந்தியாவின் இதர பகுதியை சேர்ந்தவர்.

அடுத்த கேள்வி 2:

அவர் ஒரு பெண் ?

சுவேதா
10-07-2005, 12:15 PM
இல்லை

பரஞ்சோதி
10-07-2005, 12:42 PM
கேள்வி எண்: 3

விளையாட்டு, சினிமா, அரசியல், விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவரா?

சுவேதா
10-07-2005, 12:43 PM
ஆம்!!!

பரஞ்சோதி
10-07-2005, 12:51 PM
கேள்வி எண் 4:

பந்து (கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, ஹாக்கி) வைத்து விளையாடும் விளையாட்டு துறையை சேர்ந்தவர்?

சுவேதா
10-07-2005, 01:03 PM
இல்லை.

பரஞ்சோதி
11-07-2005, 04:14 AM
கேள்வி எண்: 5சினிமாவை சேர்ந்தவர்?

mania
11-07-2005, 05:05 AM
முதல் பாயிண்ட் பிரியனுக்கு செல்கிறது.

நண்பர்களே!

நீங்க மனதில் நினைப்பவர் மிகவும் பிரபலமானவராக இருக்க வேண்டும், மேலும் இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அடுத்து நான் அழைப்பது மணியா அண்ணாவை.

உன்னுடைய ஆசை அதுவானால் சரி.....நான் தயார் பரம்ஸ்......:D
அன்புடன்
மணியா...;)

பரஞ்சோதி
11-07-2005, 05:18 AM
சரி தலை, ஏற்கனவே சகோதரியின் கேள்விகள் தொடரட்டும். நீங்களும் ஒருவரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

அவர் இந்திய அளவில் புகழ் பெற்றவராக இருக்க வேண்டும், அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்ததாக இருக்க வேண்டும்.

நான் கேள்விகள் கேட்கலாமா?

mania
11-07-2005, 05:23 AM
சரி தலை, ஏற்கனவே சகோதரியின் கேள்விகள் தொடரட்டும். நீங்களும் ஒருவரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

அவர் இந்திய அளவில் புகழ் பெற்றவராக இருக்க வேண்டும், அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்ததாக இருக்க வேண்டும்.

நான் கேள்விகள் கேட்கலாமா?

கேட்கலாம்....;)
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
11-07-2005, 05:35 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் : 1

விளையாட்டு, சினிமா, அரசியல், விஞ்ஞானம் சேர்ந்தவர்?

mania
11-07-2005, 05:37 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் : 1

விளையாட்டு, சினிமா, அரசியல், விஞ்ஞானம் சேர்ந்தவர்?

ஆமாம்......
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
11-07-2005, 05:43 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி இரண்டு.

பந்து கொண்டு விளையாடும் விளையாட்டை சேர்ந்தவர் (கிரிக்கெட், டென்னிஸ், கோல்ப், கால்பந்து, ஹாக்கி) ?

mania
11-07-2005, 05:48 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி இரண்டு.

பந்து கொண்டு விளையாடும் விளையாட்டை சேர்ந்தவர் (கிரிக்கெட், டென்னிஸ், கோல்ப், கால்பந்து, ஹாக்கி) ?

இல்லை.....
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
11-07-2005, 05:52 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 3)

அரசியலை சேர்ந்தவர்?

mania
11-07-2005, 05:55 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 3)

அரசியலை சேர்ந்தவர்?


இல்லை.....
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
11-07-2005, 06:00 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 4)

சினிமா துறையை சேர்ந்தவர்?

mania
11-07-2005, 06:08 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 4)

சினிமா துறையை சேர்ந்தவர்?


ஆமாம்....
அன்புடன்
மணியா....

அறிஞர்
11-07-2005, 06:08 AM
என்ன இருவரும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கலக்குகிறீர்கள்...

பரஞ்சோதி
11-07-2005, 06:10 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 5)

சினிமாவை சேர்ந்த அவர் ஒரு பெண்?

gragavan
11-07-2005, 06:12 AM
அடேங்கப்பா! இதென்ன புதுக் கூத்து...ஒரு வாரம் வரலைன்னா.....என்னென்னவோ நடக்குதே....நடக்கட்டும். நடக்கட்டும்.

அறிஞர்
11-07-2005, 06:13 AM
அடேங்கப்பா! இதென்ன புதுக் கூத்து...ஒரு வாரம் வரலைன்னா.....என்னென்னவோ நடக்குதே....நடக்கட்டும். நடக்கட்டும்.அடுத்து நீங்கள் தான் ரெடியா இருங்க....

mania
11-07-2005, 06:17 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 5)

சினிமாவை சேர்ந்த அவர் ஒரு பெண்?

இல்லை....
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
11-07-2005, 06:19 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 6)

தமிழகத்தை சேர்ந்தவர்?

mania
11-07-2005, 06:21 AM
அடேங்கப்பா! இதென்ன புதுக் கூத்து...ஒரு வாரம் வரலைன்னா.....என்னென்னவோ நடக்குதே....நடக்கட்டும். நடக்கட்டும்.

Quote:
Originally Posted by gragavan
அடேங்கப்பா! இதென்ன புதுக் கூத்து...ஒரு வாரம் வரலைன்னா.....என்னென்னவோ நடக்குதே....நடக்கட்டும். நடக்கட்டும்.

அடுத்து நீங்கள் தான் ரெடியா இருங்க....


இந்த மாதிரி குறுக்கே வந்து குழப்பினா எனக்கு விடை மறந்துவிடும் பரம்ஸ்.....:rolleyes:
அன்புடன்
மணியா...:rolleyes:

mania
11-07-2005, 06:23 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 6)

தமிழகத்தை சேர்ந்தவர்?

ஆமாம்.....
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
11-07-2005, 06:23 AM
தலை, பொதுவாக இது போன்ற போட்டிகளுக்கு நடுவர் தேவை.

நடுவராக அறிஞரை நியமிக்க விரும்புகிறேன், போட்டி தொடங்கும் போது விடையை அறிஞருக்கு தனிமடலில் அனுப்ப வேண்டும், இறுதியில் நான் சொல்லும் விடை, சரியா? தவறா என்பதை அறிஞர் சொல்லுவார்.

என்ன அறிஞர் அவர்களே! எனக்கு உதவ தயாரா?

அடுத்த போட்டியிலிருந்து இதை அமுல்படுத்த விரும்புகிறேன்.

mania
11-07-2005, 06:29 AM
தலை, பொதுவாக இது போன்ற போட்டிகளுக்கு நடுவர் தேவை.

நடுவராக அறிஞரை நியமிக்க விரும்புகிறேன், போட்டி தொடங்கும் போது விடையை அறிஞருக்கு தனிமடலில் அனுப்ப வேண்டும், இறுதியில் நான் சொல்லும் விடை, சரியா? தவறா என்பதை அறிஞர் சொல்லுவார்.

என்ன அறிஞர் அவர்களே! எனக்கு உதவ தயாரா?

அடுத்த போட்டியிலிருந்து இதை அமுல்படுத்த விரும்புகிறேன்.

ஏன் என் மேல் நம்பிக்கை இல்லையா....?????:mad:
அன்புடன்
மணியா....:mad:

பரஞ்சோதி
11-07-2005, 06:30 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 7)

நடிப்பு மட்டுமல்லாது, பாடுவது, டைரக்ட் செய்வது போன்றவையும் செய்பவர்?

mania
11-07-2005, 06:32 AM
என்ன அறிஞர் அவர்களே! எனக்கு உதவ தயாரா?


தெரியாது.........எட்டாவது கேள்வி என்ன.....????:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
11-07-2005, 06:32 AM
ஏன் என் மேல் நம்பிக்கை இல்லையா....?????:mad:
அன்புடன்
மணியா....:mad:

அய்யோ தலை,

நான் தான் தெளிவாக "அடுத்த போட்டியிலிருந்து அமுல்படுத்த விரும்புகிறேன்" என்று சொல்லியிருக்கேனே.

உங்களை நம்பாமலா, உங்களை தலையாக ஏற்றுக் கொண்டேன்.

mania
11-07-2005, 06:34 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் 7)

நடிப்பு மட்டுமல்லாது, பாடுவது, டைரக்ட் செய்வது போன்றவையும் செய்பவர்?

ஆமாம்.....
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
11-07-2005, 06:35 AM
என்ன அறிஞர் அவர்களே! எனக்கு உதவ தயாரா?


தெரியாது.........எட்டாவது கேள்வி என்ன.....????:rolleyes:
அன்புடன்
மணியா....:D

தலை,

தொலைக்காட்சி போட்டியில் தெரியாது என்பதே வரக்கூடாது, அப்படி சொன்னால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.

சரி அடுத்த கேள்வி எண் 8

நடிப்பிற்காக தேசிய விருதுகள் பெற்றவரா?

mania
11-07-2005, 06:37 AM
அய்யோ தலை,

நான் தான் தெளிவாக "அடுத்த போட்டியிலிருந்து அமுல்படுத்த விரும்புகிறேன்" என்று சொல்லியிருக்கேனே.

உங்களை நம்பாமலா, உங்களை தலையாக ஏற்றுக் கொண்டேன்.

அறிஞர் நம் அணிக்கு எதிராகவும் அவர் அணிக்கு சாதகமாகவும் செயல் படுவாரே.....????:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes:

mania
11-07-2005, 06:38 AM
தலை,

தொலைக்காட்சி போட்டியில் தெரியாது என்பதே வரக்கூடாது, அப்படி சொன்னால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.

சரி அடுத்த கேள்வி எண் 8

நடிப்பிற்காக தேசிய விருதுகள் பெற்றவரா?

ஆமாம்.....
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
11-07-2005, 06:39 AM
அடுத்த கேள்வி எண் 9

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவரா?

அறிஞர்
11-07-2005, 06:41 AM
தலை, பொதுவாக இது போன்ற போட்டிகளுக்கு நடுவர் தேவை.

நடுவராக அறிஞரை நியமிக்க விரும்புகிறேன், போட்டி தொடங்கும் போது விடையை அறிஞருக்கு தனிமடலில் அனுப்ப வேண்டும், இறுதியில் நான் சொல்லும் விடை, சரியா? தவறா என்பதை அறிஞர் சொல்லுவார்.

என்ன அறிஞர் அவர்களே! எனக்கு உதவ தயாரா?

அடுத்த போட்டியிலிருந்து இதை அமுல்படுத்த விரும்புகிறேன்.உதவ தயார் அன்பரே...

பரஞ்சோதி
11-07-2005, 06:42 AM
மிக்க நன்றி அறிஞரே!

அடுத்த முறை கேள்வி கேட்க இருப்பவரை விடையை உங்களுக்கு முதலில் அனுப்ப சொல்கிறேன். இன்னமும் சில விதிமுறைகள் கடைபிடிக்கலாம், அதையும் சொல்கிறேன், ரொம்ப ஜாலியாக செல்லும்.

அறிஞர்
11-07-2005, 06:43 AM
அறிஞர் நம் அணிக்கு எதிராகவும் அவர் அணிக்கு சாதகமாகவும் செயல் படுவாரே.....????:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes:எவ்வளவு நேர்மையா என் மீது நம்பிக்கை வைத்து சொல்லியிருக்கிறார்... இப்படி சொன்னா எப்படி

mania
11-07-2005, 06:46 AM
அடுத்த கேள்வி எண் 9

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவரா?


ஆமாம்..... (கிட்ட வரான்.....கிட்ட வரான்.... )
அன்புடன்
மணியா....

mania
11-07-2005, 06:50 AM
எவ்வளவு நேர்மையா என் மீது நம்பிக்கை வைத்து சொல்லியிருக்கிறார்... இப்படி சொன்னா எப்படி

:D :D :D :D உங்க அணியினர் திறமையின் மேல் எனக்கு அபார நம்பிக்கை உண்டு.....அவர்கள் சரியாக பதில் சொல்லும்போது பார்த்துக்கொள்கிறேன்...அதுவரை ஓ.கே.....:D :D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
11-07-2005, 07:19 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் : 10

அவரது துணைவியாரும் நடிகை ?

mania
11-07-2005, 07:25 AM
மணியா அண்ணாவுக்கு கேள்வி எண் : 10

அவரது துணைவியாரும் நடிகை ?

இல்லை....
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
11-07-2005, 07:38 AM
சரி தலை,

விடையை சொல்கிறேன், சரியா தவறா என்று சொல்லுங்கள்.

விடை: சிலம்பரசன் என்ற சிம்பு

அறிஞர்
11-07-2005, 08:03 AM
எங்க மணியாவை ஆளக்காணோம்.. என்ன மணியா சரியா...

mania
11-07-2005, 08:32 AM
சரி தலை,

விடையை சொல்கிறேன், சரியா தவறா என்று சொல்லுங்கள்.

விடை: சிலம்பரசன் என்ற சிம்பு

தவறு பரம்ஸ்.....
அன்புடன்
மணியா........

thempavani
11-07-2005, 08:37 AM
ஹ..ஹ..ஹா...................

pradeepkt
11-07-2005, 08:46 AM
இன்னும் கேள்விகள் பாக்கி இருக்கா?

அறிஞர்
11-07-2005, 09:05 AM
தவறு பரம்ஸ்.....
அன்புடன்
மணியா........அப்ப பதிலை சொல்லுங்கள்.... கேள்விகள் முடிந்துவிட்டதே,.... அடுத்த ரவுண்ட் தேம்பா அல்லது இராகவன் ரெடியாகுங்க...

பரஞ்சோதி
11-07-2005, 09:10 AM
தவறு பரம்ஸ்.....
அன்புடன்
மணியா........

தலை விடையை சொல்லுங்கள்.

பாருங்க தேம்பா எவ்வளவு தெம்பா சிரிக்கிறார்.

mania
11-07-2005, 09:20 AM
தலை விடையை சொல்லுங்கள்.

பாருங்க தேம்பா எவ்வளவு தெம்பா சிரிக்கிறார்.

;) நான் மனதில் நினைத்தவர் கமலஹாசன்...
அன்புடன்
மணியா....;)

பரஞ்சோதி
11-07-2005, 09:26 AM
அண்ணா, பாயிண்ட் உங்களுக்கு இல்லை.

கமலஹாசனின் துணைவியார் சரிகா ஒரு நடிகை தானே.

நீங்க இல்லை என்று சொன்னதால் தான் நான் சிம்பு பெயரை சொன்னேன்.

mania
11-07-2005, 09:39 AM
அண்ணா, பாயிண்ட் உங்களுக்கு இல்லை.

கமலஹாசனின் துணைவியார் சரிகா ஒரு நடிகை தானே.

நீங்க இல்லை என்று சொன்னதால் தான் நான் சிம்பு பெயரை சொன்னேன்.

:rolleyes: :rolleyes: :rolleyes: கமல ஹாசனின் துணைவி யார்.....?????
சந்தேகத்துடன்
மணியா....:D :D

mania
11-07-2005, 09:56 AM
;) இந்த போட்டியில் பரம்ஸே வெற்றி பெற்றார் என்று மனபூர்வமாக அறிவிக்கிறேன்......பாராட்டுக்கள் பரம்ஸ்......:D
அன்புடன்
மணியா....:D

gragavan
11-07-2005, 10:05 AM
;) இந்த போட்டியில் பரம்ஸே வெற்றி பெற்றார் என்று மனபூர்வமாக அறிவிக்கிறேன்......பாராட்டுக்கள் பரம்ஸ்......:D
அன்புடன்
மணியா....:D
தலையின் பெருந்தன்மையை என்ன சொல்லிப் பாராட்டுவது. ஆகா!துணைவி யார் என்ற கேள்வி போய் அடுத்து யார் என்ற கேள்வி இப்போது.

mania
11-07-2005, 10:10 AM
தலையின் பெருந்தன்மையை என்ன சொல்லிப் பாராட்டுவது. ஆகா!துணைவி யார் என்ற கேள்வி போய் அடுத்து யார் என்ற கேள்வி இப்போது.

:rolleyes: கவுதமின்னு பேர் அடிப்பட்டுதே.....????:D :D
அன்புடன்
மணியா....;)

பரஞ்சோதி
11-07-2005, 10:13 AM
;) இந்த போட்டியில் பரம்ஸே வெற்றி பெற்றார் என்று மனபூர்வமாக அறிவிக்கிறேன்......பாராட்டுக்கள் பரம்ஸ்......:D
அன்புடன்
மணியா....:D

நன்றி தலை.

நீங்க மீண்டும் போட்டியிட அழைப்பேன்.

இப்போ நான் அழைப்பது இராகவன் அண்ணாவை

gragavan
11-07-2005, 10:14 AM
:rolleyes: கவுதமின்னு பேர் அடிப்பட்டுதே.....????:D :D
அன்புடன்
மணியா....;)
அப்பக் கேள்வி இப்படி இருந்திருக்கனுமோ?
துணைவியார் போய் இப்போ துணைவி யார்?

gragavan
11-07-2005, 10:16 AM
நன்றி தலை.

நீங்க மீண்டும் போட்டியிட அழைப்பேன்.

இப்போ நான் அழைப்பது இராகவன் அண்ணாவை
ஏன் அழைச்சீங்க? சரி. கேள்வியக் கேளுங்க.

பரஞ்சோதி
11-07-2005, 10:23 AM
இராகவன் அண்ணா போட்டி விதிமுறைகள் தெரியும் தானே.

இந்திய அளவில் புகழ்பெற்ற ஒருவரை நினைவில் வைத்துக் கொள்ளுங்க, அவரது பெயரை அறிஞருக்கு தனிமடலில் அனுப்புங்க, அவர் தான் நடுவர்.

கேள்விகள் கேட்கிறேன், ஆமாம், இல்லை என்று பதில் சொல்லுங்க.

நன்றி.

பரஞ்சோதி
11-07-2005, 10:24 AM
போட்டி எண் 3:

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 1)

உங்கள் மனதில் இருப்பவர் ஒரு ஆண் ?

gragavan
11-07-2005, 10:30 AM
போட்டி எண் 3:

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 1)

உங்கள் மனதில் இருப்பவர் ஒரு ஆண் ?
இல்லை

mania
11-07-2005, 10:30 AM
போட்டி எண் 3:

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 1)

உங்கள் மனதில் இருப்பவர் ஒரு ஆண் ?

:mad: இதற்கு பதில் சொல்லும் முன் அறிஞருக்கு தனிமடலில் நீ நினைத்த நபர் யார் என்று தெரிவி......:mad:
கண்டிப்புடன்
வாத்தியார் மணியா.....:D

(உன் மனதில் ஒரு பெண் இருப்பதாகத்தானே அன்று சொன்னாய்....????):rolleyes: :confused: :confused: :D

gragavan
11-07-2005, 10:34 AM
:mad: இதற்கு பதில் சொல்லும் முன் அறிஞருக்கு தனிமடலில் நீ நினைத்த நபர் யார் என்று தெரிவி......:mad:
கண்டிப்புடன்
வாத்தியார் மணியா.....:D

(உன் மனதில் ஒரு பெண் இருப்பதாகத்தானே அன்று சொன்னாய்....????):rolleyes: :confused: :confused: :D
இப்பத்தான் தெரிவித்தேன். அவருக்குப் போயிருக்கும்...அன்றைக்குச் சொன்னதை இன்றைக்குச் சொல்ல வேண்டாமே ஹி ஹி

பரஞ்சோதி
11-07-2005, 10:55 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 2)

அந்த பெண் சினிமா, விளையாட்டு, அரசியல், ஆன்மீகம், இலக்கியம் துறையை சேர்ந்தவரா?

அறிஞர்
11-07-2005, 11:16 AM
இராகவனின் பதில் சேர்ந்தது.... தொடருங்கள்.. பரம்ஸ்

gragavan
11-07-2005, 11:16 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 2)

அந்த பெண் சினிமா, விளையாட்டு, அரசியல், ஆன்மீகம், இலக்கியம் துறையை சேர்ந்தவரா?
ஆமாம்

பரஞ்சோதி
11-07-2005, 11:21 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 3)

அந்த பெண் திருமணம் ஆனவர்?

gragavan
11-07-2005, 11:32 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 3)

அந்த பெண் திருமணம் ஆனவர்?
ஆமாம்

gragavan
11-07-2005, 11:33 AM
அந்த பெண் அல்ல தம்பி. அந்தப் பெண். ஒற்று விடாதே!

பரஞ்சோதி
11-07-2005, 11:37 AM
அந்த பெண் அல்ல தம்பி. அந்தப் பெண். ஒற்று விடாதே!

ஒற்றுவில் தவறு செய்வது எனக்கு இருக்கும் தொற்றுவியாதி. அதை சுட்டிக் காட்டினால் சரி செய்கிறேன்.

பரஞ்சோதி
11-07-2005, 11:42 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 4)

கதை, கவிதை எழுதுபவர்?

gragavan
11-07-2005, 11:43 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 4)

கதை, கவிதை எழுதுபவர்?

இல்லை

mania
11-07-2005, 11:46 AM
:rolleyes: இந்த ஸ்டேஜிலே அறிஞருக்கு இன்னொரு தனி மடல் அனுப்பி அவரை கொஞ்சம் குழப்பி வைச்சிக்கோ.....:confused: எதுக்கும் உதவும்....ஹி......ஹி.....ஹி....
அன்புடன்
ஆலோசனை மணியா....:D :D

பிரியன்
11-07-2005, 11:58 AM
:rolleyes: இந்த ஸ்டேஜிலே அறிஞருக்கு இன்னொரு தனி மடல் அனுப்பி அவரை கொஞ்சம் குழப்பி வைச்சிக்கோ.....:confused: எதுக்கும் உதவும்....ஹி......ஹி.....ஹி....
அன்புடன்
ஆலோசனை மணியா....:D :D

இதைக் கேட்டா பரஞ்சோதிதான் குழம்பிடுவார் தலை.

mania
11-07-2005, 12:00 PM
இதைக் கேட்டா பரஞ்சோதிதான் குழம்பிடுவார் தலை.

:D :D :D :D
அன்புடன்
மணியா......:D

thempavani
11-07-2005, 12:02 PM
குழப்பவாதிக் கூட்டமுங்கோ.....

பரஞ்சோதி
11-07-2005, 12:09 PM
குழப்பவாதிக் கூட்டமுங்கோ.....

அம்மி(மு )ணி அடுத்தது உங்களைத் தான் குழப்ப போகிறேன்.

பரஞ்சோதி
11-07-2005, 12:11 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 5)

அவரது கணவரும் அவரும் ஒரே துறையை சார்ந்தவர்கள் ?

gragavan
11-07-2005, 12:17 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 5)

அவரது கணவரும் அவரும் ஒரே துறையை சார்ந்தவர்கள் ?
இல்லை

சுவேதா
11-07-2005, 12:19 PM
கேள்வி எண்: 5சினிமாவை சேர்ந்தவர்?

இல்லை

பரஞ்சோதி
11-07-2005, 12:22 PM
அய்யோ சகோதரி இப்போ தான் நான் உண்மையில் குழம்ப போகிறேன்.

சரி அடுத்த கேள்வியை உங்களுக்கு இராகவன் அண்ணாவுக்கு கொடுத்த பின்பு கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.

mania
11-07-2005, 12:25 PM
இல்லை

:D :D :D :D :D :D :D :D
சிரிப்புடன்
மணியா....:D

thempavani
11-07-2005, 12:25 PM
நானு எப்பவோ ரெடியா இருக்கேன்.. நீங்கதான் கேள்வி கேட்கமாட்டீங்கிறீங்க....

பரஞ்சோதி
11-07-2005, 12:25 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 6)

அந்த பெண்மணி சினிமா துறையை சேர்ந்தவர்?

mania
11-07-2005, 12:29 PM
:D :D ஆஹா....சுவேதா வந்தாச்சு....... இனிமே பரம்ஸை குழப்ப நாம ஒன்னுமே பண்னவேண்டாம்.....சும்மா உக்கார்ந்து சுவேதாவை வேடிக்கை பார்த்தாலே போதும்....:D
அன்புடன்
மணியா.....:D

gragavan
11-07-2005, 12:31 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 6)

அந்த பெண்மணி சினிமா துறையை சேர்ந்தவர்?
ஆமாம். மறுபடியும் ஒற்று விட்டுட்டியே!

pradeepkt
11-07-2005, 12:33 PM
ஆமாம். மறுபடியும் ஒற்று விட்டுட்டியே!
அப்பந் நீங்க ஒட்டிவ் விட்டிருங்க. என்னையும் சொல்லிறக் கூடாது பாருங்க :D அதான்...
--முன் ஜாக்கிரதை பிரதீப்

பரஞ்சோதி
11-07-2005, 12:35 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 7)

அவர் ஒரு பாடகி?

சுவேதா
11-07-2005, 12:35 PM
அய்யோ சகோதரி இப்போ தான் நான் உண்மையில் குழம்ப போகிறேன்.

சரி அடுத்த கேள்வியை உங்களுக்கு இராகவன் அண்ணாவுக்கு கொடுத்த பின்பு கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.


சரி அண்ணா!

சுவேதா
11-07-2005, 12:36 PM
:D :D ஆஹா....சுவேதா வந்தாச்சு....... இனிமே பரம்ஸை குழப்ப நாம ஒன்னுமே பண்னவேண்டாம்.....சும்மா உக்கார்ந்து சுவேதாவை வேடிக்கை பார்த்தாலே போதும்....:D
அன்புடன்
மணியா.....:D

ஹி...ஹி..ஹி

gragavan
11-07-2005, 12:39 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 7)

அவர் ஒரு பாடகி?
ஆமாம்

gragavan
11-07-2005, 12:40 PM
அப்பந் நீங்க ஒட்டிவ் விட்டிருங்க. என்னையும் சொல்லிறக் கூடாது பாருங்க :D அதான்...
--முன் ஜாக்கிரதை பிரதீப்
அட ஆண்டவா!

பரஞ்சோதி
11-07-2005, 12:59 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 8)

வடமொழி (ஷ, ஜ, போன்றவை ) எழுத்துக்கள் அவரது பெயரில் இருக்காது ?

gragavan
11-07-2005, 01:18 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 8)

வடமொழி (ஷ, ஜ, போன்றவை ) எழுத்துக்கள் அவரது பெயரில் இருக்காது ?
இல்லை.</p>

ஒரு வழியாப் போட்டாச்சு. படிச்சுப் பாத்து கருத்துச் சொல்லுங்க



http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111319#post111319

பரஞ்சோதி
11-07-2005, 01:29 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 9)

தேசிய விருது பெற்றவர்?

gragavan
11-07-2005, 01:34 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 9)

தேசிய விருது பெற்றவர்?
ஆமாம்

பிரியன்
11-07-2005, 01:44 PM
எனக்கு பதில் தெரிஞ்சு போச்சு. பரஞ்சோதி தனிமடலில் அனுப்பவா-சீக்கிரம் சொல்லிடுங்க.

அறிஞர்
11-07-2005, 02:01 PM
பரம்ஸுக்கு இன்னும் ஒரு கேள்வி பாக்கி இருக்கிறது

பரஞ்சோதி
12-07-2005, 04:07 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 10)

ரஜினி, கமலுடன் சேர்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார்?

பிரியன்
12-07-2005, 04:09 AM
அசத்தல் கேள்வி பரஞ்சோதி. விடை தானாக வந்துவிடுமே

அறிஞர்
12-07-2005, 04:37 AM
நல்ல விறு விறுப்பான கடைசி கட்டம்.. சொல்லுங்கள்.. இராகவன்...

mania
12-07-2005, 04:39 AM
அசத்தல் கேள்வி பரஞ்சோதி. விடை தானாக வந்துவிடுமே

:rolleyes: :rolleyes: 30 நிமிடங்கள் ஆகிவிட்டடன.....இன்னும் பதில் தானாக வரவில்லையே.....???:rolleyes:
அன்புடன்
அப்பாவி மணியா....:D

gragavan
12-07-2005, 05:15 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 10)

ரஜினி, கமலுடன் சேர்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார்?இல்லை

அன்னைக்குப் பெயர் வைத்த முறை
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111525#post111525
என் கொங்கை நின்
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111319#post111319

பிரியன்
12-07-2005, 05:26 AM
சொல்லுங்க பரஞ்சோதி

பரஞ்சோதி
12-07-2005, 05:27 AM
விடை: நித்யஸ்ரீ

(தவறாக இருக்கும் பட்சத்தில் ஆஷா போஸ்லே, பாயிண்ட் இராகவன் அண்ணாவுக்கு)

gragavan
12-07-2005, 05:30 AM
விடை: நித்யஸ்ரீ

(தவறாக இருக்கும் பட்சத்தில் ஆஷா போஸ்லே, பாயிண்ட் இராகவன் அண்ணாவுக்கு)இரண்டுமே தவறுகள் பரம்ஸ். நான் நினைத்தது வாணி ஜெயராம். நித்யஸ்ரீ இந்திய அளவில் புகழ் பெற்றவர் அல்லர். ஆஷா போன்ஸ்லேக்கு இத்தனையும் பொருந்துமென்றாலும் நான் நினைத்தது வாணி ஜெயராம்.

அன்னைக்குப் பெயர் வைத்த முறை
http://www.tamilmantram.com/vb/showt...525#post111525 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111525#post111525)
என் கொங்கை நின்
http://www.tamilmantram.com/vb/showt...319#post111319 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111319#post111319)

பரஞ்சோதி
12-07-2005, 05:36 AM
பாராட்டுகள் அண்ணா,

நான் வாணி ஜெயராம் அவர்களின் கணவர் இசை துறையில் இருக்கிறார் என்று நினைத்தேன்.

பாயிண்ட் உங்களுக்கு தான்.

pradeepkt
12-07-2005, 05:39 AM
ஹ்ம்ம்... நான் அப்பவே நினைச்சேன்..
ராகவன்னா ஒண்ணு அது பி. சுசீலாவா இருக்கணும் அல்லது வாணி ஜெயராமா இருக்கணுமின்னு????
அண்ணாவுக்கு ஒரு தனிமடல் அனுப்பலாமான்னு நினைச்சேன்... ஆனால் என் நியாய உணர்வு தடுத்து விட்டது :D

பரஞ்சோதி
12-07-2005, 05:44 AM
புள்ளிகள் நிலவரம்

பிரியன் - 1
பரஞ்சோதி - 1
இராகவன் - 1

அடுத்து நான் அழைக்க இருப்பது சகோதரி தேம்பாவை.

அத்துடன் கேள்விகளின் எண்ணிக்கையை 15ஆக உயர்த்த இருக்கிறேன், உண்மையில் ரொம்ப மண்டை குடையுது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 20 கேள்விகள் கேட்பார், ஆனால் உலக அளவில் கேட்பார்.

மக்களே வேறு ஏதாவது கருத்து இருந்தால் கூறுங்கள்.

பிரியன்
12-07-2005, 05:49 AM
பாயிண்ட் பட்டியல்
.

மக்களே வேறு ஏதாவது கருத்து இருந்தால் கூறுங்கள்.

புள்ளிகள் நிலவரம் என்று மாற்றிக் கொள்ளலாமே...

gragavan
12-07-2005, 05:51 AM
பாராட்டுகள் அண்ணா,

நான் வாணி ஜெயராம் அவர்களின் கணவர் இசை துறையில் இருக்கிறார் என்று நினைத்தேன்.

பாயிண்ட் உங்களுக்கு தான்.

வாணி ஜெயராமின் கணவர் அக்கவுண்ட்ஸ் தொடர்பான வேலையில் இருந்தார். மனைவியின் முன்னேற்றத்திற்காக அந்த வேலையை விட்டு விட்டு துணைவியாரின் முன்னேற்றதிலேயே குறிக்கோளாக இருந்தார். எத்தனை மனைவியருக்கு இப்படிக் கணவர் கிடைப்பார்கள்?

அன்னைக்குப் பெயர் வைத்த முறை
http://www.tamilmantram.com/vb/showt...525#post111525 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111525#post111525)
என் கொங்கை நின்
http://www.tamilmantram.com/vb/showt...319#post111319 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111319#post111319)

gragavan
12-07-2005, 05:55 AM
ஹ்ம்ம்... நான் அப்பவே நினைச்சேன்..
ராகவன்னா ஒண்ணு அது பி. சுசீலாவா இருக்கணும் அல்லது வாணி ஜெயராமா இருக்கணுமின்னு????
அண்ணாவுக்கு ஒரு தனிமடல் அனுப்பலாமான்னு நினைச்சேன்... ஆனால் என் நியாய உணர்வு தடுத்து விட்டது :Dநல்ல வேலை செய்தீர்கள். நமது அணியின் நியாய உணர்வு இதிலிருந்தே எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

பரஞ்சோதி
12-07-2005, 05:59 AM
நடுவர் அறிஞர் அவர்களே!

சகோதரி தேம்பாவை போட்டிக்கு அழையுங்கள்.

mania
12-07-2005, 06:00 AM
பாயிண்ட் பட்டியல்

பிரியன் - 1
பரஞ்சோதி - 1
இராகவன் - 1

அடுத்து நான் அழைக்க இருப்பது சகோதரி தேம்பாவை.

அத்துடன் கேள்விகளின் எண்ணிக்கையை 15ஆக உயர்த்த இருக்கிறேன், உண்மையில் ரொம்ப மண்டை குடையுது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 20 கேள்விகள் கேட்பார், ஆனால் உலக அளவில் கேட்பார்.

மக்களே வேறு ஏதாவது கருத்து இருந்தால் கூறுங்கள்.


;) கேட்கவேண்டிய கேள்விகள் அனைத்தையும் கேட்ட பிறகு படித்துக்கொண்டிருக்கும் அன்பர்களிடமிருந்தும் பதிலை ஓபனாகவோ அல்லது தனிமடலிலோ வரவேற்று அவர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு செய்யலாம்.....இது என்னுடைய கருத்து மட்டுமே......;)
அன்புடன்
மணியா....
(போன முறை சில கேள்விகள் மீதியிருக்கும்போதே பிரியன் ஐய்யா,......ஐய்யா....என்று குதித்தார் இல்லையா.....அப்போது தோன்றியது இந்த எண்ணம் )...:D :D .

பரஞ்சோதி
12-07-2005, 06:01 AM
புள்ளிகள் நிலவரம் என்று மாற்றிக் கொள்ளலாமே...

மாற்றி விட்டேன் பிரியன்.

சு(கொ )ட்டி காட்டியமைக்கு நன்றி.

பரஞ்சோதி
12-07-2005, 06:04 AM
;) கேட்கவேண்டிய கேள்விகள் அனைத்தையும் கேட்ட பிறகு படித்துக்கொண்டிருக்கும் அன்பர்களிடமிருந்தும் பதிலை ஓபனாகவோ அல்லது தனிமடலிலோ வரவேற்று அவர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு செய்யலாம்.....இது என்னுடைய கருத்து மட்டுமே......;)
அன்புடன்
மணியா....
(போன முறை சில கேள்விகள் மீதியிருக்கும்போதே பிரியன் ஐய்யா,......ஐய்யா....என்று குதித்தார் இல்லையா.....அப்போது தோன்றியது இந்த எண்ணம் )...:D :D .

ஹா! ஹா! தலை ஒன்னு சொன்னீங்க, கலக்கலா சொன்னீங்க.

அருமை. கேள்விகள் முடிந்த பின்பு என்னுடைய பதிலை சொன்ன பின்பு இங்கேயே விடையை சொல்லலாம், அதற்கு முன்பு என்றால் அறிஞருக்கு தனிமடலில் விடையை அனுப்பலாம்.

நடுவரின் ஆலோசனையோடு சரியான பதில் சொன்னவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.

பரஞ்சோதி
12-07-2005, 06:06 AM
வாணி ஜெயராமின் கணவர் அக்கவுண்ட்ஸ் தொடர்பான வேலையில் இருந்தார். மனைவியின் முன்னேற்றத்திற்காக அந்த வேலையை விட்டு விட்டு துணைவியாரின் முன்னேற்றதிலேயே குறிக்கோளாக இருந்தார். எத்தனை மனைவியருக்கு இப்படிக் கணவர் கிடைப்பார்கள்?

அன்னைக்குப் பெயர் வைத்த முறை
http://www.tamilmantram.com/vb/showt...525#post111525 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111525#post111525)
என் கொங்கை நின்
http://www.tamilmantram.com/vb/showt...319#post111319

நன்றி, அண்ணா, இந்த விசயம் மிகப் பெரிய விசயம், இதை எப்படி தெரியாமல் விட்டேன் என்று புரியவில்லை.

இந்திய மொழிகளில் அதிகபட்ச மொழிகளில் பாடியவர் வாணி ஜெயராம்.

பிரியன்
12-07-2005, 06:09 AM
நடுவர் அறிஞர் அவர்களே!

சகோதரி தேம்பாவை போட்டிக்கு அழையுங்கள்.

சுவேதாவுக்கான மீதி ஐந்து கேள்விகள் எங்கே......:eek: :eek: :eek:

mania
12-07-2005, 06:14 AM
ஹா! ஹா! தலை ஒன்னு சொன்னீங்க, கலக்கலா சொன்னீங்க.

அருமை. கேள்விகள் முடிந்த பின்பு என்னுடைய பதிலை சொன்ன பின்பு இங்கேயே விடையை சொல்லலாம், அதற்கு முன்பு என்றால் அறிஞருக்கு தனிமடலில் விடையை அனுப்பலாம்.

நடுவரின் ஆலோசனையோடு சரியான பதில் சொன்னவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.

;) உன்னுடைய பதிலை நீ உடனே தரக்கூடாது......கொஞ்சம் நேரம் அவகாசம் கொடுத்து தனிமடல் அனுப்பச்சொல்லவேண்டும்.....;) பிறகு உன் பதிலை நீ கொடுக்கலாம்.....இல்லையென்றால் நீ சொல்லும் நபரையே நானும் தெரிவு செய்துகொண்டிருப்பேன்.....(எனக்கு மதிப்பெண் கூட கிடைக்காவிட்டாலும் உன்னுடைய மதிப்பெண்ணைவிட குறையாதல்லவா.....):rolleyes:
அன்புடன்
மணியா....:D

thempavani
12-07-2005, 06:18 AM
அண்ணா நான் தயார்... நீங்க கேள்வி கேளுங்க...

gragavan
12-07-2005, 06:24 AM
அண்ணா நான் தயார்... நீங்க கேள்வி கேளுங்க...
சபாஷ் சரியான போட்டி....ஹா ஹா ஹா

இப்படிக்கு,
வீராகப்பன்

திருவாசக இளையராஜாங்கம் - முன்னுரை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5294&page=2

பரஞ்சோதி
12-07-2005, 06:40 AM
சகோதரி தேம்பாவுடன் - முதல் கேள்வி

1) பெண் ?


(சகோதரி, உங்கள் விடையை அறிஞருக்கு தனிமடலில் அனுப்பி விடுங்கள்)

பரஞ்சோதி
12-07-2005, 06:44 AM
சுவேதாவுக்கான மீதி ஐந்து கேள்விகள் எங்கே......:eek: :eek: :eek:

அய்யோ, அய்யோ இத்தனை பரபரப்பில் அந்த சின்னபிள்ளையை மறந்து போயிட்டோமே.

அம்மா சுவேதா, எங்கடா இருக்கே.

- திருவிழாவில் பிள்ளையை தேடும் பரம்ஸ்

அறிஞர்
12-07-2005, 06:52 AM
வாழ்த்துக்கள் அன்பர்களே.... நன்றாக செல்கிறது.. அடுத்து தேம்பா ரெடியா...

mania
12-07-2005, 07:01 AM
சகோதரி தேம்பாவுடன் - முதல் கேள்வி

1) பெண் ?


(சகோதரி, உங்கள் விடையை அறிஞருக்கு தனிமடலில் அனுப்பி விடுங்கள்)

:confused: ??????????? அதுவே சந்தேகமா உனக்கு......????!!!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
12-07-2005, 07:05 AM
சுவேதா சகோதரி,

உங்களை மீண்டும் அழைக்கிறேன்.

(விடையை அறிஞருக்கு அனுப்பி வையுங்க, மற்றவர்கள் 15 கேள்விகள் முடிந்தவுடனோ, அல்லது அதற்கு முன்போ அறிஞருக்கு விடை அனுப்புங்கள், ஒருவர் ஒரு விடை தான் சொல்ல முடியும் )

சுவேதா சகோதரி நீங்க மனதில் நினைத்தவர்
ஆண், தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல, சினிமாவையும் சேர்ந்தவர் அல்ல,

சுவேதாவுடன் கேள்வி எண் 6)

அவர் அரசியலை சேர்ந்தவர்?

அறிஞர்
12-07-2005, 07:30 AM
என்ன சார்.. யாரை கேட்கிறீர்கள்.. ஒருவரும் எனக்கும் தனி மடல் அனுப்பவில்லை....

பரஞ்சோதி
12-07-2005, 07:35 AM
என்ன சார்.. யாரை கேட்கிறீர்கள்.. ஒருவரும் எனக்கும் தனி மடல் அனுப்பவில்லை....

அறிஞர் அவர்களே!

சகோதரிகள், சுவேதாவும், தேம்பாவும் முதலில் தங்கள் விடையை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.மற்றவர்கள் விடையை கண்டுபிடித்த பின்பு அனுப்பி வைப்பார்கள்.

தயவு செய்து புள்ளி நிலவரத்தை நீங்கள் தான் அறிவிக்க வேண்டும்.

அறிஞர்
12-07-2005, 07:49 AM
அறிஞர் அவர்களே!

சகோதரிகள், சுவேதாவும், தேம்பாவும் முதலில் தங்கள் விடையை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.மற்றவர்கள் விடையை கண்டுபிடித்த பின்பு அனுப்பி வைப்பார்கள்.

தயவு செய்து புள்ளி நிலவரத்தை நீங்கள் தான் அறிவிக்க வேண்டும்.சரி அன்பரே.. தங்கள் விருப்பமே என் பணி...

thempavani
12-07-2005, 08:14 AM
சகோதரி தேம்பாவுடன் - முதல் கேள்வி

1) பெண் ?


(சகோதரி, உங்கள் விடையை அறிஞருக்கு தனிமடலில் அனுப்பி விடுங்கள்)

அறிஞருக்கு பதில் அனுப்பி அரை நாழி ஆச்சு...கேள்வி எங்கே????கேள்வி எங்கே??? கேள்வி எங்கே???? கேள்வி எங்கே???

(மணியா அண்ணா: தேம்பா இது எல்லாம் கொஞ்சம் அதிகம் ;) )

thempavani
12-07-2005, 08:14 AM
சகோதரி தேம்பாவுடன் - முதல் கேள்வி

1) பெண் ?


(சகோதரி, உங்கள் விடையை அறிஞருக்கு தனிமடலில் அனுப்பி விடுங்கள்)

ஆம் அண்ணா..

thempavani
12-07-2005, 08:15 AM
:confused: ??????????? அதுவே சந்தேகமா உனக்கு......????!!!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D

:mad: மணியா அண்ணா இது சுத்த மோசம்..:mad: :mad:

thempavani
12-07-2005, 08:18 AM
:confused: ??????????? அதுவே சந்தேகமா உனக்கு......????!!!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D

:mad: :mad: மாண்பிற்குரிய நடுவர் அவர்களே...இதையெல்லாம் கேட்கிறது இல்லையா...:mad: :mad:

(நடுவர் எதிரணி பக்கமா சாயுறமாதிரி இருக்கு..:confused: :confused: )

பரஞ்சோதி
12-07-2005, 08:38 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 2:

அரசியல், விளையாட்டு, சினிமா, இலக்கியத்தை சேர்ந்தவர்

thempavani
12-07-2005, 08:41 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 2:

அரசியல், விளையாட்டு, சினிமா, இலக்கியத்தை சேர்ந்தவர்

ஆம் அண்ணா...

பரஞ்சோதி
12-07-2005, 08:50 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 3:

அரசியல் துறையை சேர்ந்தவர் ?

அறிஞர்
12-07-2005, 09:01 AM
:mad: :mad: மாண்பிற்குரிய நடுவர் அவர்களே...இதையெல்லாம் கேட்கிறது இல்லையா...:mad: :mad:

(நடுவர் எதிரணி பக்கமா சாயுறமாதிரி இருக்கு..:confused: :confused: )இதையெல்லாம் பெரிய மனசு பண்ணி... கண்டுக்க கூடாது..

thempavani
12-07-2005, 09:02 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 3:

அரசியல் துறையை சேர்ந்தவர் ?



ஆம் அண்ணா..

பரஞ்சோதி
12-07-2005, 09:09 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 4:

ஒரு கட்சியின் தலைவராக திகழ்கிறார் ?

thempavani
12-07-2005, 09:15 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 4:

ஒரு கட்சியின் தலைவராக திகழ்கிறார் ?

இல்லை

பரஞ்சோதி
12-07-2005, 10:22 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 5:

எம்.எல்.ஏ, எம்.பி. சபாநாயகர், முதல்வர், கவர்னர், அமைச்சர் போன்ற பதவியில் இருக்கிறார்.

thempavani
12-07-2005, 10:25 AM
இல்லை

mania
12-07-2005, 10:48 AM
இப்போது இல்லை

:mad: இல்லை என்று சொல்ல வேண்டியதுதானே. எதற்காக அதிக பட்சமான தகவல் தருகிறாய்......???:mad:
அன்புடன்
மணியா...

thempavani
12-07-2005, 10:50 AM
நான் மாற்றி விட்டேன்..நீங்களும் பரம்ஸ் அண்ணன் பார்க்குமுன் மாற்றிவிடுங்கள்...

பரஞ்சோதி
12-07-2005, 10:55 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 6:

திருமணம் ஆகாதவர்?

பரஞ்சோதி
12-07-2005, 10:57 AM
:mad: இல்லை என்று சொல்ல வேண்டியதுதானே. எதற்காக அதிக பட்சமான தகவல் தருகிறாய்......???:mad:
அன்புடன்
மணியா...

சகோதர பாசம் தான்.

mania
12-07-2005, 11:04 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 6:

திருமணம் ஆகாதவர்?

:D :D :D தேம்பா......"இப்போது இல்லை ".......
அன்புடன்
மணியா.....:D :D :D

kavitha
12-07-2005, 11:04 AM
அண்ணா, இந்த ஆட்டம் முடிஞ்சதும் என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கோங்க..

தீராத விளையாட்டுப்பிள்ளை, கவிதா.

பரஞ்சோதி
12-07-2005, 11:09 AM
:D :D :D தேம்பா......"இப்போது இல்லை ".......
அன்புடன்
மணியா.....:D :D :D

பேட் வலிக்குது தலை

:D :D :D :) ;) ;)

பரஞ்சோதி
12-07-2005, 11:10 AM
அண்ணா, இந்த ஆட்டம் முடிஞ்சதும் என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கோங்க..

தீராத விளையாட்டுப்பிள்ளை, கவிதா.

கண்டிப்பாக சகோதரி, அடுத்து

நண்பர் ஜீவாவையும் அழைக்க இருக்கிறேன்.

mania
12-07-2005, 11:11 AM
அண்ணா, இந்த ஆட்டம் முடிஞ்சதும் என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கோங்க..

தீராத விளையாட்டுப்பிள்ளை, கவிதா.

:D :D உன்னைப்போல ஆடிக்கு ஒருதரம்....அம்மாவாசைக்கு ஒரு தரம்ன்னு வந்தா.....எப்போ 20 கேள்வி கேட்டு எப்போ பதில் சொல்லி....அதுக்குள்ளே உனக்கும் மறந்திடும் பரம்ஸுக்கும் என்ன கேட்டோம் என்றும் மறந்துவிடும்.....:D
அன்புடன்
உண்மை விளம்பி மணியா....

நீ போய் தெருவிலே பெண்களுக்கெல்லாம் ஓயாத தொல்லை கொடு போ.......ஹி.....ஹி.....ஹி.....:D :D

ஜீவா
12-07-2005, 11:27 AM
கண்டிப்பாக சகோதரி, அடுத்து

நண்பர் ஜீவாவையும் அழைக்க இருக்கிறேன்.

நான் ரெடி... நீங்க ரெடியா??

ஒரு சின்ன (... ஆ... இல்ல பெரிய) சந்தேகம்...
கோடிஷ்வரன் முத்திரை யூஸ் பண்ணலாமா??? :D :D :D

பரஞ்சோதி
12-07-2005, 11:33 AM
நான் ரெடி... நீங்க ரெடியா??

ஒரு சின்ன (... ஆ... இல்ல பெரிய) சந்தேகம்...
கோடிஷ்வரன் முத்திரை யூஸ் பண்ணலாமா??? :D :D :D

நன்றி ஜீவா,

முத்திரை பதிக்கத் தானே இந்த பதிவு. உங்கள் முத்திரையை பதியுங்கள்.

mania
12-07-2005, 11:34 AM
நான் ரெடி... நீங்க ரெடியா??

ஒரு சின்ன (... ஆ... இல்ல பெரிய) சந்தேகம்...
கோடிஷ்வரன் முத்திரை யூஸ் பண்ணலாமா??? :D :D :D

:D :D :D சபாஷ்.........சரியான ஆள்......ஆட்டோவை எடுங்கடா......நம்ம அணிக்கு இட்டாங்கடா......:D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
12-07-2005, 11:41 AM
தலை ஆட்டோ எடுத்தால் கேடீஸ்வரனாகி விடக்கூடுமே.

அறிஞர்
12-07-2005, 01:29 PM
அடுத்து ஜீவா... தங்கள் பதிலை எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள்..

கவிதா என்றைக்கு தாங்கள் மன்றம் வரமுடியும் எனக்கூறுங்கள். அன்று உங்களுக்காக சிறப்பு.. போட்டியை வைத்துக்கொள்ளலாம்.

ஜீவா
12-07-2005, 01:48 PM
நான் அனுப்பி விட்டேன் அறிஞரே... நண்பர் பரஞ்சோதிதான் ஆரம்பிக்க வேண்டும்..


(தருமி : கேள்வியை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா?? ) :D :D :D

அறிஞர்
12-07-2005, 02:57 PM
ஜீவா பொறுங்கள்... தேம்பாவின் சுற்று முடிந்தவுடன் தங்கள் சுற்று ஆரம்பிக்கும்

thempavani
13-07-2005, 12:26 AM
அட ஆண்டவா..கொஞ்ச நேரம் இல்லாது போனா ஆளையே மறந்துடுவீங்க போல இருக்கே... எப்பா ஜீவா கொஞ்ச காணும் இடம் கொடு..நானு எங்கணக்க முடிச்சுகிறேன்...

thempavani
13-07-2005, 12:26 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 6:

திருமணம் ஆகாதவர்?

ஆனவர் அண்ணா

thempavani
13-07-2005, 12:28 AM
:D :D :D தேம்பா......"இப்போது இல்லை ".......
அன்புடன்
மணியா.....:D :D :D

:mad: :mad: லொள்ளு....:mad: வூட்டுக்குப் போயிருந்தேன் ..அதுக்கு என்ன இப்போ....
;) உங்களை நேரில் சந்திக்கும்போது பேசிக்கிறேன்...;)

thempavani
13-07-2005, 12:30 AM
:D :D :D சபாஷ்.........சரியான ஆள்......ஆட்டோவை எடுங்கடா......நம்ம அணிக்கு இட்டாங்கடா......:D
அன்புடன்
மணியா....:D

புள்ள புடி கூட்டம் போலத் தெரியுதே...

சுவேதா
13-07-2005, 02:14 AM
அய்யோ, அய்யோ இத்தனை பரபரப்பில் அந்த சின்னபிள்ளையை மறந்து போயிட்டோமே.

அம்மா சுவேதா, எங்கடா இருக்கே.

- திருவிழாவில் பிள்ளையை தேடும் பரம்ஸ்

அண்ணா இங்கதான் இருக்கேன்!

சுவேதா
13-07-2005, 02:18 AM
சுவேதாவுடன் கேள்வி எண் 6)

அவர் அரசியலை சேர்ந்தவர்?

ஆம்!!

பரஞ்சோதி
13-07-2005, 04:15 AM
சுவேதாவுடன் கேள்வி எண் 7)

முதலில் அரசாங்க வேலை செய்து, பின்னர் அரசியல்வாதியானவர் ?

பரஞ்சோதி
13-07-2005, 04:17 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 7:

ஒரே ஒரு முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார் ?

gragavan
13-07-2005, 05:14 AM
இதென்ன ரெட்டைக் குதிரை வண்டி ஓடுது.. நடத்து பரம்ஸ்.

திருவாசகத் தட்டில் முதலிரண்டு பாடல்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5294&page=2

thempavani
13-07-2005, 05:50 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 7:

ஒரே ஒரு முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார் ?

இல்லை...

பரஞ்சோதி
13-07-2005, 06:23 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 8:

தமிழ்நாட்டை சேர்ந்தவர் ?

அறிஞர்
13-07-2005, 06:52 AM
சுவேதாவுடன் கேள்வி எண் 6)

அவர் அரசியலை சேர்ந்தவர்?
கவர்னர் போன்ற பதவியில் இருந்தவர்கள் அரசியலை சேர்ந்தவர்களா.. அன்பரே....

பரஞ்சோதி
13-07-2005, 06:59 AM
கவர்னர், ஜனாதிபதி போன்றவற்றில் 90% அரசியல்வாதிகள் தான் இருக்கிறார்கள், ஒரு சிலர் பாத்திமா பீவீ, அப்துல்கலாம் போன்ற அரசியல் சாராதவர்கள் மிகக்குறைவு, எனவே அவர்களையும் அரசியல் என்ற தலைப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

எலக்ஷன் கமிஷனர், போலிஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசாங்க உத்தியோகத்தை சேர்ந்தவராக கருதலாம்.

அறிஞர் அவர்களே! இது போன்ற சந்தேகங்களை கேளுங்கள்.

அறிஞர்
13-07-2005, 07:02 AM
கவர்னர், ஜனாதிபதி போன்றவற்றில் 90% அரசியல்வாதிகள் தான் இருக்கிறார்கள், ஒரு சிலர் பாத்திமா பீவீ, அப்துல்கலாம் போன்ற அரசியல் சாராதவர்கள் மிகக்குறைவு, எனவே அவர்களையும் அரசியல் என்ற தலைப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

எலக்ஷன் கமிஷனர், போலிஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசாங்க உத்தியோகத்தை சேர்ந்தவராக கருதலாம்.

அறிஞர் அவர்களே! இது போன்ற சந்தேகங்களை கேளுங்கள்.இல்லை நண்பா நடுவராக இருந்து.. சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்வது சரி எனப்பட்டது... தொடருங்கள்.

thempavani
13-07-2005, 07:49 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 8:

தமிழ்நாட்டை சேர்ந்தவர் ?

இல்லை...

பரஞ்சோதி
13-07-2005, 07:53 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 9:

இவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது ?

thempavani
13-07-2005, 07:56 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 9:

இவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது ?

இல்லை

பரஞ்சோதி
13-07-2005, 07:59 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 10:

இவர் ஒரு சினிமா நடிகை ?

அறிஞர்
13-07-2005, 07:59 AM
தேம்பாவின் பதில்களை கண்டு... பரம்ஸ் கொஞ்சம் ஆட்டம் கண்டிருபார் என எண்ணுகிறேன்.

thempavani
13-07-2005, 08:01 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 10:

இவர் ஒரு சினிமா நடிகை ?

இல்லை

thempavani
13-07-2005, 08:02 AM
இன்னும் 5 கேள்விகள் மீதி உள்ளது என நினைக்கிறேன்....

பரஞ்சோதி
13-07-2005, 08:04 AM
தேம்பாவின் பதில்களை கண்டு... பரம்ஸ் கொஞ்சம் ஆட்டம் கண்டிருபார் என எண்ணுகிறேன்.

உண்மை தான் அறிஞர். என்ன இருந்தாலும் எதிரணி தானே, எளிதில் விட்டு கொடுப்பாரா? என்ன?

அறிஞர்
13-07-2005, 08:06 AM
இன்னும் 5 கேள்விகள் மீதி உள்ளது என நினைக்கிறேன்....கொஞ்சம் கடினம் தான்... தேம்பாவுக்கு பாயிண்டிற்கான வாய்ப்புக்கள் அதிகம்

பரஞ்சோதி
13-07-2005, 08:13 AM
இன்னும் 5 கேள்விகள் மீதி உள்ளது என நினைக்கிறேன்....

அதான் கவலையாக இருக்கிறது சகோதரி :confused:

பரஞ்சோதி
13-07-2005, 08:15 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 11:

கவர்னர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியில் இருந்தவர் ?

thempavani
13-07-2005, 08:19 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 11:

கவர்னர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியில் இருந்தவர் ?

இல்லை..இல்லை..இல்லை...

அறிஞர்
13-07-2005, 08:20 AM
அதான் கவலையாக இருக்கிறது சகோதரி :confused:அப்ப 25 கேள்விகளாக மாற்றலாமா அன்பரே....

தேம்பா 15 கேள்விகள் முடிந்தவுடன் விடை சொல்லாதீர்கள்...

15 கேள்விகளில் விடை காண இயலாவிட்டால் தேம்பாவுக்கு 1 புள்ளி.

அடுத்து 5 கேள்விகள் -- பம்பர் (வெற்றி கண்டால் தேம்பாவுக்கு 2 மதிப்பெண், பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி)
அடுத்து 10 கேள்விகள் -- மெகா பம்பர் (வெற்றி கண்டால் தேம்பாவுக்கு 5 மதிப்பெண், பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி)

பரஞ்சோதி
13-07-2005, 08:21 AM
அப்ப 25 கேள்விகளாக மாற்றலாமா அன்பரே....

அறிஞரே! உங்க குசும்பை ரசித்தேன்.

;) :) ;) :) :p :p :D சிரிப்பை அடக்க முடியலை.

பரஞ்சோதி
13-07-2005, 08:23 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 12:

உயிரோடு இருக்கிறார் ?

thempavani
13-07-2005, 08:24 AM
அப்ப 25 கேள்விகளாக மாற்றலாமா அன்பரே....

தேம்பா 15 கேள்விகள் முடிந்தவுடன் விடை சொல்லாதீர்கள்...

15 கேள்விகளில் விடை காண இயலாவிட்டால் தேம்பாவுக்கு 1 புள்ளி.

அடுத்து 5 கேள்விகள் -- பம்பர் (வெற்றி கண்டால் தேம்பாவுக்கு 2 மதிப்பெண், பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி)
அடுத்து 10 கேள்விகள் -- மெகா பம்பர் (வெற்றி கண்டால் தேம்பாவுக்கு 5 மதிப்பெண், பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி)

இது கூட நல்லா இருக்கே...;) ;)

பரஞ்சோதி
13-07-2005, 08:25 AM
இல்லை..இல்லை..இல்லை...

சகோதரி இது ரொம்ப அதிகம் (ஓவர் )

பிரியனுக்கு பயந்து (ஓவர் ) கட்டத்துக்குள் ஓடி ஒளிந்துக் கொண்டது.